March 31, 2010

செவ்வாய் கிரகம் செல்லத் தயார்..

விண்வெளி ஆய்வில் பல்வேறு உலக நாடுகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக சீனாவும் இந்தியாவும் நிலவுப்பயணத்தில் அதிக கவனம் செலுத்துகின்றன.

இந்த நிலையில் அமெரிக்கா, ரஷியா நாடுகள் சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதில் தீவிரம் காட்டுகின்றன. ஏற்கனவே அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிலையம் செவ்வாய் கிரகத்துக்கு ஆய்வுக் கலங்களை அனுப்பி உள்ளது. இந்த கலங்கள் அங்கு பல்வேறு ஆய்வுகளை செய்து தகவல்களை அனுப்பி வருகிறது. 

இந்த தகவல்களின் அடிப்படையில் அடுத்த கட்டமாக செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்பி ஆய்வு செய்யப்போகிறார்கள். இவர்கள் அங்கு தங்கி இருந்து பல்வேறு ஆய்வுப்பணிகளில் ஈடுபடப் போகிறார்கள். இந்த பயணத்துக்கு வீரர்களை தயார் செய்யும் பணிகள் ரஷியாவில் உள்ள விண்வெளி ஆய்வு நிலையத்தில் நடந்து வருகிறது. 

பூமியில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு செல்ல சுமார் 250 நாட்கள் ராக்கெட்டில் பயணம் செய்ய வேண்டும். பின்னர் அங்கு 30 நாட்கள் வரை தங்கி இருந்து ஆய்வுகள் நடத்த வேண்டும். அதன்பின்னர் அங்கிருந்து புறப்பட்டால் சுமார் 240 நாட்கள் பயணம் செய்தால் தான் பூமியை வந்தடைய முடியும். ஆக மொத்தம் சுமார் 520 நாட்கள் பூமியை விட்டு விண்வெளியில் இருக்க வேண்டும். 

இதை தாங்கும் அளவுக்கு விண்வெளி வீரர்களின் உடல் தகுதி சிறப்பாக இருக்க வேண்டும். எனவே அத்தகைய தகுதி உள்ளவர்களை தேர்வு செய்ய சோதனைகள் நடக்கிறது. பல்வேறு உடல்தகுதி, கல்வித்தகுதி தேர்வுகளில் வெற்றி பெற்ற 11 பேர்களை தேர்ந்து எடுத்து அவர்களை ஒரு அறையில் 520 நாட்கள் அடைத்து வைத்து சோதனை செய்யப்போகிறார்கள். இந்த அறை ராக்கெட்டில் இருப்பது போன்ற உணர்வை தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ராக்கெட்டில் பயணம் செய்யும் போது இருக்கும் எடையற்ற தன்மையுடன் இந்த தங்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கி அங்கு தங்கி இருந்து ஆய்வு நடத்துவது போன்ற ஒத்திகை மற்றும் பயிற்சிகளும் இவர்களுக்கு அளிக்கப்படுகிறது. 

ரஷியாவைச்சேர்ந்த 5 என்ஜினீயர்கள், 2 டாக்டர்கள் மற்றும் பிரான்சு, பெல்ஜியம், இத்தாலி, மற்றும் சீனா ஆகிய நாடுகளைச்சேர்ந்த தலா ஒரு விண்வெளி வீரர்கள் இந்த சோதனைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சோதனைகள் அடுத்த மாதம் தொடங்கி 520 நாட்களுக்கு நடைபெறும். இவர்கள் தங்கி இருக்கும் போது அவர்களது உடலில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணித்து ஆலோசனைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கணினிக்கு ரீஸ்டோரேஷன் அவசியமா? : ஓர் அலசல்

பொதுவாக விண்டோஸ் இயங்குதளங்களை பயன்படுத்த துவங்கிவிட்டாலே வைரஸ் தாக்கம்,இயங்குதளம் Crash ஆவது போன்ற பிரச்சனைகள் எப்போது எழும் என்றே கூறமுடியாது. “நேற்றிரவு கூட நன்றாக தானே கணினியை இயக்கினேன் ஆனால் இன்று காலையில் கணினி மக்கர் பண்ணுதேன்னு” நம்மில் எத்தனை பேர் புலம்புவோம் அல்லவா?
இதுபோன்று விண்டோஸ் செயலிழந்து மக்கர் பண்ணும் போது தான் இந்த ரீஸ்டோரேஷனின் அவசியம் நமக்கு தெரிய வரும். 

ரீஸ்டோரஷன் என்றால் என்ன? 

கணினி நல்ல நிலையில் இயங்கிக்கொண்டு இருக்கும்போது அதனை பேக்-அப் செய்து இதர பார்ட்டிஷனில் சேமித்து, கணினி மக்கர் செய்யும்போது சேமித்த கணினியின் பேக்-அப்பை கொண்டு கணினியின் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதே ரீஸ்டோரேஷன் ஆகும். இன்றைய பதிவில் நாம் அதனை பற்றிதான் விபரமாக அறிந்து கொள்ள இருக்கின்றோம்.
பொதுவாக கணினியை இரண்டு வகையாக பிரிப்போம் ஒன்று Branded மற்றொன்று Assembled இதில் Branded கணினியாக‌ இருந்து அதனை நீங்கள் Genuine OS உடன் வாங்கினால் அந்த கணினி தயாரிப்பாளரே உங்களுக்கு ஒரு ரீஸ்டொரேஷன் cd/dvd யை அளிப்பார் (Dell,Acer,HP etc..). விண்டோஸில் ஏதாவது பிழை ஏற்பட்டு பூட் ஆக மறுக்கும் போது இந்த cd/dvd யை போட்டு ரீஸ்டோரேஷன் செய்துகொண்டு நீங்கள் கணினியை எந்த தேதியில் வாங்கினீர்களோ அந்த தேதியின் நிலமைக்கு கொண்டு வரலாம்.
இதே Branded கணினியை Free DOS ஸாக வாங்கினீர்க்ளேயானால், இந்த ரீஸ்டோரேஷன் சாத்தியம் இல்லை. இந்த சூழ்நிலையில் நாம் தான் ரீஸ்டோரேஷன் உருவாக்க வேண்டும் (IBM,DELL,ACER etc without OS).
அடுத்ததாக Assembled கணினி, இது நமக்கு ஏற்ற கணினியை நாமே தனித்தனியாக வாங்கி சர்வீஸ் Engg மூலமாக உருவாக்குவது ஆகும். இங்கு பிரான்ஸ் நாட்டில் Assembled கணினியின் எண்ணிக்கை மிகக்குறைவே, இங்கு Branded கணினி முறையான OS உரிமம் பெற்றே தான் பயன்படுத்துவோம். ஆனால் இந்தியாவில் பயன்படுத்தப்படும் அதிகப்படியான கணினிகள் Assembled கணினிகளே. அவ்வாறு கணினியின் பாகங்களை கடையில் வாங்கும்போது நம்மில் பலரும் விண்டோஸ் தொகுப்பை பணம் செலுத்தி வாங்குவது கிடையாது. எனவே தான் Pirated விண்டோஸ் தொகுப்புகளை உலகில் அதிகமாக பயன்படுத்துவது ஆசியாவில் தான் என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகின்றது. என்ன செய்வது மைக்ரோசாப்டின் விண்டோஸ் தொகுப்புகளின் விலை அப்படி. அதே நேரத்தில் பைரேட் செய்து பயன்படுத்துவதும் தவறு. 

இந்த ரீஸ்டோரேஷனால் என்ன பயன்? 

கணினி நல்ல நிலமையில் இயங்கிக்கொண்டிருக்கும் போதே ரீஸ்டோரேஷன் உருவாக்குவதால் சில நன்மைகள் நமக்கு கிட்டும்.
வன்தட்டை (Hard Disk) பார்மேட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, ஆகையால் கணினியின் வந்தட்டிற்க்கு பாதுகாப்பு கிடைக்கின்றது. வன்தட்டை அடிக்கடி பார்மேட் செய்வது நல்லதல்ல.
விண்டோஸ் சிடியை தேடி அலைய வேண்டாம்.
டிரைவர் சிடி இல்லையே என்ற கவலை வேண்டாம்.
மேலும் நீங்கள் விண்டோஸ் Genuine தொகுப்பு பயன்படுத்தினால் அதனை மைக்ரோசாப்டில் வருடத்திற்கு 4 முறை மட்டுமே இணையத்தில் ஆக்டிவேஷன் செய்ய இயலும்.
விண்டோஸை புதிதாக நிறுவும் நேரத்தை காட்டிலும் விரைவாக ரீஸ்டோரேஷனை செய்து கணினியை இயக்கி விடலாம்.
இதுபோன்ற நன்மைகள் இருப்பதால் கணினியை உங்களது தேவையான மென்பொருட்களை நிறுவிய பின் ரீஸ்டோரேஷன் உருவாக்கி அதனை பேக் அப் செய்து பாதுகாப்பாக சேமித்துவைப்பது சாலச்சிறந்தது.
நம்மில் பலரும் இதனை செய்வது கிடையாது. விண்டோஸில் பிழை ஏற்பட்டு கணினி பூட் ஆக மக்கர் பண்ணும் போது உடனே பார்மேட் செய்து விண்டோஸை புதிதாக நிறுவிவிடுவோம். பல சர்வீஸ் Engg களும் பரவலாக இதைத்தான் செய்கிறார்கள்.
நாங்கள் எங்களின் பல வாடிக்கையாளர்களுக்கு பல கணினிகளை Assembling செய்து தந்திருக்கின்றோம், தந்துகொண்டும் இருக்கிறோம். இவ்வாறு செய்யும் போது கண்டிப்பாக நாங்கள் அவர்களுக்கு ரீஸ்டோரேஷன் செய்து எங்களது தகவலையும் அந்த ரீஸ்டோரேஷன் மென்பொருளிலேயே எடிட் செய்து தந்துவிடுவோம். கணினி மக்கர் செய்யும் போது அவர்களது கணினியில் ரீஸ்டோரேஷன் செய்து 30 நிமிடத்தில் கணினியை இயக்கிவிடுவோம்(Hardware ல் பிழை இல்லாமல் இருந்தால்).
இதுபோல நீங்களும் ரீஸ்டோரேஷன் உருவாக்கிக்கொண்டு ரீஸ்டோரேஷன் செய்ய கற்றுக்கொண்டால் கணினியில் பிழை ஏற்படும் போது எளிமையாக ரீஸ்டோரேஷன் செய்துகொள்ளலாம்.
இவ்வாறு ரீஸ்டோரேஷன் உருவாக்க எந்த மென்பொருள் பயன்படுத்தலாம் என்று நீங்கள் நினைக்கலாம். நாங்கள் எங்களது வாடிக்கையாளருக்கு பயன்படுத்துவது Drive Image XML என்ற இலவச மென்பொருளைத்தான். பொதுவாக ரீஸ்டோரேஷன் செய்யும் மென்பொருள்கள் எல்லாம் விலைகொடுத்து வாங்கும் சூழ்நிலையில் Drive Image XML இன் பயன்பாடு நன்றாக இருக்கின்றது.
இதனை கணினியில் நிறுவி பேக்-அப் செய்யலாம். பேக்-அப் செய்யும் போது அந்த கோப்பின் அளவை குறைக்க Compression ம் வைத்திருக்கின்றனர். இது விண்டோஸ்,விஸ்டா,விண்டோஸ்7 க்கு சப்போர்ட் செய்கின்றது. FAT,FAT16,FAT32,NTFS format களை ஆதரிக்கின்றது. 

Drive Image XML இன் குறைபாடு

இலவசமாக கிடைக்கும் இந்த Drive Image XML இல் உங்களது விண்டோஸ் பூட் ஆகவில்லை என்றால் ரீஸ்டோர் செய்வதில் ஒரு சிக்கல் இருக்கின்றது.
அதாவது Drive Image XML அளிக்கும் இலவச plug in ஐ வைத்து நீங்களாக தான் Windows Pre Enviroinment அல்லது Bart Pre Enviroinment துணைக்கொண்டு bootable cd உருவாக்கி தான் உங்களது கணினியை ரீஸ்டோரேஷன் செய்ய இயலும் என்பது சாதாரண கணினி பயனாளர்களுக்கு சாத்தியமில்லை என்பது கொஞ்சம் வருதப்படவேண்டிய விஷயம்.

நோயைக் குணமாக்கும் ரிங்டோன்கள்

விதவிதமான ஒலிகள் கொண்ட மொபைல் ரிங்டோன்களுக்கு இடையே புதுமையாக வந்திருக்கிறது நோயைக் குணமாக்கும் ரிங்டோன்கள். ஜப்பான் நாட்டின் 'மாட்சுமி சுசுகி' என்ற நிறுவனத்தின் ரிங்டோன் தயாரிப்பாளர்கள் நீண்ட கால ஆய்வுக்குப் பிறகு இதை வடிவமைத்துள்ளனர்.

பலவிதமான அலைவரிசையில் இதமான இசைக்கருவிகளின் ஒலிகள் மற்றும் பறவைகளின் சப்தம் போன்ற இயற்கை ஒலிகளைக் கொண்டு  இந்த ரிங்டோன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதைக் கேட்பவர்கள் சோகமாய் இருந்தாலும் சுறுசுறுப்படைகிறார்கள். சோம்பலாய் இருந்தால் குதூகலம் அடைகிறார்கள். தாலாட்டு கேட்பதுபோல விரைவில் தூக்கம் தூண்டப்ட்டு நிம்மதியாக உறங்குகிறார்கள்.

ஜப்பானில் தற்போது அறுவடைக்காலம். இதனால் ஏற்படும் வைக்கோல் மற்றும் தூசு அழற்சியை இந்த ரிங்டோன்கள் கட்டுப்படுத்துகிறது. வேலைக் களைப்பால் பொலிவிழக்கும் தொழிலாளர்களின் முகங்களையும் இந்த ரிங்டோன்கள் கிளர்ச்சி பெறச் செய்கின்றன.

எனவே இந்த ரிங்டோன்கள் ஜப்பானில் சக்கைபோடு போடுகின்றன.

March 29, 2010

தொலைந்த எஸ்.எம்.எஸ் மீட்பது எப்படி?

இது சிம்பியன் இயங்குதளம்(Symbian OS) பயன்படுத்தும் போன்களில் மட்டுமே சாத்தியம். முதலில் நமக்கு தேவை எப் எக்ஸ்ப்ளோரெர் (F Explorer) அல்லது எக்ஸ்ப்ளோர்(Xplore)
இவற்றை இங்கிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
எப் எக்ஸ்ப்ளோரெர் (F Explorer) அல்லது எக்ஸ்ப்ளோர்(Xplore) நிறுவிய(Install) பின் C நீங்கள் அல்லது D டிரைவுக்கு(Drive) செல்ல வேண்டும்.
நீங்கள் எஸ் எம் எஸ்களை போன் மெமரியில்(Memory) சேமிப்பவராக இருந்தால் C டிரைவ், இல்லையெனில் D டிரைவ்.
டிரைவ்வில் நுழைந்த பின் சிஸ்டம்(System) போல்டருக்குள் சென்று பார்த்தால் மெயில்(mail) என்ற போல்டர் இருக்கும்.
அதனுள் 0010001_s,00100011_s என்று பல கோப்புகள் இருக்கும்.
இவை எல்லாம் நீங்கள் அழித்த குறுந்தகவல்கள்(SMSes).
இவற்றை டெக்ஸ்ட் வியுவர்(Text Viewer) உதவியுடன் பார்க்கலாம்.

நவீன செல்போன் : இனி மவுன மொழியில் பேசலாம்

பொது இடங்களில் செல்போனில் பேசுபவர்களில் சிலர் உரக்கப்பேசி ஊரைக்கூட்டி விடுவார்கள். அவர்களின் அந்தரங்க தகவல்களை பிறர் கேட்டுக்கொண்டு இருக்கிறார்களே என்ற கவலையின்றி சத்தம் போட்டு பேசுவார்கள்.

இப்போது இந்த பிரச்சினைக்கு தீர்வு காண புதிய தொழில்நுட்பத்தை ஜெர்மனியில் உள்ள காரல் ஸ்ரூகி தொழில்நுட்ப நிலையம் கண்டு பிடித்துள்ளது. இதன்படி உங்கள் உதடு அசைவை வைத்தே நீங்கள் என்ன பேசப்போகிறீர்கள் என்பதை கண்டுபிடித்து எதிர்முனைக்கு உங்கள் குரலில் தெரிவிக்கும் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரோ மையோகிராபி எனப்படும் தொழில்நுட்பம் மூலம் இது இயங்குகிறது.

முகத்தில் உதடு மற்றும் தாடைப்பகுதியில் பொருத்தப் படும் சென்சார் கருவிகள் உதடு மற்றும் முக அசைவை வார்த்தையாக மொழிமாற்றம் செய்கிறது. இந்தப்பணியை செய்ய சிறப்பு மென்பொருள் 
உருவாக்கப்பட்டுள்ளது.

பின்னர் இந்த வார்த்தைகள் தொலைபேசி இணைப்பு வழியாக எதிர் முனையில் உள்ளவர்களுக்கு அனுப்பப்படுகிறது. இது தவிர ஸ்பீக்கர் மூலமும் இந்த பேச்சை கேட்கலாம்.

இந்த நவீன கண்டுபிடிப்பின் மூலம் வாய்பேச இயலாதவர்கள் மற்றும் பக்கவாத நோய் தாக்குதலால் பேச முடியாதவர்கள் பலன் பெறலாம். இவர்களின் உதட்டு அசைவின் மூலம் இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை மற்றவர்கள் புரிந்துகொள்ள முடியும்.

எய்ட்ஸ் நோயை தடுக்கும் வாழைப்பழம்

வாழைப்பழத்தில் உள்ள ரசாயனம் மூலம் எய்ட்ஸ் நோய் வராமல் தடுக்கலாம் என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எய்ட்ஸ் நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. நோய் வரும் முன், தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காண்டம் பயன்படுத்தினால் எய்ட்ஸ் வராமல் தடுக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது, அமெரிக்க விஞ்ஞானிகள் இது தொடர்பாக மேற்கொண்ட ஆய்வில் புது தகவலை கண்டுபிடித்துள்ளனர்.

வாழைப்பழத்தில் உள்ள கெமிக்கல் மூலம் எய்ட்ஸ் வராமல் தடுக்கலாம் என்பது தான் அது.வாஷிங்டன் நகரில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். பொதுவாக தாவரங்களில் இருக்கும் ரசாயனம், நோய் தொற்றுகளை எதிர்த்து போராடும் தன்மை கொண்டவை.

வாழைப்பழத்தில் இருக்கும் லேக்டின் என்ற ரசாயனம், எய்ட்ஸ் வராமல் தடுக்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதை உறுதிப்படுத்தும் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

March 26, 2010

மனதை படிக்கும் கம்ப்யூட்டர் வடிவமைப்பு

பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானிகள், மனிதர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை படிக்கும் வகையிலான கம்ப்யூட்டரை வடிவமைத்துள்ளனர்.
இதுகுறித்து, லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி மற்றும் அவரது சகாக்கள் கூறியதாவது,
 
கம்ப்யூட்டரால், மனிதர்களின் மூளையை ஸ்கேன் செய்வதன் மூலம், அவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை புரிந்து கொண்டு, அவற்றை அப்படியே வெளிப்படுத்த முடியும். இதற்காக, பத்து தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களிடம் ஆய்வு நடத்தப் பட்டது. இவர்களுக்கு சில பெண்கள் கடிதங்களை தபால் பெட்டியில் போடுவது, பேப்பர் கப்பில் காபி அருந்துவது போன்ற காட்சிகள் அடங்கிய, சில வினாடிகள் மட்டுமே ஒளிபரப்பாகக் கூடிய படம் காண்பிக்கப்பட்டது.
 
அதன் பின், அவர்கள் என்ன பார்த்தனர் என்பதை திரும்ப நினைவுப்படுத்தி பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். அப்போது ஸ்கேனர் கருவி மூலம் மூளையில் ஏற்படும் ரத்த ஓட்ட மாறுதல்களை வைத்து, அதன் செயல்பாடு பதிவு செய்யப்பட்டது. பின்னர், அந்த எலக்ட்ரிக்கல் தகவல்களை, அதற்கென உருவாக்கப்பட்ட கம்ப்யூட்டர் புரோகிராம் மூலம் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டவர்கள் நினைவு கூர்ந்ததை, 50 சதவீதம் துல்லியமாக வெளிப்படுத்தப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஏசரின் லிக்விட் மொபைல்

லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் தயாரிப்பில் முன்னணியில் இயங்கும் ஏசர் நிறுவனத்தின் மொபைல் போன்கள் அண்மையில்  அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

உலகின் முதல் ஆண்ட்ராய்ட் 1.6 ஹை டெபனிஷன் போனாக, ஏசர் நிறுவனத்தின் லிக்விட் மொபைல் ஸ்மார்ட் போன் வந்துள்ளது. குவால்காம் ஸ்நாப்ட்ராகன் (1GHz) என்ற ப்ராசசருடன் வந்துள்ள முதல் மொபைல் போனும் இதுவே.
 
இதில் 3.5 அங்குல அகலத்தில் டச் ஸ்கிரீன் 480 x 800 பிக்ஸெல்களுடன் தரப்பட்டுள்ளது. ஜியோ டேக்கிங் இணைந்த 5 எம்பி கேமரா, ஆட்டோ போகஸ், எல்.இ.டி. பிளாஷ், ஆக்ஸிலரேட்டர், செல்ப் டைமர், 2560 x 1920 ரெசல்யூசனுடன் தரப்பட்டுள்ளது.
 
புளுடூத், வை–பி, ஏ.ஜி.பி.எஸ். (AGPS)தொழில் நுட்பம் இன்டர்நெட் நெட்வொர்க் இணைப்பிற்கு துணைபுரிகின்றன.3G/GSM/GPRS/EDGE நெட்வொர்க் தொழில் நுட்பம் இயங்குகின்றன. வை–பி, புளுடூத் ஆகியவையும் தரப்பட்டுள்ளன.
 
உள்நினைவகம் 256 எம்.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம்.1350 mAh பேட்டரி தொடர்ந்து ஐந்து மணி நேரம் பேசிட வழி தருகிறது.
 
இந்த போனின் தனிச் சிறப்பாக இதன் மூன்று ஹோம் ஸ்கிரீனைக் குறிப்பிடலாம். இதனால் பயன்படுத்தும்போது ஒவ்வொரு ஸ்கிரீனிலும் வெவ்வேறு விட்ஜெட்டுகளை அமைக்கலாம். இதன் வீடியோ ஸ்ட்ரீமிங் திறன் மிக அருமையான மல்ட்டிமீடியா அனுபவத்தினைத் தருகிறது.
 
வெள்ளை, கருப்பு மற்றும் சிகப்பு வண்ணங்களில் உள்ள இந்த போன் ஸ்டைலான வளைவுகளுடன் ஸ்லிம்மாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் குறியீட்டு விலை ரூ.24,900. இது சராசரி இந்திய விலையைக் காட்டிலும் கூடுதல் என்பதால், பல சலுகைத் திட்டங்களை எதிர்பார்க்கலாம்

கூகிள் குரோம் புதிய பதிப்பு 4 வெளியீடு!

கூகிள் தனது வலை உலாவியான குரோமின் புதிய பதிப்பை அண்மையில் வெளியிட்டுள்ளது. முன்பை விட அதிக பாதுகாப்புகள் மற்றும்
சில பிழைகளை நீக்கி சரிசெய்து வெளியிட்டுள்ளது.இப்போதைய தொழில்நுட்பம் மற்றும் சவால்களை எதிர்கொள்ளுமாறு உருவாக்கப்பட்டுள்ளது.

பழைய பதிப்புகளை வைத்து உள்ளோர் புதிய பதிப்பை மேம்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள். இந்த புதிய பதிப்பில் முன்பை விட வேகம், பாதுகாப்பு, எளிமை போன்றவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

தரவிறக்கச்சுட்டி

காசநோயை குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பு

காசநோய் ஏற்பட்டால் அதை குணப்படுத்துவது மிகவும் கடினமானது. இதற்கு நீண்டகாலம் மருந்து சாப்பிட வேண்டும். மருந்து சாப்பிட்டாலும் குணமாகாமல் ஏராளமானோர் உயிரிழந்து விடுகின்றனர்.ஆனால் இப்போது காசநோயை உடனடியாக குணப்படுத்தும் மருந்தை அவுஸ்திரேலியா சிட்னி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.

ஒருவர் உடலில் காசநோய் தாக்கி அடுத்தவருக்கு தொற்று ஏற்படுத்தும் நிலைவருவதற்கு முன்பு இந்த மருந்தை சாப்பிட்டால் சில நாட்களில் குணமாகி விடுகிறது. நீண்ட காலம் மருந்து சாப்பிட தேவையில்லை.

இந்த மருந்து தற்போது ஆய்வு நிலையில் உள்ளது. விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.

உலகம் முழுவதும் 200 கோடி மக்களை காசநோய் தாக்கி இருக்கிறது. 58 நாடுகளில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த மருந்தால் காசநோய் பெரிய அளவில் தடுக்கப்பட்டு விடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

March 23, 2010

உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம்

உடல் வெப்பத்தால் செல்போன் சார்ஜ் செய்யலாம் நமது உடலின் வெப்பநிலை கூடினாலோ, குறைந்தாலோ உடல் நோய்வாய்ப்படும். நமது இயக்கத்துக்கு ஏற்ப வெப்ப ஆற்றல் வெளிப்படும். மாறுபடவும் செய்யும்.
இப்படி உடல் இயக்கத்தால் ஏற்படும் அதிகப்படியான வெப்பத்தை சேகரித்து அந்த ஆற்றலைக் கொண்டு எலக்ட்ரானிக் கருவிகளை இயக்க ஒரு கருவி தயாரித்துள்ளது எம்.ஐ.டி. பல்கலைக்கழகம்.

நடப்பது, ஓடுவது என எந்த வேலையில் ஈடுபட்டாலும் குறிப்பிட்ட அளவில் ஆற்றல் செலவாகிறது. அதில் ஒரு பகுதி வெப்ப ஆற்றலாக வெளியேறுகிறது. இந்த வெப்ப ஆற்றலையும், சுற்றுப்புறத்தில் உள்ள காற்றில் உள்ள ஆற்றலையும் கிரகித்து மின்ஆற்றலாக சேமிக்கிறது இந்தக் கருவி. இதைக் கொண்டு 2 வாட் மின்சாரத்துக்கும் குறைவான பயன்பாட்டில் இயங்கும் எலக்ட்ரானிக் கருவிகளை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

செல்போன் உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரானிக் கருவிகள் மிகக் குறைந்த மின் ஆற்றலில் இயங்கக்கூடியவை. எனவே இந்த கருவியில் சேமிக்கும் மின் ஆற்றலைக் கொண்டு இனி செல்போன்களை சார்ஜ் செய்ய முடியும். சார்ஜரை தேடிக் கொண்டோ, தூக்கிக் கொண்டோ திரிய வேண்டாம். அனைவரும் பயன்படுத்தலாம் இந்த லாபமான கருவியை.

அதிவேக Opera பிரவுசர் வெளியீடு

விண்டோஸ் இயக்கத்தில் இயங்குவதில் இதுதான் அதிவேக பிரவுசர் என்ற அடைமொழியுடன் களத்தில் இறக்கப்பட்டுள்ளது ஆப்பரா பிரவுசர் பதிப்பு 10.50.  என்ற ஆப்பராவின் தளத்தில் இதனை டவுண்லோட் செய்திடலாம். இதில் தரப்படும் ஜாவா ஸ்கிரிப்ட் இஞ்சின் மற்றும் கிராபிக்ஸ் லைப்ரரி இரண்டும் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் புதுமையானவையாகும்.

இதனைப் பயன்படுத்துபவர்கள், எந்த இணைய தளத்திற்கும் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இதன் வடிவமைப்பு பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அத்துடன் தற்போது மற்ற பிரவுசர்களில் அமைந்திருக்கும் பிரைவேட் பிரவுசிங் வசதியும் தரப்பட்டுள்ளது. வழக்கமான மெனு பாருக்குப் பதிலாக ரேடியோ பட்டன் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு புள்ளியை அழுத்துவதன் மூலம், ஆப்பரா தரும் அனைத்து வசதிகளையும் பார்த்து அறியலாம்.
 
 புதிய தொழில் நுட்பம் முழுவதையும் இது சப்போர்ட் செய்வதால், கண்களைக் கவரும் வகையில் இணைய தளங்களை அமைப்பவர்கள், இந்த பிரவுசரில் அவை நன்றாகக் காட்டப்படும் என நம்பி அமைக்கலாம். விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 தொகுப்புகளின் ஏரோ கிளாஸ் இந்த பிரவுசரில் சப்போர்ட் செய்யப்படுகிறது.

March 13, 2010

தினமும் ஓட்ட பயிற்சி செய்பவர்களுக்கு பாலிய உறவில் ஆர்வம் அதிகரிக்கும்

இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவ அறக்கட்டளை அமைப்பு ஒன்று ஒட்டப்பயிற்சி செய்பவர்களுக்கு “பாலியல்” ஆர்வம் எப்படி இருக்கிறது என்று ஆய்வு நடத்தியது.தினமும் ஓட்டப்பயிற்சி செய்பவர்கள் ஆயிரம் பேர், ஓட்டப்பயிற்சியில் ஈடுபடாத ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

அதில் தினமும் ஓட்டப்பயிற்சி செய்பவர்களில் 10-ல் ஒருவர் தினமும் பாலியல் உறவு வைத்து கொள்வதாக கூறினார்கள். 3 சதவீதம் பேர் 2 நாளைக்கு ஒரு தடவை உறவு வைத்து கொள்வதாக சொன்னார்கள்.

ஆனால் ஓட்டப்பயிற்சியில் ஈடுபடாதவர்களிடம் கேட்டபோது, 25 சதவீதம் பேர் மாதத்துக்கு ஒரு தடவை மட்டும் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதாக கூறினர்.

அதாவது ஓட்டப்பயிற்சி செய்பவர்களை ஒப்பிடும்போது ஓட்டப்பயிற்சி செய்யாதவர்களுக்கு செக்ஸ் ஆர்வம் முகவும் குறைவாக இருந்தது தெரிந்தது.

உடற்பயிற்சி செய்யும்போதே பாலியல் உறவு  பற்றி நினைப்பதாக 10-ல் ஒருவர் கூறினார்கள். ஆனால் பெண்களில் 5 சதவீதம் பேர் மட்டும் உடற்பயிற்சி நேரத்தில் பாலியல் உறவு  பற்றிய நினைப்பு வருவதாக தெரிவித்தனர்.

ஒரே வருடத்தில் $1 பில்லியன் டாலர் யூ டியுப் மெகா சாதனை

கூகுளில் கையில் மண் கிடைத்தால் கூட அதை தங்கமாக மாற்றிவிடுவார்கள் என்று தான் தோறுகிறது. ஒரு சாதாரண இணையதளமாக இருந்த யூடியுப்-ஐ கூகுள் நிறுவனம் வாங்கி இன்று அதை மிகப்பெரிய சாதனை இணையதளமாக மாற்றி இருக்கிறது என்றால் அது மிகையாகாது.

அந்த வகையில் இப்போது கூகுள் நிறுவனத்தில் ஒர் அங்கமான யூடியுப் $1 பில்லியன் டாலர் வருமானத்தை ஒரே வருடத்தில் பெற்றுள்ளது. இது தான் மிகப்பெரிய சாதனை.கடந்த 2009 ஆம் ஆண்டு 729 மில்லியன் டாலர் பணத்தை அள்ளியது. தொழில்நுட்ப வல்லுனர்களின் கணிப்புப்படி இந்த ஆண்டு 945 மில்லியன் டாலர் வரை வரலாம் என்று கூறினர் ஆனால் அனைத்தையும் பொய்யாக்கி இன்று 1 பில்லியன் டாலரை குவித்திருக்கிறது என்றால் அதற்கு முக்கியகாரணம் கூகுள் தான்.

ஒரு பக்கம் கூகுளுக்கு சீனாவில் தடை என்று இருந்தாலும் மறுபக்கம் கூகுள் தன் உண்மையான சாதனையை சாதித்துக்கொண்டே தான் இருக்கிறது.அடுத்த ஆண்டும் இதே போல் சென்றால் கூகுள் மேலும் பல பில்லியன் டாலர்களை குவிக்கும்.

March 12, 2010

மூன்று சிம்களுடன் இன்டெக்ஸ் மொபைல்

சென்ற வாரம் இன்டெக்ஸ் நிறுவனம் மூன்று மற்றும் இரண்டு சிம்களுடன் இயங்கும் இரண்டு மொபைல் போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இரண்டு ஜி.எஸ்.எம். மற்றும் ஒரு சி.டி.எம்.ஏ. என மூன்று சிம்களை இயக்கும் போனாக Intex IN 5030 வெளிவந்துள்ளது. ஒரு ஜி.எஸ்.எம். சிம் இயங்குகையில், சி.டி.எம்.ஏ. சிம் இணைப்பும் இயக்கத்தில் உள்ளது. இரண்டிலும் அழைப்புகள் வந்தால் மாற்றி மாற்றி பேசிக் கொள்ளும் வசதியை இந்த போன் தருகிறது.
 
ஜாவா இயக்கத்தில் செயல்படும் இந்த போனில் இரண்டு பேட்டரிகள் தரப்பட்டுள்ளன. ஒரு முறை சார்ஜ் செய்தால், ஒன்று 4 மணி நேரமும், மற்றொன்று 120 மணி நேரமும் தாக்குப் பிடிக்கின்றன.
 
Intex IN 4420 மாடல் போன் இரண்டு ஜி.எஸ்.எம். சிம்களை இயக்குகிறது. இந்த போனில் வித்தியாசமான ஒரு வசதி உள்ளது. இதன் மூலம் இந்திய கரன்சியில் போலியான ரூபாய் நோட்டுக்களை கண்டறியலாம்.
 
நெட்வொர்க் இணைப்பில் இருக்கையில் போனை அழைப்பவர் அல்லது அழைக்கப் படுபவர் எந்த ஏரியாவில் உள்ளார் என்று அறியலாம். இரண்டு எல்.இ.டி. டார்ச் லைட் தரப்பட்டுள்ளது. வயர்லெஸ் எப்.எம். ரேடியோ, இந்திய திருவிழாக்களையும் விசேஷங்களையும் காட்டும் காலண்டர் மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளன.
 
இதன் பேட்டரி தொடர்ந்து 3.5 மணி நேரம் பயன்படுத்தும் சக்தியைக் கொண்டு ள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 270 மணி நேரம் தாக்குப் பிடிக்கிறது.
 
இரண்டு போன்களிலும் எப்.எம். ரேடியோ, ஆடியோ மற்றும் வீடியோ பிளேயர், புளுடூத், பெர்சனல் கம்ப்யூட்டருடன் இணைந்த செயலாக்கம், மோடம், வெப்காம் செயல்பாடு, பி.சி. சூட், ஜி.பி.ஆர்.எஸ்., வாப், மொபைல் ட்ரேக்கர், ஆட்டோ கால் ரெகார்டர், கரன்சி கன்வெர்டர், மெமரியை 4ஜிபி வரை அதிகமாக்கும் வசதி ஆகியவை உள்ளன. 

டைனோசர்களை மொத்தமாக அழித்த ராட்சத எரி நட்சத்திரம்!


ராட்சத விலங்கான டைனோசர்களை ஒட்டுமொத்தமாக அழித்தது பூமியைத் தாக்கிய ராட்சத எரிநட்சத்திரம் தான் என்று விஞ்ஞானிகள் குழு ஒன்று தெரிவித்துள்ளது.பூமியில் முன்பு வலம் வந்து கொண்டிருந்த ராட்சத பாலூட்டிகளான டைனோசர்கள் எப்படி மறைந்தன என்பது தொடர்ந்து மர்மமாகவே இருந்து வருகிறது.

பூமியின் தென் பகுதியில் (இப்போது இந்தியா உள்ள பகுதி) மிகப் பெரிய அளவிலான எரிமலைகள் வெடித்துச் சிதறியதால் டைனோசர்கள் அழி்ந்ததாக ஒரு கருத்தும், எரி நட்சத்திரம் தாக்கியதால்தான் டைனோசர்கள் இறந்ததாக இன்னொரு கருத்தையும் விஞ்ஞானிகள் கொண்டுள்ளனர்.

எரிமலை வெடித்ததாக கூறும் விஞ்ஞானிகள், கிட்டத்தட்ட 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு அவை தொடர்ந்து வெடித்துச் சிதறிக் கொண்டிருந்ததாக தெரிவித்தனர்.

இந்த சர்ச்சைக்கு தற்போது 41 விஞ்ஞானிகளைக் கொண்ட குழு ஒன்று தீர்வைக் கூறியுள்ளது. ஐரோப்பா, அமெரிக்கா, மெக்சிகோ, கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இந்த விஞ்ஞானிகள் குழு சயின்ஸ் இதழில் தனது ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்தக் குழுவினர் ஆய்வுகள் நடத்தி வந்தனர். தற்போது ஆய்வு முடிவை இக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, கிட்டத்தட்ட 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியைத் தாக்கியது ஒரு ராட்சத எரிநட்சத்திரம். இதன் காரணமாக பூமியில் இருந்து வந்த பாதி அளவிலான உயிரினங்கள் கூண்டோடு அழிந்தன. அதில் டைனோசர்களும் ஒன்று.

பூமியைத் தாக்கிய அந்த எரிநட்சத்திரத்தின் அளவு 15 கிலோமீட்டர் அகலம் உடையதாகும். தற்போது மெக்சிகோ உள்ள பகுதி அன்று சிக்கக்ஸிலப் என்று அறியப்பட்டது. அந்த இடத்தில்தான் இந்த எரிகல் வந்து மோதியது.

இதன் காரணமாக பூமிப் பந்தின் பெரும் பகுதியில் பெரும் தீப்பிழம்புகள் தோன்றின. 10 ரிக்டருக்கும் மேலான நிலநடுக்கங்கள் பூமியை சிதறடித்தன. கண்டங்களில் பெருமளவில் நிலமாற்றங்கள் ஏற்பட்டன. இதனால் ராட்சத சுனாமிகள் தோன்றி பூமிப் பரப்பில் பாதியை அழித்து விட்டது.

ஹீரோஷிமாவைத் தாக்கிய அணு குண்டின் சக்தியை விட பல கோடி மடங்கு அதிக அளவிலான வேகத்துடனும், சக்தியுடனும் அந்த ராட்சத எரிநட்சத்திரம் பூமியைத் தாக்கியுள்ளது. இதனால்தான் பூமியே சிதறுண்டு போயுள்ளது.

இந்த தாக்குதலில் பூமியில் இருந்து வந்த உயிரினங்களில் பாதிக்கும் மேலானவை பூண்டோடு அழிந்து போய் விட்டன. அவற்றில் டைனோசர்களும் ஒன்று.

எரிநட்சத்திரம் தாக்கியதால் ஏற்பட்ட பெரும் பிரளயத்தால் பூமியின் பெரும்பாலான பகுதிகளை இருள் சூழ்ந்தது. இதனால் ஏற்பட்ட புதிய சூழலைத் தாக்குப் பிடிக்க முடியாமல்தான் டைனோசர்கள் அழிந்து போயுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுக் குழுவில் இடம் பெற்றிருந்தவர்களில் ஒருவரான ஜெர்மனி விஞ்ஞானி பீட்டர் ஷூல்ட் கூறுகையில், 65.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அழிந்ததாக நமக்கு தடயங்கள் உள்ளன. இதை வைத்துப் பார்க்கும்போது அப்போது பூமியைத் தாக்கிய எரிநட்சத்திரம்தான் இதற்குக் காரணம் எனத் தெரிய வருகிறது.

மேலும் இந்தியாவில் ஏற்பட்ட பெரும் எரிமலை வெடிப்புகளால் டைனோசர்கள் இறந்ததாக கூற முடியாத அளவுக்கு எங்களது ஆய்வு முடிவுகள் உள்ளன.

டைனோசர்கள் அழிந்த காலத்தில் ஏற்பட்ட பிரளயத்திற்குப் பின்னர்தான் மனிதர்கள் சக்தி வாய்ந்த உயிரினங்களாக பூமியில் உருவெடுத்தனர். எனவே இந்தப் பிரளயம், மனித குல வளர்ச்சிக்கு அடிக்கல்லாக அமைந்தது என்று கூடச் சொல்லலாம் என்றார்.

March 11, 2010

ஐபேடுக்கு போட்டியாக மைரோசாப்டின் கூரியர்

ஆப்பிளின் ஐபேடுக்கு போட்டியாக கூகுல் தனது டேப்லட் கம்ப்யூட்டரை களம் இறக்கலாம் என தொழில்நுட்ப உலகில் ஆருஃபம் கூறப்பட்டு வரும் நிலையில் மைக்ரோசாப்ட் தன் பங்குக்கு ஒரு டேப்லட் கம்ப்யூட்டரை அறிமுகம் செய்ய இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
மைக்ரோசாப்டின் டேப்லட்ற்கு கூரியர் என பெயரிடப்பட்டுள்ள‌தாக இந்த செய்தியை வெலியிட்டுள்ள ஸ்விட்ச்டு தளம் தெரிவிக்கிறது.

ஐபேடை போல் அல்லாமல் இரட்டை திரையோடு அமைந்துள்ள இதனை ஸ்டைலஸ் கொன்டு இயக்கலாம். குறிப்பெடுக்கவும்  புத்த‌கண்க்க‌ளை ப‌டிக்க‌வும் அதிக‌ம் உத‌வ‌க்கூடிய‌ இதில் கேமிராவும் இணைக்க‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ தெரிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.மேலும் கால‌ண்ட‌ர் வ‌ச‌தியும் இணைக்க‌ப்ப‌டுள்ள‌து.

இத‌ன் விலையும் ஐபேடை விட‌ குறைவாக‌ இருக்க‌லாம் என்று எதிர்பார்க்க‌ப‌டுகிற‌து.எப்போது வேண்டுமானாலும் இத‌ற்கான‌ அறிவிப்பு மைக்ரோசாப்டிட‌ம் இருந்து வ‌ர‌லாம் என்கின்ற‌ன‌ர்.

மார்பகப் புற்றுநோயை தடுக்கும் 'பாகற்காய்'

பாகற்காய் கசப்பானது என்றாலும், பலருக்குப் பிடித்தமான காய்கறி. தற்போது பாகற்காய் தரும் மற்றொரு இனிப்பான செய்தி, இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிர்ப்பு அரணாக அமையும் என்பது.
இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் விஞ்ஞானி என்பது கூடுதல் மகிழ்ச்சியளிக்கும் விஷயம்.

மார்பகப் புற்று செல் வளர்ச்சியை பாகற்காய் குறிப்பிட்ட அளவு கட்டுப்படுத்துகிறது, எனவே இது மார்பகப் புற்றுநோய்க்கு எதிராக ஒரு தடுப்பு அமைப்பாகச் செயல்படும் என்பதுதான் புதிய கண்டுபிடிப்பின் சாரம்.

இந்தக் கண்டுபிடிப்புக்குச் சொந்தக்காரர், அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழக நோயியல் துறை பேராசிரியை ரத்னா ரே.

“மார்பகப் புற்றுநோயைத் தடுப்பதற்கு பாகற்காய் சாறை மருந்தாகப் பயன்படுத்த முடியும்” என்கிறார் இவர்.

ரத்னா ரேயின் இந்தக் கண்டுபிடிப்பு, அமெரிக்க புற்றுநோய்க் கழகத்தின் இதழான `கேன்சர் ரிசர்ச்’-ல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு செய்யப்பட்ட ஆய்வுகளிலேயே பாகற்காயானது, `ஹைப்போகிளைசீமிக்’ (ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைப்பது) மற்றும் `ஹைப்போலிபிடெமிக்’ தாக்கங்களை ஏற்படுத்துவது தெரியவந்திருக்கிறது என்கிறார் ரத்னா. இந் தத் தாக்கங்களின் காரணமாக, இந்திய நாட்டுப்புற மருந்துகளில் சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்துவதற்குப் பாகற்காய் சாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியா தவிர, சீனா, மத்திய அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் பாரம்பரிய மருந்துகளில் பாகற்காய் பயன்படுத்தப்படுகிறது.

ரத்னா ரேயும் அவரது சக ஆராய்ச்சியாளர்களும் மனித மார்பகப் புற்றுநோய் செல்களையும், மனித பாலூட்டிச் சுரப்பி `எபிதீலியல்’ செல்களையும் ஆய்வகத்தில் வைத்து ஆராய்ந்தனர். அப்போது, பாகற்காயில் இருந்து வடித்து எடுக்கப்பட்ட பொருள், மார்பகப் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி மற்றும் பிரிவை குறிப்பிடத்தக்க அளவு குறைத்ததோடு, அவற்றை அழிக்கவும் செய்தது. இந்த ஆரம்பகட்ட முடிவுகள், மார்பகப் புற்றுநோய் ஆய்வில் ஊக்கம் அளிப்பவையாக அமைந்துள்ளன.

“பெண்களின் முக்கியமான உயிர்க்கொல்லியாக மார்பகப் புற்றுநோய் உள்ளது. அதற்குத் தடை போட முடியுமா என்று பல்வேறு ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தற்போதைய ஆய்வில் கிடைத்திருக்கும் முடிவுகள் முக்கியமானவை” என்று கொலோராடோ பல்கலைக்கழக மருந்து அறிவியல் துறைப் பேராசிரியர் ராஜேஷ் அகர்வால் தெரிவிக்கிறார்.

“தொடர்ந்து நடத்தும் ஆய்வுகளில், பாகற்காயைப் பற்றிய இந்த உண்மை உறுதியானால், மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விஷயங்களில் இதுவும் ஒன்று என்பது உறுதிப்படும்” என்கிறார் அகர்வால்.

`கேன்சர் ரிசர்ச்’ பத்திரிகையின் இணை ஆசிரியராகவும் உள்ள அகர்வால் மேலும் கூறுகையில்,
 
பாகற்காயைப் பற்றிய ஆய்வின் எளிமையான தன்மை, தெளிவான முடிவுகள், இந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் ஆகியவற்றின் காரணமாக, முந்தைய ஆய்வுகளில் இருந்து இது பெரிதும் வேறுபடுகிறது என்கிறார்.

அதேநேரத்தில், புற்றுநோய்க்கு எதிராக பாகற்காயின் தடுப்புத் திறனை வெளிப்படுத்துவதில் தற்போது ஓரடிதான் முன்னே வைக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறுகிறார் இவர்.

“மார்பகப் புற்றுநோய் செல்களின் மூலக்கூறுகளை பாகற்காய் சாறு எவ்வாறு குறி வைக்கிறது என்று நன்றாகப் புரிந்துகொள்வதற்கும், அதில் இதன் திறனை வெளிப்படுத்துவதற்கும் தொடர்ந்து மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்கிறார் அகர்வால்.

அதேநேரம் இவர் ஓர் எச்சரிக்கையையும் விடுக்கிறார்.

அதாவது, தற்போது கிடைத்திருக்கும் முடிவுகள், பாகற்காயை ஒரு புற்றுநோய் எதிர்ப்பு மூலமாக நம்பிக்கை அளித்தாலும், இந்த முடிவுகளின் மதிப்புகளை நிறுவுவதும், மனிதர்களுக்கு மருந்தாகக் கொடுப்பதற்கு முன் விலங்குகளில் இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதும் முக்கியமானது என்கிறார்.

ரத்னா ரேயும், அவரது சக ஆராய்ச்சியாளர்களும், புற்றுநோய் செல்களின் வளர்ச்சி, பிரிவைத் தடுக்கும் பாகற்காய் சாறின் தன்மையை உறுதிப்படுத்துவதற்கு மேலும் பலவித புற்றுநோய் செல்களில் அவற்றைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இதை மருந்தாகக் கொடுத்து ஆய்வு செய்யவும் முடிவு செய்திருக்கின்றனர்.

பாகற்காய் வடிபொருள், ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. மேற்கத்திய நாடுகளிலும் இது மருத்துவத் தன்மை வாய்ந்த உணவுப்பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. காரணம் இது, `மார்மோர்டின்’, `வைட்டமின் சி’, `கரோட்டினாய்டுகள்’, `பிளேவனாய்டுகள்’, `பாலிபினால்கள்’ போன்றவற்றைக் கொண்டுள்ளது.

விரைவில் வருகிறது 3டி டி.வி.

சினிமா தியோட்டர்களில் மட்டுமே பார்த்து வந்த 3டி எபக்டை, இனி டி.வி.,யிலும் பார்த்து கொள்ளலாம். இந்த முயற்சியில் தான் தற்போது சாம்சங் மற்றும் பானாசோனிக் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
இந்நிறுவனங்கள் தயாரித்துள்ள 3டி டி.வி.,க்களை விரைவில் சந்தையில் விட உள்ளன. இதன் விலை 3000 டாலர் வரை இருக்கும் என்று எதிர்பாக்கப் படுகிறது. பானசோனிக் நிறுவனம் வெளியிட உள்ள 3டி டி.வி.,யில், 3 டி கண்ணாடிகள் தரப்படுகின்றன.
 
இது, தியேட்டர்களில் தரப்படுவதைப் போல பயன்படுத்தியதும் தூக்கியெறியும் ரகமல்ல. இவை அளவில் பெரியதாகவும், ரீசார்ஜ் செய்யக் கூடிய எலெக்ட்ரிக் கண்ணாடிகளாகவும் இருக்குமாம்.
 
ஹாலிவுட்டில் ஷ்ரெக், அவதார், அலைஸ் இன் வொன்டர்லேண்ட் என பெரும்பாலும் 3 டி படங்கள் வரத் தொடங்கிவிட்டதால் அவற்றுக்கு தொலைக்காட்சி உலகிலும் பெரிய மார்க்கெட்டை ஏற்படுத்த வேண்டிய அவசியம் காரணமாக இந்த 3டி டிவிக்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக சாம்சங் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
எப்படியும் இந்த ஆண்டு 40 லட்சம் 3 டி டிவிக்கள் விற்றுவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review