
கொடிய வியாதிகளில் ஒன்று புற்றுநோய். எய்ட்சைப் போலவே இதன் பாதிப்புகளும் பயங்கரமாக இருக்கும். புற்று நோய்கள் உடலின் பல்வேறு பாகங்களையும் பாதிக்கக்கூடியது. வாய், நுரையீரல், குடல், ரத்தத்தட்டுகள், மூளை என முக்கியமான உறுப்புகளை பாதித்து முடக்குவதால் நோய்வாய்ப்படுபவர்களுக்கு மரண வேதனையாக இருக்கும்.
இவற்றில் ரத்தப் புற்றுநோய் சில வகைப்படும். அனீமியா, லூக் கேமியா, தலசீமியா போன்றவை குறிப்பிடத்தக்க ரத்தப்புற்று நோய்களாகும்.
மருத்துவ உலகில் ஸ்டெம்செல் முறை கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பல்வேறு வியாதிகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. அந்த வரிசையில் ரத்தப்புற்று நோய்களான அனீமியா, தலசீமியா போன்றவற்றுக்கும் முடிவு கட்டலாம் என்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. ஜப்பானைச் சேர்ந்த ரிக்கன் இன்ஸ்டிடிïட் ஆய்வுக்குழு இதை கண்டுபிடித்து உள்ளது.
அனீமியா என்பது ரத்த...