December 03, 2009

'ஸ்டெம்செல்' முறையில் புற்றுநோய்க்கு தீர்வு

கொடிய வியாதிகளில் ஒன்று புற்றுநோய். எய்ட்சைப் போலவே இதன் பாதிப்புகளும் பயங்கரமாக இருக்கும். புற்று நோய்கள் உடலின் பல்வேறு பாகங்களையும் பாதிக்கக்கூடியது. வாய், நுரையீரல், குடல், ரத்தத்தட்டுகள், மூளை என முக்கியமான உறுப்புகளை பாதித்து முடக்குவதால் நோய்வாய்ப்படுபவர்களுக்கு மரண வேதனையாக இருக்கும்.

இவற்றில் ரத்தப் புற்றுநோய் சில வகைப்படும். அனீமியா, லூக் கேமியா, தலசீமியா போன்றவை குறிப்பிடத்தக்க ரத்தப்புற்று நோய்களாகும்.





மருத்துவ உலகில் ஸ்டெம்செல் முறை கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பல்வேறு வியாதிகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. அந்த வரிசையில் ரத்தப்புற்று நோய்களான அனீமியா, தலசீமியா போன்றவற்றுக்கும் முடிவு கட்டலாம் என்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. ஜப்பானைச் சேர்ந்த ரிக்கன் இன்ஸ்டிடிïட் ஆய்வுக்குழு இதை கண்டுபிடித்து உள்ளது.

அனீமியா என்பது ரத்த சிவப்பணுக்கள் பற்றாக்குறைவால் ஏற்படுவதாகும். தலசீமியா என்பது ரத்தத்துக்கு போதுமான அளவு ஹீமோகுளோபின் கிடைக்காததால் ஏற்படுவதாகும். (ஹீமோகுளோபின் எனப்படுவது ரத்தத்துக்கு சிவப்பு நிறமளிக்கும் நிறமியாகும்.)

அடல்ட் (Adult) (அ) ப்ளுரி பொடன்ட் ஸ்டெம்செல் எலும்பு மஞ்ஞையில் (Bone Marrow) காணப்படும் ஸ்டெம் செல்களை நோயாளிகளின் எலும்பிலிருந்தும் அல்லது இரத்தத்திலிருந்தும் பிரித்து எடுத்தபின் அவை சுத்தப்படுத்தும் 'எண்டோடாக்சின் டெஸ்ட்' (Endotaxin Test) முறை மூலம் பாக்ட்ரியாக்கள் இல்லாமல் சுத்தப்படுத்தப்படும். குறைந்தது மூன்று மணிநேரம் 50 மி.லி. அளவு இரத்தம் சுத்தப்படுத்தத் தேவைப்படும். இருதய சம்பந்த நோய்களான அட்வான்ஸ்டு காரனரி ஆர்டரி, இருதய தசை தொய்வு, மாரடைப்பு இருதய வால்வு குறைபாடு போன்றவற்றைக் குணப்படுத்த ஊசி மூலம் நேரடியாக ஸ்டெம் செல்கள் செலுத்தப்படுகிறது. மேலும், மூளையில் அடிப்பட்டு சேதமடையும் பாகங்களைச் சரி செய்யவும், முதுகுத் தண்டு வட (Spinal Cord) அடிகளுக்கும் தண்டு வடத்தை சுற்றி ஸ்டெம் செல்கள் செலுத்தப்படுகின்றன.

ஸ்டெம் செல்கள் தன்னைத் திசுக்களாகவோ, தசைகளாகவோ மாற்றிக்கொள்ளும் தன்மையுடையதாய் உள்ளதால் இருதய தசை, நரம்பு மண்டலம், இரத்தம் கொண்டு செல்லும் தமனி போன்ற எல்லாப் பாகங்களிலும் நேரடியாகவே செலுத்தப்படுகிறது. திசுக்களாக மாறும் இவ்வகை ஸ்டெம்செல்கள் 'ப்ளுரி பொடன்சி' (Pleuri Potency) என அழைக்கப்படும். இரத்தப்புற்று நோய் (Leukaemia), இரத்தம் உருவாகுவதில் குறைபாடு உண்டு பண்ணும் நோய்களான அப்லாஸ்டிக் அனிமியா மற்றும் பரம்பரை நோயான தாலஸ்மியா (Thalassemia) போன்றவற்றை எலும்பின் மஞ்ஞையிலிருந்து எடுக்கப்படும் ஸ்டெம்செல்கள் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டவை.


தொப்புள் கொடி ஸ்டெம்செல் (umfilical cord stemcell) தொப்புள் கொடியில் நிறைந்து காணப்படும் ஸ்டெம்செல் (Mallignant) மேல்க்னன்ட் அல்லாத நோயுள்ளவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறையாளர்களுக்கும், பரம்பரை நோயுள்ளவர்களுக்கும் ஸ்டெம்செல் மிகவும் உபயோகப்படும். இன்று தொப்புள் கொடி ஸ்டெம்செல் மூலம் 45 வகையான நோய்களைத் தீர்க்கும் வகையில் பயன்பட்டு வருகிறது. அல்சமீர், சர்க்கரை வியாதி போன்ற வியாதிகளை ஸ்டெம்செல் மூலம் பூரணமாகக் குணமாக்கும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த ஸ்டெம்செல்கள் மிகக்குறைந்த வெப்பநிலையில் பத்திரமாக பாதுகாக்கப்படும். வருங்காலத்தில் ஏதேனும் பிரச்சினை என்றால் இதை பயன்படுத்தி சிகிச்சை செய்யலாம்.

எல்லாமே புதிதாக வரும்போது எக்கச்சக்க செலவாகும் என்பது அறிந்தது. செல்பேசி சேவை முதல் கணினி வரை அறிமுகமாகும்போது அப்படியோவ் என்று வாயை பிளக்கும் அளவிற்கு விற்பனையாவதும், வாங்குபவர்களின் எண்ணிக்கையும், விற்பனைப் போட்டியும் அதன் விலைகளில் சரிவை ஏற்படுத்துவதும் நாம் அறிந்ததே.

அதேப்போலத்தான் இந்த தொழில்நுட்ப முறையும் தற்போது வாயைப் பிளக்க வைக்கிறது. பணக்காரர்களால் மட்டுமே முடியும் என்ற எண்ணத்தை உண்டுபண்ணுகிறது. அதாவது, ஸ்டெம்செல்லை பிரித்தெடுக்க ஆரம்பத்தில் சுமாராக 50 ஆயிரம் ரூபாய் செலவாகும். பின் அதை பாதுகாக்க ஆண்டுணுக்கு 4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டும். பின்னாளில் இந்த ஸ்டெம்செல்களைக் கொண்டு சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் அதற்கு தனியாக ஒரு பெரிய தொகை செலவாகும்.

ஆனால் இதே நிலை வெகு நாட்களுக்கு நீடிக்காது. இந்த சிகிச்சை முறையும், பாதுகாப்பு வசதியும் அதிகரிக்கும்போது இந்த செலவுகள் குறையும். இதனை நடுத்தர மக்களும், ஏழைகளும் பயன்படும் வகையில் அமையும் என்று நம்பலாம்.

'சந்திரயான்' அளித்துள்ள புதிய தகவல்கள்

இந்தியாவில் இருந்து நிலாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 'சந்திரயான் -1' செயற்கை கோள் மூலமாக நிலவில் உள்ள கனிம வளங்கள் பற்றிய தகவல் கிடைத்து இருப்பதாக விஞ்ஞானி அண்ணாதுரை தெரிவித்தார்.

நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக, இந்தியாவில் இருந்து முதன் முறையாக 'சந்திரயான்-1' என்ற செயற்கை கோள் அனுப்பி வைக்கப்பட்டது. நிலாவின் சுற்றுவட்ட பாதையில் சுற்றி வந்து ஆராய்ச்சி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட அந்த செயற்கை கோளில் 11 கருவிகள் இருந்தன. அவை அனைத்தும் வெவ்வேறு பணிகளை மேற்கொண்டு ஏராளமான தகவல்களை அளித்தன.


திட்டமிட்ட இரண்டு ஆண்டு காலத்துக்கு முன்னதாகவே 'சந்திரயான் -1' செயலிழந்தது. எனினும், அது அனுப்பிய தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக சர்வதேச அளவில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த சூழ்நிலையில், நிலவை ஆராய்ச்சி செய்யும் 'சந்திரயான் -1' திட்டத்தின் இயக்குனர் விஞ்ஞானி அண்ணாதுரை, நேற்று பெங்களூரில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சந்திராயானில் இருந்த 11 கருவிகளின் மூலமாக 'ஏழு தேரா பைட்' தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை 'இஸ்ரோ' விஞ்ஞானிகள் குழு ஆராய்ச்சி செய்து வருகிறது. மிகப்பெரிய அளவில் கிடைத்துள்ள அந்த விபரங்களை பகுப்பாய்வு செய்து முடிப்பதற்கு மூன்று ஆண்டுகள் ஆகும். தற்போது, நிலவில் உள்ள கனிம வளங்கள் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்கின்றனர்.

அந்த ஆராய்ச்சி முடிந்ததும் அறிவியல் முடிவுகள் வெளியிடப்படும். அதை சர்வதேச அளவிலான விஞ்ஞானிகள் மதிப்பீடு செய்த பிறகு அறிவியல் குறித்த சஞ்சிகைகளில் அவை பிரசுரிக்கப்படும். ஒட்டு மொத்த நிலவிலும் உள்ள கனிம வளங்கள் குறித்து ஒரு வரைபடம் எங்களுக்கு கிடைத்துள்ளது. அதில் தண்ணீர் உட்பட பல்வேறு கனிமங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. அது பற்றி முழு தகவலையும் ஆய்வு செய்த பிறகு புதிய தகவல்களை இந்த உலகுக்கு தெரிவிப்போம்.

நிலவின் மேற்புறத்தை முப்பரிமான வடிவத்தில் சந்திரயான் படம் பிடித்து அனுப்பி இருக்கிறது. நிலவை சுற்றிலும் நிலவும் சூரிய கதிரியக்கம் மற்றும் அவற்றால் நிலவில் ஏற்படும் விளைவுகள் போன்ற தகவல்களும் கிடைத்துள்ளன. அவற்றையும் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். சந்திரயானில் இருந்த ஒவ்வொரு கருவிகளும் அனுப்பிய தகவல்களை தலா 20 முதல் 30 விஞ்ஞானிகளை கொண்ட 11 குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.

முற்றிலுமாக பகுப்பாய்வு செய்த பிறகு, அந்த முடிவுகளை விரைவில் அறிவிப்போம். மேலும், அது குறித்த தகவல்களை முன்னதாகவே தெரிவிப்பதற்காக, நாடு முழுவதும் ஆங்காங்கே கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி கூடங்களையும் `இஸ்ரோ` நடத்தி வருகிறது. அதன் மூலமாக, `இஸ்ரோ`வில் இல்லாத விஞ்ஞானிகளும் சந்திரயான் அளித்த தகவல்களை பெற்று பலனடைய முடியும்.

அடுத்த கட்டமாக, வருகிற 2013-ம் ஆண்டில் 'சந்திரயான் -2' விண்கலம் விண்ணுக்கு செல்கிறது. 'சந்திரயான் -2' திட்டத்துக்கான யுக்திகள் அனைத்தும் இறுதி செய்யப்பட்டு விட்டன. விண்கலத்தின் அமைப்பு குறித்த வரைபடம் தயாராகி விட்டது. அடுத்த ஆண்டில் (2010) அந்த விண்கலம் தயாரிக்கப்படும்.

ரூ.424 கோடி திட்ட செலவில் உருவாகியுள்ள 'சந்திரயான் -2' திட்டத்தின் மூலமாக அனுப்பப்படும் விண்கலத்தில் இரண்டு 'ரோவர்கள்' இடம்பெறும். அவை நிலவில் இறங்கி ஆராய்ச்சி செய்யும். ரஷ்யா உதவியோடு அந்த 'ரோவர்கள்' தயாரிக்கப்படுகின்றன.

இவ்வாறு அண்ணாதுரை தெரிவித்தார்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review