November 25, 2009

வாடிக்கையாளர்கள் வரவேற்பு: முகம் பார்த்து பேசும் செல்போனுக்கு “கிராக்கி”

3ஜி என்று அழைக்கக் கூடிய 3-வது தலைமுறை தகவல் தொழில் நுட்ப வசதியை சென்னை டெலிபோன்ஸ் கடந்த 3 நாட்களுக்கு முன் அறிமுகம் செய்தது. செல்போன் பேசுவரின் முகத்தை மறுமுனையில் உள்ளவர் வீடியோ படம் போல பார்க்கும் வசதி, இண்டர்நெட், சினிமா படம் பார்த்தல், டி.வி., சேனல்கள் பார்த்தல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இதன்மூலம் கிடைக்கின்றன.


சென்னை மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இந்த தொழில் நுட்பம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வசதியை பெற தகுதி யுடைய செல்போன்கள் வைத்திருப்பவர்கள் திட்டத்தில் சேர விரும்பினால் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் மையத்திற்கு சென்று பெறலாம். இதற்குரிய சிம்கார்டு விலை ரூ.59 ஆகும்.

ஏற்கனவே பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் களாக இருப்பவர்களும் இத்திட்டத்தில் சேரலாம். ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு சந்தாதாரர்கள் 3ஜி தொழில் நுட்பத்தை பயன்படுத்த அதற்குரிய கட்டணத்தை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

திட்டம் அறிமுகப்படுத்திய 2 நாட்களில் 700 பேர் 3ஜி இணைப்பை பெற்றுள்ளனர். இதில் 450 பேர் புதிதாக இணைப்பு பெற்றவர்கள். 250 பேர் ஏற்கனவே பி.எஸ்.என்.எல். வாடிக்கை யாளர்களாகும்.


திட்ட அறிமுக சலுகையாக உள்ளூர் அழைப்புகளுக்கு ஒரு நிமிடத்திற்கு 30 பைசாவும், எஸ்.டி.டி. அழைப்புக்கு 50 பைசாவும் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதத்திற்குள் 1 லட்சம் வாடிக்கை யாளர்களை இத்திட்டத்தில் சேர்க்க பி.எஸ்.என்.எல். இலக்காக கொண்டு செயல்படுகிறது.

முகம் பார்த்து பேசும் இந்த வசதி விரைவில் தமிழகம் முழுவதும் அறிமுகப் படுத்தப்பட உள்ளது. முதலாவதாக கோயம்புத்தூர் நகரில் செயல்படுத்தப் படுகிறது.


சுயநினைவுடன் இருக்கும் 23 வருட “கோமா” மனிதர்: டாக்டர்கள் வியப்பு

பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர் ரோம்கோபன் (வயது 46). கடந்த 1983-ம் ஆண்டு இவரது கார் விபத்துக்குள்ளானது. இதைத் தொடர்ந்து அதை ஓட்டிச்சென்ற கோபனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

எனவே, அவர் “கோமா” நிலையை அடைந்தார். உடனே அவரை லண்டனில் உள்ள லியெஜ் நரம்பியல் பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு டாக்டர் ஸ்டீவன் லாரீஸ் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

விபத்து நடைபெற்றதில் இருந்து 23 வருடங்களாக “கோமா” நிலையிலேயே இருந்தார். இந்த நிலையில் கடந்த 2006-ம் ஆண்டு டாக்டர்கள் இவரது உடல் நிலையை “ஸ்கேன்” செய்து பார்த்தனர்.

அப்போதுதான் இவர் “கோமா” நிலையில் இருந்தாலும் சுயநினைவுடன் இருப்பது தெரியவந்தது. விபத்து நடந்ததால் இவரது நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இவரது மூளையில் பாதிப்பு எதுவும் இல்லை. அது நல்ல நிலையில் இருப்பது தெரியவந்தது.



அவர் “கோமா” நிலையில் மயக்கமுற்று இருந்தாலும் டாக்டர்களின் பேச்சுகள் மற்றும் சிகிச்சை முறைகளை அறிந்து இருப்பது தெரியவந்தது. இதை அறிந்த நரம்பியல் சிகிச்சை நிபுணர்கள் வியப்பு அடைந்தனர்.

உடனே படுக்கையில் இருந்த அவரை தற்போது சக்கர நாற்காலியில் உட்கார வைத்துள்ளனர். சக்கர நாற்காலியுடன் விசேஷ கீபோர்டை சேர்த்து கம்ப்யூட்டர் மூலம் தகவல்களை பரிமாறி வருகின்றனர்.

மூளை நன்றாக வேலை செய்வதால் பாதிக்கப்பட்டுள்ள நரம்பு மண்டலத்தை சீரமைக்க சிகிச்சை அளித்து வருகின்றனர். கோபன், உறுதியான மனம் படைத்தவர். தன்னம்பிக்கை உடையவர். அதனால்தான் “கோமா” நிலையில் இருந்தாலும் சுய நினைவுடன் திகழ்கிறார். மருத்துவ உலகில் இது ஒரு அதிசயம் என டாக்டர் ஸ்டீவன் லாரீஸ் தெரிவித்துள்ளார்.

கோபனின் கதையையும் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதையும் புத்தகமாக எழுதி வருகிறார்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review