November 12, 2009

மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அடுத்த பெரிய சாதனையாக மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 வர இருக்கிறது. கம்ப்யூட்டர் உலகில் தன் தொடுவான எல்லைகளை விரித்து பல புதிய அம்சங்களுடன் இந்த தொகுப்பு வர இருக்கிறது. வழக்கமான பெர்சனல் கம்ப்யூட்டருக்கான ஆபீஸ் தொகுப்புடன் முதல் முறையாக இன்டர்நெட்டில் வைத்துப் பயன்படுத்தும் ஆபீஸ் தொகுப்பாகவும் இது வெளிவர இருக்கிறது. ஆபீஸ் 14 என்ற குறியீட்டுப் பெயருடன் 2006 ஆம் ஆண்டில் இதனைத் தயாரிப்பதற்கான வேலைகள் தொடங்கப்பட்டன. ஆபீஸ் 12 என்ற பெயருடன் தொடங்கப்பட்ட ஆபீஸ் தொகுப்பு வேலைகள் முடிக்கப்பட்டு ஆபீஸ் 2007 தொகுப்பாக வெளியிட்ட பின் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 14 என்று தன் அடுத்த தொகுப்பினைத் தொடங்கியது. (உலக மக்கள் 13 என்ற எண் மீது கொண்டிருக்கும் வெறுப்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்தையும் பற்றிக் கொண்டிருக்கலாம்.) சென்ற வாரம் அதிகாரபூர்வமாக ஆபீஸ்...

திடுக்கிடும் ஒரு தகவல்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நீங்களே பாருங்கள் தமிழர்களை மிதிக்கும் செயலாக அதாவது இந்து தமிழர்களை மேலைத்தைய நாட்டவர்கள் இவ்வாறெல்லாம் எம்மை காயப்படுத்த வேதனைப்படுத்த முடியுமோ அவ்வாரெல்லாம் செய்கின்றனர். இந்த மொடல் மனிதன் அணிந்திருக்கும் உள்ளாடையில் இந்து மக்களின் கடவுளான லக்சுமி அவர்களின் உருவப்படம் பொறித்து விற்க்கப்படுகின்றதாம். இந்துமக்களின் அனைத்து கடவுள்களின் படங்களும் இவ்வறுதனாம் விற்க்கப்படுகின்றதாம். இந்த தயாரிப்பு மேலைத்தைய நாடுகளில் அமோகவரவேற்பை பெற்டுள்ளதாம். தமிழ் மக்களே இதை பார்த்த நீங்களே இதற்கு ஓர் முடிவு கட்ட வேண்டும். அவர்கள் குழந்தையையும் கில்லிவிட்டு  தொட்டிலையும் ஆட்டிவிடுகின்றார்கள். தமிழர்களே துயில் எழுங்கள...

விண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட

கோப்புகளை சேமித்த இடம் தெரியாமல் தேடுவது வழக்கமான ஒன்றுதான். விண்டோஸ்சில் இது எளிதான வேலை அல்ல. நீண்ட நேரம் பிடிக்கும். ஆனாலும் தெளிவான முடிவுகளை தருமா என்றால் இல்லை என்பதுதான் பதில். விண்டோஸ்சில் கோப்புகளை தேடுவதற்கு என்று ஒரு இலவச மென்பொருள் இருக்கிறது. சில நொடிகளில் சரியான முடிவுகளை தந்து விடும். நன்றாக வேலை செய்கிறது. மேம்படுத்த பட்ட தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இருப்பதால் கண் இமைக்கும் நேரத்தில் முடிவுகளை தருவதாக அதை வடிவமைத்தவர் தெரிவிக்கிறார். முதலில் உபயோகிக்கும் போது கோப்புகளை இன்டெக்ஸ் செய்வதற்கு சற்று நேரம் பிடிக்கும். அப்புறம் மின்னல் வேகம்தான். இதை பற்றி மேலும் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை. இங்கே சென்று தரவிறக்கி உபயோகித்து பாருங்கள். நீங்களே இதன் வேகத்தை உணருவீர்கள்....

அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க!

ஆரோக்கிய வாழ்க்கை முறை, தினசரி தவறாத உடற்பயிற்சி என்றுள்ள ஒருவருக்கு `இதயநோய் பிரச்சினை ஏற்படுமா?’ என்று கேட்டால் நீங்கள் `இல்லை’ என்றுதான் சொல்வீர்கள். ஆனால் அதைம் தாண்டி இதய பாதிப்பு ஏற்படலாம் என்கிறார்கள் நிபுணர்கள். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைக்கு மாற்றாக மிக அதிகமான உடற்பயிற்சியில் ஈடுபடுவதும், போதுமான தூக்கமின்மைம் கூட இதய பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதயத்துக்குச் சிக்கலை ஏற்படுத்தும் விஷயங்கள் என்னென்ன? அவற்றிலிருந்து நாம் நம்மைத் தற்காத்துக்கொள்வது எப்படி? மன அழுத்தம் “இன்றைக்கு மாநகர வாழ்க்கைமுறை மனஅழுத்தத்துக்கு வழிவகுப்பதாக உள்ளது. பலரிடம் மனஅழுத்த பிரச்சினை கண்டுபிடிக்கபடாமலே போகிறது” என்கிறார், மும்பை நானாவதி மருத்துவமனையைச் சேர்ந்த இதய மருத்துவ நிபுணர் ராஜிவ் பகவத். “நீண்ட தூர பயணம்,...

எச்ஐவி நோயின் அறிகுறிகள்

 உலக எய்ட்ஸ் நோய் தினம் வருகின்ற 1 ம் திகதி  எச்ஐவி நோய் பாதித்தவர்களுக்கு கீழ் கூறும் அறிகுறிகள் காணப்படும். ஆனால் இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் அனைவருக்கும் எச்ஐவி நோய் இருக்கும் என்பது அர்த்தமாகாது. எச்ஐவி பாதிப்புக்குள்ளான பலரிடம் ஆரம்பநிலையில் அதற்கான அறிகுறிகள் தெரிவதில்லை. இருந்தபோதிலும் சிலரிடம் இது காய்ச்சல் மூலம் வெளிப்படுகிறது. அதுவும் இந்த வைரஸ் மூன்று முதல் ஆறு வாரங்களுக்குப் பிறகே தெரிகிறது. தீவிர எச்ஐவி பாதிப்பினால் ஏற்படும் உடல் நலக்குறைவு, காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, குமட்டல், வயிற்றுப்போக்கு, நெறிகட்டுதல் (அக்குள், கழுத்து கட்டி) போன்றவற்றினைத் தோற்றுவிக்கின்றது. இந்த அறிகுறிகள் கூட எச்ஐவி தொற்றிய ஒரு சில நாட்களில் தெரிவதில்லை. மேலும் இது, ஆரம்பநிலையில் வேறு ஏதோ ஒரு வைரஸ் என்று தவறாகவே இனங் காணப்படுகிறது....

அழியும் நிலையில் அரியவகை கடல் குதிரைகள்

கண்களை எந்தப் பக்கமும் திருப்புதல், குதித்து குதித்து ஓடும் ஒருவகை மீன் இனம், குதிரை போன்ற முக அமைப்பு, குரங்கு போன்ற வால், ஆண் இனங்கள் இனப்பெருக்கம் செய்தல் இப்படியாக பல்வேறு சிறப்புகளையுடைய அரியவகை கடல்வாழ் உயிரினமான கடல் குதிரைகள் பல்வேறு காரணங்களால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருவதை அரசு தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை வளங்கள் அதிகம் நிறைந்த மன்னார் வளைகுடா கடல் பகுதி தென் தமிழகத்தில்தான் உள்ளது. இங்கு உலகிலேயே வேறு எங்கும் இல்லாத சுமார் 3600 வகையான கடல்வாழ் உயிரினங்கள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த அரியவகை உயிரினங்களில் கடற்குதிரை என்னும் ஒருவகை மீன் இனமும் ஒன்று. இதன் தலையானது குதிரையின் தலைபோன்று இருப்பதால், இதற்கு கடற்குதிரை எனப் பெயர் ஏற்பட்டதாம். ராமேசுவரத்திலிருந்து தூத்துக்குடி வரையுள்ள ஆழம் குறைந்த கடல்பகுதியில்...

பாக்டீரியாக்களின் ரைபோசோம்கள்

ரைபோசோம்கள் என்பவை மனித செல்களில், புரதச்சத்தை தயாரிக்கும் தொழிற்சாலைகளாக செயற்படுகின்றன. மனித செல்களில் இருக்கும் மரபணுக்கள்(டி.என்.ஏ), உயிர்த்தன்மையின் அடிப்படை கட்டமைப்பை தம்முள் கொண்டிருக்கின்றன. இந்த கட்டமைப்பு தகவல்களை பயன்படுத்தி உயிர்வாழும் புதிய கலங்களை உருவாக்கும் பணியை இந்த ரைபோசோம்கள் செய்கின்றன. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரைபோசோம்களின் அடிப்படை கட்டமைப்பை, அணு அணுவாக பிரதி எடுத்த செயற்பாட்டுக்காகவே, இந்த மூன்று விஞ்ஞானிகளுக்கும் இந்த ஆண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டிருக்கிறது. இவர்களின் இந்தப் பங்களிப்பு காரணமாக, இன்றைய மருத்துவ சிகிச்சையில் பயன்படும் பல்வேறு உயிர்காக்கும் ''ஆண்டிபயாடிக்ஸ்'' எனப்படும் நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளை உருவாக்க முடிந்திருக்கிறது. இத்தகைய ரைபோசோம்களின் செயற்பாடுகள்...

ஃபேஸ்புக்கில் பெண்களின் ஆதிக்கம்

சமூக வலைப்பின்னல் தளங்களில் பெண்களின் ஆட்சி நடக்கிறது.அதாவது ஃபேஸ்புக் போன்ற‌ சமூக வலைப்பின்னல் தளங்களை பயன்படுத்தும் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் உள்ளனர் என்று பொருள். தகவல்கள் அழகானது (இன்பர்மேஷன் ஈஸ் பியூட்டிபுல்) என்னும் பெயரில் இணையதளம் இந்த தகவலை வெளியிட்டுள்ள்து. தகவல்களை தகவல்களாக பார்க்காமல் அவற்றை காட்சி ரீதியாக உருவகப்படுத்திக்கொண்டு பார்த்தால் தகவல்கள் உணர்த்தும் பொருளை சரியாக புரிந்து கொள்ள முடியும் என்று கருதுபவர்கள் இருக்கின்ற‌னர்.இப்ப‌டி காட்சி ரிதியாக பார்பது மிகவும் சுவாரஸியத்தை அளிக்க கூடியதாகவும் கருதப்படுகிறது. காட்சிரீதியாக‌ த‌க‌வ‌ல்க‌ளை காணும் முறை இன்போகிராபிக்ஸ் என்னும் பெய‌ரில் அழைக‌ப்ப‌டுகிற‌து. தமிழில் தகவல் சித்திரம் என்று வைத்துக்கொள்வோமே.இவ்வாறு இண்டெர்நெட் தொட‌ர்பான‌ ப‌ல‌ அழ‌கிய‌ த‌க‌வ‌ல் சித்திர‌ங்க‌ள‌...

ஐ போனில் இல்லாதது நோக்கியாவில் உள்ளது

அண்மையில் வெளியான நோக்கியா 5800 ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போனுக்குச் சரியான போட்டியைத் தந்துள்ளது. இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கையில் நோக்கியாவில் உள்ள சில சமாச்சாரங்கள் ஐ போனில் இல்லை என்பது தெளிவாகிறது. அவற்றை இங்கு காணலாம். முதல் முதலில் ஆப்பிள் நிறுவனத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் 2007ல் ஐ போன் குறித்து செய்தி வெளியிட்டபோது அனைத்து மொபைல் போன் நிறுவனங்களும் தாங்களும் ஏதாவது செய்திட வேண்டும் எனத் துடித்தன. பல நிறுவனங்களிடமிருந்து ஐ போனில் உள்ளதைப் போல டச் ஸ்க்ரீன் கொண்டு போன்கள் வந்தன. ஆனால் ஐ போனின் டச் ஸ்கிரீன் அளவிற்கு யாரும் வர முடியவில்லை. நோக்கியா இதனை அமைதியாக வேடிக்கை பார்த்து வந்தது. பலரும் ஏன் நோக்கியா டச் ஸ்கிரீன் போன் ஒன்று தர மறுக்கிறது என்று கேட்கும் அளவிற்கு நோக்கி யாவின் அமைதி இருந்தது. இந்த கேள்வி களுக் கெல்லாம் பதிலாக நோக்கியா 5800...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review