December 28, 2009

பயங்கரவாதத்துக்கு மருத்துவ காரணம்

பயங்கரவாதம், குண்டுவெடிப்பு, துப்பாக்கிச் சூடுகள் போன்றவை ஏற்படுத்தும் அதிர்வலைகள் பயங்கரமானவை. வன்முறைச் செயல்களைத் தடுக்க மருத்துவ ரீதியிலான அணுகுமுறையும் தேவையாகும்.

'மானோ அமைன் ஆக்சிடேஸ்ஏ' என்பது மூளையில் உண்டாகிற ஒரு என்சைமாகும். மூளையில் இந்த என்சைமின் அளவு குறையும் போது மனிதன் வன்முறைச் செயல்களைச் செய்ய தூண்டப்படுகின்றான்.


மூளையில் இந்த என்சைமின் அளவு குறைவதை கார்பன் ஐஐ என்ற ஐசோடோப்பைப் பயன்படுத்தி அளவிட முடியும். வன்முறைச் செயல்களில் ஈடுபடுவோரிடம் இந்த என்சைமின் அளவு குறைவது கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் நடந்த ஆய்வுகளில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளை நோயாளிகளாக கருதி ஒருங்கிணைந்த சிகிச்சை முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்கா மற்றும் பிரிட்டன் விஞ்ஞானிகளின் கூட்டறிக்கை கூறுகிறது.

'வோட்கா'வை விட 'விஸ்கி' உடல் நலத்துக்கு கேடானது : அமெரிக்க விஞ்ஞானிகள்

அமெரிக்க விஞ்ஞானிகள் இது தொடர்பான ஆய்வை மேற்கொண்டனர். இதற்காக தினசரி மது குடிக்கும் 96 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் சிலருக்கு வோட்கா, விஸ்கி என தனித்தனியாக 2 மதுபானங்களும் வழங்கப்பட்டன. மது குடித்த மறுநாள் இவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.


அப்போது விஸ்கி குடித்தவர்கள் தங்களுக்கு பல விதமாக மோசமான உடல் நலக்கேடு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.


தலைவலி, சோர்வு, தாகஉணர்வு மற்றும் வாந்தி வருவது போன்ற உணர்வுகள் இருப்பதாக கூறினர். அதே நேரத்தில் வோட்கா மதுவை குடித்தவர்கள் அது போன்ற அனுபவங்கள் தங்களுக்கு ஏற்பட வில்லை என்று தெரிவித்தனர்.

விஸ்கியில் “கான் ஜெனரல்” என்ற முலக்கூறுகள் உள்ளன. வோட்காவில் அவை இல்லை. எனவே உடல் நலத்திற்கு கேடாக அமைகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் வோட்காவில் சிறிதளவே அசியோன்னசி பால்டி கைடு, டேன்னின்ஸ் என்ற ரசாயன பொருட்கள் கலக்கப்படுகின்றன என்றனர்.

எந்த மதுவாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாக குடிக்கக்கூடாது. நீண்ட நாட்களுக்கு பிறகு அவை உடல் நலத்துக்கு கேடாக அமையும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review