November 12, 2009

மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த பெரிய சாதனையாக மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 வர இருக்கிறது. கம்ப்யூட்டர் உலகில் தன் தொடுவான எல்லைகளை விரித்து பல புதிய அம்சங்களுடன் இந்த தொகுப்பு வர இருக்கிறது. வழக்கமான பெர்சனல் கம்ப்யூட்டருக்கான ஆபீஸ் தொகுப்புடன் முதல் முறையாக இன்டர்நெட்டில் வைத்துப் பயன்படுத்தும் ஆபீஸ் தொகுப்பாகவும் இது வெளிவர இருக்கிறது. ஆபீஸ் 14 என்ற குறியீட்டுப் பெயருடன் 2006 ஆம் ஆண்டில் இதனைத் தயாரிப்பதற்கான வேலைகள் தொடங்கப்பட்டன. ஆபீஸ் 12 என்ற பெயருடன் தொடங்கப்பட்ட ஆபீஸ் தொகுப்பு வேலைகள் முடிக்கப்பட்டு ஆபீஸ் 2007 தொகுப்பாக வெளியிட்ட பின் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 14 என்று தன் அடுத்த தொகுப்பினைத் தொடங்கியது. (உலக மக்கள் 13 என்ற எண் மீது கொண்டிருக்கும் வெறுப்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்தையும் பற்றிக் கொண்டிருக்கலாம்.)

சென்ற வாரம் அதிகாரபூர்வமாக ஆபீஸ் 2010 குறித்த அறிவிப்பு வெளியானது. முழுமையான தொகுப்பின் பயன்பாடு குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும் அதன் தனித் தன்மைகள், மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பம் போன்றவை சற்று கசியத் தொடங்கின. இந்த ஆபீஸ் 2010 தொகுப்பு இது பயன்படுத்துவோருக்கான தன்மையினை அடிப்படையாகக் கொண்டிருக்கும். அதாவது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் ஈடுபடும் மேல் மட்ட ஆய்வாள்ர்கள் மற்றும் அறிஞர்கள், விற்பனைச் சந்தையில் ஈடுபடும் அலுவலர்கள், மனித வள மேம்பாட்டு பிரிவுகளில் ஈடுபடுவோர் என ஒருவரின் வேலைத் தன்மைக்கேற்ப இந்த ஆபீஸ் தொகுப்பினைச் செயல்படுத்த வழி தரப்பட்டிருக்கும்.

lankasri.com


இந்த தொகுப்புடன் சேர்த்து மைக்ரோசாப்ட் இணைய அடிப்படையில் இயங்கும் ஆபீஸ் தொகுப்பினை வழங்க இருக்கிறது. வெப் பேஸ்டு அப்ளிகேஷன் என அழைக்கப்படும் இத்தொகுப்பில் எக்ஸெல், பவர்பாய்ண்ட், வேர்ட் மற்றும் ஒன் நோட் அப்ளிகேஷன்கள் கிடைக்கும். இவை இயக்கிக் காட்டப்பட்டன. பிரவுசரின் வழியாகச் சென்று இந்த அப்ளிகேஷன் தொகுப்புகளை இயக்கி பைல்களை நாம் தயாரிக்க முடியும். இந்த வெப் அப்ளிகேஷன்கள் சபாரி, பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வழியாக இயங்கும். இதன் மூலம் ஆபீஸ் தொகுப்பினைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமின்றி, இந்த மார்க்கட்டில் இது போன்ற அப்ளிகேஷன்களை மைக்ரோசாப்ட்டிற்கு எதிராகக் கொண்டு வரும் கூகுள் டாக்ஸ் போன்ற மற்ற வெப் அப்ளிகேஷன் புரோகிராம்களுக்குப் போட்டியாகவும் இது இருக்கும்.

lankasri.com

ஆபீஸ் தொகுப்பு 2010 இரு வகைகளில் தரப்பட இருக்கிறது. 32 பிட் அமைப்பிலும் 64 பிட் அமைப்பிலும் இயங்கும் வகையில் இரண்டு வகை தரப்படும். ஆபீஸ் தொகுப்பு ஒன்று இவ்வாறு இரண்டு வகைகளுக்கும் தரப்படுவது இதுவே முதல் முறையாக இருக்கும். இதன் வேர்ட் தொகுப்பின் புதுமையாக இமேஜ் எபக்ட்ஸ் கூட்டாகத் தரப்படுகிறது. வேர்ட் மற்றும் பிற ஆபீஸ் புரோகிராம்களில் பேஸ்ட் பிரிவியூ என்ற ஒட்டுமுன் காட்சி தரப்படுகிறது. இதன் மூலம் பேஸ்ட் பயன்படுத்துபவர்கள் அது எப்படி தோற்றமளிக்கும் என்பதனை அறிந்து தங்கள் விருப்பத்திற்கேற்ப பல பேஸ்ட் முறைகளைச் சோதனை செய்து பார்த்து செயல்படலாம்.

எக்ஸெல் தொகுப்பில் ஸ்பார்க்லைன்ஸ் (Sparklines) என்றொரு வசதி தரப்படுகிறது. ஸ்ப்ரெட் ஷீட் ஒன்றில் காணப்படும் செல் ஒன்றில் அமையும் வகையில் உள்ள சிறிய கிராப் ஆக இது இருக்கும். பவர்பாய்ண்ட் தொகுப்பில் வீடியோ எடிட்டிங் வசதிகள் தரப்படுகின்றன. பிரசன்டேஷன் ஒன்றின் வீடியோ காட்சி எப்படி இருக்கும் என்பதனை இந்த தொகுப்பின் மூலமே அறிந்து கொள்ளலாம். இதில் வாய்ஸ் அனொடேஷன்ஸ் இணைந்து இருக்கும். அவுட்லுக் இமெயில் மற்றும் காலண்டர் வசதிகளில் ஜிமெயிலில் உள்ளது போல கான்வெர்சேஷன் வசதி கிடைக்கிறது. இதற்கும் மேலாக "Ignore thread" ஒன்று தரப்படுகிறது. இதன் மூலம் மெசேஜைப் பார்த்துவிட்டு அதனை அலட்சியப்படுத்தி வைக்கும் வசதி கிடைக்கிறது. இதில் “மெயில் டிப்ஸ்” வசதி உள்ளது. இது டாகுமெண்ட் ஒன்றை இமெயில் மூலம் அனுப்புகையிலும் பலருக்கு ஒரே மெசேஜை அனுப்புகையிலும் அது நாகரிகமாக இருக்க வேண்டியதற்கான டிப்ஸ்களை அளிக்கிறது.

lankasri.com

ஆபீஸ் 2010 உடைய ஒவ்வொரு அப்ளிகேஷன் தொகுப்பிலும் பைல் கையாளும் விதங்களில் கூடுதல் வசதிகள் தரப்படுகின்றன. பைல் சேவிங், பைல் பிரிண்டிங் போன்ற பணிகளுக்கு ஒரு பேக் ஸ்டேஜ் வியூ அளிக்கப்படுகிறது. இதன் மூலம் மேற்கொள்ளப்படும் வேலை எப்படி அமையும் என முன் கூட்டியே கண்டு கொள்ளலாம். ஒரே டாகுமெண்ட்டை ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் எடிட் செய்திடலாம். இதனால் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஆசிரியர்களாக இருந்து தயாரிக்கப்படும் பல பகுதிகள் அடங்கிய ஒரு டாகுமெண்ட்டை ஒரே நேரத்தில் அதன் ஆசிரியர்கள் அனைவரும் கையாளக் கூடிய வசதி கிடைக்கிறது.

முன்பு போலின்றி இந்த ஆபீஸ் தொகுப்பு மூன்று வகைகளில் மட்டுமே கிடைக்கிறது. ஆபீஸ் ஹோம் மற்றும் மாணவர்க்கான பதிப்பு ஒன் நோட், வேர்ட், எக்ஸெல் மற்றும் பவர்பாய்ண்ட் தொகுப்புகளுடன் கிடைக்கும். ஆபீஸ் ஹோம் மற்றும் பிசினஸ் தொகுப்பில் மேலே குறிப்பிட்டவற்றுடன் அவுட்லுக் இணைந்திருக்கும். ஆபீஸ் புரபஷனல் தொகுப்பில் மேலே சொல்லப்பட்ட அனைத்து அப்ளிகேஷன் புரோகிராம்களுடன் அக்செஸ் டேட்டா பேஸ், மற்றும் பப்ளிஷர் பேஜ் லே அவுட் புரோகிராம்கள் கிடைக்கும்.

வர்த்தகர்களுக்கான தொகுப்பினைப் பார்க்கையில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் ஸ்டாண்டர்ட் தொகுப்பு பயனளிக்கும். அதிக எண்ணிக்கையில் விற்பனைக்குப் பெறும் வர்த்தக வாடிக்கையாளர்களுக்கான பதிப்பாக இது இருக்கும். இதில் எக்ஸெல், அவுட்லுக், பவர்பாய்ண்ட், வேர்ட், ஒன் நோட் மற்றும் பப்ளிஷர் கிடைக்கும். இறுதியாக உள்ள இரண்டு அப்ளிகேஷன்களும் இந்த வகை பதிப்பில் புதிதாக இப்போது சேர்க்கப்படுகின்றன. ஆபீஸ் ஸ்டாண்டர் பதிப்பிற்கான லைசன்ஸ் பெற்றவர்கள் பிரவுசர் அடிப்படையிலான பதிப்பினைக் கையாளும் உரிமையினைப் பெறுவார்கள்.

lankasri.com


ஆபீஸ் 2007ல் இருக்கும் ஆபீஸ் பட்டனுக்குப் பதிலாக மெனு பட்டன் தரப்படும். இதன் மூலம் முழு விண்டோ பைல் மெனுவினைப் பெறலாம். இதனை பேக் ஸ்டேஜ் வியூ என மைக்ரோசாப்ட் அழைக்கிறது. இதன் மூலம் பிரிண்டிங் மற்றும் பைல் ஷேரிங் பணிகளை எளிதாகக் கையாள முடியும். ஆபீஸ் 2010 குறித்த விஷயங்கள் வெளியானவுடன் பலர் விதம் விதமான சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். அவற்றை மைக்ரோசாப்ட் தெளிவாகத் தீர்த்து வைத்துப் பல கூடுதல் தகவல்களைத் தந்துள்ளது. அவற்றை இங்கு காணலாம்.

பெர்சனல் கம்ப்யூட்டர் அடிப்படையிலான ஆபீஸ் தொகுப்பும் இன்டர்நெட் அடிப்படையிலான ஆபீஸ் தொகுப்பும் ஒரே செயல்பாட்டுடையனவாக இருக்குமா? நிச்சயமாக இல்லை. இன்டர்நெட் வழி பயன்பாட்டிற்குத் தரப்படும் தொகுப்பில் வேர்ட், எக்ஸெல், பவர்பாய்ண்ட் மற்றும் ஒன் நோட் மட்டுமே இருக்கும். மேலும் இவற்றைப் பயன்படுத்தும் எல்லைகளும் சுருக்கமாகவே இருக்கும். வெப் அடிப்படையிலான ஆபீஸ் 2010 தொகுப்பினால் பின் என்ன பயன்? இது முற்றிலும் பிரவுசர் வழியாகச் சென்று இயக்கப்படும் தொகுப்பாகவும் குறைந்த அளவே வசதி கொண்டதாகவும் இருக்கும். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் ஒரு டாகுமெண்ட்டை பலர் எடிட் செய்திடலாம்.

வெப் அடிப்படை ஆபீஸ் தொகுப்பில் உருவாகும் பைல்களை ஆன்லைனிலேயே சேவ் செய்து வைக்க முடியுமா? முடியும். ஆனால் அதற்கு இலவசமாகக் கிடைக்கும் விண்டோஸ் லைவ் ஸ்கை டிரைவ் அக்கவுண்ட் ஒன்றினைப் பெற்றிருக்க வேண்டும். வெப் ஆபீஸ் தொகுப்பு முற்றிலும் இலவசமாகக் கிடைக்குமா? ஆம், முற்றிலும் இலவசமாகவே இது கிடைக்கும். இலவச விண்டோஸ் லைவ் ஐ.டி. மூலம் இதனைப் பெற முடியும். வெப் ஆபீஸ் தொகுப்பில் அனைத்தும் கிடைக்கிறது என்றால் நான் ஏன் என் பெர்சனல் கம்ப்யூட்டரில் ஆபீஸ் தொகுப்பு 2010 ஐ இன்ஸ்டால் செய்திட வேண்டும்?

lankasri.com

வெப் ஆபீஸ் தொகுப்பு குறிப்பிட்ட ஒரு எல்லை வரையிலான வசதிகளையே தரும். நான்கு அடிப்படை புரோகிராம்களே இதில் கிடைக்கும். கூடுதல் வசதிகளையும் நவீன் தொழில் நுட்ப வசதிகளையும் பயன்படுத்த பெர்சனல் கம்ப்யூட்டர் அடிப்படையிலான ஆபீஸ் தொகுப்பினை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். இதிலும் ஆபீஸ் 2007ல் உள்ளது போன்ற ரிப்பன் மெனு இருக்குமா? ஆம். இதிலும் அதன் பயன்பாடு இருக்கும். ஆனால் இன்னும் கூடுதலாக நீட்டிக்கப்பட்டு இருக்கும். ஆபீஸ் தொகுப்பு அனைத்தையும் இதன் மூலம் பெற்றுக் கையாள முடியும். பொதுவான வேலைகளை இப்போது ரிப்பன் மெனுவில் இணைக்கவும், தேவையற்றவற்றை நீக்கவும் முடியும்.

வேர்டில் என்ன புதுமை? பேஸ்ட் பிரிவியூ ஆப்ஷன், டெக்ஸ்ட்டுக்கு ஸ்டைல் அமைப்பதில் கூடுதல் வசதி, வேர்ட் புரோகிராமினை விட்டு வெளியேறாமல் ஸ்கிரீன் ஷாட்களை இணைக்கும் வசதி, இமேஜ் எடிட் செய்வதற்கான புதிய டூல்ஸ் எனப் பல புதுமைகள் உள்ளன. அவுட்லுக்கில் என்ன புதுமை? ஜிமெயிலில் உள்ளது போல சார்ந்த தொடர்பான இமெயில்களை ஒரு குழு உரையாடல் போல வைத்துப் பார்க்கும் வசதி தரப்படுகிறது. பொதுவான வேலைகளை மேற்கொள்ள ஷார்ட் கட் வசதி, காண்டாக்ட் லிஸ்ட்டுக்கு இன்பாக்ஸிலிருந்தே செல்லும் வசதி, ஆன் டிமாண்ட் மொழி பெயர்ப்பு டூல்ஸ் ஆகியவை புதிய வசதிகளாகும். எக்ஸெல் என்ன தருகிறது? ஸ்பார்க்லைன் என்ற (மேலே விளக்கப்பட்டுள்ளது) சிறிய சார்ட் இணைக்கும் வசதி. டேபிள் அமைப்பு மற்றும் கையாள்வதில் கூடுதல் வசதி மற்றும் டேட்டாக்களைக் கையாள்வதில் கூடுதல் வசதிகள் ஆகியவை உள்ளன.

lankasri.com

பவர் பாய்ண்ட்டில் என்ன புதுமை? ஆச்சரியப்படத்தக்க புதுமை இதில்தான் உள்ளது. பலவகையான பார்மட் வீடியோக்களை இதில் இணைக்கலாம்; இணைத்த பின் இத்தொகுப்பில் இருந்தே அவற்றை எடிட் செய்திடலாம். முதல் முறையாக உங்கள் ஸ்லைட்ஷாவினை ஒரு முழு விண்டோஸ் மீடியா பைலாக மாற்றிப் பெறலாம். உங்களுக்கு ஆபீஸ் 2010 தொகுப்பினை அது முழுமையாக வெளிவருவதற்கு முன் சோதனை செய்து பார்க்க ஆவலாக உள்ளதா? இதற்கென மைக்ரோசாப்ட் ஒரு தளத்தினை உருவாக்கியுள்ளது.சென்று உங்கள் இமெயில் முகவரியினைப் பதிந்து வைத்துக் கொள்ளுங்கள்.


தள முகவரி : இங்கே கிளிக் செய்யங்கள்

திடுக்கிடும் ஒரு தகவல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!



நீங்களே பாருங்கள் தமிழர்களை மிதிக்கும் செயலாக அதாவது இந்து தமிழர்களை மேலைத்தைய நாட்டவர்கள் இவ்வாறெல்லாம் எம்மை காயப்படுத்த வேதனைப்படுத்த முடியுமோ அவ்வாரெல்லாம் செய்கின்றனர். இந்த மொடல் மனிதன் அணிந்திருக்கும் உள்ளாடையில் இந்து மக்களின் கடவுளான லக்சுமி அவர்களின் உருவப்படம் பொறித்து விற்க்கப்படுகின்றதாம். இந்துமக்களின் அனைத்து கடவுள்களின் படங்களும் இவ்வறுதனாம் விற்க்கப்படுகின்றதாம். இந்த தயாரிப்பு மேலைத்தைய நாடுகளில் அமோகவரவேற்பை பெற்டுள்ளதாம். தமிழ் மக்களே இதை பார்த்த நீங்களே இதற்கு ஓர் முடிவு கட்ட வேண்டும். அவர்கள் குழந்தையையும் கில்லிவிட்டு  தொட்டிலையும் ஆட்டிவிடுகின்றார்கள். தமிழர்களே துயில் எழுங்கள்.

விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட

கோப்புகளை சேமித்த இடம் தெரியாமல் தேடுவது வழக்கமான ஒன்றுதான். விண்டோஸ்சில் இது எளிதான வேலை அல்ல. நீண்ட நேரம் பிடிக்கும். ஆனாலும் தெளிவான முடிவுகளை தருமா என்றால் இல்லை என்பதுதான் பதில்.

விண்டோஸ்சில் கோப்புகளை தேடுவதற்கு என்று ஒரு இலவச மென்பொருள் இருக்கிறது. சில நொடிகளில் சரியான முடிவுகளை தந்து விடும். நன்றாக வேலை செய்கிறது. மேம்படுத்த பட்ட தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இருப்பதால் கண் இமைக்கும் நேரத்தில் முடிவுகளை தருவதாக அதை வடிவமைத்தவர் தெரிவிக்கிறார்.

முதலில் உபயோகிக்கும் போது கோப்புகளை இன்டெக்ஸ் செய்வதற்கு சற்று நேரம் பிடிக்கும். அப்புறம் மின்னல் வேகம்தான். இதை பற்றி மேலும் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை.

lankasri.com



இங்கே சென்று தரவிறக்கி உபயோகித்து பாருங்கள். நீங்களே இதன் வேகத்தை உணருவீர்கள்.

அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க!



ஆரோக்கிய வாழ்க்கை முறை, தினசரி தவறாத உடற்பயிற்சி என்றுள்ள ஒருவருக்கு `இதயநோய் பிரச்சினை ஏற்படுமா?’ என்று கேட்டால் நீங்கள் `இல்லை’ என்றுதான் சொல்வீர்கள். ஆனால் அதைம் தாண்டி இதய பாதிப்பு ஏற்படலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைக்கு மாற்றாக மிக அதிகமான உடற்பயிற்சியில் ஈடுபடுவதும், போதுமான தூக்கமின்மைம் கூட இதய பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதயத்துக்குச் சிக்கலை ஏற்படுத்தும் விஷயங்கள் என்னென்ன? அவற்றிலிருந்து நாம் நம்மைத் தற்காத்துக்கொள்வது எப்படி?

மன அழுத்தம்

“இன்றைக்கு மாநகர வாழ்க்கைமுறை மனஅழுத்தத்துக்கு வழிவகுப்பதாக உள்ளது. பலரிடம் மனஅழுத்த பிரச்சினை கண்டுபிடிக்கபடாமலே போகிறது” என்கிறார், மும்பை நானாவதி மருத்துவமனையைச் சேர்ந்த இதய மருத்துவ நிபுணர் ராஜிவ் பகவத். “நீண்ட தூர பயணம், ஒழுங்கற்ற நேர முறைகளுடன், சுற்றுச் சூழல் மாசுபாடும் ஆரோக்கியக் குறைவை ஏற்படுத்துகின்றன” என்கிறார் அவர்.

`இதயநோய் பிரச்சினை ஏற்படும் வயதும் குறைந்து கொடே வருகிறது’ என்று மருத்துவர்கள் `பகீரிட’ச் செய்கின்றனர். பாரம்பரியமாக இதயநோய் பிரச்சினை இல்லாத ஒரு 28 வயது இளைஞர் தொடர் புகைபழக்கத்தின் காரணமாகவே இறந்து விட்டார் என்கிறார், மற்றொரு மருத்துவரான சந்தர் வஞ்சானி. எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத மற்றொரு நபரும் மனஅழுத்தம் காரணமாக மாரடைப்புக்கு உள்ளாக நேரிட் டது என்று அவர் கூறுகிறார். “கடந்த இரண்டு வார காலத்தில் மட்டும், ஒழுங்கில்லாத கொலஸ்ட்ரால் அளவு, சர்க்கரை நோய்- உயர் ரத்தஅழுத்த பிரச்சினை தொடர்பாக, 25 முதல் 39 வயதுக்கு உட் பட்ட 10 பேர் என்னை வந்து பார்த்திருக் கின்றனர்” என்கிறார் சந்தர். மனஅழுத்தத் துக்கு உள்ளாகாமல் நம்மை நாமே காத்துக் கொள்வதன் முலம் இதயத்தைம் காக்க லாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
போதுமான தூக்கம்

மிகவும் `பிசி’யாக இருப்பதற்கு, அதாவது `ஜெட்’ வேக வாழ்க்கைமுறைக்கு பலியாவது தூக்கம்தான். `நான் சில மணி நேரம் தூங்கினால் போதும், தொடர்ந்து வேலையில் ஈடுபட ஆரம்பித்துவிடுவேன்’ என்று பெருமையடித்துக் கொள்ளாதீர்கள் என்கிறார்கள் மருத்துவர்கள். சீரான இதயத் துடிப்பு மற்றும் இயல்பான ரத்த அழுத்தத்துக்கு நல்ல தூக்கம் அவசியம். “இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றைச் சீராக பராமரப்பிப்பதற்கு உடம்பு அதன் சொந்த ஒழுங்குமுறை அமைப்பைக் கொடிருக்கிறது. போதுமான தூக்கமின்மை, `உயிர்க் கடிகாரத்தை’ பாதிக்கிறது. எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும் அதை ஈடுகட்ட முடியாது” என்று இதய மருத்துவர் பகவத் கூறுகிறார்.
அதிகமாக உடற்பயிற்சி செய்வது

உடம்பைக் கச்சிதமாக வைத்திருப்பது நல்லதுதான். ஆனால் அதிகமான உடற்பயிற்சி, நன்மையை விட அதிகம் தீமையே பயக்கும் என்று இதய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். “நம்மை நாமே தடித்துக்கொள்ளும் ஒரு முறையாக உடற்பயிற்சியை வைத்துக் கொள்ளக் கூடாது” என்கிறார் யோகா நிபுணரும், உணவியல் வல்லுநருமான ருஜுதா. “அமைதியான மனநிலையில் நீங்கள் தியானம் செய்யும்போது அது அற்புதமாக பலன் தரும். அதை போல ஓய்வான உடம்புக்குத்தான் உடற்பயிற்சி நல்லது” என்கிறார் ருஜுதா.

நீங்கள் உங்கள் உடம்புக்கு ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய மிக பெரிய தீங்கு, ஏற்கனவே தளர்வாக உள்ள நிலையில் மேலும் கடுமையாக உடற்பயிற்சி செய்வது. “போதுமான தூக்கம் இல்லாதவர்களுக்கு உள்உடலியல் செயல்பாட்டு வேகம் குறைகிறது. எனவே அவர்களால் எடையையும் குறைக்க முடியாது. மாறாக அவர்கள் `பொதுபொது’ என்று ஆகிவிடுவார்கள்” என்று ருஜுதா எச்சரிக்கிறார்.

முக்கியமான விஷயம், வாழ்க்கை, வேலை, உடற்பயிற்சி எல்லாவற்றுக்கு இடையிலும் ஒரு சமநிலையை ஏற்படுத்திக் கொள்வதுதான். எல்லாவற்றுக்கும் மேலாக முக்கியமானது உறக்கம். நவீன வாழ்க்கை முறை உங்கள் உடல்நிலையை பாதிக்க அனுமதிக்காதீர்கள்.

சென்னை `முதலிடம்’

நாடு தழுவிய அளவில் 8 ஆயிரத்து 469 பேரிடம் மேற்கொள்ளபட்ட ஓர் ஆய்வில், 49.1 சதவீத இந்தியர்களுக்கு இதயநோய் ஏற்படுவதற்கான உயர் அபாயம் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களில், 30 முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் (1598 பேர்) இருபது தெரிய வந்திருக்கிறது.

அதிலும் அபாய பட்டியலில் முதலில் இருப்பவர்கள் நமது சென்னைக்காரர்கள்தான் (53.8 சதவீதம்). அடுத்த இடம் மும்பைக்கு (49.6 சதவீதம்). இந்நிலைக்கான காரணங்களாக மருத்துவர்கள் கூறுவது, நீண்ட வேலைநேரம், பயணம், ஆரோக்கியமற்ற உணவு முறை, போதுமான உடற்பயிற்சி இல்லாத நிலை போன்றவை ஆகும். கொஞ்சம் கவனம் எடுத்து பொறுப்பாக நடந்துகொண்டால் போதும், இதயம் காக்கலாம் என்கின்றனர் இதய நிபுணர்கள்.

எச்ஐவி நோயின் அறிகுறிகள்

எச்ஐவி நோய் பாதித்தவர்களுக்கு கீழ் கூறும் அறிகுறிகள் காணப்படும். ஆனால் இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் அனைவருக்கும் எச்ஐவி நோய் இருக்கும் என்பது அர்த்தமாகாது.

எச்ஐவி பாதிப்புக்குள்ளான பலரிடம் ஆரம்பநிலையில் அதற்கான அறிகுறிகள் தெரிவதில்லை. இருந்தபோதிலும் சிலரிடம் இது காய்ச்சல் மூலம் வெளிப்படுகிறது. அதுவும் இந்த வைரஸ் மூன்று முதல் ஆறு வாரங்களுக்குப் பிறகே தெரிகிறது.

தீவிர எச்ஐவி பாதிப்பினால் ஏற்படும் உடல் நலக்குறைவு, காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, குமட்டல், வயிற்றுப்போக்கு, நெறிகட்டுதல் (அக்குள், கழுத்து கட்டி) போன்றவற்றினைத் தோற்றுவிக்கின்றது.

இந்த அறிகுறிகள் கூட எச்ஐவி தொற்றிய ஒரு சில நாட்களில் தெரிவதில்லை. மேலும் இது, ஆரம்பநிலையில் வேறு ஏதோ ஒரு வைரஸ் என்று தவறாகவே இனங் காணப்படுகிறது. எனவே ஆரம்ப நிலையில் எச்ஐவி தொற்றைக் கண்டுபிடிப்பது கடினமாகும்.

தொற்று ஏற்பட்ட முதல் மூன்று மாதங்களில் வைரசின் எண்ணிக்கை கணக்கற்றுப் பெருகி, உடலின் பல பாகங்களிலும் பரவுகின்றன. குறிப்பாக மூட்டுக்களில் உள்ள திசுக்கள் இதனால் பாதிக்கின்றன.

இந்நிலையில் அத்தொற்று, பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகப் பரவிவிடுகின்றது.
உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகள் (வெள்ளை அணுக்கள்) அனைத்தும் ஒன்று திரண்டு போராடத் தொடங்கும் போதுதான் எச்ஐவியின் வேகம் சற்று குறைகிறது.

எச்ஐவி தொற்றின் தீவிரமான அறிகுறிகள் தெரிய பல வருடங்கள் ஆகின்றன. பெரியவர்களுக்கு எச்ஐவி தொற்றிய பிறகு அது வெளித் தெரிவதற்கு 10 வருடங்களுக்கும் மேல் ஆகிறது. எச்ஐவி தொற்றோடு பிறக்கும் குழந்தைகளுக்கு அது தெரிய இரண்டு வருடங்கள் ஆகின்றன. இவ்வாறு அறிகுறிகள் தெரிவது மனிதருக்கு மனிதர் மாறுபடும்.

"எய்ட்ஸ்" வெளியில் தெரிய ஆரம்பித்த உடன் பாதிக்கப்பட்டவர் அடிக்கடி நோய் வாய்ப்படுவர். உடல் எடை குறைவு, தொடர் காய்ச்சல், வயிற்றுப்போக்கு ஆகியன எய்ட்ஸின் முக்கியமான அறிகுறிகளாகும். மேலும் எய்ட்ஸ் நோயாளிகள், காசநோய், பூஞ்சான் நோய் தொற்று, சில வகைப்புற்று நோய்கள், நிமோனியா போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

பொதுவாக எய்ட்ஸ் நோய் பாதித்தவர்களுக்கு வெள்ளை அணுக்கள் குறைவதால் எதிர்ப்புசக்தி குறைகிறது. இதனால் எளிதாக எந்த நோயும் எய்ட்ஸ் நோயாளியைத் தாக்குகிறது. எய்ட்ஸ் நோய் பாதித்தவர்கள் பெரும்பாலும் ஏதாவது ஒரு தொற்று நோயாலோ அல்லது பெரிய நோய்த் தாக்குதலாலோத் தான் எளிதில் மரணமடைகிறார்கள்.

எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் வாழ்ந்து, சுகாதாரமாக உடலைப் பேணி வந்தால் எய்ட்ஸ் நோயாளிகளும் நலமாக பல ஆண்டுகள் உயிர் வாழலாம் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

அழியும் நிலையில் அரியவகை கடல் குதிரைகள்

கண்களை எந்தப் பக்கமும் திருப்புதல், குதித்து குதித்து ஓடும் ஒருவகை மீன் இனம், குதிரை போன்ற முக அமைப்பு, குரங்கு போன்ற வால், ஆண் இனங்கள் இனப்பெருக்கம் செய்தல் இப்படியாக பல்வேறு சிறப்புகளையுடைய அரியவகை கடல்வாழ் உயிரினமான கடல் குதிரைகள் பல்வேறு காரணங்களால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருவதை அரசு தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இயற்கை வளங்கள் அதிகம் நிறைந்த மன்னார் வளைகுடா கடல் பகுதி தென் தமிழகத்தில்தான் உள்ளது. இங்கு உலகிலேயே வேறு எங்கும் இல்லாத சுமார் 3600 வகையான கடல்வாழ் உயிரினங்கள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த அரியவகை உயிரினங்களில் கடற்குதிரை என்னும் ஒருவகை மீன் இனமும் ஒன்று. இதன் தலையானது குதிரையின் தலைபோன்று இருப்பதால், இதற்கு கடற்குதிரை எனப் பெயர் ஏற்பட்டதாம்.

ராமேசுவரத்திலிருந்து தூத்துக்குடி வரையுள்ள ஆழம் குறைந்த கடல்பகுதியில் காணப்படும் இக் கடல் குதிரைகளின் வால் குரங்கின் வால் போல நீண்டும்,சுருண்டும் காணப்படுகிறது. இந்த வாலின் மூலம் கடற்தாவரங்கள், கடற்பஞ்சுகள் போன்றவற்றை பற்றிக்கொண்டு இருக்குமாம்.

உடலமைப்பை பொருத்தவரை நன்கு நீண்டு வளையங்களால் அமைந்தது போன்றும் வாய் நீண்டு குழல் போலவும் மார்புப் பகுதி சற்று அகன்று விரிந்தும் காணப்படுகிறது. உடலில் பக்கவாட்டுக் கோடுகள் மற்றும் நீண்ட புள்ளிகள் தென்படுகின்றன. சுமார் 6 செ.மீ முதல் 17 செ.மீ வரை நீளமும் எடை 4 கிராம் முதல் 14 கிராம் வரையும் இருக்கிறது.

முதுகுத் துடுப்பினைப் பயன்படுத்தி மெதுவாக நீந்தியும் பெரும்பாலும் குதித்துக் குதித்தும் செல்கின்றன. பிற விலங்குகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள கடற் தாவரங்களுக்குள் மறைந்து கொள்கின்றன. கண்கள் சிறிதாக இருந்தாலும் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் திருப்பிக் கொள்ளும் வசதியுடையதாகவும் உள்ளது. தனக்குத் தேவையான மிதவை நுண்ணுயிரிகளை உறிஞ்சி வடிகட்டி உண்ணும் தன்மையுடையது.

பெண் கடற்குதிரைகள் தங்களின் முட்டைகளை (200) ஆண்களின் வால் பகுதியில் உள்ள இனப்பெருக்கப் பைகளில் விட்டுவிடும். அதனை ஆண் கடற்குதிரைகள் கங்காரு போல நன்கு பேணி ஆறு வாரங்கள் பாதுகாத்து குஞ்சுகளாகப் பொரிக்கின்றன. குஞ்சுகளின் எண்ணிக்கையும் 50 முதல் 100 வரை இருக்கும். பிறக்கும் குஞ்சுகளின் நீளம் ஏறத்தாழ ஒரு செ.மீட்டராக இருந்தாலும் பெற்றோரின் பாதுகாப்பு அதிகமாகவே இருக்கும்.

பல்வேறு சிறப்புகளை உடைய இந்த அரிய வகை கடல்வாழ் உயிரினத்தின் விற்பனை விலை கிலோவுக்கு ரூ. 2000 முதல் ரூ. 5000 வரை உள்ளது. சிங்கப்பூர், சீனா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவற்றின் மூலம் ருசி மிகுந்த சாறு வகைகளும், மருத்துவப் பொருள்களும் தயாரிக்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு உண்டாகும் கக்குவான் இருமலுக்கு இதைப் பயன்படுத்துகின்றனர். உலர்ந்த கடற்குதிரையை வறுத்து அதன் தூளை தேனில் கலந்து குழந்தைகளுக்கு மருந்தாகக் கொடுக்கின்றனர். தேங்காய் எண்ணெயில் கலந்து வெட்டுக் காயங்களுக்கும் இப் பகுதி மக்கள் உபயோகிக்கின்றனர்.

ஆஸ்துமாவுக்கும் சிறந்த மருந்தாக இருப்பதால், உலக அளவில் இது அதிகமாகத் தேவைப்படுகிறது.

கடலுக்கடியில் சங்கு மற்றும் கடல் அட்டை போன்றவற்றை எடுப்போர் இதனையும் பிடிக்கின்றனர். கடலுக்குள் கடல் தாவரங்கள் உள்ள பகுதிகளுக்குள் மூழ்கி கடற்குதிரைகளையும் கைகளால் சேகரிக்கின்றனர். சுமார் 6 முதல் 10 மீனவர்கள் குறைந்தது 3 மணி நேரமாவது இதனைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபடுவதால், இந்த அரியவகை உயிரினம் கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து வருகிறது.

ஒரு படகுக்கு ஒரு நாளைக்கு 120 முதல் 350 கடற்குதிரைகள் வரை பிடிக்கப்படுகின்றன.

இருக்கும் சிலவற்றையாவது அழிவிலிருந்து பாதுகாக்க அழிவுதரும் வலைகள் பயன்படுத்துவதை அரசு தடுக்க வேண்டும்.

இவற்றை பிடிப்பவர்கள் பற்றிய தகவல் தருவோருக்கு அரசு ரகசிய ஊக்கத்தொகையும் வழங்கலாம். இது போன்ற அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் உள்ள கடல்பகுதியில் அரசு மிதவை வேலிகளையும் அமைக்கலாம். இல்லையேல் இந்த அரியவகை உயிரினம் இனிவரும் இளைய சமுதாயத்துக்கு என்னவென்றே தெரியாமல் போய்விடும்.

பாக்டீரியாக்களின் ரைபோசோம்கள்

ரைபோசோம்கள் என்பவை மனித செல்களில், புரதச்சத்தை தயாரிக்கும் தொழிற்சாலைகளாக செயற்படுகின்றன. மனித செல்களில் இருக்கும் மரபணுக்கள்(டி.என்.ஏ), உயிர்த்தன்மையின் அடிப்படை கட்டமைப்பை தம்முள் கொண்டிருக்கின்றன.

இந்த கட்டமைப்பு தகவல்களை பயன்படுத்தி உயிர்வாழும் புதிய கலங்களை உருவாக்கும் பணியை இந்த ரைபோசோம்கள் செய்கின்றன.

இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரைபோசோம்களின் அடிப்படை கட்டமைப்பை, அணு அணுவாக பிரதி எடுத்த செயற்பாட்டுக்காகவே, இந்த மூன்று விஞ்ஞானிகளுக்கும் இந்த ஆண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டிருக்கிறது.

இவர்களின் இந்தப் பங்களிப்பு காரணமாக, இன்றைய மருத்துவ சிகிச்சையில் பயன்படும் பல்வேறு உயிர்காக்கும் ''ஆண்டிபயாடிக்ஸ்'' எனப்படும் நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளை உருவாக்க முடிந்திருக்கிறது.

இத்தகைய ரைபோசோம்களின் செயற்பாடுகள் இல்லாமல் பாக்டீரியாக்கள் உயிர்வாழ முடியாது. இத்தகைய பாக்டீரியாக்களின் ரைபோசோம்களை குறிப்பிட்டு தடுக்கும் வகையில், அவற்றின் அணுக்கட்டமைப்பை இவர்கள் முழுமையாக பிரதியெடுத்ததன் பயனாக, பல் வேறு நோய்களுக்கு புது வகையான சிகிச்சை முறைகள் உருவாகியிருக்கின்றன.

ஃபேஸ்புக்கில் பெண்களின் ஆதிக்கம்

சமூக வலைப்பின்னல் தளங்களில் பெண்களின் ஆட்சி நடக்கிறது.அதாவது ஃபேஸ்புக் போன்ற‌ சமூக வலைப்பின்னல் தளங்களை பயன்படுத்தும் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் உள்ளனர் என்று பொருள்.

தகவல்கள் அழகானது (இன்பர்மேஷன் ஈஸ் பியூட்டிபுல்) என்னும் பெயரில் இணையதளம் இந்த தகவலை வெளியிட்டுள்ள்து.

தகவல்களை தகவல்களாக பார்க்காமல் அவற்றை காட்சி ரீதியாக உருவகப்படுத்திக்கொண்டு பார்த்தால் தகவல்கள் உணர்த்தும் பொருளை சரியாக புரிந்து கொள்ள முடியும் என்று கருதுபவர்கள் இருக்கின்ற‌னர்.இப்ப‌டி காட்சி ரிதியாக பார்பது மிகவும் சுவாரஸியத்தை அளிக்க கூடியதாகவும் கருதப்படுகிறது.

காட்சிரீதியாக‌ த‌க‌வ‌ல்க‌ளை காணும் முறை இன்போகிராபிக்ஸ் என்னும் பெய‌ரில் அழைக‌ப்ப‌டுகிற‌து. தமிழில் தகவல் சித்திரம் என்று வைத்துக்கொள்வோமே.இவ்வாறு இண்டெர்நெட் தொட‌ர்பான‌ ப‌ல‌ அழ‌கிய‌ த‌க‌வ‌ல் சித்திர‌ங்க‌ள‌ உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.இத்த‌கைய‌ சித்திர‌ங்க‌ளை உருவாக்குவ‌தில் புக‌ழ் பெற்ற‌ க‌லைஞ‌ர்க‌ளும் இருக்கின்ற‌ன‌ர்.

இந்த‌ பிரிவில் பிர‌சித்திப்பெற்ற‌ இணைய‌த‌ள‌ங்க‌ளும் உள்ள‌ன‌.மேலே சொன்ன‌ த‌ள‌ம் இந்த‌ வ‌கையை சேர்ந்த்து தான்.ப‌க்க‌ம் ப‌க்க‌மாக‌ எழுதிக்கொண்டிராம‌ல் சொல்ல‌ வ‌ரும் விஷ‌ய‌த்தை அழ‌காக‌ ஒரு த‌க‌வ‌ல் சித்திர‌த்தின் மூல‌ம் காட்சி ரீதியாக‌ சொல்லி விடுவ‌து தான் இந்த‌ தள‌த்தின் த‌னிச்சிற‌ப்பு.

அழகான‌ ப‌ட‌ங்க‌ளின் மூல‌ம் இந்த‌ த‌ள‌த்தில் சுவையான‌ ச‌ங்க‌திக‌ளை தெர்ந்துகொள்ள‌ முடியும்.

இந்த‌ தள‌த்தில் ச‌மீப‌த்தில் ச‌மூக‌ வ‌லைப்பின்ன‌ல் த‌ள‌ங்க‌ளின் ப‌ய‌ன்பாட்டை விவ‌ரிக்கும் த‌க‌வ‌ல் சித்திர‌ம் வெளியிட‌ப்ப‌ட்ட‌து.ஃபேஸ்புக்,ஃபிளிக்க‌ர்,மைஸ்பேஸ் உள்ளிட்ட‌ த‌ள‌ங்க‌ளின் ப‌ய‌னாளிக‌ளில் பெண்க‌ளே அதிக‌ம் உள்ள‌தாக‌ இந்த‌ சித்திர‌ம் சுடிக்காட்டுகிற‌து.

யூடியூப்,ம‌ற்றும் ,லின்கிட் இன் போன்ற‌ தள‌ங்க‌ளில் இந்த‌ எண்ணிக்கை ச‌ம‌ அல‌வில் உள்ள‌ன‌.

இந்த‌ விவ‌ர‌ங்க‌ள் ஆச்ச‌ர்ய‌மான‌வை.கார‌ண‌ம் பொதுவாக‌ இண்டெர்நெட் ப‌ய‌ன்பாட்டில் ஆண்க‌ளே அதிக‌ம் இருக்கும் நிலையில் ச‌மூக‌ வ‌லைப்பின்ன‌ல் த‌ள‌ங்களில் பெண்க‌ள் முன்னிலை வகிப்ப‌து குறிப்பிட‌த்தக்க‌ விஷ‌ய‌ம் தான்.ஒருவேளை பெண்க‌ள் உற‌வை வ‌ளர்ப்ப‌தில் ஈடுபாடு மிக்க‌வ‌ர்க‌ளாக‌ இருப்ப‌தை உண‌ர்த்துவ‌தாக‌ இத‌னை கொள்ள‌லாமா?என்னும் கேள்வியும் எழுந்துள்ள‌து.

நீற்க‌ சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன் வெளியான‌ ஒரு புள்ளி விவ‌ர‌த்தின் ப‌டி ஆன்லை க‌லைக்க‌ள‌ஞ்சிய‌மான‌ விக்கிபீடியாவில் த‌க‌வ‌ல்களை ச‌ம‌ர்பித்து திருத்தும் தொண்டை செய்யும் ப‌ய‌னாளிக‌ளில் பெண்க‌ள் 14 ச‌த‌வித‌த்திற‌கும் குறைவாக‌வே இருக்கின்ற‌ன‌ர் என்று தெரிய‌ வ‌ந்துள்ள‌து.பெரும்பாலும் ஆண்க‌ளே விக்கிபீடியாவில் கட்டுரைக‌ளை உருவாக்கி வ‌ருவ‌தை இந்த‌ புள்ளிவிவ‌ர‌ம் உண‌ர்த்துவ‌தாக‌வும் க‌ருத‌ப்பட்ட‌து.

அது ம‌ட்டும‌ல்ல விக்கிபீடியாவின் த‌மிழ் ப‌திப்பை பொருத்த‌வ‌ரை பெண்க‌ளின் ப‌ங்க‌ளிப்பு இர‌ண்டே இர‌ண்டு ச‌த‌வீத‌ம் தான் என்றும் தெரிய‌ வ‌ந்துள்ள‌து.

இணைய‌வாசிக‌ளின் ப‌ங்க‌ளிப்பில் உருவாகும் புது யுக‌ க‌லைக்க‌ள‌ஞ்சிய‌ம் ஆண்க‌ளின் ப‌டைப்பாக‌வே இருப்ப‌தாக‌ க‌ருதப்ப‌டும் நிலையில் ச‌மூக‌ வ‌லைப்பின்ன‌ல் த‌ள‌ங்க‌ளில் ம‌ங்கைய‌ர் ராஜ்ஜிய‌ம் ந‌ட‌ப்ப‌து ஆச்ச‌ர்ய‌ செய்தி தானே.

ஐ போனில் இல்லாதது நோக்கியாவில் உள்ளது

அண்மையில் வெளியான நோக்கியா 5800 ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போனுக்குச் சரியான போட்டியைத் தந்துள்ளது. இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கையில் நோக்கியாவில் உள்ள சில சமாச்சாரங்கள் ஐ போனில் இல்லை என்பது தெளிவாகிறது. அவற்றை இங்கு காணலாம்.

முதல் முதலில் ஆப்பிள் நிறுவனத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் 2007ல் ஐ போன் குறித்து செய்தி வெளியிட்டபோது அனைத்து மொபைல் போன் நிறுவனங்களும் தாங்களும் ஏதாவது செய்திட வேண்டும் எனத் துடித்தன. பல நிறுவனங்களிடமிருந்து ஐ போனில் உள்ளதைப் போல டச் ஸ்க்ரீன் கொண்டு போன்கள் வந்தன. ஆனால் ஐ போனின் டச் ஸ்கிரீன் அளவிற்கு யாரும் வர முடியவில்லை. நோக்கியா இதனை அமைதியாக வேடிக்கை பார்த்து வந்தது. பலரும் ஏன் நோக்கியா டச் ஸ்கிரீன் போன் ஒன்று தர மறுக்கிறது என்று கேட்கும் அளவிற்கு நோக்கி யாவின் அமைதி இருந்தது. இந்த கேள்வி களுக் கெல்லாம் பதிலாக நோக்கியா 5800 வெளி வந்துள்ளது. ஆனால் மற்ற நிறுவனங்களின் டச் ஸ்கிரீன் போன்களெல்லாம் தர முடியாத போட்டியை ஐ போனுக்கு நோக்கியாவின் போன் தருமா என்பதற்குக் காலம் தான் பதில் சொல்ல முடியும். இனி சில வசதிகளை ஒப்பிட்டுப் பார்க்கலாம்

கேமரா மற்றும் வீடியோ ரெகார்டிங்:
நோக்கியாவின் முதல் டச் ஸ்கிரீன் போன் 3.2 மெகா பிக்ஸெல் கேமரா கார்ல் ஸெய்ஸ் லென்ஸுடன் 3 எக்ஸ் டிஜிட்டல் ஸூம், ஆட்டோ போகஸ் மற்றும் டூயல் எல்.இ.டி. பிளாஷ் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இன்னொரு பேக்வேர்ட் கேமராவும் தரப்பட்டுள்ளது.

ஆப்பிள் 3ஜி ஐ போனில் 2 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. இதில் வீடியோ ரெகார்டிங் மற்றும் பிளாஷ் சப்போர்ட் இல்லை. நோக்கியா நொடிக்கு 30 பிரேம்கள் வேகத்தில் வீடியோ ரெகார்டிங் வசதியைக் கொண்டுள்ளது. இதன் பிக்ஸெல் திறன் 640 து 480 ஆக உள்ளது. 4 எக்ஸ் வீடியோ டிஜிட்டல் ஸூம் கொண்டுள்ளது. போனின் முன் பக்க கேமரா வீடியோ அழைப்பு வசதிக்கு தரப்பட்டுள்ளது. இதில் 5 மணி நேரம் வீடியோ இயக்கிப் பார்க்கலாம். 3.6 மணி நேரம் வீடியோ ரெகார்டிங் செய்யலாம்.

டிஜிட்டல் மியூசிக்:
உலகின் மிகப் பெரிய மொபைல் போன் தயாரிப்பாளரான நோக்கியா, தன் 5800 போன் மூலம் டிஜிட்டல் மியூசிக் பிரிவிலும் ஆப்பிள் நிறுவனத்தை போட்டிக்கு அழைத்துள்ளது. வரும் ஆண்டு தொடக்கம் முதல் ‘இணிட்ஞுண் ஙிடிtட Mதண்டிஞி’ என்ற மியூசிக் ஸ்டோர் வசதியினை இலவச பதிவாக ஓர் ஆண்டு தர இருக்கிறது. மேலும் 5800 போனில் நிறைய மியூசிக் பாடல்கள் பதியப்பட்டுத் தரப்படுகின்றன. ஆப்பிள் போன் வைத்துள்ளவர்கள் அதன் இணையதளமான ஆப்பிள் ஐ ட்யூன்ஸ் சென்று பாடல்களை இறக்கிப் பதியலாம் என்றாலும் அவை இலவசம் இல்லையே. டவுண்லோட் செய்வதற்கென எந்த சலுகைத் திட்டத்தினையும் ஆப்பிள் அறிவிக்கவில்லை.

மாற்றக்கூடிய பேட்டரி: ஆப்பிள் 3ஜி ஐபோனில் நமக்கு ஒரு ஏமாற்றம் உள்ளது. நாமே மாற்றக் கூடிய பேட்டரி அதில் இல்லை. பேட்டரி இணைத்தால் எடை கூடும் என்று ஆப்பிள் பேட்டரியை வைக்க வில்லை என அறிவித்தது. ஆனால் மார்க்கட்டில் விற்பனையாகும் அனைத்து ஸ்மார்ட் போன்களிலும் பேட்டரி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில் நோக்கியா ஊரோடு ஒத்துப் போய் உள்ளது. நோக்கியாவின் பேட்டரி ஜி.எஸ்.எம் வகை தொடர்புகளில் ஒன்பது மணி நேரம் இயங்குகிறது. எச்.எஸ்.டி.பி.ஏ. எனில் ஐந்து மணி நேரமும், மியூசிக் இசைப்பது எனில் 35 மணி நேரமும் வீடியோ பார்ப்பது எனில் 3 மணி நேரமும் தாக்குப் பிடிக்கிறது. எந்த பயன்பாட்டில் இல்லை என்றால் இது 17 நாட்களுக்கு அப்படியே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் ஐ போன் 3ஜி பயன்பாடு எனில் 300 நிமிடங்கள் பேசலாம் என்றும் 2ஜி பயன்பாடு எனில் 600 நிமிடங்கள் பேசலாம் என்றும் இயங் காத போது 300 மணி நேரம் இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.

புளுடூத் ஸ்டீரியோ:
நோக்கியா 5800 எக்ஸ்பிரஸ் மியூசிக் போனை ஸ்டீரியோ புளுடூத் வசதியுடன் இணைந்து செயல்பட வைக்கலாம். கார்களிலும் இதே வகையில் இணைக்கலாம். ஆனால் ஆப்பிள் ஐபோனை இவ்வாறு பயன்படுத்த முடியாது. புளுடூத் இணைப்பில் ஏ2டிபி வசதியை ஐ போனில் ஏற்படுத்த முடியாது. மேலும் புளு டூத் வழியாக ஐபோனில் எம்பி3 உள்பட பைல்களைப் பங்கிடும் வசதி இல்லை.

மெசெஜிங்:
ஐ போனில் எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். மெசேஜ்களை பார்வேர்ட் செய்திட முடியாது. அது போல தடை எதனையும் நோக்கியா தரவில்லை. நோக்கியாவில் எஸ்.எம்.எஸ். செய்திகளை மொத்தமாக அழிக்க முடியும். மெசேஜ் சைஸ் 600 கேபி வரை அனுமதிக்கப்படுகிறது. எம்.எம்.எஸ். செய் திகள் தானாக ரீ சைஸ் செய்யப்படுகின்றன.

அடோப் பிளாஷ்:
பத்திரிக்கை செய்திகளில் வந்த தகவல்களின்படி அடோப் நிறுவனம் ஆப்பிள் ஐ போனுக்கான பிளாஷ் தொகுப்பு ஒன்றை விரைவில் தர இருக்கிறது. அது கிடைக்கும் வரை வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டியதுதான். ஆனால் நோக்கியா 5800 வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டியதில்லை. ஏற்கனவே இதில் அடோப் பிளாஷ் சப்போர்ட் தரப்பட்டிருக்கிறது. ஆன்லைன் வசதி உள்ளதனால் பல இணைய தள விஷயங்களைப் பெற்றுக் காண பிளாஷ் தேவையாய் உள்ளது. இது இல்லை என்றால் அந்த இடங்களில் வெற்று இடங்கள் தெரியவரும். மேலும் ஐபோனில் பிளாஷ் பயன்படுத்தினால் பிரவுசிங் தாமதமாகும் என ஆப்பிள் அறிவித்துள்ளது. ஆனால் ஐ போனில் தேர்ந்தெடுத்து தரப்படும் யு-ட்யூப் வீடியோக்களை ரசிக்கலாம்.

விலை:
ஆப்பிள் ஐ போன் பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் வழியாக மட்டும் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி விலை ரூ. 31,000 மற்றும் 16ஜிபி விலை ரூ. 36,000. இந்த வகையிலும் நோக்கியா இதற்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டச்/கீ போர்டு:
நோக்கியா தகவல்களை உள்ளீடு செய்வதற்கு பல வழிகளைக் கொண்டுள்ளது. ஸ்டைலஸ் கொண்டு கையால் எழுதுதல், ஸ்டைலஸ் கொண்டு எழுதக் கூடிய சிறிய குவெர்ட்டி கீ போர்டு, முழுத் திரையிலான குவெர்ட்டி கீ போர்டு, எண்களும் எழுத்துக்களும் இணைந்த கீ போர்டு எனப் பல வசதிகள் உள்ளன. ஆப்பிள் ஐ போனில் ஸ்டைலஸ் இல்லை. ஆனால் தனியே வாங்கி இணைத்துக் கொள்ளலாம். மேலும் எழுத்து எண் இணைந்த கீ போர்டு மற்றும் லேண்ட்ஸ்கேப் கீ போர்டு இதில் தரப்படவில்லை.

கூடுதல் நினைவகம்:
நோக்கியா போனில் 81 எம்பி மெமரி உள்ளது. 8 ஜிபி மைக்ரோ எஸ்.டி. கார்ட் தரப்படுகிறது. இதனை 16 ஜிபி வரை உயர்த்தலாம். ஐபோன் இரு மாடல்களில் 8 மற்றும் 16 ஜிபி அளவுகளில் கிடைக்கிறது. இவற்றை உயர்த்த முடியாது. நீட்டிப்பதற்கான மெமரி ஸ்லாட் இல்லை. ஐ போனின் 2ஜி போனிலும் இந்த குறை உள்ளது

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review