December 30, 2009

பேஷியல் செய்வது மன அமைதிக்கு உதவும்

பொதுவாக நாம் முக அழகைப் பெறுவதற்காக பேஷியல் செய்து கொள்கிறோம். ஆனால் பேஷியல் என்பது முக அழகை விட மன அமைதிக்குத்தான் செய்யப்படுகிறது என்கிறார் அழகுக் கலை நிபுணர் மஞ்சு மாதா.



பேஷியல் என்பது என்ன?
பேஷியல் என்பது மனதை அமைதியான நிலைக்குக் கொண்டு செல்வதற்காக செய்யப்படுவதாகும். மேலும், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கிவிட்டு புதிய செல்களை கொண்டு வரவும் பேஷியல் உதவுகிறது.
பேஷியல் செய்யும் முறை எப்படி?
பேஷியல் என்பது முகத்தில் உள்ள பிரஷர் பாயிண்ட் இடங்களில் அழுத்தம் கொடுப்பதால் முகத்திற்கு ரத்த ஓட்டம் முழுமையாகக் கிடைக்கிறது. முகத்திற்கு ரத்த ஓட்டம் சீராக இருந்தாலே நமது முகம் பொலிவாகக் காணப்படும்.
பேஷியலில் உள்ள வகைகள் என்னென்ன?
பேஷியலில் பல வகைகள் உள்ளன. காய்கறி க்ரீம், பழக் க்ரீம், இயற்கைக் கீரம் என பல வகைகள் உள்ளன. விரல் விட்டு எண்ண முடியாத அளவிற்கு அதில் வகைகள் உள்ளன.
எந்த சருமத்திற்கு எந்த பேஷியல் பொருந்தும்?
பொதுவாகவே எல்லா சருமத்திற்கும் எல்லா பேஷியலும் பொருந்தாது. நம்முடைய சருமத்திற்கு எந்த வகையான பேஷியல் பொருந்துமே அதைத்தான் நாம் தேர்வு செய்ய வேண்டும். இல்லை என்றால், நமது சருமத்திற்கு உள்ள பிரச்சினைகளைக் கூறி, அழகுக் கலை நிபுணரின் தேர்வுக்கு விட்டுவிடலாம்.
பருக்கள் உள்ளவர்கள் பேஷியல் செய்யலாமா?
பொதுவாக பருக்கள் இருப்பவர்களுக்கு பேஷியல் செய்வதில்லை. அவர்களுக்கு மினி பேஷியல் மட்டுமே செய்யப்படுகிறது. முகத்தை க்ரீம் கொண்டு சுத்தப்படுத்தி, சில கிரீம்களை போட்டு எளிதான பேஷியல் மட்டுமே செய்யவார்கள்.

பேஷியல் செய்தால் என்ன மாற்றத்தை உணரலாம்?
பேஷியல் செய்யும் போது முகத்தில் உள்ள பிரஷர் பாய்ண்ட்டுகளில் அழுத்தம் கொடுக்கும் போது மனதிற்கு ஒரு அமைதி கிடைக்கிறது. பேஷியல் செய்தாலே நிச்சயமாக ஒரு நல்ல உணர்வை உணர்வார்கள்.
எவ்வளவுக்கு எவ்வளவு டென்ஷனுடன் வந்தார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு மன அமைதியைப் பெறுவார்கள்.
கர்ப்பிணிகள் பேஷியல் செய்யலாமா?
எல்லாருமே கர்ப்பிணிகள் பேஷியல் செய்து கொள்ளக் கூடாது என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கர்ப்பிணிகளுக்கு மிகவும் முக்கியம் மன அமைதிதான். அது எளிதாக கிடைக்காத பட்சத்தில் அவர்கள் பேஷியல் செய்து கொள்ளலாம்.
கர்ப்பிணிகள் பேஷியல் செய்து கொள்ளும் போது முழுக்க முழுக்க அவர்கள் மன அமைதியைப் பெறுவார்கள். ஆனால், பேஷியல் செய்யும் போது மனதை நாம் அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டியதும் மிகவும் முக்கியம்.
பேஷியல் செய்து கொள்ள வந்துவிட்டு, மனதை கண்டபடி எதையாவது நினைத்து வறுத்திக் கொண்டிருந்தால் அந்த பேஷியலால் எந்த பலனும் இருக்காது.
எனவே, மன அமைதிக்காக நாமும் நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும். பேஷியல் செய்யும் அறையே மங்கலாக இருக்கும். மங்கலாக இருப்பதே நமது மனதை அமைதிப்படுத்தத்தான்.
மற்றவர் நமக்கு ரிலாக்சேஷன் கொடுக்கும் போது தானாகவே நாம் மன அமைதியை அடைவோம். மன அமைதியும், ரத்த ஓட்டம் சீராவதும் நமது உடலுக்கு நிச்சயம் நல்ல பலனைத் தரும் என்பதை மறுக்க முடியாது.
சுயமாக பேஷியல் செய்து கொள்ளலாமா?
மற்றவரிடம் பேஷியல் செய்து கொள்வதால் நூறு விழுக்காடு பலன் கிடைக்கும் என்றால், நீங்களே செய்து கொள்ளும் போது 20 விழுக்காடுதான் கிடைக்கும்.
மற்றொருவர் நமக்கு மசாஜ் செய்யும் போதுதான் அதன் பலன் நமக்குக் கிடைக்கும். நமக்கு நாமே செய்து கொள்ளும் போது முக்கியமாக பிரஷர் பாய்ண்ட்டுகள் நமக்குத் தெரியாது. எதையும் சரியாக செய்யும் போதுதான் நல்ல பலன் கிடைக்கும். மேலும் நமக்கு நாமே செய்யும் போது டென்ஷன் அதிகரிக்கத் தான் செய்யுமேத் தவிர மன அமைதிக் கிடைக்காது.
மன அமைதியைப் பெற வேண்டுமானால் மாதத்தில் ஒரு முறை அழகுக் கலை நிபுணரிடம் செய்து கொள்வதுதான் சிறந்தது.
கல்யாணப் பெண் எந்த விதமான பேஷியல் செய்து கொள்ளலாம்?
எந்த பேஷியலாக இருந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொருவரின் சருமத்தைப் பொறுத்தே தேர்வு செய்ய முடியும்.
முதன் முதலாக பேஷியல் செய்து கொள்ள வரும் திருமணப் பெண்ணிற்கு நான் ப்ரூட் பேஷியல்தான் தேர்வு செய்வேன்.
ஏற்கனவே பல முறை பேஷியல் செய்தவர்களாக இருந்தால் மட்டும் கோல்ட் பேஷியல் தேர்வு செய்வேன். கோல்டு பேஷியல் செய்தால் திருமண சடங்குகள் முடிந்தும் அவர்களது சருமம் பொலிவாக இருக்கும்.
ஆனால் பேஷியல் செய்து வெளியில் எங்கும் செல்லாமல் இருந்தால் 10 நாட்கள் முதல் 12 நாட்கள் வரை சருமத்தின் பொலிவு வெளிப்படும். ஆனால் திருமணப் பெண் எப்படி வெளியில் செல்லாமல் இருப்பார்கள். ஷாப்பிங், அது இது வென வெளியில் செல்ல வேண்டி வரும் என்பதால் அதற்கு கோல்டு பேஷியல் ஏற்றதாக இருக்கும்.
கோல்டு பேஷியலுக்கு இருக்கும் முக்கியத்துவம் என்ன?
பேஷியலில் சில்வர் பேஷியல், கோல்டு பேஷியல், டைமண்ட் பேஷியல் என பல வகை இருந்தாலும் கோல்டு பேஷியல் எல்லாருக்குமே பொருந்தி விடும்.
எந்த பேஷியலாக இருந்தாலும் அதில் பயன்படுத்தப்படும் க்ரீம்கள்தான் மிகவும் முக்கியம். அதைப் பொருத்தே அந்த பேஷியல் எப்படி வரும் என்பதைக் கூற முடியும்.
முதல் முறையாக பார்லர் போகும் போது..
முதல் முறையாக நாம் பார்லர் போகும் போது அங்கு சொல்லப்படும் விஷயங்களும், க்ரீம்களின் வகைகளும் நமக்கு ஒன்றும் புரியாது.
அப்படி இருக்கும் நிலையில் பேஷியல் தேர்வை எப்படி நாம் செய்ய முடியும் என்ற நமது சந்தேகத்திற்கு விடை கூறுகிறார் அழகுக் கலை நிபுணர் மஞ்சு மாதா.
முதல் முறையாக ஒரு பார்லருக்கு போனதும் பேஷியல், ப்ளீச்சிங் செய்து கொள்ள வேண்டாம்.
எந்த பார்லருக்கு சென்றாலும் முதலில் ஐப்ரோ செய்வது, பெடிக்யூர், மெனிக்யூர் போன்றவை செய்து கொள்ளுங்கள்.
இதிலேயே அந்த பார்லரைப் பற்றி உங்களுக்குப் புரிந்து விடும். பார்லரில் இருப்பவர்களுக்கும் உங்களது சருமத்தைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்.
முதலில் ஐப்ரோ செய்தாலே அவர்களது வேலை எப்படி இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும். முகத்தை அழகாக வைத்துக் கொள்வது புருவங்கள்தான். அதை ஒருவர் அழகாக செய்தால் அவர்களது மற்ற வேலைகளும் நன்றாக இருக்கும் என்று நம்பலாம்.
அவர்களது வேலை நுணுக்கத்தை வைத்தே சொல்லிவிடலாம் அல்லவா?
உடலில் முகம் என்பது மிகவும் முக்கியமான விஷயம் என்பதால் எடுத்ததும் முகத்தைக் கொடுத்து விடாமல் இப்படி சின்ன சின்ன விஷயங்களை செய்து பிறகு அவர்கள் மீது நம்பிக்கை வந்தால் பேஷியல் மற்றும் ப்ளீச்சிங் செய்து கொள்ளலாம்.

இங்கிலாந்தில் போதை இல்லாத மது தயாரிப்பு

பொதுவாக பிராந்தி, விஸ்கி, பீர் போன்ற மது வகைகள் ஆல்கஹால் மூலம் தயாரிக்கப்படுகிறது. இதனால்தான் மது குடித்தவர்கள் போதையில் மிதக்கிறார்கள்.

ஆல்கஹால் மூளையை தாக்குவதால் நரம்பு மண்டலம் தன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக செயல்படுகிறது. இதனால் தள்ளாடுகிறார்கள். சமுதாயத்தில் அவமதிக்கப்படுகிறார்கள்.

இது போன்ற சம்பவங்களை தவிர்க்க போதை இல்லாத மது தயாரிக்கப்பட்டுள்ளது. இதை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். லண்டன் இம்பீரியல் கல்லூரி விஞ்ஞானி பேராசிரியர் டேவிட் நட் தலைமையிலான குழு இதற்கான முயற்சியை மேற் கொண்டது.


மது தயாரிக்க பயன்படுத்தும் ஆல்கஹால் செயற்கையாக கண்டுபிடித்தனர். அது வலியம் என்ற ரசாயன பொருள் மூலம் தயாரிக்கப்பட்டது. இதன் மூலம் போதை இல்லாத மதுவை தயாரித்தனர்.

இந்த மதுவை குடித்தால் போதையோ, தள்ளாட்டமோ ஏற்படவில்லை. ஏனென்றால் இந்த ஆல்கஹால் மூளை நரம்புகளை பாதிப்பதில்லை. ஆனால் உடலில் ஒருவித சந்தோஷ புத்துணர்ச்சியை ஏற்படுத்தி மகிழ்ச்சியான நிலையில் வைத்திருக்க கூடியது.

இந்த ஆல்கஹால் மூலம் மது தயாரிக்கலாமா என்பது குறித்து போதை மருந்து நிபுணர்களின் கருத்தை அரசு கேட்டுள்ளது. இந்த வகை மதுக்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வரவேண்டும் என இங்கிலாந்து மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.


இதன் மூலம் மது குடித்து பயமின்றி “ஹாயாக” வாகனங்கள் ஓட்டிச்செல்லலாம். யாருக்கும் இடையூறு இன்றி மகிழ்ச்சியை அனுபவிக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.

December 29, 2009

உலகில் முதலாவதாக ஏழுவகை இதய குறைபாடுகளுக்கு ஒரே ஆபரேஷன்

உலகிலேயே முதல் முறையாக இதயத்தில் ஏற்பட்ட ஏழுவிதமான கோளாறுகளை ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்து சென்னை, மியாட் மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்தவர் நாராயணசாமி (53). மருந்து கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி லட்சுமி. நாராயணசாமிக்கு பிறவியிலேயே இதய பாதிப்பு இருந்தது. இதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளவில்லை. கடந்த மாதம் அவருக்கு அதிகமான மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனைக்கு வந்தார். நாராயணசாமியை, மியாட் மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாஷி பரிசோதித்தார். இதில், அவருக்கு இரண்டு பெரிய ரத்த நாளங்கள் மகாதமணியில் இருந்து ரத்தத்தை நுரையீரலுக்கு கொண்டு செல்வதும், "வென்ட்ரிக்கல் செப்டம்' எனப்படும் இதய அறைகளுக்கு இடையே துளை இருப்பதும், "ஏட்ரியல் செப்டம்' எனப்படும் இதய அறைகளுக்கிடையே மேலும் ஒரு துளை இருப்பதும், இதயத்தின் வலதுபுறத்தில் அதிக சதை வளர்ந்திருப்பதும், பல்மோனரி வால்வு இல்லாமை மற்றும் அதனால் ஏற்படும் ரத்தக்கசிவு, மகாதமணியில் ஆணுவரிசம் எனப்படும் பெரிய மகாதமணி அழற்சி நோய், அதிக கால்சியம் படிந்த ரத்தம் கசியும் அயோர்டிக் வால்வு என ஏழு குறைபாடுகள் நாராயணசாமியின் இதயத்தில் கண்டறியப்பட்டன.


டாக்டர் பாஷி தலைமையில் டாக்டர்கள் ஹரிலால், கண்ணன், சிவகுமார், அஜிஜேக்கப், ஜோட்ஸ்னா ஆகியோர் அடங்கிய குழுவினர் ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சை மூலம் ஏழுவிதமான குறைபாடுகளையும் சரிசெய்தனர். உலகிலேயே முதல் முறையாக இதுபோன்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. நாராயணசாமி தற்போது நலமாக உள்ளார்.

மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மோகன்தாஸ் கூறுகையில்,
"இதயத்தில் ஏற்பட்டிருந்த ஏழுவிதமான குறைபாடுகளை ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து மியாட் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். மியாட்டில் உள்ள அறுவை சிகிச்சை அரங்குகள் நவீனமாக்கப்பட்டுள்ளன. இதனால், சிக்கலான அறுவை சிகிச்சைகள் கூட வெற்றிகரமாக செய்யப்படுகின்றன,' என்றார்.

டாக்டர் பாஷி கூறியதாவது,

நாராயணசாமிக்கு அதிக மூச்சுத்திணறல் இருந்ததால், அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 8ம் தேதி அவருக்கு, அதிக ஆபத்து கொண்ட அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையின் போது, மகாதமணியில் இருந்து நுரையீரலுக்கு ரத்தம் கொண்டு செல்லும் நாளங்களை சரிசெய்வது மிகவும் கடினம். இந்த சிகிச்சை "கேத்லேப் கத்திடரைசேசன்' முறையில் அளிக்கப்பட்டதால் ஆபத்து தவிர்க்கப்பட்டது. பின், இரண்டு அசாதாரண ரத்த நாளங்கள் நுரையீரலுக்கு ரத்தம் செலுத்துவது அடைக்கப்பட்டது. பின், வென்ட்ரிக்கல் செப்டம் எனப்படும் இதய அறைகளுக்கிடையேயான துளை அடைக்கப்பட்டது. அடுத்ததாக ஏட்ரியல் செப்டம் எனப்படும் இதய அறைகளுக்கிடையேயான துளை சரிசெய்யப்பட்டது. இதயத்தில் வலதுபுறம் இருந்த அதிகப்படியான தசைகள் அகற்றப்பட்டன. பல்மோனரி வால்வு மாற்றியமைக்கப்பட்டது.

மகாதமணி அழற்சியை, செயற்கை தமணி மூலம் சரிசெய்து, இதய ரத்த நாளங்கள் மறுபடியும் இணைக்கப்பட்டது. ஆயோர்டிக் வால்வு மாற்றியமைக்கப்பட்டது. மொத்தம் 6 மணி நேரம் கொண்ட இந்த அறுவை சிகிச்சையின் போது, எட்டு யூனிட் ரத்தம் செலுத்தப்பட்டது. உலகிலேயே முதல் முறையாக ஏழுவிதமான குறைபாடுகள் ஒரே நேரத்தில் சரிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு டாக்டர் பாஷி கூறினார்.

சுகமான தூக்கம், சுறுசுறுப்பான விழிப்பு

அதிகாலைத் தூக்கம் ஆனந்தம் தரும் ஆழ்ந்த உறக்கமாக இருக்கும். வெயில் சுள்ளுன்னு முகத்தில் விழுந்தபிறகுதான் எழத்தோன்றும். இல்லாவிட்டால் பசி வயிற்றைக் கிள்ளிய பிறகு எழுவோம்.

அப்படி இருக்கும்போது, அதிகாலையில் அலாரம் வைத்து எழுப்பினால் எப்படி இருக்கும்? சத்தம்போட்ட கடிகாரத்துக்கு உச்சி மண்டையில் ஒரு தட்டு. செல்போனுக்கும் அதே கதிதான். மீண்டும் தூக்கத்துக்குள் புகுந்து சொர்க்கப் பிரவேசம் செய்வோம்.


இனி அப்படி தூக்கத்தைக் கெடுத்து எழவேண்டாம். உங்கள் உடலுக்குத் தேவையான ஓய்வு கிடைத்தபிறகு எழுப்பிவிடும்படியான `அலாரம்' உருவாக்கிவிட்டோம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இந்தக்கருவி கடிகாரம் வடிவில் இருக்கிறது. இங்கிலாந்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஸ்லீப்டிராக்கர் எனப்படும் இந்தக்கருவியை கையில் கட்டிக் கொண்டு படுத்தால்போதும். நமது ஆழ்ந்த தூக்கத்தை கெடுக்காமல் போதுமான ஓய்வு கிடைத்தபிறகு எழுப்பிவிடுமாம். மற்றவற்றை ஆய்வாளரே கூறுகிறார்...

இதுவரை தூக்கத்தில் இருந்து எழுப்பிவிடும் கடிகாரம், செல்போன்கள் போன்றவை குறிப்பிட்ட நேரம் முடிந்ததும் எழுப்பிவிடும். இதனால் நிம்மதியான உறக்கம் கெடும். திடீரென்று எழுவதால் மன அழுத்தம், தோல் பாதிப்பு, சோர்வு என பல பாதிப்புகள் ஏற்படும்.

ஆனால் எங்களது உடற்கடிகாரம் (பாடிகிளாக்) தூக்கத்தின் அளவை கண்காணிக்கும். மூளையானது மெலட்டானின் என்னும் ரசாயனம் சுரப்பதை நிறுத்தத் தொடங்கிவிட்டால் உடலுக்கு போதுமான ஓய்வு கிடைத்துவிடும். அதை கண்காணித்து இந்தக்கருவி நம்மை எழுப்பிவிடும். இதில் ஏற்படும் அதிர்வுகள் 7-9 ஹெர்ட்ஸ் வரை இருப்பதால் வேறு பாதிப்புகளும் ஏற்படாது.

December 28, 2009

பயங்கரவாதத்துக்கு மருத்துவ காரணம்

பயங்கரவாதம், குண்டுவெடிப்பு, துப்பாக்கிச் சூடுகள் போன்றவை ஏற்படுத்தும் அதிர்வலைகள் பயங்கரமானவை. வன்முறைச் செயல்களைத் தடுக்க மருத்துவ ரீதியிலான அணுகுமுறையும் தேவையாகும்.

'மானோ அமைன் ஆக்சிடேஸ்ஏ' என்பது மூளையில் உண்டாகிற ஒரு என்சைமாகும். மூளையில் இந்த என்சைமின் அளவு குறையும் போது மனிதன் வன்முறைச் செயல்களைச் செய்ய தூண்டப்படுகின்றான்.


மூளையில் இந்த என்சைமின் அளவு குறைவதை கார்பன் ஐஐ என்ற ஐசோடோப்பைப் பயன்படுத்தி அளவிட முடியும். வன்முறைச் செயல்களில் ஈடுபடுவோரிடம் இந்த என்சைமின் அளவு குறைவது கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் நடந்த ஆய்வுகளில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளை நோயாளிகளாக கருதி ஒருங்கிணைந்த சிகிச்சை முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்கா மற்றும் பிரிட்டன் விஞ்ஞானிகளின் கூட்டறிக்கை கூறுகிறது.

'வோட்கா'வை விட 'விஸ்கி' உடல் நலத்துக்கு கேடானது : அமெரிக்க விஞ்ஞானிகள்

அமெரிக்க விஞ்ஞானிகள் இது தொடர்பான ஆய்வை மேற்கொண்டனர். இதற்காக தினசரி மது குடிக்கும் 96 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் சிலருக்கு வோட்கா, விஸ்கி என தனித்தனியாக 2 மதுபானங்களும் வழங்கப்பட்டன. மது குடித்த மறுநாள் இவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.


அப்போது விஸ்கி குடித்தவர்கள் தங்களுக்கு பல விதமாக மோசமான உடல் நலக்கேடு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.


தலைவலி, சோர்வு, தாகஉணர்வு மற்றும் வாந்தி வருவது போன்ற உணர்வுகள் இருப்பதாக கூறினர். அதே நேரத்தில் வோட்கா மதுவை குடித்தவர்கள் அது போன்ற அனுபவங்கள் தங்களுக்கு ஏற்பட வில்லை என்று தெரிவித்தனர்.

விஸ்கியில் “கான் ஜெனரல்” என்ற முலக்கூறுகள் உள்ளன. வோட்காவில் அவை இல்லை. எனவே உடல் நலத்திற்கு கேடாக அமைகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் வோட்காவில் சிறிதளவே அசியோன்னசி பால்டி கைடு, டேன்னின்ஸ் என்ற ரசாயன பொருட்கள் கலக்கப்படுகின்றன என்றனர்.

எந்த மதுவாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாக குடிக்கக்கூடாது. நீண்ட நாட்களுக்கு பிறகு அவை உடல் நலத்துக்கு கேடாக அமையும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

December 27, 2009

ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட செயற்கை இதயம்

ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட, "செயற்கை இதயம்' குறித்த கருத்தரங்கு, சென்னை அரசு பொது மருத்துவமனையில் நேற்று முன் தினம் நடந்தது.

இதில் பங்கேற்ற அரசு பொது மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சை நிபுணர் வரதராஜன் கூறியதாவது: இதய கோளாரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மாற்று இதயம் பொருத்தப்படும் வரை தற்காலிகமாக செயல்பட, செயற்கை இதயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கை இதயம், இதயத்திற்கு அருகில் பொருத்தப்படும். மாற்று இதயம் கிடைத்த உடன், செயற்கை இதயத்தை அகற்றி விடலாம். ஜப்பானிய கண்டுபிடிப்பான செயற்கை இதயம் நான்கு ஆண்டுகள் வரை செயல்படும்.


18 வயது முதல் 70 வயது வரை உள்ளவர்கள் இந்த செயற்கை இதயத்தை பொருத்திக் கொள்ளலாம். இது தற்காலிகமான ஒன்று தான். இந்த அறுவை சிகிச்சைக்கு 40 லட்சம் ரூபாய் வரை செலவாகும். ஜப்பானில் இதுவரை 10 பேர் இந்த அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இவ்வாறு வரதராஜன் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ஜப்பான் இதய அறுவை சிகிச்சை நிபுணர் டோஷிமாசா டொகுனோ, செயற்கை இதயம் குறித்து மாணவர்களிடம் விளக்கினார். சென்னை பொது மருத்துவமனை டீன் மோகனசுந்தரம் மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

புதிய வைரஸ் : எச்சரிக்கை

Koobface என்ற புதிய வைரஸ் தற்போது உருவாகி கம்ப்யூட்டர்களை பழுதாக்கி வருகிறது. சமூக உறவு இணையத்தளங்களான facebook, twitter மற்றும் my space ஆகிய தளங்களை இது அதிகமாக தாக்கி வருவதாக தெரிகிறது.
Sky News தகவலின்படி face book இணையதளமே அதிகமாக பாதிப்புள்ளாகும் வாய்ப்பு இருக்கிறது.


You tube இணையதளத்தில் கிறிஸ்துமஸ் வாழ்த்து வீடியோக்களில் இந்த வைரஸ் மறைந்து இருந்து யாரேனும் அந்த வீடியோக்களை கிளிக் செய்யும்போது கம்ப்யூட்டருக்குள் ஊடுருவி 3 நிமிடத்திற்குள் ஒரு புதிரை விடுவிக்கும்படி கேட்கும். அப்படி முடியாத பட்சத்தில் கம்ப்யூட்டர் வேலை செய்வதை நிறுத்தி விடும்.
கம்ப்யூட்டர் பயனாளர்கள் சந்தேகத்துக்கிடமான எந்த இணைய தள முகவரியையும் கிளிக் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இணையம் : தெரிந்ததும் தெரியாததும்

உலகின் மிகப் பெரிய கணிணி வலையமைப்பாக இணையம் விளங்குகிறது. உலகிலுள்ள 170 ற்கு மேற்பட்ட நாடுகளில் வியாபித்துள்ள ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சர்ந்த கணினி வலையமைப்புகள் இணையத்தில் இணைந்துள்ளன.

ஓரிடத்திலிருந்து உலகின் மற்றுமொரு இடத்திற்கு கணினியூடாக பைல் பரிமாற்றம் மற்றும் தொடர்பாடலை மேற்கொள்ளக் கூடிய ஒரு பாதையாகவே இணையம் செயற்படுகிறது. கண்டத்திற்குக் கண்டம் நாட்டுக்கு நாடு வியாபித்திருக்கும் இந்தக் கணினி வலையமைப்பு அதி வேகம் கொண்ட கேபல் கொண்டிணைக்கப்பட்டுள்ளன. இதனை Internet Backbone எனப்படுகிறது.

பல்வேறு வகையான பல்வேறு அளவுகளைக் கொண்ட பல்வேறு இயங்கு தளங்களைக் கொண்ட ஆயிரக் கணக்கான கணினிகள் இணையத்தில் நிரந்தரமாக இணைந்துள்ளன. இவற்றை சேர்வர் கணினிகள் எனப்படும்.

பல்வேறு வகையான கணினிகள் இணையத்தில் இணைந்துள்ள போதும் அவற்றிற்கிடையே TCP/IP (Transmission Control Protocol /Internet Protocol) எனும் பொதுவான ஒரு விதிமுறை பின்பற்றப்படுவதன் காரணமாக நாம் எந்த ஒரு கணினியிருந்தும் மற்றுமொரு கணினியுடன் இலகுவாகத் தொடர்பாட முடிகிறது.


இராணுவ தேவைக்காக அமெரிக்காவினால் 1969 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு கணினி வலையமைப்பே பின்நாளில் இண்டர்நெட்டாக உருவெடுத்தது. ஆரம்பத்தில் இந்தக் கணினி வலையமைப்பு ARPANET என அழைக்கப்படது.

தற்போது இணையத்தின் உரிமையாளராக எந்த ஒரு நாடோ நிறுவனமோ இல்லை எனினும் இணையத்தின் வளர்ச்சிக்காகவும் இணையத்தில் விதி முறைகளை நிர்ணயிக்கவும் முறைப்படுத்தவுமென சில தன்னார்வநிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

இணையத்தின் மூலம் கிடைக்கும் சில பொதுவான பயன்பாடுகளாக எந்த வொரு விடயம் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ளுதல், மின்னஞ்சல் சேவை, நிகழ் நேரத்தில் ஒருவரோடொருவர் உரையாடுதல், பைல்களையும் மென்பொருள்களையும் பரிமாறிக் கொள்ளல், இசை, திரைப்படம், விளையாட்டு என பொழுது போக்கு அம்சங்களில் ஈடு படல் பொருட்கள் மற்றும் சேவைகளைப பெறுதல் விற்பனை செய்தல் மூலம் இணைய வணிகத்திலீடுபடல் போன்ற பல வற்றைக் குறிப்பிடலாம்.

இணையம் சார்ந்த சில கலைச் சொற்ளையும் அவற்றிற்கான விளக்கத் தையும் பார்ப்போம்.

Asymmetric Digital Subscriber Line (ADSL) : அதி வேக இணைய வசதியை வழங்கும் ஒரு இணைய இணைப்பு முறை. இதனையே Broadband எனவும் அழைக்கப்படுகிறது.
Blog : web Log என்பதன் சுருக்கமே ப்லோக். இதனை ஓன்லைன் ஜேர்னல் (online Journal) எனப்படுகிறது. இது இணைய தளம் போன்ற்தே. இணைய தள வடிவாக்கம் பற்றி அறியாதவர்கள் கூட இதனை இலகுவாக உருவாக்கலாம். இந்த சேவையை blogspot.com, wordpress.com என்பன இலவசமாக வழங்குகின்றன. தமிழில் வலைப்பதிவு எனப்படுகிறது.

Browser இணைய சேவைகளில் ஒன்றான உலகலாவிய வலைத் தளமமான WWW ஐ அணுகுவதற்குப் பயன்படும் மென்பொருளையே பிரவுஸர் (இணைய உலாவி) எனப்படுகிறது. உதாரணம்: இண்டர்நெட் எக்ஸ்ப்லோரர், மொஸில்லா பயபொக்ஸ், கூகில் க்ரோம்

Download : இணையத்தில் அல்லது ஒரு வலையமைப்பில் இணைந்துள்ள ஒரு கணினியிலிருந்து எமது கணினிக்கு பைல் ஒன்றைப் பெற்றுக் கொள்வதை டவுன்லோட் எனப்படும். Domain Name இணையத்தில், இணைந்துள்ள கணினிகளை அல்லது இணணய தளங்களை இலகுவாக நினைவில் வைத்துக் கொள்ளும் வண்ணம் ஐபி முகவரி எனும் இலக்கங்களுக்குப் பதிலாக சொற்களைப் பயன் படுத்தும் முறையை டொமேன் நெம் எனப்படுகிறது.

Dial-up: இணையத்தில் இணைவதற்குப் பலரும் நாடும் ஒரு பொதுவான இணைப்பு முறை. இணைய சேவை வழங்கும் நிறுவன கணினியை ஒரு மோடமைப் பாவித்து தொலைபேசிக் கம்பியூடாக இணைப்பக்கப்ப்டும். அதிக பட்சமாக 128 kbps அளவிலான வேகத்தையே கொண்டிருக்கும்.

E-mail (Electronic mail) : கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு பிரபலமான இணைய சேவையே மின்னஞ்சல் ஆகும். மின்னஞ்சல் அனுப்பவும் பெறவும் ஒரு மின்னஞ்சல் முகவரி அவசியம். ஒரு மின்னஞ்சல் முகவரி jeesa@gmail.com எனும் வடிவில் இருக்கும். இங்கு பயனர் பெயரும் டொமேன் பெயரும் @ எனும் குறியீட்டால் பிரிக்கப்படும்.

Extranet : ஒரு நிறுவனம் சார்ந்த கணினி வலையமைப்பு. இது இணையத்தோடு தொடர்புபட்டிருக்கும். அந்நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் மட்டுமன்றி பொது மக்களும் உரிய பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லோடு இதனை அணுக முடியும்.

FTP : (File Transfer Protocol) இணையம் வழியே பெரிய அளவிலான பைல்களையும் மென்பொருள்களையும் பரிமாறிக் கொள்ளும் சேவையை FTP எனப்படுகிறது.

File attachment மின்னஞ்சலுடன் இணைத்து அனுப்பப்படும் சிறிய ஆவணங்கள் மற்றும் படங்களை எட்டேச்மண்ட் எனப்படுகிறது.

Firewall இணையத்தைப் பயன்படுத்தி எமது கணினிக்குள் அனுமதியின்றி எவரும் ஊடுறுவாமல் தடுக்கும் மென்பொருளை பயவோல் எனப்படுகிறது.


Hyperlink : இணைய தள மொன்றில் ஒரு பக்கத்திலிருந்து மற்றுமொரு பக்கத்திற்கு அல்லது வேறொரு இணைய தளத்திற்கு வழங்கப்படும்
இணைப்பை ஹைபலின்க் எனப்படுகிறது.


HTTP (Hypertext Transfer Protocol) உலகலாவிய வலைத் தளத்தில் HTML ஆவணங்களை அனுப்பவும் பெறவும் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான விதி முறையாகும்.

HTML (Hypertext Markup Language) வலைத்தளங்களை உருவாக்கப் பயன்படும் ஒரு கணினி மொழி.

Home Page ஒரு இணைய தளத்தின் முதல் பக்கத்தை அல்லது இணைய உலாவியைத் (வெப் பிரவுஸர்) திறக்கும் போது வரும் முதல் பக்கத்தை ஹோம் பேஜ் எனப்படுகிறது.

Hacker ஒரு கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைந்துள்ள ஒரு கணினியின் பாதுகாப்பு ஓட்டைகளை நன்கறிந்து அக்கணினியினுள் அனுமதியின்றி நுளையும் ஒரு கை தேர்ந்த நபர் ஹெக்கர் (குறும்பர்). எனப்படுகிறார். பாதுகாப்புத் தன்மையைப் பரீட்சிப்பதற்காகவும் ஹெக்கர்களின் உதவியை நாடுவதுண்டு.

Instant Message (IM): இணையததைப் பயன் படுத்தி நிகழ் நேரத்தில் இருவருக்கிடையில் நிகழ்தப்படும் உரையாடலை உடனடி செய்திச் சேவை எனப்படுகிறது. உதாரணம் : யாஹூ மெஸ்ஸென்ஜர், ஸ்கைப்

Internet Service Provider (ISP): இணைய சேவை வழங்கும் நிறுவனத்தையே ISP எனப்படுகிறது. நமது கணினியை இணையத்துடன் இணைக்கும்போது இந்த நிறுவனத்தின் கணினியூடாகவே நம் இணையத்தில் இணைகிறோம்.

IP (Internet Protocol) address இணையத்தில் அல்லது ஒரு வலையமைப்பில் இணைந்துள்ள ஒவ்வொரு கணினியையும் வேறு படுத்திக் காட்டும், ஒரு இலக்கமே ஐபி முகவரி எனப்படுகிறது. இது நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கும். (உதாரனம்: 169.254.222.1). ஒவ்வொரு பகுதியும் 0 முதல் 255 வரையிலான இலக்கங்களைக் கொண்டிருகும்.

ISDN (Integrated Services Digital Network) டயல் அப், ப்ரோட்பேண்ட் போன்று ஒரு வகை இணைய இணைப்பாகும். இது டயல் அப்பை விட வேகமானது. ப்ரோட்பாண்டை விட வேகம் குறைந்தது. இது ஒரு டிஜிட்டல் சேவை என்பதால் மோடெம் அவசியமில்லை.

Intranet ஒரு நிறுவனம் சார்ந்த கணினி வலையமைப்பு. நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர்களால் மட்டுமே இதனை அணுக முடியும். இது இணயத்தோடு தொடர்பு பட்டுமிருக்கலாம். தொடர்பு படாமலும் இருக்கலாம். எனினும் பொது மக்க்ள் யாரும் இந்த இந்த வலையமைப்பை அணுக முடியாது,

Modem: என்லொக் வடிவில் டேட்டாவை ஒரு கணினியிலிருந்து மற்றுமொரு கணினிக்கு தொலைபேசிக் கம்பியூடாக அனுப்புவதற்கு மோடெம் எனும் சாதனம் பயன் படுத்தப்படுகிறது, இது டிஜிட்டல் வடிவிலுள்ள் டேட்டாவை (analogue) எனலொக்காகவும் (modulation) எனலொக் வடிவிலுள்ளதை டிஜிட்டல் (demodulation) வ்டிவிலும் மாற்றுகிறது.

Offline: கணினி இணையத்தில் இணைந்திராத சந்தர்ப்பத்தை ஓப்லைன் எனப்படுகிறது. . Online: இணையத்தில் எமது கணினி இணந்திருக்கும் போது கணினி ஓன்லைனில் இருப்பதாகச் சொல்லப்படும்.

Password: ஒரு பைலை, கணினியை அல்லது வலையமைப்பை அதிகாரமளிக்கப்பட்வர்கள் மாத்திரம் அனுகுவதற்குப் பயன்படும் எழுத்துக்கள் மற்றும் எண்களைக் கொண்ட ஒரு ரகசிய சொல்.

Portal: மின்னஞ்சல், தேடற்பொறி ,போன்ற பல வகைப்பட்ட சேவைகளை வழங்கும் ஒரு இணைய தளத்தை வெப் போட்டல் எனப்படுகிறது. உதாரணம் : யாஹூ

Server ஒரு வலையமைப்பில் தனது வளங்களையும் தகவல்களையும் ஏனைய கணினிகளுடன் பகிர்ந்து கொள்ளும் கணினிகளை சேர்வர் அல்லது Host ஹோஸ்ட் எனப்படுகிறது.

Search Engine வேர்ல்ட் வைட் வெப் எனும் உலகலாவிய வலையமைப்பில் எமக்குத் தேவையான தகவல்கள் எந்த வலைத்தளங்களில் உள்ளன என்பதை தேடிப் பட்டியலிடும் மென்பொருளையே தேடற் பொறி எனப்படுகிறது. உதாரணம் : கூகில், யாஹூ, பிங்

Sub Domain: டொமேன் பெயரில் ஒரு பகுதியே சப் டொமேன் எனப்படுகிறது. உதாரணமாக madeena.sch.lk, என்பதில் sch என்பது பிரதான டொமேன் எனவும் madeena என்பது சப்டொமேன் எனவும் அழைக்கப்படுகிறது.

Spam எமக்குத் அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து நாம் கேட்காமலேயெ எமது மின்னஞ்சல் முகவ்ரிக்கு வந்து சேரும் வேண்டாத (குப்பை) மின்னஞ்சல்களையே ஸ்பாம் எனப்படுகிறது.

Top-level domains: டொமேன் நேம் சிஸ்டம் எனப்படும் இலக்கங்களுக்குப் பதிலாக சொற்களைப் பயன் படுத்தும் முறையில் ஒரு பிரதான பிரிவே டொப் லெவல் டொமேன் எனப்படுகிறது. உதாரணம் .com, .gov, .edu.

Uniform Resource Locator (URL): உலகலாவிய வலைத் தளத்தில் உள்ள ஒரு ஆவணத்தின் முகவரியைக் குறிக்கிறது. இதனையே வெப் எட்ரஸ் எனவும் அழைக்கப்படுகிறது.

Upload இணையத்தில் அல்லது வலையமைப்பொன்றில் ஒரு கணினியிலி ருந்து மற்றுமொரு கணினிக்கு பைல் ஒன்றை அனுப்புவதை அப்லோட் எனப்படுகிறது.

World Wide Web ஹைப டெக்ஸ்ட் ஆவணங்களையும் தரவுத் தளங்களையும் கொண்ட இணைய சேர்வர்களையே வேர்ல்ட் வைட் வெப் (உலகலாவிய வலத்தளம்) எனப்படுகிறது. இது 1989 ஆம் ஆண்டு Tim Berners-Lee, எனும் பிரித்தானியரால் வடிவமைக்கப்பட்டது.

Website : HTML எனும் வலை மொழி கொண்டு உருவாக்கிய, ஹைபடெக்ஸ்ட் ஆவணத்தையே இனையதளம் (வெப்சைட்) எனப்படுகிறது. இந்த ஆவணம் ஒரு நிறுவனம் சார்ந்த அல்லது தனி நபர் சார்ந்த அல்லது ஏதோவொரு விடயம் சார்ந்த தகவல்களைக் கொண்டிருக்கும். இது ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பக்கங்களையோ (web pages) கொண்டிருக்கும் இவை ஹைபலிங் கொண்டு இணைக்கப்பட்டிருக்கும். இதனை இணையத்தில் இணைந்திருக்கும் ஒரு வெப் சேர்வரில் சேமிக்கப்படும். அந்த இணைய தளத்திற்கெனப் பதிவு செய்யப்படும் பெயரைக் கொண்டு (வெப் எட்ரஸ்) கொண்டு அந்த தளத்தை உலகின் எப்பாகத்திலிருந்தும் அணுகலாம்.


December 25, 2009

கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்?

சில வேளைகளில் திடீரென கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும்.
சில வேளைகளில் திரையில Fatal error: the system has become unstable or is busy," it says. "Enter to return to Windows or press ControlAltDelete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications." என்ற செய்தி கிடைக்கும்.
இதைத்தான் Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்று இங்கு காணலாம்.

ஹார்ட்வேர் பிரச்னை


கம்ப்யூட்டரில் பல பாகங்கள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. சில வேளைகளில் இவற்றுக்குள் பிரச்னை வந்தால் இயங்குவது நின்று போகும். ஒவ்வொரு சாதனமும் ஒரு வழியை மேற்கொண்டு அதன் மூலம் தன் இயக்கத்தை மேற்கொள்ளும். பொதுவாக ஒரு கம்ப்யூட்டரில் இத்தகைய வழிகள் குறைந்த பட்சம் 16 இருக்கும். இதில் ஒரே வழியை இரு சாதனங்கள் (பிரிண்டர், கீ போர்டு / மவுஸ்) எடுத்துக் கொள்ளும்போது இயக்கம் நின்று போகும். இவ்வாறு ஏற்படுகையில் Start => Settings => Control pannel => System => Device Manager எனச் சென்று பார்த்தால், பிரச்னை ஏற்பட்ட சாதனத்தின் பெயர் முன்னால் ஒரு மஞ்சள் நிற ஆச்சரியக் குறி தோன்றும். டிவைஸ் மேனேஜரில், கம்ப்யூட்டர் என்பதில் கிளிக் செய்து பார்த்தால், இந்த சேனல் வழிகளுக்கான ஐ.ஆர்.க்யூ எண் காட்டப்படும். ஒரே எண் இருமுறை இருப்பின் பிரச்னை அங்குதான் உள்ளது என்று பொருள். இதற்குத் தீர்வு என்ன? பிரச்னைக்குரிய சாதனத்தை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்தால் போதும்.
ரம் மெமரி சிப்ஸ்
ராம் மெமரியை உயர்த்துவதற்காகப் புதிய ராம் சிப் ஒன்றை இணைத்திருப்போம். ஆனால் ஒன்றுக்கொன்று வேறுபாடான வேகம் உள்ளவையாக அவை இருக்கலாம். அவற்றிற்கிடையே இணைந்து செல்லும் நிலை ஏற்படாத போது Fatal Exception Error ஏற்படலாம். இதனை கம்ப்யூட்டர் பாகங்களின் இயக்கம் தெரிந்தவர்கள் மூலம், பயாஸ் செட்டிங்ஸ் திறந்து, ராம் wait state நிலையைச் சற்று உயர்த்தலாம். அல்லது ஒரே மாதிரியான வேகத்தில் இயங்கும் சிப்களை அமைக்கலாம்.
ஹார்ட் டிஸ்க் டிரைவ்
பயன்படுத்தத் தொடங்கிய சில வாரங்களில் ஹார்ட் டிஸ்க்கின் ஒழுங்கு நிலை கலையத் தொடங்கும். தேவையற்ற தற்காலிக பைல்கள் தேங்கும். பைல்கள் சிதறியபடி சேமிக்கப்படும். இதனால் இயக்க வேகத்திற்கு ஹார்ட் டிஸ்க் இணையாக இயங்க முடியாமல் போகும். அப்போது கிராஷ் ஆக வாய்ப்புண்டு. எனவே அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கினைச் சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு டிபிராக் செய்திட வேண்டும். சி டிரைவில் தங்கும் தேவையற்ற பைல்களை அதற்கான புரோகிராம்கள் கொண்டு நீக்கலாம்.
வீடியோ கார்ட்
சில வேளைகளில் கிராஷ் ஆகும் போது Fatal OE exceptions and VXD errors என்ற செய்தி கிடைக்கும். இது வீடியோ கார்டினால் ஏற்படுவது. இதனைத் தவிர்க்க வீடியோ டிஸ்பிளேயின் ரெசல்யூசனைக் குறைக்கவும். StartSettingsControl PanelDisplaySettings எனச் சென்று ஸ்கிரீன் ஏரியா பாரினை இடது மூலையில் நிறுத்தவும். அதே போல கலர் செட்டிங்ஸ் சென்று 16 பிட் என்ற அளவில் அமைக்கவும்.
வைரஸ்
பெரும்பாலான கம்ப்யூட்டர் கிராஷ்களுக்கு வைரஸ்களே காரணம். சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி, அவ்வப்போது அதனை அப்டேட் செய்வது மட்டுமே இதனைத் தடுக்கும். பல வைரஸ்கள் பூட் செக்டாரைக் கெடுத்து வைக்கும். இதனால் கம்ப்யூட்டரை இயக்கவே முடியாது. எனவே இது போன்ற நிலையில் கை கொடுக்க விண்டோஸ் ஸ்டார்ட் அப் டிஸ்க் ஒன்றை உருவாக்கி கைவசம் வைத்துக் கொள்ளுங்கள்.
பிரிண்டர்
பல வேளைகளில் கம்ப்யூட்டர்கள் பிரிண்ட் எடுக்கையில் கிராஷ் ஆவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இதற்குக் காரணம் பிரிண்டர்களில் மிகவும் குறைந்த அளவில் பபர் மெமரி இருப்பதே ஆகும். மேலும் கம்ப்யூட்டரின் சிபியு சக்தியை பிரிண்டர்கள் சற்று அதிகமாகவே பயன்படுத்தும். எனவே பல வேலைகளுடன் பிரிண்டிங் வேலையை மேற்கொள்கையில், அல்லது அதிகமான அளவில் பிரிண்டருக்கு டேட்டாவினை அனுப்புகையில் கிராஷ் ஏற்படும். நாம் சாதாரணமாகக் காணாத கேரக்டர்களை பிரிண்டர் அச்சிட்டால் இந்த பிரச்னை தலை தூக்குகிறது என்று பொருள். உடனே பிரிண்டருக்குச் செல்லும் மின்சாரத்தை 10 விநாடிகளுக்கு நிறுத்திப் பின் மீண்டும் இயக்கவும்.
சாப்ட்வேர்
முழுமையாக இல்லாமல் அல்லது மோசமாக இன்ஸ்டால் செய்யப்பட்ட சாப்ட்வேர் தொகுப்புகளால், கம்ப்யூட்டர் கிராஷ் ஆகலாம். இவற்றைச் சரியாக அன் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இல்லையேல் இவை தொடர்பான வரிகள், ரெஜிஸ்ட்ரியில் இருந்து கொண்டு, இந்த சாப்ட்வேரினை இயக்குகையில் கம்ப்யூட்டரை கிராஷ் ஆகும் நிலைக்குக் கொண்டுவரலாம். ரெஜிஸ்ட்ரியைச் சுத்தம் செய்திடவென வடிவமைக்கப்பட்ட புரோகிராம்களைக் கொண்டு அதனைச் சரி செய்திட வேண்டும். இல்லையேல் மீண்டும் விண்டோஸ் இயக்கத்தினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும்.
அதிக வெப்பம்
இப்போது வருகின்ற சிபியுக்கள் மீது சிறிய மின் விசிறிகள் பொருத்தப்பட்டு சிபியு இயக்கத்தின் போது உருவாகும் வெப்பம் வெளிக்கடத்தப் படுகிறது. சிபியு அதிக சூடானாலும், அதிக குளிர்ச்சியினால் பாதிக்கப்பட்டாலும், கெர்னல் எர்ரர் (Kernel Error) என்று ஒரு பிரச்னை ஏற்படும். பொதுவாக எந்த வேகத்தில் ஒரு சிபியு இயங்க வேண்டுமோ அதனைக் காட்டிலும் அதிக வேகத்தில் இயங்கும் வகையில், சிபியு செட் செய்யப்பட்டிருந்தாலும் அதிக வெப்ப பிரச்னை ஏற்படும். எனவே சிபியு வின் வேகத்தினை பயாஸ் செட்டிங்ஸ் சென்று குறைக்க வேண்டும்.
மின் ஓட்டம்
கம்ப்யூட்டருக்குச் செல்லும் மின் ஓட்டத்தினைச் சீராகத் தரும் சாதனங்களைக் கொண்டு தராவிட்டால், கிராஷ் ஆகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவே சரியான யு.பி.எஸ். மற்றும் சர்ஜ் புரடக்டர் கொண்டு இதனைத் தவிர்க்கவும்.


சன் ஜாவாவும் ஆரக்கிளும் புதிய கூட்டுடன்படிக்கை

தனக்கு நிகர் எந்த மென்பொருளும் இல்லாமல் நம் கையில் தவழும் சன் ஜாவாவும் ஆரக்கிளும் இணைந்தால் எப்படி இருக்கும் நினைத்தாலே மகிழ்ச்சி தான்.
இந்த இரண்டு மென்பொருளின் நிறுவனங்களும் இணையப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது நமக்கு தெரியும். சில நேரங்களில் நாம் எழுதும் பல ஜாவா புரோகிராம்களுக்கு ஆரக்கிள் துனை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் அது மட்டுமின்றி பல வேலைகளை எளிதாகவும் விரைவாகவும் முடிக்கலாம்.அதோடு பல புது கண்டுபிடிப்புகளையும் நாம் அடுத்து வரும் ஆண்டுகளில் எதிர்பார்க்கலாம்.


இரண்டு இமயம் சேரும் புகைப்படம் ஆரக்கிள் தன் மை-எஸ்-குயல் ( Mysql) -ஐ 72 மில்லியன் டாலர் செலவில்ஜாவாவுடன் இணைந்து மேம்படுத்த முடிவெடுத்துள்ளது.

இதனால்பயன் அடைவது நாம் தான் இதைக் கண்டு பயப்படுவது இன்று முன்னனியில் இருக்கும் பல நிறுவனங்கள். அடுத்த ஆண்டு நாம் தேடுபொறியில் சென்று என்ன வேண்டும் என்று வாயால் சொன்னால் போதும் அதுவே விடைகளை காட்டும் என்று சொன்னாலும் ஆச்சரியபடுவதற்கு ஒன்றும்இல்லை. ஏனென்றால் ஜாவா முகப்பு திரையில் மன்னன் பல தேடு பொறிகள் இவரின் துனையுடன் தான் இயங்குகிறது அடுத்ததாக ஆரக்கிள் இவரைப்பற்றி சொல்ல ஒரு வார்த்தை போதும் அதுதான் ”டேட்டா பேஸ் “ இப்போது உங்களுக்கே தெரியும்.வரும் ஆண்டு நமக்கு நல்ல பல சேவைகள் கிடைக்கும் ஆண்டாகத்தான் இருக்க போகின்றது.

December 24, 2009

மேப் மற்றும் ப்ரொஷக்டர் இணைந்த கருவி : வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு முக்கியமானது

நண்பர் அல்லது உறவினர் வெளிநாட்டில் இருந்தால் அவர்களை பார்க்க செல்லும் போது யாராவது விமான நிலையத்திற்க்கு வந்து நம்மை அழைத்து செல்வது வழக்கம். ஆனால் இனி அது தேவையில்லை. நீங்கள் எங்கு சென்றாலும் அவர்களின் வீட்டை எளிதாக கண்டுபிடிக்கலாம்.
எப்படி என்று பார்ப்போம் மேப் மற்றும் ப்ரொஷக்டர் இணைந்த கருவி ஒன்று புதிதாக வரவிருக்கிறது.


பார்ப்பதற்கு நாம் பயன்படுத்தும் பென் டிரைவ் போன்று இருக்கும். இதில் நாம் எந்த நாட்டிற்கு எந்த இடத்திற்கு போக வேண்டும் என்பதை இதில் இருக்கும் மேப்பில் சேமித்து வைத்து நாம் எந்த இடத்திற்கும் செல்லலாம் அதுவே வழிகாட்டும் ப்ரொஷக்டர் மேப் -ஐ பெரிதுபடுத்திக்காட்டும். போகும் வழியை அடிக்கடி சரிபார்த்துக்கொள்ளலாம் எற்கனவே நாம் குறித்து வைத்த இடத்திற்கு செல்ல வேண்டிய பாதையை அம்புக் குறியிட்டு காட்டும். இதன் பின்னனியை கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் GPS என்று சொல்லக்கூடிய குளோபல் பொஸிசனிங் சிஸ்டம் (Global Positioning System) மூலம் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை துல்லியமாக கண்டுபிடித்து செயல்படுகிறது.
ப்ரொஷக்டர் மூலம் செல்ல வேண்டிய இடத்தின் மேப்-ஐ தரையில், சுவற்றில் அல்லது நம் கையில் எங்கு வேண்டுமானாலும் ப்ரொஷக்ட் செய்து பார்க்கலாம். அது மட்டுமின்றி மேப் -ஐ பெரிதாகவோ சிறியதாகவோ எப்படி வேண்டுமோ அப்படி பார்க்கலாம்.


பறக்கும் பட்டத்திலிருந்து பிறப்பிக்கப்படும் மின்சாரம் : புதிய கண்டுபிடிப்பு


காற்றின் சக்தியைச் சரியாகப் பயன்படுத்தினால் உலகின் மின்தேவையைவிட 100 மடங்கு அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


காற்றைக்கொண்டு மின்சாரம் பிறப்பிப்பதற்கு காற்றாலைகளை அமைத்து காற்றாடிகள் மூலமே (Wind turbines) இதுவரை காலமும் மின்சாரம் பெறப்பட்டு வருகிறது. புவி மேற்பரப்பிலிருந்தான உயரம் அதிகரிக்கும்போதே காற்றின் வேகம் அதிகரித்து பெறக்கூடிய மின்சாரமும் அதிகரிக்கும். ஆனால் அவ்வளவு உயரத்துக்கு காற்றாடிகளை அமைப்பது என்பது முடியாத காரியம். எனவேதான் புவி மேற்பரப்பிலிருந்து அதிக உயரத்தில் இருக்கும் காற்றின் சக்தியை பயன்படுத்துவதற்காக பட்டத்தைப் பயன்படுதும் புதிய முறை ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள். இதற்கு Kitegen எனப் பெயரிட்டுள்ளார்கள்.
பட்டத்தை மேலே பறக்கச்செய்வதற்கு இரு பெரிய சுழல்விசிறிகளோடு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு தளம் இதற்குப் பயன்படுகிறது. இவ்விசிறிகள் உயரத்தில் தொடற்சியான காற்றுக்கு பட்டத்தைக் கொண்டுசெல்ல உதவுகின்றன. அதில் கம்பிகளின் மூலம் பட்டங்கள் இணைக்கப்படுகின்றன. இக்கம்பிகள் பட்டத்தின் உயரத்தையும், திசையையும் கட்டுப்படுத்துகின்றன. சுமார் 2000 மீட்டர் உயரம்வரை இவை பறக்கவிடப்படுகிறது.
இவ்வாறு பறக்கவிடப்பட்ட பட்டங்கள், அவை இணைக்கப்பட்டிருக்கும் தளத்திலுள்ள மின்பிறப்பாக்கியைச் சுழலச்செய்கின்றன. இதன்மூலம் பெருமளவு மின்சாரம் பிறப்பிக்கப்படுகிறது.
இங்கே முக்கியமான விடயம், இவ்வாறு பறக்கவிடப்படும் பட்டங்களின் பறப்பை தரையிலிருந்தே கட்டுப்படுத்தக்கூடியதாக இருப்பதாகும். இவ்வாறு கட்டுப்படுத்தி, பெறப்படும் மின்சாரத்தின் அளவையும் மாற்றிக்கொள்கின்றனர். அதுமட்டுமல்லாது பறக்கவிடப்படும் பட்டங்கள் பறவைகளைப் பாதித்துவிடாது இருப்பதற்காக ரேடார் மூலம் பறவைகள் கண்காணிக்கப்பட்டு, அதற்கேற்ப பட்டங்கள் பறக்கவிடப்படுவதுதான்.
இது காற்றாலைகளைப்போல அதிக இடத்தை அடைக்காது என்பதுடன் அதிக மின்சாரத்தினையும் குறைந்த செலவில் பெற்றுக்கொள்ளலாம். அதிகரித்துவரும் மின்தேவைக்காக எரிபொருட்களைப் பயன்படுத்தி மின்சாரம் பிறப்பித்து, சூழலையும் மாசாக்குவதைவிட இவ்வாறான கண்டுபிடிப்புகள் வரவேற்கத்தக்கவையே!

உலகின் மிகப் பெரிய திரை கொண்ட முதல் தரமான மொபைல்


எச்.டி.சி. நிறுவனத்தின் அதி நவீன தொழில் நுட்பத்துடன், அனைத்து வசதிகளையும் தரும் வகையில் மிகச் சிறப்பான மொபைலாக எச்.டி.2 மொபைல் வெளிவந்துள்ளது.
விண்டோஸ் இயக்கத்தில் புதியமுறை டச் போனாக வடிவமைக்கப்பட்டு, நாம் இதுவரை மொபைல் ஒன்றில் பெறத் துடித்த அனைத்து அனுபவங்களையும் தருவதாக இந்த மொபைல் உள்ளது. 2009 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த போனாக எச்.டி.சியின் எச்.டி.2 (HTC HD 2)தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
முதலில் நம்மை ஆச்சரியப்படுத்துவது இதுவரை நாம் காணாத 4.3 அங்குல அகல டச் சென்சிடிவ் திரை. கெபாசிடிவ் டச் என அழைக்கப்படும் தொழில் நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ப்ராசசிங் வேகம் 1 கிகா ஹெர்ட்ஸ் என்பதால், மிக மென்மையாகத் திரையைத் தொட்டாலே, அதற்கான செயல்பாடு உடனடியாக மேற்கொள்ளப்படுகிறது. எச்.டி.சி. நிறுவனத்தின் தாரக மந்திரமான “இது என்னுடையது; எனக்கு மிக நெருக்கமானது; எதிர்பாரததைத் தேடித்தருவது” என்பதனை முழுமையாக மேற்கொண்டிருக்கும் மொபைல் இது. இதனைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பும் வகையில் மெயில், காலண்டர், மெசேஜிங், பிரவுசர் என அனைத்தையும் அமைத்துக் கொள்ளலாம். முக்கிய இணைய தளங்கள், நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருக்கான ஷார்ட் கட்களை அமைத்து, அவற்றின் மீது செல்லமாக மெல்லத் தட்டி இணைப்பினைப் பெறலாம். நீங்கள் எந்த நாட்டுக்குச் சென்றாலும், அந்த நாட்டின் நேரத்திற்கேற்றபடி இதன் கடிகார நேரம் மாறும். வெளியே நிலவும் சீதோஷ்ணநிலையை திரையைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

இமெயில், எஸ்.எம்.எஸ். போன் லாக், பேஸ்புக் அப்டேட்டிங் ஆகியவற்றை அந்த நபர்களின் போட்டோ தெரிவதைக் கொண்டு அறியலாம். 
அழைப்பு ஒன்று கிடைக்கையில் அதனை கான்பரன்ஸாக மாற்ற வேண்டும் என விரும்பினால், மற்றவர்களின் போட்டோக்கள் மீது சிறிய அளவில் தட்டினால் போதும். அனைவரும் கூடிவிடுவார்கள். இதன் தொடு உணர்ச்சியைச் சொல்லால் விவரிக்க முடியாதது. மெலிதாகத் தொட்டாலே, இணைய தளங்கள் விரிகின்றன; சுருங்குகின்றன. படங்கள் மற்றும் இமெயில்களும் அதே போல் இயங்குகின்றன. இதில் கிடைக்கும் பெரிய ஆன் ஸ்கிரீன் கீ போர்டு மூலம், வெகு வேகமாகவும் எளிதாகவும் மெசேஜ் டைப் செய்திட முடியும். இந்த போன் இருந்தால் வை–பி இணைப்பு கொண்ட லேப் டாப் எல்லாம் தேவையில்லை. இந்த போன் 3ஜி செல்லுலர் நெட்வொர்க்குடன் இணைந்து வேகமாகச் செயல்படுகிறது.

இதில் உள்ள 5 மெகா பிக்ஸெல் கேமரா அழகான படங்களை எடுத்துத் தருகிறது. 157 கிராம் எடையில் 120.5×67x11மிமீ பரிமாணங்களுடன் கைக்கு அடக்கமாக அமைக்கப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ்., ஸ்பீக்கர் போன், பலவகை பார்மட்டுகளில் உள்ள ரிங் டோன்களைக் கையாளும் வசதி, 448 எம்பி ராம், மைக்ரோ எஸ்.டி. கார்ட் இணைப்பு வசதி, நெட்வொர்க் இணைப்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், 3ஜி, டபிள்யூ லான், புளுடூத் என அனைத்து தொழில் நுட்பங்கள், வீடியோ ரெகார்டிங், ஆர்.டி.எஸ். இணைந்த ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, வாய்ஸ் மெமோ, பேஸ்புக் மற்றும் ட்விட்டர் அறிந்து செயல்படுதல், தொடர்ந்து 6 மணி 20 நிமிடங்கள் பேசும் வசதி, 12 மணி நேர இசை கேட்கும் வசதியைத் தரும் லித்தியம் அயன் 1230 ட்அட பேட்டரி என அனைத்து நவீன வசதிகளையும் கொண்டு இந்த போன் இயங்குகிறது.

டாட்டா டொகொமோ நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு இந்த மொபைல் பயன்படுத்தும் அனுபவத்தினைத் தருவதற்காகச் சிறப்பு ஏற்பாடுகளைத் தங்கள் விற்பனை மையங்களில் மேற்கொண்டுள்ளது. அத்துடன் அறிமுகச் சலுகையாக மாதம் 500 எம்பி டவுண்லோட் செய்திடும் வசதியுடன் ஆறு மாத இன்டர்நெட் இணைப்பினை இலவசமாகத் தருகிறது.

December 22, 2009

சூரிய குடும்பத்தில் மேலும் 3 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு

சூரிய குடும்பத்தில் பூமி, செவ்வாய், புதன் உள்ளிட்ட கிரகங்கள் உள்ளன. இந்த நிலையில் தற்போது மேலும் 3 புதிய கிரகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இவற்றை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
பூமியை விட பெரியது.


இங்கிலாந்தில் நியூசவுத் வேல்ஸ்சில் உள்ள ஆங்கிலோ - ஆஸ்திரேலியன் டெலஸ்கோப் மூலமும், ஆஸ்திரேலியாவில் ஹவாலியில் உள்ள `கெக்' டெலஸ்கோப் மூலமும் அடையாளம் கண்டனர். 


இந்த புதிய கோள்களும் பரப்பளவில் பூமியை விட 5 முதல் 25 மடங்கு பெரியது. இது சூரியனில் இருந்து 27.8 ஒளி வருடங்களுக்கு அப்பால் உள்ளது. இவற்றை வெறுங்கண்ணால் பார்க்க முடியும்.

பிரசவத்தில் சிசேரியன் எதற்காக?

எத்தனையோ தாய்மார்கள் டாக்டர் நார்மல் டெலிவரி ஆகும் என்று சொன்னார். ஆனால் கடைசியில் ஆபரேஷன் பண்ணி விட்டார் என்று குறைபட்டுக் கொள்வார்கள்.

ஒரு தாயை, அவருக்கு எல்லா சோதனைகளும் செய்து, அவர் நார்மல் டெலிவரிக்கு உகந்தவர் தான் என்று தீர்மானித்து, அவரை நார்மல் டெலிவரிக்கு உட்படுத்துகிறோம். ஆனால், பிரசவ வலி வரும்போதுதான், வலியின் தன்மையிலோ, குழந்தையின் தலை திரும்புவதிலோ, கருப்பை வாய் திறப்பதிலோ, குழந்தையின் நாடித்துடிப்பிலோ மாற்றங்கள் ஏற்பட்டு, குழந்தையின் பாதை வழியே பயணப்படுவது தடைபடுவதை உணருகிறோம். இவை அனைத்தும், அந்தக் கணம், பிரசவ வலி கண்ட பின்பு தான் கவனிக்க முடியும். கணிக்க முடியும். அன்றி முன் கூட்டியே தீர்மானிக்க இயலாது.


எனவே, பல சமயங்களில் பிரசவ வலி கண்ட பின்பு, அந்த தீர்மானத்தை மாற்றி, சிசேரியன் செய்ய நேரிடுகிறது.

பெரும்பாலோர் முதல் தடவை சிசேரியன் செய்வதால் இந்த முறையும் டாக்டர் சிசேரியன் செய்து விட்டார் என்று மேம்போக்காகப் புலம்புகிறார்கள்.

முதல் முறை செய்யும்போது, அந்தக் கருப்பையில் தையல் போடுவதால் அது காயப்பட்டு விடுகிறது. அதை வடு என்கிறோம். அந்த வடு எந்த அளவுக்கு உறுதியானது என்று பெரிதாக யாரலும் கணிக்க முடியாது. எனவே முதல் முறை சிசேரியன் செய்தவர்கள், அடுத்த பிரசவத்தில் அவர்களது நார்மல் டெலிவரிக்கான சாத்தியக் கூறுகள் 50% என்று தான் சொல்ல வேண்டும். பிரசவம் நெருங்கும்போது, குழந்தையின் தலை இடுப்பு எலும்புக்கு மேலாக இருப்பது பிரசவ வாய், ஏதுவாக இல்லாமல் இருப்பது போன்ற கண்டுபிடிப்புகள் இருந்தால், அந்தத் தாய்க்கு சிசேரியன் முன் கூட்டியே செய்து விட வேண்டியாதாகிறது. ஏனெனில், அந்தத் தாயை பிரசவ வலிக்கு உட்படுத்தினால், மேற்சொன்ன கண்டுபிடிப்புகளால், குழந்தை பிறக்க நேரமாகி அந்த நேரத்தில் கருப்பையிலுள்ள அந்த வடு, வலுவுற்று கருப்பையே வெடித்து, தாயின் உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே நார்மல் டெலிவரி என்ற விஷப்பரீட்சைக்கு இடம் கொடுக்காமல் முன் கூட்டியே சிசேரியன் செய்ய வேண்டியதாகி விடுகிறது.

சரி, சிசேரியன் செய்வது என்றால் வலி கண்ட பிறகு செய்யக் கூடாதா? எதற்காக 10, 15 நாள் முன்பாக செய்ய வேண்டும் என்ற முணுமுணுப்பு எழத்தான் செய்யும். பிரசவ வலி என்பது எந்த நேரத்திலும் முன் அறிவிப்பின்றி வருவது அந்த நேரம்தான் தாய் சாப்பிட்டிருப்பாள். எனவே அவளுக்கு மயக்க மருந்து கொடுப்பதற்கு யோசிக்க வேண்டி உள்ளது. அல்லது அவள் இருக்கும் இடத்திலிருந்து வலி கண்ட பிறகு பயணப்பட்டு வர நீண்ட நேரமாகலாம். அந்நேரத்தில் பிரசவ வலியினால், தாய்க்கோ, குழந்தைக்கோ ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு, இதை எல்லாம் மனதில் கொண்டுதான் குழந்தை முழு வளர்ச்சி அடைந்ததாக கருதப்படும் ஒரு வாரங்களுக்குப் பிறகு, அதாவது 10,15 நாட்கள் முன்பாகவே ஆபரேசன் செய்ய நேரிடுகிறது.

சில சமயம் டாக்டர்கள், தாய்மார்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, நல்ல நாள் நேரம் பார்த்து அந்த அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதாகி விடுகிறது.

December 21, 2009

விமானந்தாங்கிக் கப்பல் மீதான ஒரு பார்வை

நாடுகளுக்கிடையிலான யுத்தங்களின் போது விமானப்படையின் பணி பிரதானமானதாகக் காணப்படுகின்றது. எதிரி நாடுகளின் உட்கட்டுமானங்களைச் சிதைப்பதில் விமானப்படையின் பங்கே மிக முக்கியமானதாகக் காணப்படுகின்றது.

தொலைவிலுள்ள நாடுகளுடனான யுத்தங்களின் போது விமானங்களுக்கான எரிபொருள் மற்றும் வெடிபொருள் நிரப்புதலுக்கான தளங்களைத் தெரிவுசெய்வதிலுள்ள சிரமங்களைத் தவிர்ப்பதன் பொருட்டே விமானந்தாங்கிக் கப்பல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. நவீன யுத்த விமானங்களுக்கு வானிற் பறப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போதே எரிபொருள் நிரப்பும் வசதி காணப்பட்ட போதிலும் வெடிபொருள் மீள் நிரப்புகைக்காகத் தளங்கள் தேவையாகவேயுள்ளன.

விமானந்தாங்கிக் கப்பல்களின் வரலாறு வளிக்கூடு தாங்கிகளின் (Balloon Carrier) உருவாக்கத்திலிருந்தே ஆரம்பமாகின்றது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கடற்கண்காணிப்புப் பயன்பாட்டிற்கான வளிக்கூடுகளைத் (Balloon) தாங்கிச் செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட கடற்கலங்களே விமானந்தாங்கிக் கப்பல்களின் எண்ணக்கருவிற்கு அடித்தளமிட்டது. 1910 ஆம் ஆண்டளவில் அமெரிக்கக் கடற்படையின் குருஸ் வகை கப்பலில் இருந்தே உலகின் முதலாவது விமானந் தாங்கிக் கப்பலில் இருந்தான வான்பறப்பு மேற்கொள்ளப்பட்டது. இரண்டாம் உலக யுத்தக் காலப்பகுதியில் அமெரிக்க, பிரித்தானிய மற்றும் ஜப்பானியக் கடற்படைகளால் Escort வகை விமானந்தாங்கிக் கப்பல்கள் பெருமளவிற் பயன்படுத்தப்பட்டன. இவ்வகை விமானந்தாங்கிக் கப்பல்களின் உற்பத்திச்செலவு குறைவாகக் காணப்பட்ட படியால் அவை அதிகளவிற் தயாரிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டன. இருப்பினும் இரண்டாம் உலகப் போர்க் காலப்பகுதியில் கண்டறிபப்பட்ட இவ்வகை விமானந்தாங்கிக் கப்பல்களின் வினைத்திறன் குறையாடு விமானந்தாங்கிக் கப்பல்களின் தொழினுட்ப மேம்பாட்டுக்கான தேவையை உணர்த்தின. இரண்டாம் உலகப்போரின் பின்னர் விமானந்தாங்கிக் கப்பல்கள் தொழினுட்ப மற்கும் வினைத்திறனில் பாரிய வளர்ச்சியைக் கண்டன.

பொதுவாக விமானந் தாங்கிக் கப்பல்கள் ஏனைய போர்க்கப்பல்களுடன் ஒப்பிடும்போது குறைந்தளவு போராயுதங்களையே கொண்டிருப்பதுடன் தாக்குதல் வலுக் குறைந்ததாகவும் காணப்படுகின்றன. இதன் காரணமாக விமானந்தாங்கிக் கப்பல்கள் அவற்றுடன் விரைவு தாக்குதற்கலங்கள், நாசகாரிக்கப்பல்கள் போன்றவற்றைக்கொண்ட அணியாகவே செயற்படுகின்றன.

நவீன விமானந்தாங்கிக் கப்பல்கள் விமானங்கள் மேலெழுதல் (Take-off) மற்றும் தரையிறங்கல் (Landing) போன்ற செயற்பாடுகளைச் செய்யக்கூடியவாறு தட்டையான மேற்பரப்பை உடையவையாகக் காணப்படுகின்றன. விமானங்கள் கப்பலிலிருந்து கப்பலின் முன்புறக்தால் மேலெழுந்து தரையிறங்கும்போது கப்பலின் பின்புறத்தால் தரையிறங்குகின்றன. சில விமானந்தாங்கிக் கப்பல்கள், விமானங்கள் அவற்றிலிருந்து மேலெழும்போது, குறிப்பிட்டதோர் வேகத்தில் முன்நோக்கி நகர்ந்து விமானத்தின் சார்புவேகத்தை அதிகரிக்கின்றன. இதன்காரணமாக விமானம் கப்பலின் மேற்பரப்பில் குறைந்தளவு வேகத்தில் ஓடி மேலெழ முடிகின்றது. ஆயினும் நவீன விமானந்தாங்கிக் கப்பல்களில் விமானம் மேலெழும்போதான வேகத்தை அதிகரிப்பதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு விசைப்பொறி (Catapult) பயன்படுத்தப்படுகின்றது.

விமானத்தின் முன் சக்கரத்துடன் பொருத்தப்படும் இவ் விசைப்பொறியானது விமானத்தை உந்தித் தள்ளுவதன் மூலம் விமானம் மேலெழுவதற்குத் தேவையான வேகத்தை அதிகரிப்பதோடு மிகக் குறுகிய தூர ஓட்டத்துடன் விமானம் மேலெழுவதற்கும் உதவுகின்றது.


விமானந்தாங்கிக் கப்பல் ஒன்றில் விமானம் ஒன்று தரையிறங்கும்போது விமானத்தின் வாற்பகுதியிலுள்ள கொழுவியமைப்பானது (Tailhook) கப்பலின் மேற்தளத்திலுள்ள வடம் (Arrestor wire) ஒன்றினை பற்றிப்பிடிப்பதன் மூலம் விமானத்தின் வேகம் மிகக்குறுகிய தூரத்தினுள் சடுதியாக ஓய்விற்குக் கொண்டுவரப்படுகின்றது.

விமானந்தாங்கிக் கப்பல்களின் மேற்தளத்தில், இடதுபக்கமாக Island என்றழைக்கப்படும் கப்பலின் கட்டுப்பாட்டுக் கோபுரம் அமைந்திருக்கும். மிகச்சில கப்பல்கள் இக்கட்டுப்பாட்டுக் கோபுரம் இல்லாது வடிவமைக்கப்படுகின்றன. அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல்களில் பணியாற்றும் மாலுமிகள் அவர்களின் பணிகளிற்கேற்ப வெவ்வேறான நிறக்களினாலான உடைகளை அணிந்திருப்பர்.

பிரித்தானிய றோயல் கடற்படையால் முதலாவதாக வடிவமைக்கப்பட்டு பின்னர் பலநாட்டுக் கடற்படைகளாலும் பயன்படுத்தப்படும் அண்மைக்கால விமானந்தாங்கிக் கப்பல்களின் வடிவம் அவற்றின் முன்பக்கம் மேல்நோக்கி உயர்ந்து காணப்படும். இவ்வகையான கப்பல்கள் குறுந்தூர ஓட்டத்துடன் மேலெழவல்ல Sea Harrier வகை விமானங்களை கருத்திற்கொண்டே வடிவமைக்கப்பட்ட போதிலும் சாதாரண விமானங்களுக்கும் இவை ஏற்றவையாகவே காணப்படுகின்றன. இவ்வகைக் கப்பல்களின் சிறப்பான மேற்தள வடிவமைப்புக் காரணமாக இவ்வகைக் கப்பல்களில் விமானத்தை உந்தித்தள்ளும் விசையமைப்போ (Catapult) அல்லது தடுப்புவடமோ (Arrestor wire) தேவையில்லை. இருந்தபோதிலும் அதிக சுமையினைக் காவவல்ல விமானங்களான Super Hornet மற்றும் Sukhoi Su-33 வகை விமானங்களுக்கும் E-2 Hawkeye வகை வேகம்குறைந்த விமானங்களுக்கும் இவ்வடிவமைப்புப் பொருத்தமற்றே காணப்படுகின்றது. இதன்காரணமாக, அமெரிக்க வடிவமைப்பாளர்கள் இவ்வடிவமைப்பை வரவேற்கவில்லை.

அமெரிக்கக் கடற்படை அணுசக்தியில் இயங்கும் பாரிய விமானந்தாங்கிக் கப்பல்கள் பதினொன்றை தமது கடற்படைச் சேவையில் ஈடுபடுத்துகின்றது. அமெரிக்கக் கடற்படையே உலகில் அதிகளவான விமானந்தாங்கிக் கப்பல்களைப் பயன்படுத்தும் கடற்படையாகும். அமெரிக்கக் கடற்படை இருபத்திநாலு மணிநேரத்தினுள் உலகின் எப்பாகத்திற்கும் செல்லக்கூடியவாறு தனது விமானந்தாங்கிக் கப்பலணியைத் தயார்நிலையில் வைத்திருக்கின்றது. அமெரிக்கா தவிர்ந்து பிரான்ஸ், சீனா, இந்தியா, ரஸ்யா போன்ற நாடுகள் தமக்கான நவீன விமானந்தாங்கிக் கப்பல்களை உருவாக்குகின்றன. ரஸ்யா 2050 ஆம் ஆண்டளவில் 60000 மெற்றிக் தொன் காவுதிறன் கொண்ட உலகின் மிகப்பொரும் விமானந்தாங்கிக் கப்பலை உருவாக்கும் திட்டத்துடன் செயலாற்றி வருகின்றது.

கூகுல் போன்

ஐபோனைப்போல கூகுல் போன் வெற்றி பெறுமா என்று தெரியவிலை.ஆனால் கூகுல் போன் அறிமுகப்போவது உறுதி என தெரிய வந்துள்ளது.

கூகுல் போன் தொடர்பான ஆருடங்களும் கணிப்புகளும் வதந்திகளாக உலா வந்து தற்போது செய்தியாக வலுப்பெற்றுள்ளது.கூகுல் அதிகர்ரப்பூர்வமாக இன்னும் வாயைத்திறக்கவில்லை என்றாலும் கூகுல் போன் தொட‌ர்பான‌ செய்திக‌ள் இண்டெர்நெட்டில் தெறித்துக்கொண்டிருக்கின்ற‌ன‌.

கூகுல் போன் தோற்றம் இது தான் என்று டிவிடரில் புதிய போனின் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது என்றால் கூகுல் போன் அதன் ஊழியர்களூக்கு வழங்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகி அமளி துமளியாக்கியது.

எது நிஜ‌ம் எது பொய் என்று பிரித்துண‌ர‌ முடியாத‌ அள‌வுக்கு கூகுல் போன் குறித்து எக்க‌ச்ச‌க்க‌மான‌ செய்திக‌ள் .


இந்நிலையில் கூகுல் போன் ஜ‌ன‌வ‌ரி மாத‌ம் 5 ம் தேதி அறிமுக‌மாக‌ப்போவ‌தாக‌ ராய்ட்ட‌ர்ஸ் நிறுவ‌ன‌ம் ஒரு தீப்ப‌ற‌க்கும் செய்தியை வெளியிட்டுள்ள‌து.

ஒரு செல்போன் நசேவை நிறுவ‌ன‌த்தின் கூட்டோடு நெக்ச‌ஸ் ஒன் (கூகுல் போனின் பெய‌ராம்)அறிமுக‌மாக‌லாம் என‌ கூற‌ப்ப‌டுகிற‌து.

December 20, 2009

42 ஒளி ஆண்டுகள் தூரத்தில் சூப்பர் பூமி கண்டுபிடிப்பு

பிரபஞ்சத்தில் உள்ள கிரகங்கள் பற்றி ஹார் வர்டு- சுமித் சோனியன் மையம் ஆய்வு நடத்தி வருகிறது. இந்த ஆய்வின்போது நமது பூமியைப் போன்றே ஒரு கிரகம் சுழன்று வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கிரகத்துக்கு, ஜிஜெ1214பி என்று ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டுள்ளனர். இதை சூப்பர் பூமி என்று அழைக்கிறார்கள். இந்த சூப்பர் பூமி 42 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.


இந்த புதிய கிரகம் மற்றொரு சூரிய மண்டலத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. நமது பூமியை போல இந்த சூப்பர் பூமி 2.7 மடங்கு பெரியதாக இருக்கிறது.

இந்த புதிய கிரகத்தில் பாதிக்கு பாதி தண்ணீர் உள்ளது. அங்கு உயிரினங்கள் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். இந்த சூப்பர் பூமி தன்னைத்தானே ஒரு தடவை சுற்றிக்கொள்ள 38 மணி நேரமாகிறது.

சூப்பர் பூமி எப்போதும் மிகுந்த வெப்பத்துடன் இருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது சாதாரணமாகவே 200 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே அங்கு மனிதர்கள் குடியேற இயலாது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர் என்றாலும் “புதிய பூமி” தொடர்பாக முழுமையான ஆராய்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆண்களுக்கு பிடிக்காத பெண்கள்!

சில பெ‌ண்களை பெ‌ண்களு‌க்கே‌ப் ‌பிடி‌க்காது.. ஆ‌ண்களு‌க்கு‌ப் ‌பிடி‌க்குமா? எ‌ன்று கே‌ட்பா‌ர்க‌ள்... ஆனா‌ல் அத‌ற்கு ‌பிடி‌‌க்கு‌ம் எ‌ன்பதுதா‌ன் ப‌தி‌ல். ஒரு பெ‌ண் பெ‌ண்ணை‌ப் பா‌ர்‌க்கு‌ம் ‌விதமு‌ம், ஒரு ஆ‌ண் பெ‌ண்ணை‌ப் பா‌ர்‌க்கு‌ம் ‌விதமு‌ம் மாறுபடு‌கிறது.

சில‌ர் பா‌ர்‌த்து‌ப் ‌பிடி‌த்தது‌ம் காத‌லி‌க்க‌த் துவ‌‌ங்‌கி‌விடுவா‌ர்க‌ள். அ‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ர்‌க‌ள் காத‌லி‌க்க‌த் துவ‌ங்‌கிய ‌பிறகுதா‌ன் அ‌ந்த‌ப் பெ‌ண்ணை‌ப் ப‌ற்‌றி பு‌ரி‌ந்து கொ‌ண்டு மன‌ம் பேத‌லி‌த்து‌ப் போவா‌ர்க‌ள்.


முத‌ல் வகை...

எ‌ப்போது‌ம் எதையாவது ஒ‌ன்றை சொ‌ல்‌லி ந‌ச்ச‌ரி‌ப்பூது. எந்த ஒரு மனிதரும் அதிகம் பார்த்துப் பயப்படுவது இந்தப் பெண்ணைத்தான். இந்தப் பெண் சளசளவென்று புகார் மழை பொழிபவளாகவும், எப்போது திருமணம் செய்துகொள்ளலாம் என்று நச்சரித்துக் கொண்டே இருப்பவளாகவும் இருப்பாள். அவள் ஓர் உறவுக்குள் விழுந்து, பாதுகாப்பாக உணர்ந்தபின், தனது தேவைகளை அடுக்கத் தொடங்குவாள்.

ம‌ற்றவ‌ர்களை‌ப் ப‌ற்‌றியு‌ம், காதல‌ர் ‌விரு‌ம்பு‌ம் நப‌ர்களை‌ப் ப‌ற்‌றியு‌ம் அ‌திக‌க் குறை கூறுவா‌ர். எதை‌ச் செ‌ய்தாலு‌ம் இவரது ‌விரு‌ப்ப‌த்தை ‌பூ‌ர்‌த்‌தி செ‌ய்ய முடியாதவராகவு‌ம் இரு‌ப்பா‌ர்க‌ள். இ‌ந்த பெ‌ண்ணை எ‌ந்த‌ ஆணு‌ம் வெறு‌க்க‌த் துவ‌ங்‌கி‌விடுவா‌ர்‌.

ச‌ந்தேக‌ப் ‌பிரா‌ணிக‌ள்
 
ம‌ற்ற பெ‌ண்களை‌ப் பா‌ர்‌த்தாலோ, பே‌சினாலோ அத‌ற்கெ‌ல்லா‌ம் கோ‌பி‌த்து‌க் கொ‌ண்டு ச‌ண்டை போடுபவ‌ளை முத‌லி‌ல் ர‌சி‌த்தாலு‌ம், போக‌ப் போக ஆ‌ண் வெறு‌க்க‌த் துவ‌ங்‌கி‌விடுவா‌ர்‌. இ‌துபோ‌ன்ற பெ‌ண்ணுடனான காதலை மே‌ற்கொ‌ள்ளு‌ம் ஆ‌ண், ‌விரை‌வி‌ல் அவனது ந‌ல்ல பெ‌ண் தோ‌‌ழிகளை இழ‌க்க நே‌ரிடு‌ம். தோ‌‌ழிக‌ள் ம‌ட்டும‌ல்ல.. ஆ‌ண் ந‌ண்‌ப‌ர்களையு‌ம் இழ‌க்க வே‌ண்டிய ‌நிலை வரலா‌ம். இதுபோ‌ன்ற‌ப் பெ‌ண்ணை காத‌லி‌க்க‌த் துவ‌ங்கு‌ம் போது, அவளது ச‌ண்டைகளை ர‌சி‌க்கு‌ம் ஆ‌ண், போக‌ப் போக தனது சுத‌ந்‌திர‌த்தை இழ‌ந்து கொ‌‌ண்டிரு‌ப்பதை உண‌ருவா‌ர்க‌ள். அ‌ப்போது காத‌லி‌ல் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படலா‌ம்.

ஓ‌ட்ட வா‌ய்


ஒருநாளைக்கு ஓர் ஆணை விட ஒரு பெண் அதிகமாக ஆயிரம் வார்த்தைகள் பேசுகிறாள் என்பது பொதுவான கருத்து. பல பெண்கள் வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறார்கள். `பெண் என்றாலே அதிகமாகப் பேசுவாள்' என்றில்லாமல், தங்களுக்கு விருப்பமான விஷயங்களை பெண்கள் எளிமையாகப் பேசுகிறார்கள் என்பதே நடைமுறை உண்மை.

ஆனா‌ல், எ‌ப்போது‌ம் வளவளவெ‌ன்று பே‌சி‌க் கொ‌ண்டே இரு‌க்கு‌ம் பெ‌ண்ணையு‌ம் ஆ‌ண்க‌ள் அ‌திக‌ம் ‌விரு‌ம்புவ‌தி‌ல்லையா‌ம். அவ‌ளிட‌ம் எதை‌ச் சொ‌ன்னாலு‌ம் ம‌ற்றவ‌ர்களு‌க்கு‌ப் போ‌ய்‌விடு‌ம் எ‌ன்ற கரு‌த்து‌ம், ஓ‌ட்ட வா‌ய் எ‌ன்ற ப‌ட்ட‌ப் பெயரு‌ம் வை‌த்து ‌விடுவா‌ர்க‌ள்.

எனவே, மே‌ற்க‌ண்ட வ‌ற்‌றி‌ல் ‌நீ‌ங்க‌ள் வ‌ந்தா‌ல், உடனடியாக உ‌ங்‌களது பழ‌க்க‌த்தை ச‌ற்று மா‌ற்‌றி‌க் கொ‌ள்ளு‌‌ங்க‌ள். காத‌ல் இ‌னி‌க்கு‌ம்.

வலியை உணரக் கூடிய ரோபோ

ரோபோக்கள் மனித இயந்திரம்தான் என்றாலும் அவற்றை உணர்ச்சி இல்லாதவை என்று இனி யாரும் கூறி விட முடியாது. காரணம் வலியை உணரக் கூடிய ரோபோவை ஜப்பான் நாட்டில் வடிவமைத்துள்ளனர்.

இந்த ரோபோ வலியை உணரக் கூடியது மட்டுமல்ல; வலியை உணர்த்தக் கூடியதும் என்பதுதான் விசேஷம்.


ரோபோ ஆய்வு மற்றும் தயாரித்தல் ஜப்பான் முன்னிலை வகிக்கிறது. ரோபோ பயன்பாட்டிலும் அந்நாடு தான் முதலிடத்தில் இருக்கிறது. ரோபோ தொடர்பான ஆய்வு ஜப்பானில் தீவிரமாக நடைபெற்று வருவதால் புதுப்புது ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருவதாலும் அங்கே சர்வதேச ரோபோ கண்காட்சி அண்மையில் நடத்தப்பட்டது.

தலைநகர் டோக்கியோவில் நான்கு நாட்கள் இந்த கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் பலவிதமான ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அதில் ஒன்றுதான் வலியை உணரும் ரோபோ. ரோபோ நோயாளியாக இது அறிமுகம் செய்யப்பட்டிருப்பதால் இதற்கு தனியே பெயரும் சூட்டப் பட்டுள்ளது. சிம்ராய்டு என்பது இதன் பெயர்.

அழகான இளம்பெண்ணை போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ, பல் மருத்துவ மாணவர் களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவால் பல்வலியை உணர்ந்து வெளிப்படுத்த முடியும்.

பல்வலிக்கு சிகிச்சை பெறும் நோயாளி எப்படி வலியால் துடிப்பாரோ அந்த உணர்வை இந்த ரோபோ வெளிப்படுத்தும். பயிற்சி மருத்துவர்கள் இந்த ரோபோவை கொண்டு பயிற்சியில் ஈடுபடும் போது, நோயாளிகள் வலியை எப்படி உணர்வார்கள் என்பது குறித்த அனுபவத்தை பெற முடியும் என்று கருதப்படுகிறது.

மருத்துவர்கள் நோயாளிகளின் வலியை உணர்வது நல்ல விஷயம்தான். ஆனால் அதற்காக நோயாளிகளை கஷ்டப்படுத்தாமல் இந்த பணியை செய்வதற்காக என்று ஒரு ரோபோவை உருவாக்கி உள்ளனர். விரைவில் இந்த ரோபோ விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல் மருத்துவர்கள் நோயாளிகளின் உணர்வை நன்றாக புரிந்து கொண்டு அவர்களுக்கு சிறந்த சிகிச்சையை அளிக்க இந்த ரோபோ நோயாளி உதவும் என்றும் கருதப்படுகிறது.

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு செ‌ய்து கொ‌ண்டவ‌ர்க‌ள் கவ‌னி‌க்க

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்து கொ‌ண்ட பெ‌ண்களு‌க்கு உட‌ல் எடை அ‌திக‌ரி‌க்க அ‌திக வா‌ய்‌ப்புக‌ள் இரு‌ப்பது தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.

த‌ற்போது உ‌ட‌ல் எடை உய‌ர்வு ஒரு ‌மிக‌ப்பெ‌ரிய ‌பிர‌ச்‌சினையாக உருவெடு‌த்து‌ள்ள ‌நிலை‌யி‌ல், ‌வீ‌ட்டு வேலைகளை செ‌ய்ய இ‌‌ய‌ந்‌திர‌ங்க‌ள் வ‌ந்தது‌ம், உணவு‌‌ப் பழ‌க்கமு‌ம் காரண‌ங்களாக இரு‌ந்தாலு‌ம், குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சையு‌ம் மு‌க்‌கிய‌க் காரண‌ம் எ‌ன்‌கிறது மரு‌‌த்துவ‌ம்.

குடும்பக்கட்டுப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை‌க்கு‌ப் ‌பிறகு பெ‌‌ண்க‌ளி‌ன் உட‌லி‌ல் ப‌ல்வேறு மா‌ற்ற‌ங்க‌ள் ஏ‌ற்படு‌கி‌ன்றன. சினைப்பையில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பில் பிரச்சினை ஏற்படுகிறது. அடைப்பு காரணமாக இந்த ஹார்மோன் சரியாக சுரக்காது. இதுதான் உடலில் அதிக கொழுப்பு சேராமல் தடுக்கின்ற ஹார்மோன். மருத்துவர்கள் இதை `புரொடக்டிவ் ஹார்மோன்' என்று அழைக்கிறார்கள். குடும்பக்கட்டுப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை‌ காரணமாக இந்த ஹார்மோன் சுரப்பு தடைபட்டு, அதிகப்படியான கலோரிகள் தேங்கி, கொழுப்புச்சத்து சேர்ந்து உடல் குண்டாகி விடுகிறது.


குடு‌ம்ப‌ப் பெ‌ண்க‌ள் பலரு‌ம், குழ‌ந்தையு‌ம், கணவரு‌ம் ‌மீத‌ம் வை‌த்த உணவையு‌ம், வீணாகி விடுமே என்று அதிகமான உணவுகளை உண்பது‌ம், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது‌ம், ‌வீ‌ட்டு வேலைகளை செ‌ய்ய இய‌ந்‌திர‌ங்க‌ள் இரு‌ப்பது‌ம், டிவி பார்த்துக் கொண்டு நொறு‌க்கு‌த் ‌தீ‌னி சா‌ப்‌பிடுவது‌ம், ம‌திய நேர‌த்‌தி‌ல் கு‌ட்டி‌த் தூ‌க்க‌ம் எ‌ன்று சொ‌ல்‌லி 2 அ‌ல்லது 3 ம‌ணி நேர‌ங்க‌ள் தூ‌ங்குவது‌ம் உடல் பருமன் ஏற்படுவதற்கானக் காரணிகளாகப் பட்டியலிடுகின்றனர் மருத்துவர்கள்.

எனவே, குடும்பக்கட்டுப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை‌ செய்து கொண்ட பெண்கள் உணவு விஷயத்தில் மிகவும் கண்டிப்புடன் இருக்க வேண்டும். கலோரிகள் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். முடியாத பட்சத்தில் குறைவான அளவு எடுத்துக் கொள்ளலாம். நார்ச்சத்துகள் நிறைந்த உணவுப்பொருட்களை அதிகமாகச் சாப்பிட வேண்டும். காய்கறிகள், பழங்கள், கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். குறைந்தது ஒரு நாளைக்கு 5 கிலோமீட்டர் தூரமாவது நடக்கலாம். முடிந்தால் நீச்சல் பயிற்சிக்குச் செல்லலாம். தொடர்ந்து யோகா, தியானம் செய்வது நல்ல பலனைத் தரும்.

சிலர் கர்ப்பத்தைத் தவிர்ப்பதற்காகக் கருத்தடை மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடுவர். இந்த மாத்திரைகளால் கர்ப்பத்திற்கான ஹார்மோன் சுரப்பில் தடை ஏற்பட்டு, கரு உருவாவது தடுக்கப்படும். இந்த மாத்திரைகளை அனைவரும் எடுத்துக் கொள்ள முடியாது. குறிப்பாக கால் வீக்கம், பித்தப்பையில் கல், ரத்தத்தில் அதிக கொழுப்பு உள்ளவர்கள் கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தினால் பின் விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

சில பெண்கள் பரிசோதனை செய்து கொள்ளாமலேயே காப்பர்-டி பொருத்திக் கொள்கிறார்கள். பின்னர் ரத்தப்போக்கு அதிகமாகி அவதிப்படுகின்றனர். எனவே, முழு உடல் பரிசோதனை செய்து கொண்டு, எந்தப் பிரச்சினையும் இல்லை என்றால் மட்டுமே காப்பர்-டி பொருத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக ரத்தம் எளிதில் உறைதல், வெள்ளைப்படுதல், அதிக ரத்தப்போக்கு போன்ற பிரச்சினைகள் உள்ள பெண்கள் கண்டிப்பாக காப்பர்-டி பொருத்திக் கொள்ளக் கூடாது. அதேபோல் அதிகபட்சமாக 5 வருடங்கள் மட்டுமே காப்பர்-டியைப் பயன்படுத்தலாம். அதற்குமேல் பயன்படுத்தினால் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புண்டு.

நா‌ம் சா‌ப்‌‌பிடு‌ம் கொழு‌ப்பை‌ உட‌லி‌ல் சேராம‌ல் தடு‌க்கு‌ம் ஈ‌ஸ்‌ட்ரோஜ‌‌ன் ஹா‌ர்‌மோ‌ன், குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை‌க்கு‌ப் ‌பிறகு ச‌ரியாக சுர‌க்காம‌ல் போவதை‌க் கவன‌த்‌தி‌ல் கொ‌ண்டு, அத‌ற்கு மு‌ன்பு சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்த அ‌திக‌ப்படியான கொழு‌ப்பு உணவுகளை த‌வி‌ர்‌ப்பது உட‌ல் எடையை பராம‌ரி‌க்க உதவு‌ம்.

December 18, 2009

அழுத்தங்களால் சிறுவர்கள் விரைவில் முதுமை அடைவு

துஷ்பிரயோகம் மற்றும் அழுத்தங்களால் பாதிக்கப்படும் சிறுவர், சிறுமியர் விரைவில் முதுமையை அடைந்துவிடுகின்றனர் என அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு மூலம் புலனாகியுள்ளது.

சிறுவர் பராயத்தில் ஏற்படக்கூடிய உடல், உள ரீதியான துஷ்பிரயோகங்களால் உடல் விரைவில் முதுமையடைந்து விடுகிறது என அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


அமெரிக்காவின் பிறவுண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மரபணுக்களில் மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமியரது கலங்கள் விரைவில் முது மையடைந்து விடுகின்றன எனத் தெரிவிக்கப் படுகிறது. உள ரீதியான அழுத்தங்களும் விரை வில் முதுமையடைவதற்கான ஓர் காரணி என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இரத்தக் குழாய்களுக்குள் நீந்திச் செல்லும் நுண்ணிய ரோபோக்கள்

மனிதனின் இரத்தக் குழாய்களுக்குள் நீந்திச் செல்லும் நுண்ணிய ரோபோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பலகலைக்கழக நுண் பெளதிகம் மற்றும் நானோ பெளதிக ஆய்வுக்கூடத்தில் இந்த ரோபோக்களுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இரத்தக்குழாய் அடைப்புகளின் காரணமாக செய்யப்படும் சிக்கலான அறுவை சிகிச்சைகளில் இந்த ரோபோக்கள் உதவிகரமாக இருக்குமாம். இரத்தக் குழாய்களுக்குள் ஊசிமூலம் இந்த ரோபோக்களை செலுத்தி செயல்பட வைக்க இயலும்.

ஒரு மில்லிமீட்டரில் கால்பங்கு பெரியதான இந்த ரோபோக்களை piezoelectricityஐப் பயன்படுத்தி இயங்கச் செய்ய முடியும் என்கிறார்கள் நுண் எந்திரவியல் மற்றும் நுண் பொறியியல் அறிஞர்கள். சிலவகையான படிகங்கள், பீங்கான்கள் இவற்றின் மீது அழுத்தம் கொடுக்கும்போது மின்னோட்டம் தூண்டப்படுகிறது என்பதுதான் piezoelectricity தத்துவம். இந்த தத்துவத்தை பயன்படுத்தியே நம்முடைய வீட்டில் எரிவாயு அடுப்பை பற்றவைக்கும் கேஸ் லைட்டர்களை இயக்குகிறோம்.

அறுவை சிகிச்சைகளில் சாதாரணமாக catheters எனப்படும் குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.


இவை உண்டாக்கும் காயங்களும் தழும்புகளும் பெரிய அளவில் இருக்கும். மேலும் நுண்ணிய பகுதிகளை இந்த catheter குழாய்கள் சென்றடைய முடிவதில்லை. இனிமேல் இதுபோன்ற நுணுக்கமான அறுவை சிகிச்சைகளுக்கு இந்த நுண்ணிய ரோபோக்கள் பயன்படும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

December 17, 2009

யு.எஸ்.பி. டிரைவில் கூகிள் குரோம் ஓ.எஸ்.

குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து தகவல்கள் வந்தன. ஆனால் நாம் நெட்புக் கம்ப்யூட்டர்களிலோ அல்லது மற்றவகை கம்ப்யூட்டர்களிலோ பயன்படுத்தும் வகையில் ரெடியாக அது இன்னும் கிடைக்கவில்லை.

இந்த சிஸ்டம் எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டும் சோர்ஸ் கோட் வரிகள் தான் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆனால் அண்மையில் டவுண்லோட் செய்திட உதவும் டாரண்ட் (Torrent) தளங்களில், யு.எஸ்.பி. டிரைவில் பதிந்து நெட்புக் கம்ப்யூட்டர்களை இயக்கக் கூடிய அளவில் குரோம் ஓ.எஸ். கிடைப்பதாக செய்திகள் வந்துள்ளன.

Engadget தளத்தில் இயங்கும் சிலர், இதனைப் பெற்று Dell Vostro A90 என்ற நெட்புக் கம்ப்யூட்டரில் இயக்கியதாகத் தகவல் தரப்பட்டுள்ளது. குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பூட்டிங் நேரம் 22 விநாடிகள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். உடனே இணைய தளத்தினை பிரவுஸ் செய்வதற்கு முடிந்ததாகவும் அறிவித்துள்ளனர்.


ஆனால் இந்த சிஸ்டத்தில் உள்ள டிவைஸ் டிரைவர்கள் அனைத்தும் வடிவமைப்பின் தொடக்க நிலையிலேயே உள்ளதாகத் தெரிகிறது. எனவே குரோம் சிஸ்டம் இயக்கத்தில் உங்கள் கம்ப்யூட்டரின் சில பகுதிகள் எதிர்பார்க்கும் வேகத்தில் இயங்காது எனத் தெரிகிறது.

நீங்களும் குரோம் ஓ.எஸ். அதிகாரப் பூர்வமாக மக்களுக்கு வழங்கப்படும் முன், அதனைப் பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என எண்ணினால் கீழுள்ள முகவரில் டவுண்லோட் செய்யுங்கள் . பூட் செய்யக் கூடிய இமேஜை டவுண்லோட் செய்து, பிளாஷ் டிரைவில் பதிந்து, உங்கள் நெட்புக் கம்ப்யூட்டரில் பயன்படுத்தலாம்.

விண்டோஸ், மேக், லினக்ஸ் இயக்கங்கள் உள்ள கம்ப்யூட்டரில் இதனை எப்படிப் பயன்படுத்துவது என்ற குறிப்புகளும் இங்கே தரப்பட்டுள்ளன. அதற்கு முன் குரோம் சிஸ்டத்தில் எவை எவை இயங்கும் என்ற பட்டியலை கூகுள் தளத்தில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

கர்ப்பிணிப் பெண்கள் எப்படி இருக்க வேண்டும்?

பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசவம் ஆவதற்கு சில ஆசனப் பயிற்சிகள் உண்டு. அவற்றை 7ஆம் மாதத்தில் இருந்து செய்யலாம்.
ஆனால் கர்ப்பிணிகள் ஆசனப் பயிற்சி செய்துதான் சகப்பிரசவம் ஆக வேண்டியதில்லை.

வீட்டு வேலைகளை செய்து வந்தாலே எளிதாக அவர்களுக்கு சுகப்பிரசவம் ஆகும். கர்ப்பிணிகள் முதல் 3 மாதத்தில் மல்லாந்து படுப்பதோ, மல்லாந்தபடி படுத்திருந்து அப்படியே எழுவதோ மிகவும் தவறு.


முதல் 3 மாதங்களுக்கு ஒருக்களித்து படுத்தபடி இருப்பதுதான், கருவின் வளர்ச்சிக்கு உதவும். அதேபோன்று, ஒருக்களித்த படியே கையை ஊன்றித்தான் எழுந்திருக்க வேண்டும்.

ஒருக்களித்தபடி படுக்கும் போது வயிறு தளர்வான நிலையில் இருக்கும். ஆனால் மல்லாந்து படுத்தால் வயிறு இழுத்த நிலையில் இருக்கும். அப்படி இருக்கும் போது கரு குழந்தையாக உருவாவதில் சிக்கல் ஏற்படும்.

அதன் பிறகும் மல்லாந்து படுப்பதை தவிர்க்க வேண்டும். மல்லாந்து படுத்தால் குழந்தைக்கு குடல் சுற்றிக் கொள்ளும் ஆபத்து ஏற்படும். அதேப்போல, ஒரு பக்கம் ஒருக்களித்து படுத்திருக்கும் போது அடுத்த பக்கத்திற்கு அப்படியேத் திரும்பக் கூடாது. எழுந்து உட்கார்ந்து பிறகுதான் அடுத்த பக்கம் ஒருக்களித்துப் படுக்க வேண்டும். இது குழந்தை சுகப்பிரசவம் ஆக உதவும்.

இப்போதெல்லாம் இந்த பழக்கத்தை நிறைய கர்ப்பிணிகள் கடைபிடிப்பதில்லை. அதனால்தான் குழந்தை தலை திரும்புவதில் பிரச்சினை ஏற்படுகிறது. தலை திரும்பாமல் இருந்தால் சிசேரியன் மூலமாகத்தான் பிரசவமாகும்.

மேலும், எல்லோருமே குனிந்து நிமிர்ந்து வேலை செய்தாலே சுகப்பிரசவமாகும். வீட்டு வேலைகளை தாங்களாகவே செய்து கொண்டால் எல்லோருக்கும் சுகப்பிரவமாகும் வாய்ப்பு உள்ளது.

அதேப்போல கர்ப்பிணிகள் ஏற்கனவே யோகாசனம் செய்து வந்து கொண்டிருந்தாலும் முதல் மூன்று மாதங்களுக்கு செய்யக் கூடாது. அதன் பிறகும் எளிதான பயிற்சிகளை செய்யலாம்.

ஆனால் கர்ப்பம் தரித்த பிறகு புதிதாக யோகாசனம் செய்யவேக் கூடாது.
சுகப்பிரசவம் ஆவதற்கான ஆசனத்தையும் 7ஆம் மாதத்தில் இருந்து செய்யத் துவங்கலாம். ஆனால், சுகப்பிரசவம் ஆவதற்கு எந்த பயிற்சியும் தேவையில்லை. நீங்கள் சுறுசுறுப்பாக உங்கள் வேலைகளை செய்து கொண்டு வந்தீர்களானால். ஒரு வேளை எந்த வேலையும் செய்யாமல் இருப்பவர்களுக்குத்தான் இந்த பயிற்சிகள் தேவைப்படும்.

மேலும், வீட்டில் குனிந்து நிமிர்ந்து செய்யும் வேலைகளான வீட்டை பெருக்குதல், துணி துவைப்பது போன்ற வேலைகளை செய்யும் போது வயிறு சுருங்கி விரியும் தன்மையை பெறுகிறது.

தற்போது சில பெண்களுக்கு சுகப்பிரவம் என்றால் பயம் ஏற்படுகிறது. சிசேரியன்தான் எளிது என்கிறார்கள். முதலில் அந்த பயத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும்.

December 16, 2009

விண்டோஸை வேகப்படுத்த 20 வழிகள்

விண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும், சிறிது கூடக் குறையக் கூடாது என்பதுதான் நம் விருப்பமாக எந்தக் காலத்திலும் உள்ளது.

தொடக்கத்தில் உள்ள ஒரு சிஸ்டத்தின் வேகம் போகப் போகக் குறைவது பலருக்கு ஏமாற்றத்தைத் தருகிறது. இதில் இந்த சிஸ்டங்களைப் பயன்படுத்துபவர்களின் கவனக் குறைவும் உள்ளது. அவையும் சேர்ந்தே சிஸ்டத்தின் வேகக் குறைவிற்குக் காரணமாய் அமைந்துள்ளது.

ஒரு சில நடவடிக்கைகளை மேற்கொண்டால் நிச்சயம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை புயல் வேகத்தில் இயங்க வைக்கலாம் என்பதே உண்மை. அந்த சில நடவடிக்கைகளை இங்கு காணலாம். இந்த நடவடிக்கை குறித்த டிப்ஸ்கள், சிஸ்டம் வடிவமைப்பவர்கள், சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர்கள், நெட்வொர்க் அட்மினிஸ்ட் ரேட்டர் மற்றும் ஹெல்ப் டெஸ்க் வல்லுநர்கள் எனப் பலரிடம் திரட்டியவை. நீங்களும் இவற்றை முயற்சித்துப் பாருங்களேன்.


1. ஹார்ட் டிஸ்க்கின் சுழற்சி, அதன் மூலம் பைல் தேடும் நேரம் ஆகியவை சிஸ்டம் இயங்குவதில் முக்கிய இடத்தைக் கொள்கின்றன. எனவே சிதறலாகப் பதிந்த பைல்களை ஒருமுகப்படுத்தும் டிபிராக் செயல்பாட்டினை மேற்கொள்ளுங்கள். விண்டோஸ் இணைந்து வரும் டிபிராக் பைல் அல்லது ஸ்மார்ட் டிபிராக் (SmartDefrag) போன்ற மற்றவர்கள் தந்துள்ள புரோகிராம்களை இதற்குப் பயன்படுத்தலம.ஹார்ட் டிஸ்க் என்று பொதுவாக இல்லாமல் விண்டோஸ் பேஜ் பைல் மற்றும் ரெஜிஸ்ட்ரியைக் குறிப்பாக டிபிராக் செய்திட வேண்டும்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

2. தற்காலிக பைல்கள் உருவாக்கம் நம் ஹார்ட் டிஸ்க்கின் இடத்தை எடுத்துக் கொண்டு அதன் பைல் தேடும் செயல்பாட்டினைத் தடுக்கும். எனவே டெம்பரரி பைல் போல்டர், ரீசைக்கிள் பின், ஹைபர்னேஷன் போன்ற போல்டர்கள் மற்றும் டைரக்டரிகளில் உள்ள தற்காலிக பைல்களை நீக்க வேண்டும். Treesize போன்ற புரோகிராம்களின் உதவி கொண்டு எந்த புரோகிராம்கள், பைல்கள் உங்கள் டிஸ்க்கில் அதிக இடம் எடுத்துக் கொண்டுள்ளன என்று பார்த்து செயல்படவும்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும் 

3.விண்டோஸ் சிஸ்டத்தினை வேகமாக இயக்கலாம். இதற்கு ஸ்டார்ட் அப் புரோகிராம்கள் லோட் ஆவதை தாமதப்படுத்தலாம். இலவசமாக, ஸ்டார்ட் அப் டிலேயர் (Startup Delayer) என்ற புரோகிராம் இதற்கு உதவும். பொதுவாக பல ஸ்டார்ட் அப் புரோகிராம்கள், காலப் போக்கில் நமக்குத் தேவையற்றதாக இருக்கும். இவற்றை இந்த பட்டியலில் இருந்து நீக்க msconfig என்ற கட்டளையை ரன் பாக்ஸில் இயக்கி நீக்கவும்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும் 

4. விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டாவில் விண்டோஸ் சர்ச் இன்டெக்ஸிங் என்ற பணி தொடர்ந்து நடைபெறும். இது நடைபெறுவதனை நிறுத்தி வைக்கலாம். அதே போல, பெர்பார்மன்ஸ் ஆப்ஷன்ஸ் பெற்று, தேவையற்ற அலங்கார விண்டோக்கள், திரைக் காட்சிகளை நீக்கலாம். இந்த வழியைப் பின்பற்றி தேவையற்ற விண்டோஸ் சர்வீஸ், செட்டிங்ஸ் மற்றும் புரோகிராம்களை நீக்கலாம்.

5. விண்டோஸ் பூட் ஆகும் நேரத்தைத் துரிதப்படுத்த மைக்ரோசாப்ட் நிறுவனம் Bootvis என்னும் புரோகிராமினைத் தந்துள்ளது. அதன் தளம் சென்று இந்த புரோகிராமினை இலவசமாகப் பெற்று இயக்கவும்.
தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
 
6. ரெஜிஸ்ட்ரியில் பல ரெபரன்ஸ் வரிகள் தேவையற்றதாய் சில நாட்களிலேயே மாறிவிடும். இவற்றை நீக்கலாம். கவனத்துடன் இதற்கான வழிமுறைகளை மைக்ரோசாப்ட் தளத்தில் பெற்றுக் கையாளவும்.

7. பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மெதுவாக இயங்குவதற்குக் காரணம், நாம் அறியாமலேயே இன்டர்நெட் வழியாக நம் கம்ப்யூட்டரை வந்தடையும் ஸ்பைவேர் புரோகிராம்களாகும். இவற்றை AdAware, Giant Antispyware, SUPER AntiSpyware போன்ற புரோகிராம் களில் ஏதேனும் ஒன்றின் துணை கொண்டு நீக்கலாம். இவை இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன. இவற்றின் மூலமாகவும் நீக்க முடியாமல், ஹார்ட் டிஸ்க்கில் தங்கும் ஸ்பை வேர்களை HijackThis to remove spyware என்ற புரோகிராம் மூலம் நீக்கலாம்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும் 

8. சில சாப்ட்வேர் புரோகிராம்கள் தேவையில்லாமல், கம்ப்யூட்டருடன் சிஸ்டம் வரும்போதே பதியப்பட்டு கிடைக்கும். இவற்றை நீக்க PC Decrapifier போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தவும்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
 
9. விண்டோஸ் விஸ்டா இயக்கத்தில் User Account Control என்ற புரோகிராம் தானாகவே தொடங்கி இயங்கும். இதனை நீக்குவது விண்டோஸ் இயக்கத்தின் வேகத்தை அதிகப்படுத்தும். இது பலருக்குத் தேவையற்ற புரோகிராம் ஆகும்.


10. உங்கள் மவுஸ் செட்டிங்ஸில் கவனம் செலுத்துங்கள். அதற்கான வழிகளைச் சொல்லித் தரும் தளங்கள் இணையத்தில் உள்ளன. இதனால் வேகமாக காப்பி, பேஸ்ட், ஸ்குரோல் போன்ற செயல்களை வேகமாக மேற்கொள்ளலாம்.

11. இன்டர்நெட் தேடலில், உலாவில் அநேக பைல்கள் தற்காலிகமாக உருவாக்கப்பட்டு நம் ஹார்ட் டிஸ்க்கில் அடைந்திருக்கும். பிரவுசிங் ஹிஸ்டரி, டெம்பரரி டவுண்லோட் லிங்க்குகள், குக்கீஸ் போன்றவை உருவாகும். இவற்றை சி கிளீனர் (C Cleaner) போன்ற புரோகிராம்கள் மூலம் நீக்கலாம். இது போன்ற புரோகிராமினை, கம்ப்யூட்டர் இயக்கம் தொடங்கும்போதோ, முடிக்கும் போதோ இயக்குவது நல்லது.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
 
12.விண்டோஸ் பூட் ஆகும் நேரத்தைக் குறைக்க அதன் லோகோ வருவதைத் தவிர்க்கலாம். இதனை எப்படி மேற்கொள்வது என்பதனை கீழுள்ள என்ற முகவரியில் உள்ள தளத்தில் அறியவும்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
 
13. தேவைப்படுகிறதோ இல்லையோ, அதிக எண்ணிக்கையில் எழுத்து வகைகளை (Fonts) நாம் கம்ப்யூட்டரில் சேர்த்து வைக்கிறோம். விண்டோஸ் தரும் எழுத்து வகைகளைக் கூட அனைத்தும் நாம் பயன்படுத்துவதில்லை. விண்டோஸ் இயங்கும் போது பாண்ட்ஸ் போல்டரில் உள்ள அனைத்து எழுத்து வகைகளையும் இயக்கி வைக்கிறது. எனவே இவற்றில் சிலவற்றை நீக்கி, விண்டோஸ் தொடக்கத்தில் இயக்காதபடி போட்டு வைக்கலாம்.

14. குறிப்பிட்ட கால அவகாசத்தில் நீங்கள் பைல்களை பேக்கப் செய்வது வழக்கம் என்றால், சிஸ்டம் ரெஸ்டோர் பயன்பாட்டை முடக்கி வைக்கலாம். இதனால் வேகம் கூடுதலாகும்.

15. மை டாகுமெண்ட்ஸ் போல்டரை, சிஸ்டம் பூட் ஆகும் டிரைவில் இருந்து வேறு ஒரு டிரைவில் அமைக்கலாம்.

16. சில போர்ட்களை நாம் பயன்படுத்தாமலே வைத்திருப்போம். இவற்றின் இயக்கத்தை நிறுத்தி வைக்கலாம்.

17. விஸ்டாவில் என்று ஒரு செயல்பாடு இருக்கும். இதனை நிறுத்தி வைப்பதன் மூலம் வீடியோக்களையும், படங்களையும் இணையத்தில் வேகமாக பிரவுஸ் செய்திட முடியும்.

18. இன்டர்நெட் பிரவுசிங் செய்கையில் வெப் ஆக்சிலரேட்டர்களைப் பயன்படுத்தவும். இவை நீங்கள் பார்க்க இருக்கும் தளங்களை எடுத்து கேஷ் மெமரியில் வைத்து உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி, செயல்பாட்டினை வேகப்படுத்தும்.

19. நீங்கள் பயர்பாக்ஸ் பயன்படுத்துகிறீர்களா! இதன் செயல் வேகத்தை அதிகப்படுத்த ஆட் ஆன் புரோகிராம் ஒன்று FasterFox என்ற பெயரில் உள்ளது. அதனைப் பயன்படுத்தவும்.

தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
 
20. உங்கள் கம்ப்யூட்டர் வடிவமைக்கப்பட்டு மாதங்கள் அல்லது ஆண்டுகள் பல ஆகிவிட்டதா? சின்ன சின்ன வேகமாகச் செயல்படும் பாகங்களை, பழையனவற்றின் இடத்தில் இணைப்பதன் மூலம் கம்ப்யூட்டரின் செயல்பாட்டைத் துரிதப்படுத்தலாம்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review