November 09, 2009

ஸ்வைன் ஃப்ளூ தடுப்பு மருந்து 100% நோயை தடுக்காது


ஸ்வைன் ஃப்ளூ காய்ச்சலுக்கு புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்து 100% நோயிலிருந்து காக்கும் என்று கூற முடியாது என்று உலக சுகாதர அமைப்பு தெரிவித்துள்ளது.

"எந்த ஒரு நோய்த் தடுப்பு மருந்தும், கொள்ளை நோயாகப் பரவும் இன்ஃப்ளூயென்சா வைரஸ் தடுப்பு மருந்தும் 100% திறம்பட செயல்படும் என்று கூற முடியாது. ஆனால் நோய்
தாக்குவதற்கான வாய்ப்புகளை வெகுவாக குறைக்கிறது" என்று உலக சுகாதார அமைப்பு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

அதாவது ஃப்ளூ தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொண்ட பிறகு 14 நாட்களுக்கு பிறகே அது நோயிலிருந்து தடுக்கும் பயனை பெறுகிறது. வாக்சைன் எடுத்துக் கொள்வதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு வைரஸ் தாக்கியவர்களுக்கோ, அல்லது வாக்சைன் எடுத்துக் கொண்ட பிறகு 2 அல்லது 3 நாட்களுக்கு பிறகு அதே வைரஸ் தாக்கும் போது வாக்சைன்கள் நோயை தடுக்காது என்று உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review