November 30, 2009

டேட்டா ஸ்டோரேஜ் புதிய கண்டுபிடிப்பு

அமெரிக்காவில் இயங்கும் ஜெனரல் எலக்ட்ரிக் (GE) நிறுவனத்தின் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு டேட்டா ஸ்டோரேஜ் தொழில் நுட்பத்தில் புதிய வழி ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது.

இதன்படி நாம் கற்பனையில் எண்ண முடியாத அளவிலான டேட்டாவினை ஒரு சிடியில் பதிந்து எடுத்துச் செல்ல முடியும். இதனை holographic storage technology என இந்நிறுவனம் அழைக்கிறது.

இதன் மூலம் 100 டிவிடிக்களில் உள்ள டேட்டாவினை ஒரு டிஸ்க்கில் பதிய முடியும். இந்தக் கணக்கின் படி ஒரு டிஸ்க்கில் 470 ஜிபி அளவில் டேட்டாவினை எழுத முடியும். இது ஏறத்தாழ அரை டெரா பைட் ஆகும்.


இந்த ஆண்டிலேயே மக்களுக்குக் கிடைக்க இருக்கும் இந்த அரிய தொழில் நுட்பம் இன்னும் பல சோதனைகளுக்குட் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அனைத்து சோதனைகளையும் தாண்டிய பின்னரே இதற்கு அங்கீகாரமும் அனுமதியும் வழங்கப்படும்.

ஹோலோகிராபிக் ஸ்டோரேஜ் என்னும் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இது செயல்படுகிறது என ஜி.இ. நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த தொழில் நுட்பம் மூலம் ஒரு முறை எழுதிய இடத்திலேயே மேலும் மேலும் டேட்டாவினை எழுதும் வழிகளை இது அமைத்துத் தருகிறது. தற்போது உள்ள சிடி, டிவிடிக்களில் லேயர் லேயராகத்தான் டேட்டாக்கள் திணிக்கப்படுகின்றன.

ஒன்றின் மேலாக ஒன்று எழுதப்படுவதில்லை. 1960 ஆம் ஆண்டிலேயே இந்த தொழில் நுட்பம் குறித்துப் பேசப்பட்டாலும் இப்போதுதான் மக்களுக்குப் பயன் தரும் வகையில் இது வெளிவருகிறது.


இந்த தொழில் நுட்பம் குறித்து மேலும் அறிய http://en.wikipedia.org/wiki/Holographic_memory என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.

November 29, 2009

கூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை

இணையத்தின் பெரும் சக்தியான கூகிள் தனது புதிய இயங்குதளமான கூகிள் குரோம் ஓஎஸ்சை திறந்த வெளி (Open Source) மென்பொருளாக 19 நவம்பர் 2009 அன்று அறிமுகப்படுத்தி உள்ளது. கூகிள் புதிய இயங்குதள தயாரிப்பில் ஈடுபட்டு இருப்பதாக அதற்கு கூகிள் குரோம் ஓஎஸ் என்று பெயரிட்டு கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. நேற்று அதற்கான திறந்தவெளி நிரலை வெளியிட்டு உள்ளது.

கூகிள் குரோம் ஓஎஸ் என்பது என்ன? அது என்னவெல்லாம் சேவை வழங்க போகிறது என்பதை சற்றே விளக்கமாக பார்ப்போம்.

கணினியை பொறுத்தவரை சராசரி பயனர் என்ன பயன்பாடுகளுக்கு உபயோகிக்கிறார்? நம்மையே எடுத்து கொள்ளுவோம். கணினியை துவக்கிய பின் நேரடியாக இணைய உலாவியை திறந்து கொள்ளுகிறோம். ஈமெயில், யூடியுப், நண்பர்களுடன் அரட்டை, தளங்களை வாசித்தல் என்று பெரும்பாலும் நமது நேரத்தை இணையத்தில் செலவு செய்கிறோம். முடிந்தவுடன் இணைய உலாவியை மூடி விட்டு கணினியை சட்டவுன் செய்து விடுகிறோம். நமது பெரும்பாலான நேரம் இணைய உலாவியில் தான் செலவாகிறது. கணினியில் உள்ள மற்ற ப்ரோக்ராம்களை மென்பொருள்களை உபயோகிப்பது என்பது மிக குறைவே.





இந்த விஷயத்தை தான் கூகிள் தனது குரோம் ஓஎஸ் இயங்குதளத்திற்கு மூல மந்திரமாக எடுத்து உள்ளது. பெரும்பாலும் மற்ற மென்பொருள்களை உபயோகிக்காத போது அவற்றை கணினியில் ஏன் அடைத்து வைக்க வேண்டும்? வைரஸ் பாதுகாப்பு என்று ஏன் பயனரை சிக்கலுக்கு உள்ளாக்க வேண்டும்?

கூகிள் குரோம் ஓஎஸ்சை பொறுத்தவரை நீங்கள் உங்கள் கணினியில் எதையுமே நிறுவ தேவை இல்லை. அனைத்துமே இணைய அப்ளிகேஷன்கள்தான். அவை மென்பொருள் நிறுவனங்களில் செர்வரில் பாதுகாப்பாக இருக்கும். கூகிள் குரோம் ஓஎஸ் கணினியை திறந்தவுடன் அது இணையத்திற்கு சென்று விடும்.

உதாரணத்திற்கு நீங்கள் ஒரு ஆவணத்தை உருவாக்க, எடிட் செய்ய வேண்டும். சாதரணமாக நீங்கள் மைக்ரோசாப்ட் வோர்ட் உபயோகித்து வந்து இருப்பீர்கள். கூகிள் குரோம் ஓஎஸ்சை பொறுத்தவரை இணையத்தில் அதற்கான ஒரு அப்ளிகேஷன் வழங்கப்படும் அதனை நீங்கள் உபயோகித்து கொள்ளலாம். உதாரணத்திற்கு கூகிள் டாக்ஸ். http://docs.google.com/ . மற்றும் விண்டோஸ்சில் .EXE கோப்பு போன்று இங்கு எதனையும் இயக்க முடியாது. அதற்கான தேவையும் இங்கு இல்லை.


இது போன்று உங்கள் பெரும்பாலான தேவைகளுக்கு (படங்கள் உருவாக்குதல், வீடியோ உருவாக்குதல் உள்ளிட்ட) இணையத்தில் உள்ள அப்ளிகேஷன்கள் வழங்கப்படும். எதையும் நீங்கள் கணினியில் நிறுவி வைத்து கொள்ள தேவை இல்லை. உபயோகித்த பின்பு நீங்கள் உருவாக்கும் கோப்புகளை நீங்கள் இணையத்திலே சேமித்து வைக்கலாம். அல்லது உங்கள் USB, மெமரி கார்டு போன்றவற்றில் சேமித்து கொள்ளலாம். சுருங்க சொல்ல வேண்டும் எனில், உங்கள் கோப்புகளை கூகிள் , மென்பொருள் நிறுவனங்களே இணையத்தில் பாதுகாக்க போகிறது. நீங்கள் உலகின் எங்கிருந்து வேண்டுமானாலும் அவற்றை அணுகி கொள்ளலாம்.

இதன் சாதகங்கள் என்ன என்று கூகிள் சொல்வதை பார்ப்போம்.

1. கூகிள் குரோம் ஓஎஸ்சின் தாரக மந்திரம் வேகம், எளிமை மற்றும் பாதுகாப்பு (Speed, Simplicity, and Security) .

வேகம் : கூகிள் குரோம் ஓஎஸ் அதி வேகத்தில் திறக்கும் என்கிறார்கள். தற்போது ஏழு வினாடிகளில் பூட் ஆகிறது.

எளிமை : கூகிள் குரோம் திறந்தவுடன் இணைய உலாவிதான் எல்லாம். அதிலேயே அனைத்தும் இருக்கும். இணைய உலாவியை உபயோகிக்க தெரிந்து அனைவரும் எளிமையாக கூகிள் குரோம் உபயோகிக்கலாம். கூகிள் குரோம் ஓஎஸ் பயன்பாடு குறித்த இந்த வீடியோவை பாருங்கள்.

பாதுகாப்பு : அனைத்து அப்ளிகேஷன்களும் இணைய மென்பொருள்கள் என்பதால், எந்த மென்பொருளும் உங்கள் கணினியில் நிறுவுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட வில்லை. இதனால் வைரஸ், அட்வேர் போன்ற தாக்குதலுக்கு வாய்ப்பில்லை. கூகிள் குரோம் ஓஎஸ் பாதுகாப்பு குறித்த இந்த வீடியோ பாருங்கள்.

2. கூகிள் குரோம் ஓஎஸ், தோற்றத்தில் குரோம் இணைய உலாவியை போன்றே இருக்கும். இடது புறத்தில் இணைய அப்ளிகேசன்களுக்கு என்று தனியே ஒரு டேப்(Tab) இருக்கும். ஒவ்வொரு இணையதளத்தையும் நீங்கள் தனித்தனி டேப்களில் திறந்து பார்ப்பது போன்று கூகிள் அப்ளிகேஷன்களை தனித்தனி டேப்களில் திறந்து வேலை செய்து கொள்ளலாம்.

3. கேமராவில் / மொபைலில் வைத்துள்ள புகைப்படங்கள், கோப்புகள் போன்றவதை அணுக நீங்கள் அவற்றை கணினியுடன் இணைத்து இணையத்தில் நேரடியாக ஏற்றி வேலைகளை செய்து கொள்ள முடியும்.

கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. கூகிள் குரோம் ஓஎஸ்சை எப்படி வாங்குவது, கணினியில் எப்படி நிறுவுவது?

கூகிள் குரோம் ஓஎஸ்சை தனியே DVD யில் வாங்கி கணினியில் நிறுவுவது என்ற வேலை இல்லை. நேரடியாக கூகிள் குரோம் ஓஎஸ் கணினிகலாகவே வாங்க வேண்டியதுதான். உதாரணத்திற்கு நாம் மொபைல் வாங்கும் பொழுது அந்த நிறுவனத்தின் இயங்குதளத்துடன் அனைத்தும் நிறுவியே வருமே அது போல. கூகிள் குரோம் கணினிகள் என்று தனியே விற்பனைக்கு வரும். இதற்கான முயற்சிகளை இன்டெல், அசுஸ், HP போன்ற நிறுவனங்களுடன் கூகிள் எடுத்து வருகிறது. விண்டோஸ் போல நீங்கள் கூகிள் குரோம் ஓஎஸ்சை அனைத்து கணினிகளிலும் நிறுவி கொள்ள முடியாது.

கூகிள் குரோம் ஓஎஸ் எப்பாது வர போகிறது. இன்னும் ஒரு வருடத்தில் பயனர்களுக்கு கிடைக்கும் என்று காலம் நிர்ணயித்து உள்ளார்கள். இது ஆரம்பத்தில் டெஸ்க்டாப் கணினிகள், லேப்டாப் கணினிகளுக்கு வர போவது இல்லை. நெட்புக் கணினிகளுடன் மட்டும் ஆரம்பத்தில் வரும். நாளடைவில் அனைத்து விதமான கணினிகளுக்கும் விரிவு படுத்தப்படும்.

நெட்புக் கணினிகள் என்பது சிறிய அளவிலாக லேப்டாப்கள் ஆகும். எட்டு முதல் 11 இன்ச் திரைகளுடன் எங்கும் எளிதில் கொண்டு சென்று உபயோகிக்கும் படி சிறிய அளவில் வருகின்றன. இவை மிகவும் அதிகமாக பரவி வருவதால், இதன் தேவை அதிகரித்து இருப்பதால் கூகிள் இங்கிருந்து ஆரம்பிக்கிறது.

ஓகே. இது என்ன விலை இருக்கும். மிக குறைந்த அளவில் வரலாம். கூகிள் கூறுவதை பார்த்தால் இந்த கணினியில் ஹார்டுடிஸ்க்கே தேவைப்படாது. நமது இந்திய ரூபாயில் பதினைந்தாயிரம் விலையில் ஆரம்பிக்கலாம். தொலைகாட்சி பெட்டிகள் போன்று கூகிள் குரோம் ஓஎஸ் பெட்டிகள் இல்லங்களில் ஆக்ரமிக்கலாம்.

இதனுடைய நீட்சி எந்த அளவில் இருக்கும்? மென்பொருள் நிறுவனங்கள், மென்பொருள்களை விற்பதுடன் மென்பொருள்களை இணையத்தில் வாடகைக்கு விடும் சேவையை வழங்கலாம். உதாரணத்திற்கு ஒரு புகைப்படத்தில் வேலை செய்ய உங்களுக்கு போட்டோஷாப் மென்பொருள் தேவை படுகிறது. அதன் விலை பல லட்சம் ரூபாய்கள். அதை எந்நேரமும் உபயோகிக்க போவதில்லை. சில மணி நேரங்கள் மட்டுமே தேவை படுகிறது. இது போன்ற சூழல்களில் நீங்கள் அந்த மென்பொருளை இணையத்தில் சில மணி நேரங்கள் உபயோகித்து கொள்ள முடியும். அதற்கு சிறிய அளவு வாடகை மட்டும் வசூலிப்பார்கள். இந்த கட்டணம் கூட உங்கள் தொலைபேசி, இணைய பில்களில் வரும் அளவு அதன் மூலம் செலுத்தும்படி இதன் பயன்பாடுகள் நீளலாம்.

இந்தியாவில் இது எந்த அளவுக்கு எடுபடும்? இந்தியாவில் இணைய இணைப்பு என்பது இன்னும் தடுமாற்றத்தில்தான் உள்ளது. மொபைல் போன்களை செல்லும் இடமெல்லாம் உபயோகித்து கொள்வது போல செல்லுமிடமெல்லாம் இணைய இணைப்பு பெற இன்னும் ஐந்து வருடங்கள் ஆகலாம். அது போன்ற நேரத்தில்தான் கூகிள் குரோம் ஓஎஸ்சின் பயன்பாடு முழுமையாக கிடைக்கும்.

இணைய இணைப்பு இல்லை என்றால் கூகிள் குரோம் ஓஎஸ் எதற்கும் பயன்படாது.


புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் உடற்பயிற்சி

தினமும் தீவிரமாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு வியாதிகளால் ஏற்படும் பாதிப்புகள் கட்டுப்பாட்டில் இருந்தது தெரிய வந்துள்ளது.

கடின உடற்பயிற்சியானது அனைத்து வகைப் புற்று நோய் பாதிப்புகளையும் கட்டுப்படுத்தினாலும் குறிப்பாக நுரையீரல் மற்றும் இரப்பை புற்று நோய்க்கு நல்ல நிவாரணமாக இருக்கிறது.


இதற்காக தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்தால் போதுமானது. அதாவது, மெதுவாக ஓடுதல், நீச்சல் பயிற்சி, படகு ஓட்டுதல் போன்றவற்றையும் சேர்த்து உங்கள் உடற்பயிற்சி அமைய வேண்டும்.

விளையாட்டில் ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தால் கால்பந்து, டென்னிஸ் போன்ற விளையாட்டுகளிலும் அரை மணி நேரம் ஈடுபடலாம்.

எதுவாக இருந்தாலும் ஓரிரு நாட்கள் செய்துவிட்டு பின்னர் விட்டுவிடுவதில் பயனில்லை. தொடர்ந்து செய்வதால் பலனுள்ளது என்கிறது மருத்துவ ஆய்வுகள்.

November 28, 2009

சர்வதேச விண்வெளி மையத்துக்கு புதிய சாதனங்கள் பொருத்தப்பட்டன

அட்லாண்டிஸ் விண்வெளி ஓடத்தில் தாம் கொண்டு சென்ற புதிய சாதனங்களை சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்கள் சனிக்கிழமை பொருத்தினர்.
அதற்காக அவர்கள் விண்ணில் நடந்தனர். சில பராமரிப்புப் பணிகளையும் மேற்கொண்டனர். இந்தப் பயணத்தின்போது மொத்தம் 3 தடவைகள் விண்ணில் நடை மேற்கொள்ள அவர்கள் திட்டமிட்டு 2 ஆவது நடையில் இந்தப் பணிகளை முடித்தனர். அடுத்த நடைப்பயணத்தை நேற்று திங்கட்கிழமை முடித்தனர்.
சாதனங்களைப் பொருத்தும் பணியில் விண்வெளி வீரர்கள் மைக் போர்மேன், ராண்டி பிரெஸ்னிக் ஆகியோர் ஈடுபட்டனர். இவர்களில் பிரெஸ்னிக் அப்பாவாகும் மகிழ்ச்சியில் தனக்கு இட்ட பணியில் முதலில் ஆர்வம் காட்டவில்லை.


அவரது மனைவிக்கு எந்த நேரத்திலும் இரண்டாவது குழந்தை பிறக்கலாம் என்ற நிலை இருந்தது. எனினும், ஞாயிற்றுக்கிழமை அவரது மனைவி ரெபேக்கா, ஹுஸ்டனில் இரண்டாவது குழந்தையைப் பிரசவித்தார். அதுவும் பெண் குழந்தை. அதனால் விண்வெளியில் அப்பாவான இரண்டாவது நபர் என்னும் பெருமை பிரெஸ்னிக்குக்கு கிடைத்துள்ளது.

முதல் விண்வெளி வீரர் மிக்கி பிங்கி, 2004 ஆம் ஆண்டு விண்வெளியில் இருந்த சமயம், அவரது பாரியார் குழந்தை ஒன்றை பிரசவித்தார். அதனால் அவர், விண்வெளி முதல் தந்தை என்ற பெருமையைப் பெற்றார். தற்போது இரு விண்வெளி வீரர்களும் விண்வெளி நடைப்பயண நேரத்தைக் குறைத்துக் கொண்டபோதிலும் தமக்குக் கொடுக்கப்பட்ட பணிகளை நேரத்துக்கு முன்னரே முடித்துவிட்டனர் என நாசா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

November 27, 2009

“கேன்சர்” நோயை பரப்பும் “மார்பின்” மாத்திரை: அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கேன்சர் நோயினால் (புற்று நோய்) பாதித்தவர்களுக்கு வலியை போக்குவதற்காக “மார்பின்” மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த மாத்திரை புற்று நோயை மேலும் பரவ செய்யும் தன்மை உடையது என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ரத்தநாளங்களை பலப்படுத்துவதற்கு பதிலாக மற்ற செல்களிலும் புற்று நோயை பரவ செய்வது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஆய்வுகூடத்தில் பரிசோதிக்கப்பட்டது. பாஸ்டனில் உள்ள அமெரிக்க புற்றுநோய் ஆய்வு நிறுவனத்தில் முன்னணி ஆராய்ச்சியாளர் பேட்ரிக் சிங்கிள்டன் தெரிவித்தார்.

மார்பினுக்கு பதிலாக மெத்தில் நால்ட்ரோசன் அல்லது எம்.என்.டி.எக்ஸ். மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

2014இல் புதிய அணு உலை அறிமுகம்: இரஷ்யா


2014ஆம் ஆண்டிற்குள் அடுத்தத் தலைமுறை அணு உலையையும், புதிய வகை அணு எரி பொருளையும் இரஷ்யா அறிமுகப்படுத்தும் என்று அந்நாட்டு அதிபர் திமித்ரி மெட்விடேவ் கூறியுள்ளார்.

இரஷ்ய நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் இரஷ்யா நாட்டின் நிலை குறித்த அறிக்கை தாக்கல் செய்துப் பேசிய இரஷ்ய அதிபர் திமித்ரி மெட்விடேவ், “தொழில்நுட்ப நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் அணு சக்தி பொறியியல் மேம்பாட்டைத் தனியாக மேற்கொண்டு வருகிறோம். இத்திட்டத்தின் கீழ் அடுத்த தலைமுறை அணு உலையும், புதிய வகை அணு எரிபொருளும் உருவாக்கப்படும். 2014ஆம் ஆண்டிற்குள் உருவாக்கப்படும் இவ்விரண்டு தொழில்நுட்பங்களுக்கு உள்நாட்டிலும் அயல் நாடுகளிலும் பெரிதும் வரவேற்பு இருக்கும்” என்று கூறியுள்ளார்.


புதிய அணு உலை தொழில்நுட்பத்தை உருவாக்கினாலும், இந்தியா உள்ளிட்ட அணு சக்தி தொழில்நுட்ப நாடுகள் சேர்ந்து உருவாக்கும் ஈட்டர் என்றழைக்கப்படும் பன்னாட்டு அனல் அணு உலைத் தயாரிப்பில் இரஷ்யாவும் ஈடுபடும் என்றும், இரஷ்யா உருவாக்கவுள்ள புதிய அணுத் தொழில்நுட்பம் மருத்துவ மேம்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும் என்றும் மெட்விடேவ் கூறியுள்ளார்.

இரஷ்யாவின் அணு மின் உலை தயாரிப்பு நிறுவனமான டிவிஇஎல் உலகம் முழுவதிலும் இயங்கும் அணு உலைகளில் 17 விழுக்காடு தயாரித்து வழங்கிய பெரும் நிறுவனமாகும். இந்நிறுவனம் டிவிஎஸ்-கிவாட்ரட் எனும் புதிய அணு எரிபொருளை உருவாக்கி வருகிறது. இது மேற்கத்திய நாடுகள் பயன்படுத்திவரும் அணு உலைகளில் பயன்படுத்தக் கூடிய எரிபொருளாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஆனால் இரஷ்ய அதிபர் திமித்ரி மெட்விடேவ் கூறுவது அந்நாடு உருவாக்கிவரும் ஃபாஸ்ட் நியூட்ரான் ரியாக்டர் என்பதாகும். அதிவேக அணு உலை என்றழைக்கப்படும் இந்த வகை அணு உலையில் பயன்படுத்தப்படும் அணு எரிபொருளின் நியூட்ரான்கள் வெடித்து சக்தியை வெளிப்படுத்தும் போது வெடித்த எண்ணிக்கைக்கு அதிகமான நியூட்ரான்களை உருவாக்கும், அவைகள் வெடித்து மேலும் சக்தியையும், அதே நேரத்தில் மேலும் நியூட்ரான்களையும் உருவாக்கும், எனவே அணுச் சக்தி வெளிப்படுதல் தொடர்ந்து நடைபெறும். இதற்கான அணு எரிபொருள் அதிகம் செறிவூட்டப்பட்டதாக இருக்க வேண்டும், இவ்வகை அணு உலையை யூரல் பகுதியில் உள்ள பெலோயார்க்ஸஃ அணு உலைக் கூடத்தில் கடந்த இருபது வருடங்களாக சோதனை ரீதியாக இயங்கி வருகிறது. இந்த வகை அணு உலைகளையே இரஷ்யா அடுத்த 5 ஆண்டுகளில் உருவாக்கும் என்பதை மெட்விடேவ் தெரிவித்துள்ளார்.

November 26, 2009

பெண்களுக்கு ஆண்களிடம் பிடித்த குணங்கள்

ஆண், பெண் என்ற பிரிவெல்லாம் இப்போது போயே போச்சு! ஆணுக்குரிய அனைத்து வேலைகளையும் பெண்கள் செய்கின்றனர். ஆனால் பெண்ணுக்குரிய அனைத்து குணங்களையும் ஆண்கள் பெற்றிருக்கின்றனரா என்றால் அதுதான் இல்லை என்கிறது ஒரு உளவியல் ஆய்வு.

எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையையும் தனக்கு ஏற்றாற்போல் மாற்றிவிடும் பக்குவமும், திறமையும் பெண்களுக்கு மட்டுமே உண்டு. யாரையும் பார்த்த மாத்திரத்தில் அவர்களின் குணங்களை ஓரளவு புரிந்து விடும் ஆற்றலும் அவர்களுக்கு உண்டு. மற்றவர்களை கவர்ந்திழுக்கும் வசீகரமும் பெண்களிடம் இருந்தால் இன்னும் சிறப்பு.

அழகும், அறிவும், அடுத்தவர்களை புரிந்து கொள்ளும் குணங்களும், நல்ல பழக்க வழக்கங்களும் உள்ள பெண்களுக்கு எப்போதுமே முன்னேற்றம் என்பது தொட்டு விடும் தூரம்தான். அப்படி வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு முன்னேறும் ஸ்மார்ட் பெண்களின் சிறப்புக் குணங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்,

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் 18 முதல் 33 வய துக்குரிய பெண்களிடம், 'எப்படிப்பட்ட ஆண்களைப் பிடிக்கும்' என்ற கேள்விக்கு நான்கு குணங்களை கொண்ட ஆண்களைப் பிடிக்கும் என்று பதில் கூறினர்.


அவர்கள் கூறிய நான்கு குணங்கள், குழந்தைகள் மீதான விருப்பம், ஆண்மைக்குரிய விஷ யங்கள், உடல் ரீதியான கவர்ச்சி, கருணை உள்ளம் இவையே பெண்கள் 'டிக்' செய்த குணங் கள். இயல்பாகவே குழந்தைகளுக்கு பெண்கள் என்றால் மிகவும் விருப்பமான விஷயம். அதே குணம் ஆண்களுக்கும் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். மேலும் நீண்ட நேரம் ரொமான்ஸ் செய்யும் ஆண்களையும் பெண்களுக்கு பிடித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக ஆர்ப்பாட்டமில்லாத ஆண்களையே பிடிக்குமாம்!

நிர்வாகத் திறன் என்பது பெண்களுக்கு இயல்பாகவே அமைந்துள்ளது. குடும்ப நிர்வாகம், அலுவலக நிர்வாகம் மற்றும் தொழில் நிர்வாகம் என்பது பொறுமை குணத்துடன் செயல்படும் பெண்களுக்கு கடவுள் கொடுத்த வரம் என்றும் சொல்லலாம்.

தலைமைப் பண்புக்குரிய குணங்களான பணிவு, துணிவு, கனிவு என மூன்றும் ஒருங்கே அமைந்துள்ளதால் பெண்கள் தலைமையை பெரும்பாலான நிறுவனங்கள் ஏற்றுக் கொள்கின்றன. இதை நீங்கள் சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள நிறுவனங்களில் கண்கூடாக பார்க்கலாம்.

பெண்கள் பார்வை என்பது மிகவும் கூர்மையானது என்கிறார்கள் கணவன்மார்கள். அவர்கள் ஒரு வீட்டையோ அல்லது மனிதர்களையோ ஒரு முறை பார்த்தாலே போதும், துல்லியமாக கணித்துவிடுகின்றனர்.

அதேபோல் தங்களுடைய கணவன்மார்களின் தவறுகளை... மனதில் இருக்கும் விஷயங்களை குறிப்புகளால் உணர்ந்து கொள்ளும் திறன் படைத்தவர்கள் பெண்கள். அதனால்தான் கல்யாணமான ஆண்கள், தங்கள் மனைவியிடம் மிகவும் ஜாக்கிரதையுடன் நடந்து கொள்கின்றனர்.

இன்றைய அவசர உலகில் சைக்கிள், டூவீலர், கார் மற்றும் இதர வாகனங்களையும் பெண்கள் இயக்குகின்றனர். இந்த வாகனங்களை ஆண்கள் ஓட்டும்போது அதிக வேகம், போதை, கவனமின்மை போன்ற காரணங்களால் 77 சதவீதம் விபத்துக்கான வாய்ப்பு இருப்பதாக கூறுகிறது ஒரு ஆய்வு. ஆனால் பெண்கள் இந்த வாகனங்களை ஓட்டும்போது விபத்து என்பது மிகமிக குறைவு என்பது பெண்களுக்கான போனஸ் குணம் என்கிறது அந்த ஆய்வு.



நிதி நிர்வாகத்திலும் இன்றைய பெண்கள் சிறந்து விளங்குகின்றனர். தற்போது வாங்கப்படும் லோன், கிரெடிட் கார்டு மற்றும் பிற நிதி விஷயங்களில் மிகச் சரியாக நடந்து கொள்கின்றனர் பெண்கள். வீட்டுப் பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களான ஆபரணங்கள் மற்றும் கார் வாங்குவதில் கூட துல்லியமாக கணித்து வாங்குவதில் பெண்கள் கில்லாடிகள்! தொலை நோக்குப் பார்வையில் பெண்களை ஆண்கள் மிஞ்ச முடியாது என்பதே நிதர்சன உண்மை.

இன்றைய நவநாகரீகப் பெண்கள் இணையதளம், ஈமெயில் போன்ற நவீன தொழில் நுட்பத்திலும் சிறந்து விளங்குகின்றனர் என்கிறது ஒரு லண்டன் சர்வே. அதுமட்டுமின்றி, ஷாப்பிங், பயணம் போன்ற அவசியமான விஷயங்களுக்கு மட்டுமே இவற்றை பயன்படுத் துகின்றனர் என்றும் கூறப்படுகிறது.சேமிப்பிலும் சிறந்தவர்களாக விளங்குகின்றனர் பெண்கள். சேமிப்பு குறித்த விஷயங்கள், ஷேர் மார்க்கெட் போன்றவற்றில் பெண்கள் முதலீடு வருடத்திற்கு வருடம் அதிகரித்து வருவதாக கூறுகின்றனர் நிதி முதலீட்டாளர்கள்.

உடல் ஆரோக்கியத்திற்கான விஷயங்களிலும் ஆண்களை விட பெண்களே சிறந்து விளங்குகின்றனர் என்கின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள். குறிப்பாக பற்கள் விஷயத்தில்... உணவுகளை மட்டுமே பெண்கள் சாப்பிடுவதால் அவர்களுக்கு ஆரோக்கியம் கெடும் வாய்ப்பு குறைவு. மேலும் பெண்கள் எப்போதும் பற்களை சுத்தமாக வைத்திருக்கின்றனர் என்றும் கூறுகின்றனர் மருத்துவர்கள்.

எப்போதுமே பெண்களுக்கே முன்னெச்சரிக்கை உணர்வு அதிகம். மேலும் எதையும் நன்கு யோசித்து செயல்படும் குணம் கொண்ட பெண்கள் அவசரப்பட மாட்டார்கள் என்பதால், அவர்களுக்கு மன அழுத்தம் என்பதும் குறைவு. இதனால் அவர்கள் அடிக்கடி சின்னச் சின்ன சிக்கல்களில் சிக்கி முழிப்பதில்லை என்பதும் பெண்களுக்கான சிறப்பு.

கல்லூரியில் படிக்கும் பெண்கள், தங்களுடைய 'டிகிரியில்' கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். படிக்கும் விதத்திலும் ஆண்களைவிட பெண்கள் வித்தியாசப்படுகின்றனர். ஆண்கள் பெரும்பாலும் தேர்வுக்கு முன்னர் மட்டுமே நள்ளிரவு வரை, அதிகாலை என்று படிக்கும் வழக்கத்தை கொண்டுள்ளனர். ஆனால் பெரும்பாலான பெண்கள் அன்றைக்கு வகுப்பில் நடத்தப்பட்ட பாடங்களை, அன்று மாலையே படிக்கும் வழக்கத்தை கொண்டுள்ளனர்.

சரி... எப்படிப்பட்ட ஆண்களைப் பெண்களுக்கு பிடிக்காது?

பெண்களுக்குப் பிடித்தமான விஷயங்களில் மிகவும் முக்கியமானது சுத்தம், சுகாதாரம்.

ஆனால் ஆண்கள் அப்படியில்லை... பல நாட்கள் துவைக்காத ஜட்டி, கெட்ட வாடை வீசும் சாக்ஸ், அலசப்படாத தலை முடி மற்றும் உடை விஷயங்களில் அவ்வளவாக அக்கறை கொள்வதில்லை என்பதே பெண்களின் குற்றச்சாட்டு. இப்படிப்பட்ட ஆண்களை பொதுவாகவே பெண்கள் வெறுக்கின்றனர்.

பொது இடங்களில் கூடும்... பேசும் கூட்டங்களில் பெண்களின் பேச்சு மிகவும் தெள்ளத்தெளிவாக இருப்பதாக கூறுகின்றனர் உளவியல் ஆய்வாளர்கள். பெற்றோர்- ஆசிரியர் கூட்டம், வாடிக்கையாளர் சந்திப்பு என பல தரப்பட்ட இடங்களில் பெண்களின் பேச்சும், செயலும் நாளுக்குநாள் மேம்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது பெண்களின் உடல் நலம் மற்றும் மன உறுதி.

அனைத்து விஷயங்களையும் திறந்த மனதுடன் பேசுகிறேன் என்று கூறிக் கொண்டு, தேவையில்லாத நபரிடம், தேவையில்லாமல் பேசும் பலவீனம் பெண்களுக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக புகை, மது, சூது போன்ற கெட்ட விஷயங்களிலும் பெண்களுக்கு நாட்டமில்லாததால் இவர்களுடைய முன்னேற்றத்திற்கு எந்த தடையும் இல்லை.

இப்படி கல்வி, விளையாட்டு, தொழில் மற்றும் வேலை என எந்த துறையாக இருந்தாலும் அதில் தனி முத்திரை பதித்து வருகின்றனர் பெண்கள்.

நூறாண்டுகள் வாழ வைக்கும் ஜீன்

மனித உடம்பில் உள்ள ஜீன்களை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இதில் 100 ஆண்டு மனிதனை வாழ வைக்கும் ஜீன் (பரம்பரையாக வரும் மரபு பண்புக்கு காரணமான உயிர்மம்) ஒன்றை கண்டு பிடித்துள்ளனர்.


நமது உடலில் உள்ள சில குறிப்பிட்ட செல்கள் உயிரற்றுப் போவதை தடுத்தால் முதுமையை தள்ளிப்போட முடியும் என்பது இந்த கண்டுபிடிப்பின் முக்கிய அம்சமாகும். எதிர்காலத்தில் மனிதனை 150 ஆண்டுகள் வரை வாழ வைக்க ஆய்வுகள் நடந்து வருகின்றன.

November 25, 2009

வாடிக்கையாளர்கள் வரவேற்பு: முகம் பார்த்து பேசும் செல்போனுக்கு “கிராக்கி”

3ஜி என்று அழைக்கக் கூடிய 3-வது தலைமுறை தகவல் தொழில் நுட்ப வசதியை சென்னை டெலிபோன்ஸ் கடந்த 3 நாட்களுக்கு முன் அறிமுகம் செய்தது. செல்போன் பேசுவரின் முகத்தை மறுமுனையில் உள்ளவர் வீடியோ படம் போல பார்க்கும் வசதி, இண்டர்நெட், சினிமா படம் பார்த்தல், டி.வி., சேனல்கள் பார்த்தல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இதன்மூலம் கிடைக்கின்றன.


சென்னை மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இந்த தொழில் நுட்பம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வசதியை பெற தகுதி யுடைய செல்போன்கள் வைத்திருப்பவர்கள் திட்டத்தில் சேர விரும்பினால் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் மையத்திற்கு சென்று பெறலாம். இதற்குரிய சிம்கார்டு விலை ரூ.59 ஆகும்.

ஏற்கனவே பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் களாக இருப்பவர்களும் இத்திட்டத்தில் சேரலாம். ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு சந்தாதாரர்கள் 3ஜி தொழில் நுட்பத்தை பயன்படுத்த அதற்குரிய கட்டணத்தை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

திட்டம் அறிமுகப்படுத்திய 2 நாட்களில் 700 பேர் 3ஜி இணைப்பை பெற்றுள்ளனர். இதில் 450 பேர் புதிதாக இணைப்பு பெற்றவர்கள். 250 பேர் ஏற்கனவே பி.எஸ்.என்.எல். வாடிக்கை யாளர்களாகும்.


திட்ட அறிமுக சலுகையாக உள்ளூர் அழைப்புகளுக்கு ஒரு நிமிடத்திற்கு 30 பைசாவும், எஸ்.டி.டி. அழைப்புக்கு 50 பைசாவும் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதத்திற்குள் 1 லட்சம் வாடிக்கை யாளர்களை இத்திட்டத்தில் சேர்க்க பி.எஸ்.என்.எல். இலக்காக கொண்டு செயல்படுகிறது.

முகம் பார்த்து பேசும் இந்த வசதி விரைவில் தமிழகம் முழுவதும் அறிமுகப் படுத்தப்பட உள்ளது. முதலாவதாக கோயம்புத்தூர் நகரில் செயல்படுத்தப் படுகிறது.


சுயநினைவுடன் இருக்கும் 23 வருட “கோமா” மனிதர்: டாக்டர்கள் வியப்பு

பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர் ரோம்கோபன் (வயது 46). கடந்த 1983-ம் ஆண்டு இவரது கார் விபத்துக்குள்ளானது. இதைத் தொடர்ந்து அதை ஓட்டிச்சென்ற கோபனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

எனவே, அவர் “கோமா” நிலையை அடைந்தார். உடனே அவரை லண்டனில் உள்ள லியெஜ் நரம்பியல் பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு டாக்டர் ஸ்டீவன் லாரீஸ் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

விபத்து நடைபெற்றதில் இருந்து 23 வருடங்களாக “கோமா” நிலையிலேயே இருந்தார். இந்த நிலையில் கடந்த 2006-ம் ஆண்டு டாக்டர்கள் இவரது உடல் நிலையை “ஸ்கேன்” செய்து பார்த்தனர்.

அப்போதுதான் இவர் “கோமா” நிலையில் இருந்தாலும் சுயநினைவுடன் இருப்பது தெரியவந்தது. விபத்து நடந்ததால் இவரது நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இவரது மூளையில் பாதிப்பு எதுவும் இல்லை. அது நல்ல நிலையில் இருப்பது தெரியவந்தது.



அவர் “கோமா” நிலையில் மயக்கமுற்று இருந்தாலும் டாக்டர்களின் பேச்சுகள் மற்றும் சிகிச்சை முறைகளை அறிந்து இருப்பது தெரியவந்தது. இதை அறிந்த நரம்பியல் சிகிச்சை நிபுணர்கள் வியப்பு அடைந்தனர்.

உடனே படுக்கையில் இருந்த அவரை தற்போது சக்கர நாற்காலியில் உட்கார வைத்துள்ளனர். சக்கர நாற்காலியுடன் விசேஷ கீபோர்டை சேர்த்து கம்ப்யூட்டர் மூலம் தகவல்களை பரிமாறி வருகின்றனர்.

மூளை நன்றாக வேலை செய்வதால் பாதிக்கப்பட்டுள்ள நரம்பு மண்டலத்தை சீரமைக்க சிகிச்சை அளித்து வருகின்றனர். கோபன், உறுதியான மனம் படைத்தவர். தன்னம்பிக்கை உடையவர். அதனால்தான் “கோமா” நிலையில் இருந்தாலும் சுய நினைவுடன் திகழ்கிறார். மருத்துவ உலகில் இது ஒரு அதிசயம் என டாக்டர் ஸ்டீவன் லாரீஸ் தெரிவித்துள்ளார்.

கோபனின் கதையையும் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதையும் புத்தகமாக எழுதி வருகிறார்

November 24, 2009

உடலில் 6005 துளைகள்

பிரேசிலை பிறப்பிடமாகவும் பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட எலைன் டேவிட்ஸன் என்ற பெண் உடலில் 6005 துளைகள் போட்டு புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

2000 ஆம் ஆண்டு உடலில் 462 துளைகள் போட்டு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த எலைன் டேவிட்ஸன், தனது சாதனையை தற்பொழுது தானே முறியடித்துள்ளார்.

lankasri.com

இதில் 1500 துளைகள் உடலின் மறைவான இடங்களில் போடப்பட்டுள்ளன.

வீடியோ தேடியந்திரம்

வீடியோ கோப்புகளை கண்டு ரசிக்க யூடியூபும் இருக்கிறது. யூடியூப் போல மேலும் பல தளங்களும் உள்ளன.இவற்றில் சாமானியர்கள் சமர்பித்த வீடியோ காட்சிகள் முதல் திரைப்பட காட்சிகள் வரை லடசக்கணக்கான கோப்புகளை காண முடியும்.

ஆனால நீங்கள் தேடும் அல்லது மிகவும் விரும்பும் வீடியோ கோப்புகளை தேடுவது கடினமானதாகவே இருக்கும்.


இந்த குறையை போக்கும் வகையில் வீடியோ கோப்புகளை தேட உதவும் புதிய தேடியந்திரம் அறிமுகமாகியுள்ளது. ஒவாக்ஸ் என்னும் இந்த தேடியந்திரத்தில் கூகுலில் தகவல்களை தேடுவது போலவே வீடியோ காட்சிகளையும் எளிதாக தேடலாம்.

தேடும் வசதி இருப்பதோடு தளத்தில் தேட்படுவதில் புகழ்பெற்று விளங்கும் வீடியோ கோப்புகளையும் குறிச்சொற்களின் அடிப்படையில் பார்த்து ரசிக்கலாம்.


சுட்டி.

November 23, 2009

வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளை நிறைவேறும் விண்டோஸ் 7

மிகப் பெரிய அளவிலான தொழில் நுட்ப மாற்றங்களுடன் சென்ற அக்டோபர் 22 அன்று, மைக்ரோசாப்ட் உலக நாடுகள் அனைத்திலும் தன் புதிய விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. புதிய வசதிகள், தொழில் நுட்ப மாற்றங்கள் ஆகியவற்றினால், இதன் வெளியீடு ஏறத்தாழ 18 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்டது. டில்லியில் இதனைத் தன் சிஸ்டம் கூட்டாளிகளான எச்.சி.எல்., எச்.பி. மற்றும் ஏசர் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து இந்த பதிப்பை மைக்ரோசாப்ட் வெளியிட்டது. புதிய வசதிகளாக வேடிக்கை அம்சங்கள், எளிமையான இயக்கம் மற்றும் இதுவரை இல்லாத வகையில் கூடுதல் பாதுகாப்பு எனப் பல முனைகளில் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் அமைக்கப் பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் இந்தியா பிரிவின் தலைவர் அறிவித்துள்ளார்.


புதிய வசதிகளை உருவமைக்க ஏறத்தாழ 600 வகையான கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டன. இதன் சோதனைத் தொகுப்பினை, இதுவரை ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரலாற்றில் இல்லாத வகையில், 80 லட்சம் பேர் உலகின் பல நாடுகளில் சோதனை செய்தனர். அவர்கள் அளித்த அறிவுரைகளுக்கேற்ப இவற்றில் இருந்த பல பிரச்னை களுக்குத் தீர்வுகள் காணப்பட்டன. இதற்கு முன் வெளிவந்த விஸ்டா சிஸ்டம், வாடிக்கையாளர்களிடம் இடம் பெறாமல் போவதற்குப் பல காரணங்கள் இருந்தன. கம்ப்யூட்டர் கட்டமைப்பில் பல புதிய கூடுதல் வசதிகளை விஸ்டா எதிர்பார்த்ததால், பலர் தங்களின் கம்ப்யூட்டர்களை 2001ல் வெளியான விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திலேயே தொடர்ந்து இயக்கி வந்தனர். இதனை மனதில் கொண்டே விண்டோஸ் 7 உருவாக்கப்பட்டது.

விண்டோஸ் 7 அதன் பாதுகாப்பிற்கென பல அம்சங்களைக் கொண்டிருப்பதால், இனி இதற்கென பிற நிறுவனங்கள் அமைத்து வழங்கும் பாதுகாப்பு புரோகிராம்கள் தேவையில்லை எனப் பல நிறுவன வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். இந்த வகையில் பல தேர்ட் பார்ட்டி புரோகிராம்களை விலை கொடுத்து வாங்க வேண்டியதில்லை என்பதால், முதலீடு செலவு கணிசமாகக் குறையும். இதனைச் சோதனைக்கென பயன்படுத்திப் பார்த்த பெங்களூரு இண்டர்நேஷனல் ஏர்போர்ட் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளது. பல முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் கம்ப்யூட்டர்களை விண்டோஸ் 7 தொகுப்பிற்கு மாறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த புதிய பதிப்பு வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளை நிறைவேற்ற ஆறு வகைகளில் வெளிவந்துள்ளது.

அவை: விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம், புரபஷனல், ஸ்டார்ட்டர், ஹோம் பேசிக், என்டர்பிரைஸ் மற்றும் விண்டோஸ் 7 அல்ட்டிமேட். இவற்றில் எது நம் தேவைகளுக்குச் சரியானதாக இருக்கும் எனக் கண்டறிந்து அறிவதே, தற்போதைய கேள்வியாக பலருக்கு உள்ளது. இவற்றின் விலை ரூ.5,800 முதல் ரூ.11,000 வரை உள்ளது. இந்த சிஸ்டம் இயக்கத்திற்குத் தயாராகும் நேரம் மிகவும் குறைவாக இருக்கும்படி அமைக்கப் பட்டுள்ளது. இது பல வாடிக்கையாளர்களுக்குத் திருப்தி அளிக்கிறது. கம்ப்யூட்டர் சுவிட்சை ஆன் செய்துவிட்டு தயாராகும் நேரத்தில், டீயில் பாதி குடிக்கும் வேலை எல்லாம் இனி இருக்காது. இந்த புதிய சிஸ்டத்தில் அனைத்து மல்ட்டி மீடியா வேலைகளும், புதிய முறையில் இனிமை யாகவும் எளிமையாகவும் இயக்கும் முறையில் இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

பல கம்ப்யூட்டர் நிறுவனங்கள், தாங்கள் விற்பனை செய்திடும் கம்ப்யூட்டர்களிலும், குறிப்பாக நெட்புக் கம்ப்யூட்டர்களிலும், விண்டோஸ் 7 பதிப்பை பதிந்து தரத் தயாராகிவிட்டன. குறிப்பாக எச்.பி. இந்தியா, எச்.சி.எல்., ஏசர் ஆகியவை இவ்வகையில் ஏற்கனவே அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எச்பி இந்தியா நிறுவனம் விண்டோஸ் 7 சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டர்களை ரூ. 27,990 முதல் ரூ. 90,000 வரையிலான விலையில் அறிவித்துள்ளது. ஏசர் பி.சி. நிறுவனம் ரூ. 15,000 முதல் ரூ.35,000 வரை விலை அறிவித்துள்ளது.

நோட்புக் கம்ப்யூட்டர்கள் ரூ. 21,000 முதல் ரூ.71,000 விலையில் உள்ளன. இனி தொழில் நுட்ப தகவல்கள் மற்றும் வசதிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

1. இரண்டு வகை சிஸ்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவை 32 பிட் மற்றும் 64 பிட் ஆகும். இவற்றில் ஸ்டார்ட்டர் எடிஷன் 32 பிட் வகையில் மட்டுமே கிடைக்கிறது.

2. 64 பிட் சிஸ்டம் வகையில் பிசிகல் மெமரி, ஹோம் பிரிமியம் சிஸ்டத்தில் 16 ஜிபி, புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட் வகையில் 192 ஜிபி ஆக உள்ளன. ஸ்டார்ட்டர் எடிஷனில் இது இல்லை.

3.ஸ்டார்ட்டர் மற்றும் ஹோம் பிரிமியம் வகை ஒரு சிபியு மட்டுமே சப்போர்ட் செய்கிறது. புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட் வகை இரண்டு சிபியுக்களை சப்போர்ட் செய்கிறது.

4. ஹோம் குரூப் உருவாக்கி இணைவது என்ற வசதியைப் பொறுத்தவரை, ஸ்டார்ட்டர் எடிஷனில் இணையும் வசதி மட்டுமே தரப்பட்டுள்ளது. மற்ற மூன்றிலும் உருவாக்கி இணையும் வசதி உள்ளது.

5. நெட்வொர்க்கில் பேக்கப் செய்து மீண்டும் பெறுவது புரபஷன்ல் மற்றும் அல்ட்டிமேட் வகைகளில் மட்டுமே தரப்பட்டுள்ளது.

6.ஸ்டார்ட்டர் தவிர மற்றவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட பல மானிட்டர் களை இணைக்கலாம்.

7. மாற்றக்கூடிய டெஸ்க்டாப் வால் பேப்பர், டெஸ்க்டாப் விண்டோ மேனேஜர், விண்டோஸ் மொபிலிட்டி சென்டர், விண்டோஸ் ஏரோ, மல்ட்டி டச், பிரிமியம் கேம்ஸ், விண்டோஸ் மீடியா சென்டர், விண்டோஸ் மீடியா பிளேயரை ரிமோட்டில் இயக்குவது ஆகியவை ஸ்டார்ட்டர் எடிஷன் தவிர மற்றவற்றில் தரப்பட்டுள்ளன.

8. விண்டோஸ் எக்ஸ்பி மோடில் இயக்கும் வசதி புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட் ஆகியவற்றில் மட்டுமே தரப்பட்டுள்ளது.

9. விர்ச்சுவல் ஹார்ட் டிஸ்க் மூலமாக பூட் செய்திடும் வசதி அல்ட்டிமேட் எடிஷனில் மட்டுமே தரப்பட்டுள்ளது.



விண்டோஸ் ஸ்டார்ட்டர் எடிஷன் என்பது, இத்தொகுப்பின் மிக எளிய வகை பதிப்பாக நெட்புக் கம்ப்யூட்டர்களுக்கு மட்டுமே கிடைக்கும். விண்டோஸ் எக்ஸ்பி அல்லது விஸ்டாவிலிருந்து இதற்கு அப்கிரேட் செய்திட முடியாது. விண்டோஸ் 7 தொகுப்பின் புதிய மற்றும் சிறப்பம்சங்களாக நாம் கருதும் பல விஷயங்கள் இதில் கிடைப்பதில்லை. 32 பிட் இயக்கம் மட்டுமே இதில் உள்ளது. விண்டோஸ் மீடியா சென்டர் மற்றும் விண்டோஸ் மீடியா பிளேயர் இதில் சேர்க்கப்படவில்லை. எக்ஸ்பியில் மட்டுமே இயங்கும் புரோகிராம்களுக்காக, விண்டோஸ் 7 பதிப்பில் எக்ஸ்பி மோட் என்று ஒரு வசதி தரப்பட்டுள்ளது. அந்த வசதி ஸ்டார்ட்டர் எடிஷனில் இல்லை. ரிமோட் டெஸ்க்டாப் ஹோஸ்ட், பிட் லாக்கர் டிரைவ் என்கிரிப்ஷன் மற்றும் மல்ட்டி டச் சப்போர்ட் ஆகிய வையும் இதில் தரப்பட வில்லை. அப்புறம் என்ன தான் ஸ்டார்ட்டர் எடிஷனில் உள்ளது என்று கேட்கிறீர் களா? டாஸ்க்பாரில் புரோகிராம்களை பின் செய்து கொள்ளலாம். புரோகிராம் விண்டோக்களை மிக வேகமாக ரீசைஸ் செய்து கொள்ளலாம். வேகமாக்கப்பட்ட விண்டோஸ் சர்ச் வசதி உள்ளது.


இதனை அடுத்துள்ள ஹோம் பிரிமியம், கம்ப்யூட்டர்களைப் பரவலாகப் பயன் படுத்துவோருக்கேற்ற ஒன்றாக உள்ளது. மைக்ரோசாப்ட், தன் வாடிக்கையாளர்கள் என்ன என்ன வசதிகள் புதியதாக இணைக்கப் பட்டிருப்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறதோ, அவை அனைத்தும் இதில் உள்ளன. புரோகிராம்களின் செயல்பாட்டினை முன்கூட்டியே அறிதல், டெஸ்க்டாப் பிலிருந்து தேவையற்ற ஐகான்களை நீக்குதல், புரோகிராம் விண்டோக்களை ரீசைஸ் செய்திடும் ஏரோ ஸ்நாப், ஊடுறுவிப்பார்க்கும் வகையில் டாஸ்க்பாரின் தோற்றம் காட்டும் ஏரோ ஸ்கின் மற்றும் விண்டோ பார்டர்ஸ் ஆகிய அனைத்தும் இதில் தரப்பட்டுள்ளன. விண்டோஸ் மீடியா பிளேயர் மற்றும் விண்டோஸ் மீடியா சென்டர் ஆகிய வசதிகள் சிறப்பாக இயக்கும் முறையில் தரப்பட்டுள்ளன. ஹோம் குருப் உருவாக்கி ஒரு சிலருக்குள் மியூசிக் சார்ந்த பொழுது போக்கு பைல்களையும் மற்ற பைல்களையும் பகிர்ந்து கொள்ளலாம். இதில் 64 பிட் பதிப்பு இருந்தாலும், ராம் பிசிகல் மெமரி 16 ஜிபி வரை மட்டுமே கிடைக்கிறது. ஹோம் பிரிமியம் எடிஷனை எந்த நேரத்திலும் புரபஷனல் அல்லது அல்ட்டிமேட் எடிஷனுக்கு அப்கிரேட் செய்து கொள்ளலாம்.


முழுமையான வசதிகள் பல இருந்தாலும், விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம், புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட் பதிப்புகளில் உள்ள பல வசதிகளைக் கொண்டிருக்கவில்லை. நெட்வொர்க் டிரைவில் இணைக்கப் பட்டிருக்கையில் பேக் அப் வசதியை இயக்க முடியாது. பிட் லாக்கர், ஆப் லாக்கர் வசதிகள் இல்லை. எக்ஸ்பி மோட் இல்லை.


மற்ற இரண்டும், புரபஷனல் மற்றும் அல்ட்டிமேட், அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளன. எந்த பிரச்னையும் தடையும் இன்றி பயன்படுத்தலாம்.


விஸ்டாவின் இயக்கத்தினால் ஏமாந்திருந்த விண்டோஸ் வாடிக்கையாளர்கள், நிச்சயம் விண்டோஸ் 7 பதிப்பை மனதார வரவேற்பார்கள் என்றே எதிர்பார்க்கலாம். இந்த புதிய பதிப்பிற்கு மாறும் முன் உங்கள் சிஸ்டம் இதனைத் தாங்கிக் கொண்டு சிறப்பாக இயங்குமா என்பதை உறுதி செய்து கொள்ளவும். இதனைத் தெரிந்து கொள்வதற்கான புரோகிராம்களையும், வழிமுறைகளையும், மைக்ரோசாப்ட் தன் இணையதளத்தில் கொண்டுள்ளது.

நியூயார்க், லண்டனுக்கு ஆபத்து: கடல் நீர் மட்டம் 6 மீட்டர் உயரும்; புதிய ஆய்வில் தகவல்

பிரிட்டீஸ் அண்டார்டிக் சர்வே நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற் கொண்டுள்ளது. லூயிஸ் சிமி குழுவினர் இந்த ஆய்வை நடத்தினார். காற்றில் கார்பன் டை ஆக்சைடு அதிகரிக்கும் போது தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம் குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டது.

காற்றில் கார்பன்டை ஆக்சைடின் அளவு உயரும்போது அண்டார்டிகா கடல் பகுதியில் 6 டிகிரி அளவுக்கு கூடுதலாக பனிக்கட்டிகள் உருகுவது தெரிய வந்தது. இதனால் கடல் நீரின் மட்டம் 6 மீட்டர் உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அவ்வாறு கடல் நீரின் அளவு உயரும்போது கடற்கரை நகரங்களாக லண்டன், நியூயார்க், மற்றும் சான்பிரான்சிஸ்கோ உள்ளிட்ட நகரங்கள் தண்ணீரில் மூழ்கும் ஆபத்து உள்ளது.


கடந்த 1 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கார்பன்டை ஆக்சை டின் அளவு உயர்ந்தபோது 6 டிகிரி அளவுக்கு கூடுதலாக பனிக்கட்டிகள் உருகின. இதனால் கடல் நீரின் அளவு 4 முதல் 6 மீட்டர் அளவு உயர்ந்தது.

அது போன்று தற்போதும் கார்பன்டை ஆக்சைடின் அளவு உயர்ந்துள்ளது. இதனால் அது போன்று சுமார் 6 மீட்டர் அளவுக்கு கடல் நீர் மட்டம் உயரும் அபாயம் உள்ளது. எனவே, சுற்றுப் புறம் சூழலையும், வான் மண்டலத்தையும் மாசு படாத அளவில் பாதுகாக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மது குடிப்பவர்களுக்கு இதய நோய்கள் வராது” ஆய்வில் புதிய தகவல்

தினமும் மது குடிப்பவர்களுக்கு இதய நோய்கள் பாதிப்பு மிக குறைவு என ஸ்பெயின் நாட்டின் ஆய்வு தெரிவிக்கிறது. 29 வயது முதல் 69 வயது வரை உள்ள 41 ஆயிரம் ஆண் மற்றும் பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 10 ஆண்டுகள் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 609 பேருக்கு மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் ஏற்பட்டது. இவர்களில் 481 பேர் ஆண்கள், 128 பேர் பெண்கள்.

மது குடிக்காதவர்களை விட அதிக அளவில் மது குடித்த ஆண்களுக்கு இதய நோய் பெருமளவில் ஏற்பட வில்லை. 285 மில்லி பீரில் 4.9 சதவீதம் ஆல்கஹால் உள்ளது. அதே நேரத்தில் 180 மில்லி ஒயினில் 12 சதவீதம் ஆல்கஹால் உள்ளது.

இவற்றை குடிக்கும் பெண்கள் இதய நோய்களால் பாதிப்படைவதில்லை. பீர் மற்றும் ஒயின் தயாரிப்பில் ஸ்பெயின் நாடு உலகிலேயே 3-வது இடத்தில் உள்ளது. இந்த வர்த்தகத்தின் மூலம் அதிக அளவில் லாபம் சம்பாதிப்பதில் உலகில் 6-வது இடத்தில் உள்ளது. ஆனால் இதய நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கை உலகிலேயே இங்கு தான் மிக குறைவாக உள்ளது.

November 22, 2009

கஞ்சாவை காட்டும் ஐபோன்


கஞ்சாவுக்கும் ஐபோனுக்கும் சம்பந்தமில்லை. ஆனால் மரியூனாவிற்கும் ஐபோனுக்கும் தொடர்பிருக்கிறது.

மரியூனாவை கண்டுபிடிக்க உதவும் செயலி ஐபோனுக்காக அறிமுகம் செய்யப்பட்டிருப்பதை குறிக்கவே இந்த தலைப்பு.

கஞ்சாவும் மரியூனாவும் ஒன்றல்ல.அடிப்படையில் இரண்டுமே போதை தரவல்லது என்றாலும் மரியூனாவுக்கு மருத்துவ குணம் இருப்பதாக சொல்கிறார்கள். அதனை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்றும் போராடி வருகின்றனர்.

ஆனால் ம‌ரியூனாவை தேட உதவும் செயலி என்பதைவிட கஞ்சாவை தேடும் செயலி என்றால் தான் நம்மவர்களுக்கு சட்டென்று புரியும்.

ஐபோன் சார்ந்த செயலிகள் தொடர்ந்து பரபர‌ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த செயலி ஐபோன் சார்ந்த அற்புதங்களை அழகாகவே உணர்த்துகிறது.எதற்கெடுத்தலும் ஒரு ஐபோன் செயலி இருக்கும் என்னும் கருத்தை வலுப்படுத்தும் வகையில் போதை பொருளாக கருதப்படும் மரியூனா கைடைக்கும் இடங்களை காட்டக்கூடிய செயலியை அஜ்னாக் டாட் காம் என்னும் நிறுவனம் கனாபிஸ் எண்னும் பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

ஆனால் சாட்டரீதியாக மருத்துவ தன்மையோடு அது விற்கப்படும் இடங்கள் மட்டுமே காட்டப்படுகிறது.

இதே போல பெட்ரோல் நிலையங்கள் மற்றும் நண்பர்களின் இருஒப்பிடத்தை காட்டும் செயலிகளும் உருவாக்கப்ப்ட்டுள்ளன.

AVI கோப்புகளை MP4 கோப்புகளாக மாற்ற


கணினியில் நாம் அடிக்கடி பார்க்கும் வீடியோ கோப்புகளின் வடிவமானது AVI என அமைந்திருக்கும்.

இந்த வடிவானது, iPhone, iPod, Zune, PSP, PS3 போன்ற கருவிகளுடன் ஒத்திசைவு (compatibility) இல்லாதது.

MP4 வடிவங்களையே மேற்கண்ட கருவிகள் ஏற்றுக்கொள்கின்றன.AVI கோப்புகளை MP4 ஆக மாற்றுவதற்கு ஒரு இலவச மென்பொருள் உள்ளது. அதன் பெயர் Convert AVI to MP4. இதன் மூலம் WMA, MOV, MPEG1 / MPEG2, DivX ஆகிய பல்வேறு விதமான கோப்பு வடிவங்களை MP4 ஆக மாற்ற முடியும்.

மிகஎளிமையான முகப்பைக் கொண்ட மென்பொருள் இது. இது Windows XP மற்றும் Windows Vista இந்த இயங்குதளங்களில் இயங்கும்.

தரவிறக்கச் சுட்டி

November 21, 2009

உங்களுடைய மீடியாபிளேயரை இணைய உலாவியிலிருந்தே இயக்குவது எப்படி?


நீங்கள் இணையத்தில் அதிகம் வலம் வருபவரா? அதுவும் பாடல்களை ஒலிக்க விட்டே இணையத்தில் இருப்பவரா? மேற்கண்ட கேள்விகளுக்கு உங்களின் பதில் “ஆம்” என்றால் உங்களுக்காகவே இருக்கிறது ஒரு இலவச மென்பொருள். அதன் பெயர் Foxy tunes.

இது Internet Explorer, Mozilla Firefox உடன் வேலைசெய்கிறது. இதை உங்கள் கணினியில் நிறுவிவிட்டால் உங்களது மீடியாபிளேயரை இணைய உலாவில் இருந்துகொண்டே இயக்கலாம். உங்களிடம் இருக்கும் பாடல்களை உங்களது மீடியா பிளேயரில் பாடவிடவும், பின்னர் மீடியா பிளேயரை மினிமைஸ் செய்துவிட்டு இணைய உலாவியில் இருக்கும் Foxy Tunes மூலமாக இயக்கிக்கொள்ளலாம்.. இதை பயர்பாக்ஸில் உபயோகித்தால் யூ‍‍-டியூப் தளத்தின் playlist கூட கையாள‌முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

lankasri.com

பதிவிறக்கம் செய்ய‌

சமூக தளங்களை தாக்கி வரும் கூப்பேஸ் வைரஸ்


பேஸ்புக், ட்விட்டர், மைஸ்பேஸ், பெபூ, ப்ரண்ட்ஸ்டர் மற்றும் ஹாய் 5 போன்ற சமுதாய இணைய தள நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துபவரா நீங்கள்! அப்படியானால் அண்மைக் காலத்தில் வேகமாகப் பரவி வரும் கூப் பேஸ் (Koobface) வைரஸ் குறித்து ஜாக்கிரதையாக இருங்கள்.

இந்த தளங்களின் பேரில் உங்களைத் தூண்டும் மெசேஜ் ஒன்று உங்களுக்கு இமெயில் வழியாக அனுப்பப்படுகிறது. அதில் குறிப்பிட்ட வீடியோ ஒன்றை டவுண்லோட் செய்து பார்க்குமாறு உங்களைக் கேட்டுக் கொள்ளும் தூண்டில் செய்தி ஒன்று கிடைக்கும். வீடியோவிற்கான லிங்க்கைக் கிளிக் செய்தால் யு–ட்யூப் போல தளம் ஒன்று திறக்கப்படும். அங்கே ஒரு வீடியோ காட்சி ஒன்று உள்ளதென்றும், அதனைக் காண சாப்ட்வேர் புரோகிராம் ஒன்றை இறக்கிக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டு அதற்கான லிங்க் கொடுக்கப்படும்.

இதற்கு யெஸ் என அழுத்தினால், உங்கள் கம்ப்யூட்டரில் உங்களுடைய பெர்சனல் தகவல்களைத் திருடி அனுப்பும் புரோகிராம் ஒன்று இறங்கி அமர்ந்து கொள்ளும். பின் உங்களின் யூசர் நேம், பாஸ்வேர்ட், வங்கி சார்ந்த தகவல்கள் அனைத்தும் திருடப்பட்டு அனுப்பப்படும்.

ஏற்கனவே இந்த வைரஸ் புரோகிராம் உங்களுடைய கம்ப்யூட்டரில் மேலே சொன்ன நடவடிக்கை களினால் இருக்கிறது என்று சந்தேகப்பட்டால் உடனே இந்த கூப் பேஸ் வைரஸ் குறித்த அனைத்து வரிகளையும் ரெஜிஸ்ட்ரியிலிருந்து நீக்கவும். உங்கள் ஆண்ட்டி வைரஸை அப்டேட் செய்து கம்ப்யூட்டரை முழுமையாகச் சோதனை செய்திடவும்.

lankasri.com

November 20, 2009

பருத்தொல்லைக்கு இதோ விடுதலை!



வாரம் ஒரு முறை முல்தானிமட்டி, எலுமிச்சை சாறு, கடலைமாவு, சந்தனம், கஸ்தூரி மஞ்சள் கலந்த பேக்கை தொடர்ந்து உபயோகித்து வந்தால் . முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய்ப் பசையை முல்தானிமட்டி சுத்தமா எடுத்துடும்.

உங்களுக்கு பருக்கள் முற்றிலும் போன பிறகு பேக் போடுவதை 15 நாளைக்கு ஒரு முறையோ அல்லது மாதம் ஒரு முறையோ என்று மாற்றிக் கொள்ளுங்கள். இது நிச்சயம் நல்ல பலன் தரும். பருத் தொல்லைக்கும் இது சரியான தீர்வு

உணவு அருந்திய பின்னர் பழங்கள் சாப்பிடுவது நல்லதல்ல



 சரியானவற்றை சரியான நேரத்தில் சாப்பிடுவது தான் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

பழங்களை அனைவருமே உணவு அருந்திய பின்பு சாப்பிடுவது மிகவும் தவறு சாப்பிடுவதற்கு முன்பு தான் பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் உடலில் நச்சுக்கள் சேராமல் தடுக்க முடியும்.

இரவில் தூங்குவதற்கு முன், பாலில் சிறிது மஞ்சள் தூள், சிறிது மிளகுத்தூள் போட்டு அருந்துங்கள். தொண்டை கரகரப்பு, மூக்கடைப்பு தொந்தரவுகள் நெருங்காதது குரல் இனிமையாக இருக்கும்.

தினமும் இரண்டு கைப்பிடி அளவு கொள்ளை ஊறவைத்து, ஒரு துணியில் கட்டி முளைக்க வைத்து, அத்துடன் கொஞ்சம் பால் ஏலக்காய், சர்க்கரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அதைப்பிழிந்து பால் எடுத்துக் குடித்து வர மூட்டுவலி, சளித்தொந்தரவு நீங்கும். ஊள் சதை குரையும்.

வெள்ளைபூண்டை நெயில் வறுத்து சாப்பிடவும். குண்டு உடம்புக்காரர்கள் கொடி போல ஆகிவிடுவார்கள்.

வறட்டு இருமல் உள்ளவர்கள் சிறிதளவு தேங்காய்பாலுடன் ஒரு கரண்டி தேன், ஒரு கரண்டி கசகசா சேர்த்து குடிக்கவும்.

November 19, 2009

நீங்கள் பளபளப்பாக மிளிர வேண்டுமா?


 சந்தனம், முல்தானிமட்டி கலந்த, "பேஸ் பாக்' உபயோகித்து வர, முகம் பொலிவாகவும், மிருதுவாகவும் மாறும்.

கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு மேசைக்கரண்டி பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்..

ஒலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும். .

பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.

2 கரண்டி முள்ளங்கி சாற்றுடன் 2 கரண்டி மோர் சேர்த்து, முகத்தில் தடவி, ஒரு மணிநேரம் கழித்து, சுடுநீரில் முகத்தை கழுவ வேண்டும். தினமும் இதை செய்து வர, வெப்பத்தால் முகத்தில் ஏற்படும் தவிட்டு நிறமுள்ள புள்ளி மறையும்..

இளநீரை முகத்தில் தொடர்ந்து 6 மாதம் தடவி வர சின்னம்மையால் ஏற்பட்ட வடு மறையும்..

பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைக்க கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்..

பப்பாளி பழத்தை அரைத்து, முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை மறையும்..

புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி, மிதமான சுடுநீரில் கழுவ முகம் பொலிவு பெறும். இதை தொடர்ந்து 15 நாட்களுக்கு செய்து வர நல்ல பலன் கிடைக்கும்..

முழங்கை (முட்டி) கறுப்பாகவும், சொர சொரப்பாகவும் இருந்தால், தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வர மிருதுவாக மாறும்..

தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையை உதட்டின் மீது தொடர்ந்து தடவி வந்தால், தரம் குறைந்த லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் கருமை மறையும்.

தயிருடன் கடலை மாவு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் முகத்தில் ஏற்படும் சுருக்கம் மறையும்..

முட்டை கோஸ் சாறு, சிறிது ஈஸ்ட், ஒரு மேசைக்கரண்டி தேன் மூன்றையும் கலந்து, 20 நிமிடம் முகத்தில் தடவி, மிதமான சுடு தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இதனால், முகச் சுருக்கம் மறைந்து முகம் பொலிவுடன் இருக்கும். .

சுண்ணாம்பை தண்ணீர் கலந்து காலையில் தடவினால், மாலைக்குள் முகப்பரு மறைந்து விடும்..

வெள்ளை முள்ளங்கி சாறுடன், 2 கரண்டி எலுமிச்சை சாறு, 2 கரண்டி தக்காளி சாறு சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து, மிதமான சுடுநீரில் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர, வெப்பத்தால் உண்டாகும் தவிட்டு நிறப் புள்ளி மறையும்..

உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கிளிசரினுடன் ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவலாம்..

முகம் மிருதுவாகவும், ரோஸ் நிறத்துடனும் இருக்க ரோஜாப் பூ இதழ்களை அரைத்து, அதோடு பால் , பச்சை பயறு மாவு, மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வர சருமம் பளபளக்கும்..

கரும்புள்ளி உள்ள இடத்தில்,பச்சை பயருடன் தயிர் சேர்த்து தடவ வேண்டும். அது காய்ந்ததும் கைகளால் மேலும் கீழும் நன்கு தேய்த்து பின் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும். .

கடலை மாவு, ஆறு மேசைக்கரண்டி பாலாடை, இரண்டு மேசைக்கரண்டி, எலுமிச்சம் பழச்சாறு 10 சொட்டு, கிளிசரின் ஒரு மேசைக்கரண்டி கலந்து தினம் ஒருமுறை முகம், கை, கழுத்து பகுதிகளில், தடவினால் வெயிலினால் ஏற்படும் கருமையை போக்கலாம். பப்பாளி சாற்றுடன் தேன் கலந்து முகத்தில் தடவி வந்தாலும் நல்லது..

வெள்ளரிச்சாறு, சந்தனப்பொடி, கடலைமாவு மூன்றையும் சம அளவு கலந்து முகம், கை கால்களுக்கு தினமும் போட்டு வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும்..

சர்வதேச ஆண்கள் தினம்


சர்வதேச ஆண்கள் தினம் (IMD - International_Men's_Day) பொதுவாக ஆண்டு தோறும் நவம்பர் (புரட்டாதித் திங்கள்) 19ம் நாள் கொண்டாடப்படுகிறது. இது 1999 இல் பிரேரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. ஐநாவால் அங்கீகரிக்கப்பட்ட தினமாகவும் இது விளங்குகிறது.

உலகில் ஆண்களைக் கெளரவப்படுத்தவும் ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு கருதி இது கொண்டாடப்படுகிறது.

இவ்வாண்டுக்கான ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள்.. உண்மையான ஆம்பிளையளுக்கு உரித்தாகட்டும்.

ஆண்கள் மீதான பாரபட்சங்களில் சில.

1. அடிப்படை மருத்துவப் பரிசோதனைகளுக்கு பெண்களைப் போன்று ஆண்கள் கிரமமாக உட்படுத்தப்படுவதில்லை. குறிப்பாக பெண்களில் பல வகை நோய்களைத் தடுக்கவும் கட்டாய ஸ்கிறீனிங் (screening) செயற்பாடுகள் இருக்கின்றன. ஆனால் ஆண்களுக்கு அப்படி இல்லை. இதனால் புரஸ்ரேட் புற்றுநோய் போன்ற நோய்களை ஆண்கள் ஆரம்பத்திலேயே கண்டறிய முடியாமல் உள்ளது. இதனால் ஆண்கள் மத்தியில் அநியாய மரணங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.

2. வன்புணர்வு வழக்குகளில் அநேக தடவைகள் ஆண்கள் திட்டமிட்டு சிக்க வைக்கப்படுவது தீர்வின்றித் தொடர்கிறது.

3. குடும்ப வன்முறையில் பெண்களால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு நிவாரணம் பெற எந்த வழியும் இல்லை.

4. விவாகரத்துப் பெறும் தம்பதியரிடத்தில் சட்டரீதியாக குழந்தைகள் தந்தையரிடம் குறுகிய காலத்துக்கு மட்டுமே வாழ அனுமதிக்கப்படுகின்றனர்.

5. தொழில்ரீதியாக ஆண்கள் சில தொழிற்துறைகளில் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதும் பெண்களின் உடலழகு மட்டும் கருத்தில் கொள்ளப்பட்டு வேலை வழங்குதலும் என்ற பாரபட்சம் தொடர்கின்றமை.

6. ஆண்களை தவறான வழியில் செல்ல தூண்டும் பெண்களுக்கு சட்ட ரீதியான தண்டனை ஏதுமில்லாமை.. ஆண்கள் தவறாக வழிநடத்தப்படுவது தொடர்கின்றமை.

7. விபச்சாரம் என்ற வியாபாரத்தில் பெண்கள் ஆண்களை வலிந்து சிக்க வைத்தலில் இருந்து பெண்களை தடுக்க முயலாமை.

8. கல்வியில் பரீட்சையில் சித்தியடையும் ஆண்களின் சதவீதம் தொடர்ந்து குறைவடைவது தொடர்பில் தீர்வுகள் தேடப்படுவதில் அக்கறை செலுத்தாமையும் புறக்கணிப்பும்.

9. போதைப்பொருளுக்கு அடிமையாக்கி பின் ஆண்களை (கணவர்களை) பெண்கள் கைவிட்டுச் செல்லுதல். அப்படியான பெண்களுக்கு வழங்கப்படும் சலுகைகள்.. போதைப்பொருள் பாவனையில் இருந்து ஆண்களை விடுவிக்க பயன்படுத்தப்படுவது குறைவாக இருத்தல்.

10. காதல்.. டேற்றிங் என்ற போர்வைகளில் ஆண்களிடம் உள்ள சொத்து மற்றும் சுகத்தை பறித்துக் கொண்டு செல்லும் பெண்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படாமை. குழந்தைகளைக் காட்டி பெண்களும் சொத்துப்பறித்தலை சட்டரீதியாக ஊக்குவித்தல்.

11. ஆண்கள் மீது பகிடி வதை புரியும் பெண்கள் மீது சட்டம் பாயாமல் தடுக்கப்படுகின்றமை.

12. ஆண்களுக்கு மன உழைச்சல் ஏற்படும் வகையில் செயற்படும் பெண்களுக்கு தண்டனைகளும் ஆலோசனைகளும்.. வழிநடத்தலும் வழங்கப்பட அக்கறை செலுத்தாமை.

13. வர்த்தக விளம்பரங்களில் பெண்களுக்கு அதிக முக்கியமளிக்கின்றமை.

14. விமானப்பணியாளர்களில் பெண்களுக்கு திட்டமிட்டு முன்னுரிமை அளிக்கப்படுகின்றமை.

15. அந்தரங்கச் செயலாளர்கள் என்று பெண்களை நியமிப்பதை வழக்கமாகக் கொண்டிருத்தல். அங்கு ஆண்களுக்குரிய சம தொழில் வாய்ப்பு புறக்கணிக்கப்படுதல்.

16. கடினமான வேலைகளில் ஆண்கள் தேர்வு செய்யப்பட்டு ஈடுபடுத்தப்படுதல்.

17. இராணுவத்தில் ஆண்களை காக்க ஆண்கள் இராணுவமும்.. பெண்களைக் காக்க பெண்கள் இராணுவமும் அமைக்காமல்.. ஆண்களையே போருக்கு இரையாக்குதல்.

18. வீடுகளில் பெண்களால் ஆண்களின் பேச்சுரிமை.. வதிவிட சுதந்திரம் பறிக்கப்படுவது குறித்து அக்கறை செய்யாமை.

19. ஆண்களின் ஊதியத்தை பெண்களுக்கு பறித்துக் கொடுக்கும் பாரபட்ச சட்டங்கள் ஆண்களின் அடிப்படை உரிமையை மீறுகின்றமை.

20. போரின் போது பெண்களை.. குழந்தைகளைக் காக்க இருக்கும் சிறப்பு ஏற்பாடுகள்.. ஆண்களைக் காக்க இல்லாமை.

21. ஆண்களின் சராசரி ஆயுட்காலம் குறைவடைந்துள்ளமைக்கான சரியான காரணிகளை இனங்காட்டி ஆண்களுக்கு கிரமமான ஆலோசனைகளை வழங்கி அவர்களின் ஆயுட்காலத்தை பெண்களுக்கு நிகராகக் கொண்டு வர முனையாமை.

22. குழந்தை ஒன்றை உருவாக்குவதில் உள்ள ஆணின் 50% பங்களிப்பு திட்டமிட்டு புறக்கணிக்கப்படுவதோடு.. குழந்தை பெற்றபின் குழந்தையை.. துணைவியை பராமரிக்க என்று ஆணுக்கு விசேட நீடித்த விடுமுறை வழங்கப்படுவதில் முழுமையான பாரபட்சம் காட்டப்படுதல்.

November 18, 2009

மனித மூளை

{{{texttitle}}}
மனித மூளையின் மேல் பகுதியில், மடிப்புகளை உடைய பெருமூளைப் புறணிப் பகுதி, இரண்டு அரைக் கோளங்களாக அமைந்திருப்பதால், அவை பெருமூளை அரைக்கோளங்கள் (cerebral hemispheres) என்று அறியப்படுகின்றன. இப்பகுதியே மூளையின் பெரிய பகுதி. பெருமூளை அரைக்கோளங்களுக்குக் கீழே அவற்றை இணைத்தவாறு அமைந்துள்ள தண்டுப் பகுதி மூளைத்தண்டு என்று அழைக்கப்படுகிறது. மூளையின் பின்பகுதியில், பெருமூளைப் புறணிக்கு கீழே, மூளைத்தண்டிற்கு பின்பகுதியில் உள்ள பகுதி சிறுமூளை (cerebellum) என்று அறியப்படுகிறது. இப்பகுதியில் கிடைவாக்கில் வரிவரியான பள்ளம் போன்ற அமைப்பு உள்ளமையால், மூளையின் மற்ற பகுதிகளை விட தோற்றத்தில் மாறுபட்டதாக காணப்படுகிறது.

தாவரம்



தாவரம் (Plant) அல்லது நிலைத்திணை என்பது மரம் செடி, கொடி போன்றவற்றைக் குறிக்கும் ஒரு பெரும் உயிரினப் பிரிவாகும். இவ்வகை உயிரினங்கள் ஓரிடத்திலுருந்து மற்றோர் இடத்திற்கு தானே நகராமல் இருப்பதால் இவகளை நிலைத்திணை என்பர். சுமார் 350,000 தாவர வகைகள் உள்ளதாக மதிப்பிடப்படுகின்றது. இவற்றுள் 287,655 இனங்கள் வரை அடையாளம் காணப்பட்டுள்ளன. பொதுவாக எல்லோருக்கும் தெரிந்தமரங்கள், செடிகள், கொடிகள், போன்றவை மட்டுல் அல்லாமல் பன்னங்கள் ( ferns), பாசி (ஆங்கிலத்தில் அல்கே என்பர்), பூஞ்சணங்கள் போன்றவையும் தாவரங்களே. அடையாளம் காணப்பட்ட தாவரங்களுள் ஏறத்தாழ 258,650 பூக்கும் தாவர வகைகள். 18,000 பிரயோபைட்டுகள்.

பயன்கள்

இந்த பூமியில் உள்ள நிலப்பரப்பு முழுவதும் ஏன் நீரிலும் கூட வாழ்ந்து இந்த உலகத்தில் மற்ற உயிரினங்கள் வாழ வழி செய்பவை தாவரங்கள். சுமார் 350,000 வகையான பாசி, புல், செடி, கொடி, மரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தாவரங்களின் அளவுகளும் மிகச் சிறிய நீரில் நேரடியாக வாழும் பாசி வகைகளில் இருந்து 100 மீட்டர் (330 அடி) உயரத்திற்கு மேல் செல்லும் 'சிகொயா' மரங்கள் வரை பல்வேறு வகைகளில் நிறைந்துள்ளன. இவற்றில் மிகச் சிலவற்றை மட்டுமே நாம் உணவு, உடை, மருந்து, உறைவிடம் அகியவற்றிற்காக பயன்படுத்துறோம். அவற்றில் முக்கியமானவை அரிசி, கோதுமை, பருத்தி, சோளம், புகையிலை போன்றவை. பல நாடுகளின் பொருளாதாரம் மற்றும் அரசும் கூட இதைப் பொறுத்தே நிலை பெறுகிறது. இதைவிட முக்கியமாக பில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த தாவரங்களின் பச்சையத்தால் தான் இப்போது நாம் பயன்படுத்தும் பெட்ரோல், மண்ணெண்ணை, டீசல் ஆகியவை கிடைக்கிறன என்பதை பார்க்கும் போது தொழில் உலகின் அடித்தளமே தாவரங்கள் தான் என்று கூறினால் கூட மிகையாகாது.
மேலும் பில்லியன் வருடங்களாகவே தாவரங்கள் காற்றில் வெளிப்படுத்திய ஆக்ஸிஜன் பெருகப் பெருக விலங்குகள் முன்னேற்றமடைந்து உயர்வகைகள் தோன்ற துவங்கின. தாவரங்களால் மண் சரிவு, மண் அரிப்பிலிருந்து பாதுகாக்கவும், மண் வளம், மழை வளம், சுகமான தட்பவெப்பநிலை ஆகியவற்றை நிலைப்படுத்தவும் முடியும் என்பதைக் காணும் போது மனித வாழ்க்கைக்கு தாவரங்களின் மிக ஆதாரமான பங்கை உணரலாம்.
உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் அடிப்படையாகத் தாவரங்கள் இருக்கின்றன.

வரைவிலக்கணம்

கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில் எல்லா உயிரினங்களையும், தாவரங்கள் (நிலைத்திணை), விலங்குகள் (நகர்திணை) என இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்தார். 18 ஆம் நூற்றாண்டில் லின்னேயசின் முறைப்படி(Linnaeus' system), இவை வெஜிட்டபிலியா (Vegetabilia), அனிமலியா (Animalia) என்னும் இரண்டு இராச்சியங்கள் (Kingdoms) ஆகின. வெஜிட்டபிலியா இராச்சியம் பின்னர் பிளாண்ட்டே (Plantae) என அழைக்கப்பட்டது. காலப்போக்கில் பிளாண்ட்டே இராச்சியத்தில் ஆரம்பத்தில் அடக்கப்பட்ட பல வகைகள் தொடர்பற்றவையாக இருப்பது அறியப்பட்டது.பூஞ்சணங்கள் மற்றும் பல வகை பாசிகள் (அல்காக்கள்) வேறு இராச்சியப் பிரிவுக்கு மாற்றப்பட்டன. இருந்தாலும் இவை பல சூழ்நிலைகளில் தாவரங்களாகவே இன்னும் கருதப்பட்டு வருகின்றன.
தாவரங்கள் என்று கூறும்போது அவை பின்வரும் மூன்று கருத்துருக்களில் ஒன்றால் குறிப்பிடப்படுகின்றன. அவையாவன:
  • நிலத் தாவரங்கள்: இவை எம்பிரையோபைட்டா, மீட்டாபைட்டா போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன.
  • பச்சைத் தாவரங்கள்: இதற்கு விரிடிபைட்டா, குளோரோபினாட்டா போன்ற பெயர்களும் உண்டு. இதற்குள் முன்னர் குறிப்பிட்ட நிலத்தாவரங்களும் அடங்குகின்றன. அவற்றுடன், கரோபைட்டா, குளோரோபைட்டா என்பனவும் அடங்கும்.
  • ஆர்க்கீபிளாஸ்டிடா: பிளாஸ்டிடா, பிரிமோபிளாண்டா போன்ற பெயர்களாலும் அழைக்கப்படும் இதற்குள் பச்சைத் தாவரங்கள் அனைத்தும் அடங்குவதுடன் ரொடோபைட்டா, குளுக்கோபைட்டா என்பனவும் அடங்குகின்றன.
தாவரங்களுக்கான பெயரிடல் தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை (International Code of Botanical Nomenclature), வளர்க்கும் தாவரங்களுக்கான அனைத்துலகப் பெயரிடல் நெறிமுறை (International Code of Nomenclature for Cultivated Plants) ஆகியவற்றால் கட்டுப்படுத்தப்படுகின்றது.

தொழில்நுட்பம்



தொழில்நுட்பம் என்பது, கருவிகள், கைவினைகள் முதலியவற்றின் பயன்பாட்டுடனும், அவை எவ்வாறு அவற்றைப் பயன்படுத்துவோர் தமது சூழலைக் கட்டுப்படுத்தவும், அதனோடு இயைந்து வாழவும் கூடிய தகுதியில், தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதுடனும் தொடர்புள்ள ஒரு பரந்த கருத்துரு ஆகும். எனினும் ஒரு இறுக்கமான வரைவிலக்கணம் இதற்குக் கொடுக்க முடியாது. தொழில்நுட்பம்; பொறிகள், வன்பொருட்கள், பயன்பாட்டுப் பொருட்கள் போன்ற மனித இனத்துக்குப் பயன்படும் பொருள்களைக் குறிக்கக்கூடும். ஆனால் இது இன்னும் பரந்த முறைமைகள், அமைப்பு முறைகள், நுட்பங்கள் என்பவற்றையும் குறிக்கக்கூடும். இச் சொல்லைப் பொதுப் பொருளில் ஆளுவதுடன், குறிப்பிட்ட துறைகள் சார்பாகவும் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, கட்டுமானத் தொழில்நுட்பம், மருத்துவத் தொழில்நுட்பம் போன்ற பயன்பாடுகள் குறிப்பிட்ட துறைகள் சார்ந்தவையாகும். மனித இனத்தின் தொழில்நுட்பப் பயன்பாடு, இயற்கை வளங்களைச் எளிமையான கருவிகளைச் செய்வதற்குப் பயன்படுத்தியதுடன் தொடங்குகிறது. வரலாற்றுக்கு முந்திய கண்டுபிடிப்புக்களான, தீயைக் கட்டுப்படுத்திப் பயன்படுத்தல், உணவு வளங்களைப் பெருக்கிக் கொள்ளவும், சில்லின் கண்டுபிடிப்பு போக்குவரத்துச் செய்வதற்கும், சூழலைக் கட்டுப்படுத்துவதற்கும் உதவின. பிந்திய காலக் கண்டுபிடிப்புக்களான, அச்சியந்திரம், தொலைபேசி, இணையம் என்பன தொடர்புகளுக்கான இயற்பியல் தடைகளை இல்லாமலாக்கியதுடன், மனிதர்கள் உலக அளவில் தொடர்புகளை வைத்துக்கொள்ளவும் வழி வகுத்தன. எனினும் எல்லாத் தொழில் நுட்பங்களுமே ஒட்டுமொத்த மனித இனத்தின் நலனுக்காகவோ அல்லது உலக அமைதிக்காகவோ பயன்படுகின்றன என்பதில்லை. கொலை ஆயுதங்களின் வளர்ச்சிக்கு வரலாறு முழுவதும் தொழில்நுட்பம் பயன்பட்டிருக்கிறது. எளிமையாக கத்தி முதல், அணுவாயுதங்கள் வரை அதிகரித்துவரும் அழிப்பு ஆற்றலுடன் கூடிய ஆயுதங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
தொழில்நுட்பம் சமூகத்தையும், அதன் சுற்றாடலையும் பல வழிகளில் பாதித்துள்ளது. பல சமுதாயங்களில், உயர்ந்த பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்வதற்குத் தொழில்நுட்பம் உதவியுள்ளது. பல தொழில்நுட்பச் செயல்முறைகள், மாசுறுதல் போன்ற தேவையற்ற பக்க விளைவுகளை உருவாக்குவதுடன், இயற்கை வளங்களையும் அளவு மீறிச் சுரண்டுகிறது.

November 17, 2009

ஓபன் ஹார்ட் சர்ஜரி – பைபாஸ் சர்ஜரி: என்ன வித்தியாசம்?

ஐந்து நிமிடங்களுக்கு மேல் ரத்த ஓட்டம். இல்லையென்றால், உடனே இதயம் நின்று போகும். இதயம் வேலை செய்யாது நின்று போனால், மூளை உட்பட அத்தனை உறுப்புகளும் செயலிழந்து, உயிர் நம் உடம்பிலிருந்து பிரிந்து மனிதன் இறந்து போக நேரிடும். 1928வது வருடம் வரை இதய அறுவைச் சிகிச்சை என்பது ஒரு முடியாத காரியமாகவே இருந்தது. 1928ம் வருடம் கட்லர் என்ற சர்ஜன் எந்தவிதக் கருவியுமில்லாமல் மார்பின் இடதுபுறத்தைத் திறந்து கைவிரலால் இதயம் துடிக்கும்போதே இதய ஈரிதழ் வால்வு சுருக்கத்தை மூடிய முறை (இஃOகுஉஈ ஏஉஅகீகூ) இதய அறுவைச் சிகிச்சை மூலம் விரிவடையச் செய்தார். அதன் பிறகு 1956 வரை சாதாரண இதய அறுவைச் சிகிச்சைகளை மேற்கூறிய மூடிய முறை அறுவைச் சிகிச்சைகளே உலகம் முழுவதும் நடந்து கொண்டிருந்தன.

1956ம் வருடம் அமெரிக்க பேராசிரியர் கிப்பன் என்ற இதய அறுவைச் சிகிச்சை நிபுணர். நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு, இதய துடிப்பை (இயக்கத்தை) நிறுத்தி 5 மணி நேரம்கூட இதயத் துடிப்பில்லாமல் ஓபன் ஹார்ட் அறுவைச் சிகிச்சை முறையை முதலில் செய்து காண்பித்தார். இந்தியாவில், 1970ல் சென்னை பொது மருத்துவமனையில் இந்தியாவின் முதல் ஓபன் ஹார்ட் ஆபரேஷன் செய்யப்பட்டது.

ஓபன் ஹார்ட் ஆபரேஷன்


இதயத் துடிப்பை நிறுத்தி இதய ஆபரேஷன் செய்வதால் மட்டும் ஓபன் ஹார்ட் ஆபரேஷன் என்று கூறிவிட முடியாது. சாதாரணமாக 5 நிமிடங்களுக்கு மேல் இதயத்துடிப்பு நின்றாலே நாம் இறந்து விடுவோம். ஆனால், ஓபன் ஹார்ட் ஆபரேஷனில் 5 மணி நேரத்திற்கும் மேல் இதயத்துடிப்பை நிறுத்தி, மறுபடியும் இதய இயக்கத்தை உண்டாக்கி நோயாளியைப் பிழைக்க வைக்க முடியும். இந்த,”ஓபன் ஹார்ட்’ (திறந்த முறை) இதய அறுவைச் சிகிச்சை முறையில் செயற்கை இதய, நுரையீரல் இயக்கி வைக்க முடிகிறது. இந்த சிறந்த முறை அறுவைச் சிகிச்சை முறையில் உடம்பிலுள்ள பிராண வாயு குறைந்த (அசுத்த) ரத்தம் முழுவதும் இரண்டு பெரிய பிளாஸ்டிக் குழாய்கள் மூலம் இணைக்கப்பட்டு உடம்பிலிருந்து உறியப்பட்டு, அந்த அசுத்த ரத்தம் செயற்கை நுரையீரல் மிஷினில் செலுத்தப்படுகிறது. செயற்கை நுரையீரல் மிஷின் உடம்பின் வெளியே கொண்டு வரப்பட்ட அசுத்த ரத்தத்தை முழுவதும் சுத்தம் செய்து 100 சதவீதம் பிராணவாயு கலந்து சுத்த ரத்தமாக மாற்றுகிறது.

இதயத்தை திறந்து ஆபரேஷன் முழுவதும் முடிந்தவுடன் 30 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்குக் குறைவான ரத்த வெப்பத்தை, ஹைபோதெர்மியா மிஷின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்தி, 37 டிகிரி செல்சியஸ் அளவு வந்தவுடன், இதயம் துடிக்க ஆரம்பிக்கிறது. அதே சமயம், மகாதமனியை கிளாம்ப் செய்த உபகரணத்தை எடுத்து விட வேண்டும். அந்த சமயத்தில் ஆபரேஷன் பண்ணப்பட்ட நோயாளியின் ரத்தத்தின் அமிலம், காரத்தன்மை (அஇஐஈ ஆஅகுஉ ஆஅஃஅNஇஉ), மற்றும் ரத்த பொட்டாசியம், சோடியம் போன்ற உப்புச்சத்துக்களைச் சரி செய்து, உடம்பின் ரத்தம் கசியும் தன்மையையும் சரி செய்தவுடன், இதயத்துடன் இணைக்கப்பட்ட பிளாஸ்டிக் குழாய்கள் ஒவ்வொன்றாக எடுத்து, கசியும் ரத்தத்தை உடம்பிலிருந்து வெளியேற்ற இதயத்தின் மேலும், வலது மார்புகூட்டிலும், பிளாஸ்டிக் குழாய்களை இணைத்து, உடம்பில் வீணாகும் ரத்தத்தை உடம்பின் வெளியே ஒரு பெரிய கண்ணாடி பாட்டிலில் இணைத்துவிடலாம்.

ஆபரேஷன் செய்த பிறகு இதயம் சரிவர துடிப்பதற்கும், மூளை, நுரையீரல் போன்ற மற்ற உறுப்புகள் சரியாக வேலை செய்வதற்கும் ஆபரேஷன் செய்த புண் ஆறுவதற்கும் சரியான மருந்துகளைக் கொடுத்து இதய ஆபரேஷன் செய்த நோயாளியை முற்றிலும் குணப்படுத்தி விடலாம்.

பைபாஸ் சர்ஜரி


பைபாஸ் சர்ஜரி என்பது இதய ரத்தக்குழாய் முழுவதும் அடைபடுவதால் உண்டாகக்கூடிய மாரடைப்பு நோய்க்கு செய்யக்கூடிய இதய ஆபரேஷன். இந்த ஆபரேஷனை திறந்த முறை இதய ஆபரேஷன் மூலம், செயற்கை இதயம் மற்றும் நுரையீரல் மிஷின்களை உபயோகப்படுத்தி இதய துடிப்பை நிறுத்தியும் ஆபரேஷன் செய்யலாம். இதயத்துடிப்பை நிறுத்தாமலும், செயற்கை இதயம் மற்றும் நுரையீரல் மிஷின்களை உபயோகிக்காமலும் ஆபரேஷன் செய்யலாம்.

பைபாஸ் சர்ஜரி செய்வதற்கு காலில் உள்ள அசுத்த ரத்தத்தை இதயத்திற்கு கொண்டு செல்லும் செபனஸ் ரத்தக்குழாய் மற்றும் மார்புக்கூட்டின் உட்புறமுள்ள இடது மற்றும் வலது உள்மார்பு ரத்தக்குழாய்கள் மற்றும் முன் கையில் உள்ள ரேடியல் ரத்தக்குழாய்கள் போன்றவற்றை உபயோகித்து மேற்கூறிய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ரத்தக்குழாய்களின் அடைப்பின் தன்மையைப் பொறுத்து மகாதமனியின் ஆரம்பத்திலும், இதய ரத்தக் குழாய் அடைப்பின் கீழும் இணைத்து பைபாஸ் சர்ஜரி செய்யப்படுகிறது.

பைபாஸ் சர்ஜரி என்பது ஓபன் ஹார்ட் சர்ஜரியின் மூலமும் செய்யக்கூடிய ஒரு தனிப்பட்ட இதய அறுவைச் சிகிச்சை முறை. பொதுவாக பொதுமக்களுக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரியும், பைபாஸ் சர்ஜரியும் ஒன்று என்ற குழப்பத்திற்கு மேற்கூறிய விளக்கம் பொருத்தமானதாக இருக்கும்.

இன்னும் ஒரு வாரத்தில் கூகிள் குரோம் ஓஎஸ்


கூகிள் குரோம் இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகலாம் என்று டெக்க்ரன்ச் இணையதளம் செய்தி வெளியிட்டு உள்ளது. கூகிள் நிறுவனம் குரோம் ஒஎஸ் எனும் இயங்குதளம் தயாரிப்பில் உள்ளது என்பது அனைவரும் அறிந்த செய்தி. அது இன்னும் ஒரு வாரத்தில் தரவிறக்கத்திற்கு கிடைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குரோம் ஓஎஸ் அடிப்படையில் லினக்ஸ் கொண்டு உருவாக்கப்படுகிறது. மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் போன்று இது பெரும்பாலான ஹர்ட்வேர் களை ஆதரிக்கும் படியான டிவைஸ் டிரைவர்களை கொண்டிருக்குமா என்பது கேள்விக்குறி. இதன் ஆரம்ப பதிப்பு நெட்புக் கணினிகளை ஆதரிக்கும் படி வெளியிடப்படும். ஏசர், அசுஸ், லெனோவா போன்ற நிறவனங்களின் நெட்புக் கணினிகளில் தடை இன்றி வேலை செய்யும் என்று எதிர் பார்க்கலாம்.

காலப் போக்கில் அனைத்து கணினி ஹர்ட்வர்களிலும் தடை இன்றி இயங்கும்படி வெளி வரும். குரோம் ஓஎஸ் அடுத்த வாரம் வெளியாகிறது என்பதற்கு கூகுளிடம் இருந்து எந்த அறிவிப்பும் இல்லை. மைக்ரோசாப்ட்டால் விண்டோஸ் 7 வெளியிடப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டிருக்கும் போது இந்த செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததாகவே படுகிறது. இயங்குதள உலகில் ஜாம்பாவானாக திகழும் மைக்ரோசாப்ட்டுக்கு கூகுளால் நிச்சயம் நல்ல போட்டியை கொடுக்க முடியும். இது நமக்கும் நல்லது.

மொபைல்களுக்கான ஒபேரா மினி 5 பீட்டா அறிமுகம்


நாம் பெரும்பாலும் ஒபேரா மினி இணைய உலாவியின் நான்காம் பதிப்பைத்தான் உபயோகித்து வருவோம். ஒபேரா இப்போது அதன் ஐந்தாம் பீட்டா பதிப்பினை வெளியிட்டு உள்ளது. இது அதிக வசதிகளுடன் மேம்படுத்த்தப் பட்டு உள்ளது.

உங்களிடம் ஒபேரா மினி பழைய பதிப்பு இருந்தால் இந்த புதிய பதிப்புக்கு மாறி கொள்ளுங்கள். இது பெரும்பாலான மொபைல்களில் நன்றாக வேலை செய்கிறது.

இதனை தரவிறக்க

அதன் சிறப்பம்சங்களை பார்ப்போம்

1. இது பழைய பதிப்பிலிருந்து முற்றிலும் மாற்றுபட்டது. தொடுதிரை (touchscreen) மொபைல்களை ஆதரிக்கிறது.

2. கணினி இணைய உலாவிகளை போன்று டேப்(Tabs) வசதிகளை கொண்டுள்ளதால் ஒரே நேரத்தில் பல இணைய பக்கங்களை திறந்து கொள்ள முடியும். மாறி கொள்ள முடியும்.

3. ஸ்பீட் டயல் வசதி மூலம் நாம் அடிக்கடி பார்க்கும் இணையதளங்களை முகப்பில் சேமித்து வைத்து கொண்டு அணுக முடியும்.

4. பாஸ்வேர்ட் மேனேஜர் மூலம் உங்கள் லாகின் பாஸ்வோர்ட் , பெயரையும் சேமித்து வைக்கலாம். இதன் மூலம் ஒரு இணைய பக்கத்துக்கு செல்லும் போது மீண்டும் மீண்டும் பாஸ்வோர்ட் கொடுக்க வேண்டிய தொந்தரவு இல்லை.

5. முன்பெல்லாம் மொபைலில் இணைய பக்கத்தில் உள்ள எழுத்துக்களை காப்பி செய்வது இயலாத காரியம். இப்போது இந்த பதிப்பில் அதனை செய்யலாம். இணைய பக்கத்தில் உள்ள வாசகங்களை காப்பி செய்து மற்ற மொபைல் அப்ப்ளிகேஷன்களில் பேஸ்ட் செய்து உபயோகிக்கலாம்.

இதிலும் தமிழ் இணையபக்கங்கள் நன்றாக தெரிகின்றன. அந்த வசதியை எப்படி கொண்டு வருவது என அறிந்து கொள்ள இந்த இடுகையை பார்க்கவும். மொத்தத்தில் இந்த பதிப்பு மூலம் ஒபேரா தான்தான் இன்னும் மொபைல் இணைய உலாவிகள் சந்தையில் மாகாராஜா என்பதை மீண்டும் நிரூபித்து உள்ளது. மொபைலில் இணையம் உபயோகிப்பவராக இருந்தால் நீங்கள் இந்த ஒபேரா மினி பீட்டா பதிப்பை கட்டாயம் சோதித்து பாருங்கள்.

November 16, 2009

விண்வெளியில் மின்சாரம் தயாரிப்பு


உண்மை அறிந்த மனிதனிடம் தான் இந்த பிரபஞ்சமே புதைந்திருக்கிறது என்று சித்தர்களும் ஞானியர்களும் தெரிவிப்பது உண்டு.

மின் சக்தியே விஞ்ஞான வளர்ச்சிக்கு அதிமுக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. மின்சாரம் கண்டுபிடித்த விஞ்ஞானி மைக்கேல் பாரடே நம்முடைய அபார வளர்ச்சிகளுக்கெல்லாம் ஒரு காரணகர்த்தா. நீர், நிலக்கரி, அலை மற்றும் அணு சக்தி போன்றவற்றின் உதவியுடன் இப்போது நமக்கு மின்சாரம் கிடைக்கிறது.

காற்றும் அதற்கு விதிவிலக்கல்ல. காற்றின் மூலம் குறைந்த செலவில் அதிக மின்சக்திகளைப் பெற விஞ்ஞானிகள் இடைவிடாமல் முயற்சி செய்துகொண்டிருக்கின்றனர். தற்பொழுது உலகம் முழுவதிலும் 50 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் உபயோகப்படுத்தப்படுகிறது. இது 50 நியூகிளியர் ஆற்றல் நிலையத்திற்கு சமமாகும்.

நமக்கு மின்சாரம் கிடைப்பதற்கு காற்றின் பங்கு மிக மிக அவசியமாக விளங்குகிறது. காற்றாலை மின்சாரம் மிகவும் பிரசித்தி பெற்றது. புறநகர் பகுதிகளில் பெரிய பெரிய ராட்சத காற்றாடிகள் சுழன்று கொண்டிருப்பதைக் காணமுடியும். நிலங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் மாசற்ற மின்னாற்றல் கிடைப்பதில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் அதிக இரைச்சல்கள் ஏற்படுவதோடு எல்லா நேரங்களிலும் அது சுழல்வதற்கான காற்று கிடைப்பதில்லை.

இவைகளை கருத்திற்கொண்டு விண்ணில் மிதந்தபடி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் காற்றாடிகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க ஏற்பாடுகள் நடந்துவருகிறது. இந்த புதிய வழிமுறை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

ராட்சத காற்றாடிகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது குறித்து அறிந்து இருக்கலாம். தமிழகத்தில் நாகர்கோவில் அருகே உள்பட தமிழகத்தில் பல இடங்களில் காற்றாலைகள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக புறநகர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் காற்றாடிகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முயற்சிகளில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.


மேலை நாடுகளில் இத்தகைய முறைகளில் மின்சாரம் தயாரிக்கும் முயற்சிகள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்த முறையில் மின்சாரம் தயாரிக்கும் போது சில பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்கிறது. காற்றாலை எந்திரத்தின் இரைச்சல், இந்த ஆலைகளை நிறுவ தேவைப்படும் இடப்பிரச்சினை போன்றவை இதில் குறிப்பிடத்தக்கவையாகும்.

இது போன்ற பிரச்சினைகளில் இருந்து தீர்வு காண விண்வெளியில் காற்றாலைகள் அமைத்து அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் உருவாக்கப்பட்டது.

பூமியிலிருந்து 15 ஆயிரம் முதல் 45 ஆயிரம் அடி உயரத்தில் காற்றாலைகளை நிறுவும் இப்புதிய முறையைக் கண்டறிந்தவர் ப்ரையன் ராபர்ட்ஸ். இவர் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஒரு தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் பொறியியல் வல்லுனராக இருக்கிறார்.

மூன்று பொறியியல் வல்லுனர்களின் கூட்டணியுடன் கலிபோர்னியாவின் சான்டிகோ நகரில் ஸ்கை விண்ட் பவர் என்ற ஆராய்ச்சி மையத்தை நிறுவப்பட்டுள்ளது. அதன்மூலம் பறக்கும் மின்னியற்றிகளை தயாரிக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்த திட்டம் குறித்து என்ஜினீயர் ராபர்ட்ஸ் கூறும் போது...

"பறக்கும் மின்சார ஜெனரேட்டர்கள் எடை குறைந்ததாக தயாரிக்கப்படும்.பின்னர் இதை ஒரு விமானத்தின் மூலம் விண்ணிற்கு எடுத்துச்செல்ல வேண்டும். பின்னர் இது தரையில் இருந்து குறிப்பிட்ட உயரத்தில் விண்ணில் பறந்த படி இருக்கும். பூமியில் இருந்து பார்க்கும் போது இது ஒரு ராட்சத பட்டத்தைப் போல பறந்து கொண்டிருக்கும். மணிக்கு 200 மைல் வேகத்தில் காற்றாடிகள் விண்ணில் சுற்றிக்கொண்டிருக்கும். இதன் மூலம் பெறப்படும் மின்சாரம் கேபிள் இணைப்பு மூலம் தரை நிலையத்துக்கு அனுப்பப்படும். பின்னர் இந்த மின்சாரம் முறைப்படி தொழிற்சாலைகள் மற்றும் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படும்.

இந்த திட்டத்தின் மூலம் ஒரே நேரத்தில் 600 பறக்கும் மின்னியற்றிகளை  விண்ணில் மிதக்கவிட முடியும். இதன் மூலம் ஒவ்வொரு பறக்கும் மின்னியற்றிகளும் 20 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இவைகளின் மூலம் இரண்டு சிகாகோ நகரங்கள் அளவிற்கு மின்சாரத்தை கொடுக்க முடியும்'', என்கிறார் ராபர்ட்ஸ்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் விண்வெளி காற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் நிலையத்தை அமெரிக்காவின் வான் போக்குவரத்து நிர்வாகத்துறையின்  அனுமதியுடன் 200 கிலோவாட் மின்சாரத்தை கொடுக்கும் ஒரு பறக்கும் மின்னியற்றியை அனுப்ப திட்டமிட்டுள்ளது.


ராபர்ட்ஸ் கூறுகையில், 'இதற்கான வடிவமைப்பு, எடை, அளவு மற்றும் செலவு விபரங்களை தயாரித்துவிட்டோம். தற்பொழுது இதற்கு 4 மில்லியன் டாலர்கள் தேவைப்படுகிறது', என்கிறார். அதாவது இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட 18 கோடி தேவைப்படுகிறது.

இந்த பறக்கும் மின்னியற்றிகள் 200 சதுர மைல்களுக்குள் காற்று மண்டலத்தை சுற்றி வரும். இந்த மின்னியற்றிகளை விமானங்கள் தயாரிக்கும் உலோகங்கள், பொருட்கள், கார்பன் நார் இழைகள், அலுமினியம் மற்றும் கண்ணாடி நார் இழைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதனுடைய எடை 45 ஆயிரம் பவுண்டுகள் அதாவது 20,412 கிலோவாகும். 130 அடி குறுக்களவு விட்டமுள்ள காற்றாடிகளைக் கொண்டு சுற்றி வருவதோடு மின்சாரத்தையும் உற்பத்தி செய்கிறது. அதாவது இந்த காற்றாடி சுற்றும் போது இரண்டு பணிகளை செய்கிறது. 200 சதுர மைல் பாதையை சுற்றி வரும் அதே சமயத்தில் மின்சாரத்தையும் உற்பத்தி செய்கிறது.

3 அங்குல அலுமினியத்தாலான இணைப்புகள் மூலம் இந்த பறக்கும் மின்னியற்றிகளுக்குள் தொடர்பு ஏற்படுத்தப்படும். இந்த இணைப்பு மூலம் மின்சாரம் தரை நிலையத்திற்கு கடத்தப்படுகிறது. ஒவ்வொரு இணைப்புக் கம்பிகளும் 20 ஆயிரம் வோல்ட் மின்சாரத்தை கடத்துகிறது.

தரையிலிருந்து இந்த பறக்கும் மின்னியற்றிகள் தரை மின் நிலையத்திலுள்ள மின்சாரத்தை உபயோகித்து மேலே உயர்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. மேலே எழும்பியவுடன் இது ஒரு ஹெலிகாப்டரைப் போல இயங்க ஆரம்பித்துவிடுகிறது. விமானப் பாதையை அடைந்தவுடன் 40 டிகிரி சாய்வில் சுழல ஆரம்பித்துவிடுகிறது.

மனிதன் சிந்திக்க சிந்திக்க அவனை சூழ்ந்துள்ள சக்திகளிலிருந்து மாபெரும் ஆற்றல்களை விஞ்ஞானத்தின் உதவியுடன் பெற்று வருகின்றான். விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் நாம் நிறைய சாதகங்களை அடைந்துள்ளோம்.

விண்ணைப் பார்த்து கவிதைகளையும், கதை கட்டுரைகளயும் மட்டுமே படைத்துக் கொண்டிருந்த மனிதன் இப்பொழுது உலக நன்மைக்காக விண்வெளியை பயன்படுத்துவது பூமிக்கடியில் மட்டும் அல்ல விண்ணிலும் ஏராளமான புதையல்கள் புதைந்துள்ளன என்பதையே நிரூபிக்கிறது.

மேம்படுத்தப்பட்ட நினைவகத்துடன் ஐபாட்


ஐ-பாட் கருவி தயாரிப்பில் சிறந்து விளங்கும் ஆப்பிள் நிறுவனம், நினைவகத் திறன் மேம்படுத்தப்பட்ட புதிய ஐ-பாட் மற்றும் ஐ-போன்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி 16 ஜிபி நினைவக திறன் கொண்ட புதிய ஐ-போன் (iPhone) 499 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு முன்பு 8 ஜிபி நினைவகம் உள்ள ஐ-போன்கள் மட்டுமே புழக்கத்தில் இருந்தது.இதேபோல் ஐ-பாட் டச் (iPod Touch) கருவியும், 32 ஜிபி நினைவகத் திறனுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலையும் 499 டாலர் என ஆப்பிள் நிறுவன செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.இதற்கு முன் புழக்கத்தில் இருந்த ஐ-பாட் டச் கருவிகள், 16 மற்றும் 8 ஜிபி நினைவகத் திறன் மட்டுமே கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.ஆப்பிள் நிறுவனத்தின் ஆன்லைன் மற்றும் சில்லரை விற்பனை மையங்களிலும், அமெரிக்காவின் ஏடி&டி விற்பனை மையத்திலும் புதிய ஐ-போன்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

"சந்திரனில் தண்ணீர்" நாஸா அறிவிப்பு


அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சமீபத்தில் நடத்திய ஆய்வுகளில், நிலவில் குறிப்பிடத்தக்க அளவு தண்ணீர் இருப்பது தெரியவந்துள்ளது.

பூமியின் துணைக்கோளான சந்திரனில் தண்ணீர் இருப்பதாக நாஸா ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீண்டகாலமாக இந்த ஆராய்ச்சி இடம்பெற்றுவந்ததாகவும் அண்மைய ஆய்வுகளால் ஆதாரத்துடன் நிரூபிக்கக் கூடியதாக உள்ளதாகவும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.


இந்தியா அனுப்பிய சந்திராயன்-1 ஆய்வுக்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த ஆய்வு உபகரணங்கள் நிலவில் தண்ணீர் இருப்பதை கடந்த சில மாதங்களுக்கு முன் உறுதி செய்தது. இது விண்வெளி ஆய்வில் முக்கிய மைல்கல்லாக கருதப்பட்டது.

இதையடுத்து கடந்த சில வாரத்திற்கு முன் ராக்கெட்டை நிலவில் மோதச் செய்து அப்போது ஏற்படும் அதிர்வு மூலம் நிலவின் மேற்பரப்பை தகர்த்து அதில் தண்ணீர் இருக்கிறதா? என்ற ஆய்வு நாசா மேற்கொண்டது. இதில் தற்போது ஆச்சரியப்படும் வகையிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிலவின் மீது ராக்கெட்டை மோதச் செய்து நாசா நடத்திய ஆய்வில் இடம்பெற்ற விஞ்ஞானி ஜான் லோக்ஸ்டோன் செய்தியாளர்களிடம் பேசுகையில், முன்பு மிகக் குறைந்த அளவிலேயே நிலவில் தண்ணீர் இருப்பதாக நம்பினோம். ஆனால் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் வியக்கத்தகு வகையில் உள்ளது. குவளையில் (பக்கெட்) அள்ளக் கூடிய குறிப்பிடத்தக்க அளவு தண்ணீர் நிலவில் உள்ளது தற்போது கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

ராக்கெட் மோதிய இடத்தில் ஏற்பட்ட பள்ளத்தில் குறைந்தது 25 கேலன் (95 லிட்டர்) தண்ணீர் இருந்ததாக நாசா தகவல்கள் தெரிவிக்கின்றன.

"சந்திரனில் தண்ணீர் உண்டு என்பதை நாம் கண்டுபிடித்துள்ளோம். மிகுந்த சந்தோசத்துடன் இந்தத் தகவலை உலகுக்கு கூறுகிறோம்" என நாஸா ஆய்வுநிலையத்தின் திட்டமிடல் பிரிவைச் சேர்ந்த விஞ்ஞானி எந்தனி கொலபிரேட் தெரிவித்துள்ளார்.

ஆய்வின் புதியதொரு பக்கம் திறந்திருக்கிறது எனக் குறிப்பிடும் எந்தனி, தண்ணீர் அதிகம் இருப்பதை தமது செயற்கைக் கோள்களில் தெளிவாக காட்டப்படுவதாகவும் கூறியுள்ளார்.

ஐ-போனுக்கு ( i -Phone) மைக்ரோசாப்ட் அப்ளிகேஷன்


தலைப்பு தவறு என்று எண்ணுகிறீர்களா! ஆமாம், மைக்ரோசாப்ட் நிறுவனம் ஐ போனுக்கு அப்ளிகேஷன் புரோகிராமினைத் தருமா என்ன? என்று நீங்கள் வியப்பது தெரிகிறது. ஆனால் உண்மை அதுதான். மைக்ரோசாப்ட் லைவ் லேப்ஸ் அத்தகைய ஒரு புரோகிராம் ஒன்றைத் தருகிறது.

ஸீ ட்ரேகன் என இதற்குப் பெயர் இட்டுள்ளது. இதன் மூலம் ஐ போன் பயன்படுத்துபவர்கள் 3ஜி அல்லது வை–பி வழியாக பெரிய அளவிலான போட்டோ லைப்ரேரிகளை எளிதாகப் பெற்று காண முடியும். இந்த சாப்ட்வேர் தொகுப்புடன் 50 படங்கள் இணைத்துத் தரப்படுகின்றன. சில படங்கள் 10 கிகா பிக்ஸெல்கள் அளவில் மிகப் பெரியதாக உள்ளன. இதில் சில சாட்டலைட் மூலம் எடுத்த படங்கள், சில ஸ்பேஸ் போட்டோக்கள், சில அதிக ரெசல்யூசனில் உள்ள கலைப் படங்களாகும்.

இந்த சாப்ட்வேர் தொகுப்பின் மிக முக்கிய அம்சம் என்னவென்றால் இது முற்றிலும் இலவசம். ஒரு சின்ன மாற்றம் இருந்தாலும் அடுத்த மேம்படுத்தப்பட்ட சாதனத்திற்கு மாறிக் கொள்ளுங்கள் என்று அட்வைஸ் வழங்கும் . மைக்ரோசாப்ட் இவ்வாறு இலவச தொகுப்பினை எப்போதும் பயன்படுத்தும் வகையில் வழங்குவது புதுமைதான்.

November 15, 2009

எயிட்ஸ் வைரஸின் பரம்பரை ரகசியங்கள் வெளிப்பட்டன.


உலகில் மனித குலத்தை ஆட்டிப்படைத்து வரும் எயிட்ஸ் நோய்க்குரிய எச் ஐ வி -1 (HIV -1)(Human immunodeficiency virus) இன் பரம்பரை அலகுகளின் தொகுப்பு (genome) அமெரிக்க வடக்கு கரோலினா பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டு வெளிக் கொணரப்பட்டுள்ளது.

இதன் மூலம் விளங்கக் கடுமையாக உள்ள எச் ஐ வியின் செயற்பாடுகள், மாறல்கள் மற்றும் அதன் பெருக்கங்கள் தொடர்பான பரம்பரை அலகுகள் சம்பந்தப்பட்ட விடயங்கள் தெளிவாக விளங்கிக் கொள்ளப்பட்ட முடியும் என்றும் அதன் மூலம் எச் ஐ வியைக் கட்டுப்படுத்தும் மருந்துகளின் தயாரிப்பை மேலும் வினைத்திறனுடைய வகையில் வலுப்படுத்த முடியும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

எளிமையான மற்றைய வைரஸ்களின் ஜினோம்களோடு ஒப்பிடும் போது எச் ஐ வி- 1 சிக்கலான ஜினோம் தொகுப்பைக் கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்து கூறியுள்ளனர்.

எச் ஐ வி - 1 டி என் ஏ (DNA) இரட்டைச் சங்கிலி அமைப்பில் பரம்பரைத் தகவல்களைச் சேர்த்து வைக்கும் வைரஸ் அல்ல. அது ஆர் என் ஏ (RNA) எனப்படும் ஒற்றைச் சங்கிலி அமைப்பில் தகவல்களை சேகரித்து வைப்பதால் அதன் பரம்பரை அலகுகளின் தொடர்ச்சியை ஆராய்ந்து வெளிப்படுத்துவது என்பது சிக்கலானதாக இருந்து வந்தமை இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

கொரில்லாவில் இருந்து மனிதனுக்கு தொற்றிய புதிய எயிட்ஸ் வைரஸ் கண்டுபிடிப்பு


மனிதரில் எயிட்ஸ் நோயைத் தோற்றுவிக்கும் HIV-1 வைரஸிற்கு ஒத்த கொரில்லாவில் (Gorillas) இருந்து மனிதனிற்கு தொற்றியிருக்கக் கூடியது என்று கருதப்படும் புதிய எயிட்ஸ் வரைஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட வைரஸ் தொற்றுடன் பிரான்ஸ் பாரீசில் வாழும் கமரூன் நாட்டைச் சேர்ந்த 62 வயதுடைய பெண்ணொருவர் இனங்காணப்பட்டுள்ளார். இவரே இவ்வகை வைரஸின் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ள முதல் மனிதனும் ஆவார்.

இவர் கமரூன் நாட்டில் ஒதுக்குப்புற கிராமத்தில் வாழ்ந்திருந்தாலும் கொரில்லாக்களோடு எந்த வித நேரடித் தொடர்புகளைக் கொண்டிருக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருந்தாலும் கொரில்லா அல்லது சிம்பன்சிகளின் இறைச்சிகளை உண்ணும் அல்லது தொடர்புகளைக் கொண்டிருக்கும் வேறு மனிதர்களிடம் இருந்து இவருக்கு இந்தத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

HIV கள் சிம்பன்ஸிகளில் (chimpanzees ) காணப்படும் SIV (Simian Immunodeficiency Virus ) வைரஸிகளின் வகைகள் என்றும் எச் ஐ வி கூட சிம்பன்ஸிகளில் இருந்து மனிதர்களுக்கு தொற்றி இருக்கலாம் என்றே இது நாள் வரை கருதப்பட்டு வந்துள்ளது. ஆனால் தற்போது இந்த புதிய வைரஸின் கண்டுபிடிப்பானது எச் ஐ வி கொரில்லாக்களில் இருந்தும் மனிதருக்கு தொற்றி இருக்கக் கூடும் என்ற நோக்கிலும் உயிரியல் மருத்துவ ஆய்வாளர்களைச் சிந்திக்கச் செய்துள்ளது.

இந்த புதிய வகை வைரஸை எச் ஐ வியின் பெருக்கத்தை கட்டுப்படுத்தக் கூடிய மருந்துகள் கொண்டு கட்டுப்படுத்த முடியாது என்று நம்புவதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்ற அதேவேளை இந்த வைரஸ் தொற்றுக் கொண்ட பெண்மணி எயிட்ஸ் நோய்க்குரிய எந்தக் குணங்குறிகளையும் காண்பிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

விரைந்து கூர்ப்படையக் கூடிய எயிட்ஸ் வைரஸுக்கள் மனிதன் மற்றும் பழைய உலகுக் குரங்குகள் அடங்கும் பிரைமேட்டு வகை உயிரினங்களுக்கிடையே இனம் விட்டு இனம் தொற்றக் கூடியவனவாக விளங்குகின்றன.

சமீபத்தில் தான் ஆபிரிக்கர்கள் மத்தியில் எயிட்ஸ் வைரசிஸிற்கு எதிரான தடுப்பூசிகள் பரிசோதனை ரீதியாக அறிமுகப்படுத்தப்பட்டன என்பதும் ஆபிரிக்காவிலேயே உலகில் அதிக எயிட்ஸ் நோயாளிகள் வாழ்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆபிரிக்காவை அடுத்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் அடங்கும் ஆசியப் பிராந்தியம் அதிக எயிட்ஸ் நோயாளிகளைக் கொண்டிருக்கிறது.

ரோபோ தொழில்நுட்பத்தில் இருதய அறுவை சிகிச்சை


ரோபோ உதவியுடன் இரண்டு பேருக்கு இருதய அறுவை சிகிச்சையை சென்னை மருத்துவர்கள் வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். இருதய அறுவை சிகிச்சையில் இது ஒரு முக்கியமான திருப்பம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரோபோ உதவியுடன் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையினால் நோயாளிகளுக்கு சில வசதிகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இம்முறையை பயன்படுத்துவதால் நோயாளிக்கு வலி குறையும் என்றும், அறுவை சிகிச்சையின் போது விரையமாகும் இரத்தத்தின் அளவும் கட்டுபபடுத்தப்படுவதால் இது நோயாளிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

இந்த அறுவை சிகிச்சை முறையில் சென்னையில் உள்ள செட்டிநாடு ஹெல்த் சிட்டி மருத்துவமனை மருத்துவர்கள் இரண்டு இளைஞர்களுக்கு இருதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். இந்த அறுவை சிகிச்சையின் போது குறைந்த அளவு திசுக்களே சேதமடைவதால் குறைந்த அளவே இரத்த விரையம் ஏற்படுகிறது. இதனால் நோயாளிக்கு குறைந்த அளவே இரத்தம் செலுத்தினால் போதுமானது.

இந்த சிகிச்சை முறையினால் குறைந்த அளவு பகுதிகள்தான் பாதிக்கப்படுகின்றன. அதனால் அறுவை சிகிச்சையின் போது போடப்படும் தையல் உறுதியாகவும் இருக்கும் என்று இம் மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ரவிகுமார் தெரிவித்துள்ளார்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review