January 15, 2010

துன்புறுத்தும் எண்ணங்களை அழிக்கலாம்! : நியூயோர் பல்கலைகழகம்

சில நினைவுகள் நம்மை வாட்டி வதைக்கும். பொதுவாக சோகமான சம்பவங்கள், பயம் போன்றவை அடிக்கடி நினைவுக்கு வந்து துன்புறுத்தும்.

மகிழ்ச்சியான சம்பவங்களை நாம் மீண்டும் நினைப்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால் மனதை வேதனைப்படுத்தும் நினைவுகள் மீண்டும் வந்தால் கலங்கி விடுகிறோம். வாழ்க்கையே பெரும் தொந்தரவாகிவிடுகிறது. அதையே நினைத்து மனநலம் பாதிக்கப்படுவோரும் இருக்கிறார்கள்.


இனி இதுபோன்ற தொந்தரவு தரும் எண்ணங்களைப் பற்றி அச்சப்படத் தேவையில்லை. முளையில் பதிவாகி இருக்கும் அந்த எண்ணப்பதிவை கண்டுபிடித்து அழித்து விடும் விஞ்ஞானமுறை கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. விரைவில் இது சிகிச்சைமுறையாகவும் வர இருக்கிறது.

அமெரிக்காவின் நியார்க் பல்கலைக்கழக ஆய்வுக்குழு கண்டுபிடித்துள்ள இந்த முறைக்கு பெயர் `பிகேவியர் தெரபி’ என்று பெயரிட்டு உள்ளனர்.

நமது எண்ணங்கள் எல்லாம் முளையில் உற்பத்தி ஆகின்றன. அங்கேயே பதிவு செய்யப்படுகின்றன. இதில் நம்மை துன்புறுத்தும் பயஉணர்வுகளும் பதிவாகி இருக்கும். அது தொடர்பான சம்பவங்கள், சூழல்கள் மீண்டும் அமையும்போது நமக்கு பயம் தொற்றிக் கொள்கிறது.
இதுவரை பயம் (போபியா) தொடர்பான சிகிச்சைக்கு, சம்பந்தப்பட்டவர்களிடமே காரணம்கேட்டு அதுபோன்ற சூழல்வராமல் தடுப்பதன் முலமே பயஉணர்வை கட்டுக்குள் கொண்டு வருவார்கள். ஆனால் மீண்டும் பயத்தை ஏற்படுத்தும் சூழல் அமைந்துவிட்டால் நிச்சயம் பயம் மீண்டும் தோன்றிவிடும்.

ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ள புதிய முறையில் பயத்துக்கு உள்ளானவர்களின் முளைப்பதிவுகள் ஸ்கேன் செய்து பார்க்கப்படும். அப்போது வண்ணவண்ண கட்டங்களாக பதிவுகள் காட்டப்படும். அதில் நீலநிற கட்டமாக பதிவாகும் நினைவுகள் பய உணர்வை குறிக்கும்.

பயத்தை உருவாக்கும் சில சம்பவங்களை ஏற்படுத்தி அதற்கேற்ப பதிவுகள் வேறுபடுத்திக் காட்டும்படியாக இந்த முறை உருவாக்கப்பட்டு உள்ளது. அதன்பிறகு அந்த பயஉணர்வுகளை அழித்துவிட்டு சோதித்துப் பார்க்கப்பட்டது. இதில் வெற்றி கிடைத்து உள்ளது. அதாவது தேவையற்ற எண்ணங்களை அழிக்க முடியும் என்று தெரியவந்துள்ளது.

முதலில் எலிகளுக்கும், பிறகு 3 குழுவினருக்கும் சோதித்துப் பார்க்கப்பட்டது. ஒவ்வொரு குழுவினருக்கும் வேறுவேறு விதமான சிகிச்சை அளிக்கப்பட்டது. பிகேவியர் தெரபி முறையில் சிகிச்சை பெற்றவர்களுக்கு பய ட்டிய சம்பவங்கள் மீண்டும் அச்சுறுத்தவில்லை.

`போபியா’வை போக்கும் சிகிச்சை முறையில் இந்த கண்டுபிடிப்பு மறுமலர்ச்சியை உருவாக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

முதுகு வலி அவதியா?

முதுகுக் கீழ்ப் பகுதியில் வலி இருந்தால் நாம் அலட்சியம் காட்டக்கூடாது. ஏனெனில் அது அப்படியே கீழிறங்கி பின் தொடைப் பகுதிகளையும் சில வேளைகளில் கால் கெண்டைச் சதைகளையும் கூட சென்றடையும்.

நாம் தினசரி காரியங்களில் முதுகு வலிக்கு ஆகாத பல விஷயங்களை அறியாமல் செய்கிறோம். உதாரணமாக கூன் முதுகிட்டு உட்காருவது, நடக்கும் போது கூன் போடுவது, பொருட்களை தூக்கும்போது முதுகை வளைப்பது போன்றவற்றைச் செய்கிறோம்.


தண்ணி வாளி, குடங்களை தூக்கும்போது, முதுகு நேராக இருப்பது அவசியம். வெயிட் அதிகமுள்ள பொருட்களை தூக்கும்போது நாம் முதுகை வளைத்தோமானால் தண்டுவடங்களுக்கு இடையிலான வட்டுக்களில் பாரம் அதிகரிக்கும். இதுதான் பிரச்சனை.

உட்கார்ந்த வேலை பார்ப்பவர்களுக்கு முதுகுவலி கட்டாயம் வரும். ஏனெனில் நாம் முதுகை சற்றே வளைக்காமல் உட்கார முயற்சி செய்வதில்லை.

உங்கள் தண்டுவடத்திற்கு முட்டுக் கொடுக்கும் நாற்காலிகள் தேவை. அதேபோல் தூக்கம் அவசியம் நாளொன்றுக்கு 7 மணி நேரம் தூங்குவது கட்டாயம்.

புகைப்பழக்கத்தை நிறுத்துவது நல்லது. ஏனெனில் திசுக்களுக்கு தேவையான பிராணவாயு இன்மை ஏற்படும் இதனால் முதுகுவலி சிகிச்சை பலனளிக்காமல் போய்விடும்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review