February 24, 2010

தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்கள் !

இன்றைய நிலையில் அறிவியலின் வளர்ச்சி ஒவ்வொரு நாளும் ஒரு புதிய சாதனைகளை சாதாரணமாக நிகழ்த்திக்கொண்டு இருக்கிறது என்று சொல்லலாம்.

இந்த அறிவியலின் அதிசயங்களையும் பிணுக்குத் தள்ளும் இயற்கையின் இயல்பான சில நிகழ்வுகளும் அவ்வப்பொழுது யாரும் எதிர்பாராமலே நடந்துவிடுகிறது . அந்த வகையில் ஒரு புதிய அதிசய நிகழ்வு விரைவில் வர இருக்கிறது இதுநாள் வரை தங்கம், வைரம், வெ‌‌ள்‌ளி என்று பல நகைகளை நம்மை அழகுபபடுத்துவதற்காக பயன்படுத்தி வந்தோம். ஆனால் இப்பொழுது அந்த அபரணங்களுக்கு விடுமுறைக்கொடுக்கும் தூரம் மிக அருகில் வந்துவிட்டது.

த‌ங்க‌‌ம், வெ‌‌ள்‌ளி, வைர நகைகளை இ‌னி மற‌ந்து விடு‌‌ங்க‌ள். விரைவில் வெளியாகவிருக்கும் பு‌‌திய வகை ஆபரண‌ங்க‌ள் உ‌ங்களை மேலு‌ம்
ஜொ‌லி‌க்க வை‌க்கும் அதிசய நிகழ்வு விரைவில் நடைபெற உள்ளது. ஆம். தா‌ய்‌ப்பா‌லி‌‌ல் இரு‌ந்து நெக்லஸ், பிரேஸ்லெட் என்று 70 வகையான ஆபரணங்களை தயாரிக்க முடியும் என்று ஒரு புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ல‌ண்ட‌னி‌ல் உ‌ள்ள நகை தயா‌‌ரி‌க்கு‌ம் குழு ஒன்று, தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்களை தயாரிக்கும் வித்தைகளை செய்து காண்பித்துள்ளது.

இந்த சாதனையின் முதல் முதல் தயாரிப்பாக இ‌ந்தக் குழு 'பா‌ல் நெ‌க்ல‌ஸ்'-களை‌த் தயா‌ரி‌‌த்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளனர் . இதை அடுத்து அந்த குழுவின் அறிக்கையில் .

‌பிரே‌ஸ்ல‌ெ‌ட் மற்றும் 70 பிறவகை ஆபரணங்களையும் இ‌ந்த ஆ‌ண்டு இறு‌திக்குள் தயாரிக்க இரு‌ப்பதாக அக்குழுவினர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

தா‌ய்‌ப்பாலுடன் ‌‌வி‌னிகரைச் சேர்த்து (அ‌சி‌‌ட்டி‌க் அ‌மில‌ம்) ந‌ன்கு கொ‌‌தி‌க்க வை‌ப்பத‌ன் மூல‌ம் பா‌லி‌ல் உ‌ள்ள கே‌சி‌ன் புர‌த‌ம், இ‌ந்த கலவையை
‌பிளா‌ஸ்டி‌க் போ‌ன்று மா‌ற்றி விடுகிறது. ‌பி‌ன்ன‌ர் அதில் வண்ணம் பூசி (பெயிண்ட்) நாம் விரும்பும் வடிவில் அல்லது அச்சுகளில் ஊற்றி ஆபரணங்களாக மாற்றுகிறார்களாம்.

பிளாஸ்டிக் போன்ற தன்மை கொண்டிருப்பதால், அழ‌கிய வடி‌வி‌ல் நகைகளாக மா‌ற்‌றி விடுகிறார்களாம்.

தாய்ப்பாலை உபயோகித்து `குழந்தைகளின் தலை' போன்ற வடிவிலான நெக்லஸில் அணியக்கூடிய பதக்கம் (டாலர்) ஒன்றையும், தாய்ப்பாலுடன் உலோகத்தைச் சேர்த்து பிரேஸ்லெட் ஒன்றையும் பிரான்ஸ் நாட்டு நகை வடிவமைப்பாளர்கள் ஏற்கனவே உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

இ‌துபோ‌ன்ற நகை வடிவமை‌ப்பை அவ‌ர்க‌ள் "பா‌ல் மு‌த்து‌" (milk pearl), எ‌ன்று கு‌றி‌ப்‌பிடு‌கி‌றார்கள். இந்த முறையில் உருவாக்கப்பட்ட ஆபரணங்களை செப்டம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் கண்காட்சியில் அவர்கள் வைக்க உள்ளார்களாம்.

என்றாலும், தாய்ப்பாலில் இருந்து ஆபரணங்கள் உருவாக்கம், வர்த்தகரீதியில் இன்னமும் செயல்படுத்தப்படவில்லை என்பது ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயம் என்று சொல்லலாம்.

உலகில் முதல் முறையாக 3-டி நேரடி ஒளிபரப்பு


சம்பவங்களை உயிருள்ள வகையில் காட்டுவதால் திரைக்காட்சிகளுக்கு எப்போதும் ஒரு தாக்கம் உண்டு. அதில் 3-டி எனப்படும் முப்பரிமாணத்தில் காட்சிகளை பார்த்தால் பிரமிக்க வைக்கும்.
சமீபத்திய `அவதார்’ சினிமா படம் வசூலில் சக்கைபோடு போடுவதற்கு முக்கிய காரணம் 3-டி காட்சிகள்தான்.

குழந்தைகள், பெரியவர் என பாகுபாடு இல்லாமல் அனைவரையும் கவரும் 3-டி காட்சியில், ஒரு விளையாட்டுப் போட்டியை நேரடியாக ரசித்தால் எப்படி இருக்கும். பிரமிக்க வைக்கும்தானே! ஆம், அந்த அதிசயம் நடத்திக் காட்டப்பட்டுவிட்டது.

இங்கிலாந்தில் இந்த வெற்றிகரமான முயற்சி நடந்தது. அங்கு சமீபத்தில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. ஜனவரி 31-ந்தேதி ஆர்சனால் – மான்சென்ஸ்டர் அணிகளுக்கு இடையேயான கால்பந்துப் போட்டி நடந்தது. பால்கெல்லி என்ற இடத்தில் உள்ள ரெயில்வே பொதுவிடுதி மைதானத்தில் இந்த விளையாட்டு நடந்தது. போட்டியை 3-டி காட்சிகளாக ஒளிபரப்ப ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.

போட்டி தொடங்கியதில் இருந்தே ரசிகர்கள் ஆரவாரம் அளவுக்கு அதிகமாக இருந்தது. வீரர்கள் பந்தை உதைப்பதும், லாவகமாக கடத்திச் செல்வதும் 3-டி காட்சிகளில் தத் பமாக அமைந்திருந்தது ரசிகர்களை உற்சாகத்தில் துள்ள வைத்தது.

அனேக ரசிகர்கள் விளையாட்டை நேரடியாக ரசிப்பதைவிட திரையில் 3-டி காட்சியாக ரசிப்பதே மிகவும் சுவாரசியமாக இருந்ததாக தெரிவித்தனர். டேவிட் என்ற 71 வயது ரசிகர் கூறும்போது, `நான் 60 ஆண்டு களாக போட்டிகளை ரசித்து வருகிறேன். ஆனால் இந்தப் போட்டியே சிறப்பாக இருந்தது. 3-டி காட்சிகள் ஒவ்வொரு `ஷாட்’களையும் அருகில் இருந்து பார்ப்பதுபோல் வியக்கும் வகையில் காட்டி எங்களை மயக்கி ஈர்த்துவிட்டது’ என்றார்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை புரிந்து கொண்ட விளையாட்டு அதிகாரிகள் பல்வேறு விளையாட்டுகளையும் 3-டி வடிவில் ஒளிபரப்பும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

February 21, 2010

கடன் அட்டை பின்(Pin) சிஸ்டம் மோசடி….

நாம் இப்போது வாங்கும் அனைத்து பொருள்களுக்கும் கடன் அட்டையை பயன்படுத்தி காசு கொடுக்கும் வசதி சிறு தெருக்களில் கூட வந்துவிட்டது இதற்காக அவர்கள் ஒரு பின் சிஸ்டம் உள்ள இயந்திரம் வாங்கி வைத்து நம் ஏடிஎம் அட்டையில் உள்ளதகவல்களை பயன்படுத்தி காசு எடுக்கின்றனர்.

ஆனால் ஒரு சில ஹக்கர்கள் நாம் பயன்படுத்தும் இந்த பின் சிஸ்டத்தின் தகவல்களை உலோகத்தில் ஏற்படும் பிழை மூலம் பின் சிஸ்டத்தின் தகவல்களை மாற்றியமைக்கப்பட்ட அட்டை மூலம் எளிதாக எடுத்து விடுகின்றனர் இதைப்பற்றி ஆராய்ந்து பார்த்ததில் சரியாக சில மொடல் பின் சிஸ்டம் உள்ள இயந்திரத்தில் இவர்கள் தாங்கள் பயன்படுத்தும் அட்டையுடன் வயர் இணைத்து கையடக்க ஹக்கிங் இயந்திரத்தில் சேர்த்துள்ளனர். 

இது எப்படி வேலை செய்கிறது என்று பார்த்தால் நாம் பயன்படுத்தும் அனைத்து வகை பின் சிஸ்டத்துக்கும் துணை செய்கிற மாதிரி இவர்கள் ஒரு எக்ஸ்ட்ரனல் சிறிய வகை கருவி ஒன்றை தயார் செய்து விடுகின்றனர். 

அடுத்தும் எந்த பின் சிஸ்டம்-ஐ கொள்ளை அடிக்க வேண்டுமோ அந்த பின் சிஸ்டத்துக்கு சென்று அங்கு இவர்கள் தயார் செய்து வைத்திருக்கும் ஏடிஎம் அட்டையுடன் (ஹக்கிங் இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்) இதை அந்த பின் சிஸ்டத்துன் இணைத்தவுடன் ஆத்தண்டிங்கேசன் கேட்கும் இவர்கள் ஏடிஎம் சங்கேத கோடு கொடுப்பது போல் ஆம் என்று உறுதிபடுத்திவிடுகின்றனர். 

இதன் பின் என்ன நடக்கிறது என்றால் இதுவரை அந்த பின் சிஸ்டத்தில் யாரெல்லாம் ஏடிஎம் அட்டை பயன்படுத்தினார்களோ அவர்கள் அத்தனைபேரின் கணக்கு எண்ணும் சங்கேத வார்த்தையும் சிலநொடியில் அவர்கள் எடுத்து வந்திருக்கும் ஹக்கிங் இயந்திரத்தில் பதிவாகிவிடும். 

அடுத்த சில மணி நேரத்திற்குள் அத்தனை பேரின் வங்கிகணக்கில் உள்ள பணத்தையும் எளிதாக கொள்ளை அடித்து விடுகின்றனர் இப்படி திருட்டு போனதும் உடனடியாக நமக்கு தெரிவது நாம் கடைசியாக ஏடிஎம் பயன்படுத்திய அந்த கடைதான் அதனால் இனி “பின் சிஸ்டம்” வைத்துள்ள கடைக்காரர்கள் மற்றும் டிக்கெட் பதிவு செய்யும் இடத்தில் பின் சிஸ்டம் இயந்திரம் வைத்துள்ளவர்கள் தாங்கள் இனி அதிக அளவு சோதனையுடன் விழிப்பாக இருந்தால் தான் இது போன்ற குற்றங்களை தடுக்க முடியும். 

அதுமட்டுமின்றி இவ்வாறு உங்கள் இயந்திரம் நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டால் இதற்கு புதிதாக அவர்கள் செயல்படுத்தியிருக்கும் கருவியை வாங்கி வைத்தால் கூட பிரச்சினைகளை பெரும்ளவு தவிர்க்கலாம் என்பது நம் எண்ணம்.

வாடகை வானூர்தி (Air Taxi)


உலகில் நாளாந்தம் அதிகரித்துச்செல்லும் சனத்தொகைப் பெருக்கம் போக்குவரத்து நெருக்கடியை நாளாந்தம் அதிகரித்த வண்ணமுள்ளது. நேரமே பணமாகிப் போய்விட்ட வர்த்தக உலகில் போக்குவரத்து நெரிசல் மக்களின் நாளாந்தச் செயற்பாடுகளைத் தாமதப்படுத்துவதென்பது வர்த்தக உலகை செயலற்றதாக்கிவிடும்.

இவ்வாறான பிரச்சினைகளிற்குத் தீர்வுகாண்பதற்காக இப்பிரச்சினைகளுடன் தொடர்புபட்ட பல்வேறு துறைகளைச்சேர்ந்த நிபுணர்கள் பல்வேறுபட்ட வழிகளில் முயற்சித்தவண்ணமுள்ளனர். இவ்வாறான முயற்சிகளின் விளைவுகளில் ஒன்றே வாடகை வானூர்தி (Air Taxi) ஆகும்.

இதுவரை பொதுப்பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படாது பரிசோதனைச் செயற்பாட்டிலிருக்கும் இந்த வாடகை வானூர்திகளை மிக விரைவில் பொதுப்பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் முயற்சியில் நிபுணர்கள் உழைத்துக்கொண்டிருக்கின்றார்கள். சாதாரண மகிழுந்துகள் (Cars) போன்று வீதியால் சென்று குறித்த விமான நிலைய ஓடுபாதையில் ஓடி வானில் பறக்கவல்லதுமான ஒரு வாகனமே வாடகை வானூர்தியாகும். ஒரு நாட்டின் வான் எல்லைகளுக்குட்பட்ட வானூர்திப் பறப்பு என்பது அந்நாட்டின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது. சாதாரண தரைவழிப் போக்குவரத்துப் போன்று வான்வழிப் போக்குவரத்தினை பொதுப்பாவனைக்காகத் திறந்துவிடுவதென்பது, ஒரு நாடு தனது பாதுகாப்பைத் தானாகவே முன்வந்து முடக்குவதற்கு ஒப்பானது. இதன்காரணமாக தகுந்த பாதுகாப்பு உத்திகளுடன் இந்த வாடகை வானூர்தியினை பொதுப்பாவனைக்காகக் கொண்டுவருவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் முயற்சிக்கின்றன.

அமெரிக்காவின் இவ்வாறான வாடகை வானூர்தித் திட்டம் சிறிய விமான போக்குவரத்துத் தொகுதி (Small Aircraft Transport System) என்றழைக்கப்படுகின்றது. இத்திட்டத்திற்கமைவாக அமெரிக்கா முழுவதும் 5000 வரையான சிறிய விமான நிலையங்கள் அமைக்கப்பட்டு அவ்விமான நிலையங்களினூடாகவே இவ்வானூர்தித் தொகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டு இயக்கப்படும். இவ்விமான நிலையங்கள் அனைத்தும் பொதுமக்களால் இலகுவில் அடையக்கூடியவாறு அவர்களின் குடியிருப்பு, வேலையிடம் மற்றும் நாளாந்தச் செயற்பாட்டு இடங்கள் ஆகியவற்றை அண்மித்த பகுதிகளில் அமைக்கப்படும். இவ்வாறாக தொகுதிகளை இயக்குவதன் மூலம் பின்வரும் நன்மைகள் கிடைக்கின்றன.
  1. பிரதான பாரிய விமான நிலையங்களின் போக்குவரத்து நெருக்கடி குறையுவடையும்.
  2. சாலைப் போக்குவரத்தின் நெருக்கடி குறையுவடையும்.
  3. போக்குவரத்துத் திட்டமிடலைச் சிறப்பாகச் செய்ய முடியும்.
  4. சிறிய விமானங்களை இயக்குவதற்கான பொருட்செலவு குறைவடையும்.
பெரும்பாலும் ஒரு நாட்டிற்கு வரும் உல்லாசப்பயணிகள் அந்நாட்டின் விமான நிலையத்திலிருந்து தொலைதூர இடங்களிலுள்ள சுற்றுலாத்தளங்களுக்குப் செல்வது கிடையாது. இந்தத் திட்டம் செயற்படுத்தப்படும்போது நாட்டின் அனைத்துப் பகுதிகளும் விமான நிலையங்களைக் கொண்டிருக்கும். இதன்காரணமாக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் வாய்ப்புக்கள் உருவாகின்றது.

இருந்தபோதிலும் இங்கு பல்வேறுபட்ட பிரதிகூலங்களும் காணப்படுகின்றன. முதலாவதாக வாடகை விமானங்களுக்கான பொருட்செலவு. ஆரம்ப நிலையில் இவ்வகை வாடகை விமானங்களை குறைந்த விலையிற் பெற்றுக்கொள்வதென்பது இயலாத காரியமாகும். இவற்றுக்காக கொள்வனவு மற்றும் பராமரிப்புச் செலவுகள் அதிகமானதாகவே காணப்படும். இதன் காரணமாக பெருமாபாலானோர் இவற்றைக் கொள்வனவு செய்வதிற் தயக்கம்காட்டுவர். அடுத்து, மேலே பறத்தற் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை. குறித்தவொரு வான்பரப்பு பெரும்தொகையான சிறியரக விமானங்களின் பறப்பினைக் கொண்டிருக்கும்போது, அவ்விமானங்களின் பாதுகாப்பினைக் கண்காணித்துக் கட்டுப்படுத்துவதென்பது சிரமமான காரியமாக மாறலாம். இச்சிரமங்களைத் தவிர்ப்பதற்கு பெரும்தொகையான ஆளணி மற்றும் கண்காணிப்புக் கருவிகள் தேவைப்படும். தொடர்ந்து அவற்றின் இயக்கம் மற்றும் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். அனவே, இவ்வகையான சிறியரக விமானப் போக்குவரத்துத் தொகுதிகளை இயக்குவதென்பது பொரும் பொருட்செலவைக் கொண்டதாகவே காணப்படுகின்றது.

NASA நிறுவனம் தன்னியக்கமாக விமானப் பறப்புக்களைக் கட்டுப்படுத்தும் Robotic Air Traffic Controller என்ற கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இக்கருவி தரையிறங்குவதற்கு வரும் விமானங்களிலிருந்து கிடைக்கும் சமிக்கைகளிற்கேற்ப அவை தரையிறங்குவதற்குத் தேவையான தரவுகளைத் தன்னியக்கமாக வழங்கும். இன்னொரு வகைக் கருவி தரையிறங்குவதற்கு வரும் விமானங்களிலிருந்து கிடைக்கும் அவ்விமானங்களின் பறக்கும் உயரம், ஆள்கூறு என்பவற்றைப் பெற்று அவற்றுக்கான பதிற் தகவல்களை வழங்குவதுடன் அத்தகவல்களை ஏனைய விமானங்களுடனும் பகிர்ந்துகொள்ளும். இவ்வகைக் கருவிகளின்மூலம் ஆளணி எண்ணிக்கையைக் கணிசமானளவு குறைக்க முடியும்.

இவ்வகையான சிறியரக விமானப் போக்குவரத்துத் தொகுதிக்கான திட்டத்தின் ஆரம்ப நிலையில், இத்திட்டத்தை 2015 இல் பொதுப்பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதற்கு எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே இத்திட்டம் நடைமுறைக்கு வந்தாலும், ஆரம்பத்தில் சிறியளவிலேயே அவற்றைப் பயன்படுத்தக் கூடியதாகவிருக்கும். இவ்வகை வானூர்திகள் பெருமளவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு நாம் இன்னமும் காத்திருக்க வேண்டியேயிருக்கும்.

விக்கிபீடியாவுக்கு கூகுல் நிதியுதவி

இணைய உலகின் லாபம் மிக்க நிறுவனமான கூகுல் இணையத்தின் கூட்டு முயற்சியின் அடையாளமாக விளங்கும் விக்கிபீடியாவுக்கு 2 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கியுள்ளது.

விக்கிபீடியாவை நிர்வகிக்கிம் விக்கிமீடியா அமைப்பின் தலைவரும் விக்கிபீடியாவின் நிறுவனருமான ஜிம்மி வேல்ஸ் இந்த தகவலை தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து அதிகார பூர்வ தகவலும் வெளியிடப்பட்டது. 

கூகுலின் இணை நிறுவனரான‌ சர்ஜி பிரைன் விக்கிபீடியாவை இணைய உலகின் மாபெரும் வெற்றிகளில் ஒன்று என குறிப்ப்ட்டுள்ளார்.

கூகுல் அளித்துள்ள நிதியுதவி விக்கிபீடியாவின் தகவல்களை தாங்கி நிற்பதற்கான தொழில்நுட்ப வசதியை உருவாக்க மற்றும் மேம்படுத்த பயன்படுத்தப்பட உள்ளது. 

இணைய‌வாசிக‌ளின் ஆர‌வ‌ மிக்க‌ ப‌ய‌ன்பாட்டால் நாளுக்கு நாள் வ‌ள‌ர்ந்து கொண்டே வ‌ரும் விக்கிபீடியாவின் அதிக‌ரித்து வ‌ரும் த‌க‌வ‌ல் நிலையில் அத‌ற்கு ஈடு கொடுக்கும் வ‌கையில் விக்கிபீடியா த‌ன‌து தொழில்நுட்ப‌ வ‌ச‌தியை மேம்ப‌டுத்திக்கொள்ள‌ வேண்டியுள்ள‌து. 

இத‌ற்காக‌ நிதி திர‌ட்டு முய‌ற்சிக‌ள் மேற்கொள்ள‌ப்ப‌ட்டு வ‌ரும் நிலையில் கூகுல் த‌ன் ப‌ங்குக்கு நிதி வ‌ழ‌ங்கியுள்ள‌து. 

கூகுலின் உத‌வி விக்கிபீடியாவிற்கான‌ அங்கீகார‌மாக‌வும் அமைகிற‌து.

உடல் எலும்புகள் பலமாக இருக்க....


உடல் எலும்புகள் பலமாக இருக்க வேண்டும் என்றால் சுண்ணாம்புச்சத்து தேவையான அளவு இருக்க வேண்டும். கூடவே, வைட்டமின் `டி’யும் தேவை.
இந்த சத்துகள் பால், தயிர், மீன், முட்டை, வெண்ணை ஆகியவற்றில் நிறைய காணப்படுகின்றன. இவற்றுடன் தினசரி, முளைவிட்ட கொண்டைக் கடலையும் சாப்பிட்டு வரவேண்டும். சூரியக் குளியலும் அவசியம். டாக்டர் யோசனைப்படி வைட்டமின் `டி’யை மாத்திரையாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

சுண்ணாம்புச் சத்து அதிகம் கிடைக்க வேண்டும் என்றால் முட்டைகோஸ், தவிடு நீக்காத கோதுமை மாவில் செய்யப்பட்ட சப்பாத்தி, தண்டுக்கீரை, கேரட், ஆரஞ்சுப் பழம், பாதாம் பருப்பு, வால்நட் பருப்பு ஆகியவற்றையும் தெடர்ந்து உணவில் சேர்த்து வரவும்.

இதயம் வேகமாக துடித்தல், தூக்கமின்மை, தசைவலி, எரிச்சல் போன்ற பாதிப்புகள் தெரிந்தால் அது சுண்ணாம்புச் சத்துக் குறைபாட்டின் அறிகுறியேதான்.

மேற்கூறிய உணவு வகைகளைத் தெடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், எலும்பு சம்பந்தமான நோய்கள் வருவதை தவிர்க்கலாம்.

February 18, 2010

ஆரஞ்சுபழத்தில் இருந்து செயற்கை தோல் தயாரிப்பு

தென் கொரியாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆரஞ்சுப்பழம் மற்றும் சிசிலிப்பழம் போன்றவற்றை ஆராய்ச்சி செய்தனர். இதில் இருந்து செயற்கை தோல் மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரித்துள்ளனர்.அவற்றில் இருந்து வெளியாகும் சிட்ரஸ் சீ 623-2 என்ற பாக்டீரியா மூலம் வேதியியல் மாற்றம் செய்யப்பட்டு செலுலஸ் ஜெல் ஆக மாற்றம் செய்யப்படுகிறது. அதில் இருந்து செயற்கை தோல் தயாரிக்கப்படுகிறது.

இது மனிதர்களின் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. இதனால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் இந்த செயற்கை தோல் பயன்படுத்துவதால் எந்தவித தொற்று நோயும் ஏற்படாது.

தீக்காயம் பட்ட இடத்தில் ஒரு வருடத்திற்குள் இந்த செயற்கை தோலை பொருத்த முடியும். தற்போது இது ஆய்வில் உள்ளது. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் உபயோகத்துக்கு வரும்.இந்த செயற்கை தோல் இயற்கையான பயோ பாலிமரில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதனால் பாக்டீரியா வினால் பாதிப்பு எதுவும் ஏற்படாது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கூகுள் லேப்ஸ் : புதிய அம்சங்கள்

கூகுள் சர்ச் தேடல் பகுதிகளில் ஏதேனும் புதுமையான அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, வசதிகள் தரப்பட்டால், உடனே அதனை அறிந்து கொண்டு பயன்படுத்துகிறோம்.கூகுள் தன் பிரிவுகள் அனைத்திலும் அதே போல புதிய அம்சங்களை அறிமுகப் படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. கூகுள் லேப்ஸ் பிரிவில் அறிமுகப்படுத் தியுள்ள சில அம்சங்களை இங்கு காண்போம்.

ஜிமெயிலில் செட்டிங்ஸ் (Settings) பிரிவில் லேப்ஸ் (Labs) என்பதில் கிளிக் செய்தால் இவற்றைப் பார்க்கலாம்.

Google Search ஜிமெயிலில் நீங்கள் இருக்கையில், ஏதேனும் ஒன்றை கூகுள் சர்ச் இஞ்சினில் தேட வேண்டும் என்றால், உடனே வெளியேறி, அல்லது அடுத்த டேப்பில் கூகுள் சர்ச் தளத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. கூகுள் மெயிலில் இருந்தவாறே தேட வசதி தரப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி வழக்கமான தேடல் இஞ்சினில் உள்ளது போல டிக்ஷனரி விளக்கம்,ஸ்பெல் செக், கால்குலேட்டர், சீதோஷ்ண நிலை அறிதல், செய்திகள் என அனைத்து வசதிகளும் தரப்பட்டுள்ளன.

Undo Send: இந்த வசதி மூலம், Send பட்டனில் கிளிக் செய்து அனுப்பிய மெயிலை சில நொடிகளில் திரும்பப் பெறலாம்.

Snake: கூகுள் தளத்தில் இருக்கையில்,சிறிய பெர்சனல் பிரேக் எடுக்க வேண்டும் என்றால், விளையாட்டு ஒன்றை விளையாடலாம். Old Snakey என்னும் விளையாட்டினை முதலில் இயக்கிக் கொள்ளுங்கள். பின் ஜிமெயில் செட்டிங்ஸ் சென்று ஷார்ட் கட் கீ இயக்கத்திற்கு உயிர் (Enable) கொடுங்கள். அதன் பின் ஷார்ட் கட் கீயாக - கீயை அழுத்தினால் பிரபலமான ஸ்நேக் விளையாட்டு கிடைக்கும்.

Attachment Detector: அட்டாச்மென்ட் இணைப்பதாக கடிதத்தில் குறிப்பிட்டுவிட்டு, பின் அதனை இணைக்காமலேயே மெயிலை நாம் பல முறை அனுப்பி விடுகிறோம். பின்னர் தவறை உணர்ந்து மீண்டும் ஒரு முறை அந்த மெயிலை அட்டாச்மெண்ட் பைலுடன் அனுப்புகிறோம். இந்த தவறைக் கண்டறியும் வசதியாக, அட்டாச்மென்ட் டிடெக்டர் (Attachment Detector) உள்ளது. இதனை இயக்கி விட்டால், அது நாம் தயாரிக்கும் இமெயிலை ஸ்கேன் செய்கிறது. அதில் அட்டாச் செய்வதாக செய்தி இருந்தால், பைல் அட்டாச் செய்யப்படுகிறதா என்று கண்காணித்து, இல்லை எனில் நம்மை உஷார்படுத்துகிறது.

Hide Unread Counts: நமக்கு வந்த பல மெயில்களை நாம் வெகுநாட்கள் திறக்காமல் வைத்திருப்போம். இது தலைப்பில் இத்தனை மெயில்கள் படிக்கப்படாமல் உள்ளன என்று காட்டப்பட்டு நம் மானத்தினை வாங்கும். இந்த செய்தி வராமல் இருக்க இந்த டூல் உதவுகிறது.

Vacation Time : வெளியூர் செல்கிறீர்களா? அப்படியானால் உங்கள் இன்பாக்ஸில் வந்து சேரும் மெயில்களுக்கு யார் பதில் சொல்வது. இங்கு தான் Vacation Time என்ற வசதி பயன்தருகிறது. இதனை இயக்கி எந்த நாள் முதல் எந்த நாள் வரை என தேதிகளை வரையறை செய்தால், மெயில் வந்தவுடன், அதனை அனுப்பியவருக்கு, நீங்கள் விடுமுறையில் உள்ளதாகவும், குறிப்பிட்ட இந்த நாளில் வருவீர்கள் என்றும் செய்தி மின்னஞ்சலாகத் தானாகச் செல்லும்.

You Tube Preview உங்களுக்கு வந்த மின்னஞ்சலில், அதனை அனுப்பியவர் யு ட்யூப் தளத்தில் உள்ள வீடியோ ஒன்றுக்கு லிங்க் அனுப்பி இருந்தால், அது என்ன என்று அறியாமல், புதிய டேப்பில் அதனை இயக்க வேண்டியதில்லை. இந்த வசதி மூலம், மெயிலிலேயே அந்த வீடியோவின் பிரிவியூ ஒன்றைக் காணலாம்.

Insert Image: இந்த வசதி மூலம் இமேஜ் ஒன்றை இமெயிலில் இணைக்கலாம். அப்படியே அனுப்பலாம்.

February 17, 2010

புளுட்டோ கிரகம் பிரகாசமாக மாறுகிறது : நாசா

புளுட்டோ கிரகம் பிரகாசமாக மாறி வருவதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான `நாசா' தெரிவித்துள்ளது.புளுட்டோ கிரகம், சூரியனை கடந்த 248 ஆண்டுகளாக சுற்றி வருகிறது.இந்நிலையில், அது பிரகாசமாக மாறி வருவதாக தெரிவித்துள்ள 'நாசா', விண்வெளியில் சுற்றி வரும் ஹப்பிள் டெலஸ்கோப் எடுத்த படங்களின் அடிப்படையிலேயே இக்கருத்தை வெளியிடுவதாக கூறியுள்ளது.
இதற்கு முன்பு கடந்த 1994 ஆம் ஆண்டு, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் எடுத்த அனுப்பிய படங்களைவிட தற்போது எடுக்கப்பட்டுள்ள படத்தில் புளுட்டோவின் மேற்பரப்பு மிக தெளிவாகவும் பிரகாசமாகவும் இருப்பதாக `நாசா'தெரிவித்துள்ளது.
புளுட்டோ கிரகத்தில், சூரிய ஒளி படும் துருவத்தின் மேற்பரப்பில் உள்ள பனிக்கட்டி உருகுவதாலும், அதன் எதிர் துருவம் உறைவதாலும் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அது மேலும் கூறியுள்ளது.

உயிர்காத்த வெப்கேம் காட்சி

அற்புதமான சூர்ய அஸ்தமனக்காட்சியை கண்டு ரசிக்கும் மனம் யாருக்கு தான் இல்லாமல் போகும்.  இப்படி சூர்ய அஸ்தமனக்காட்சியை வெப்கேமில் கண்டு ரசித்துக்கொண்டிருந்த பெண்மணி ஒருவர் உரையும் கடலில் சிக்கித்தவித்த ஒருவரை காப்பாற்ற உதவியிருக்கிறார்,

ஜெர்மனியின் தெற்கு பகுதியில் அந்த பெண்மணி வசித்து வருகிறார்.அந்நாட்டின் வடக்கு பகுதியில் செயின்ட் பீட்டர் ஆர்டிங் என்றொரு கடற்கரை நகரம் இருக்கிறது.

கடற்கரை ரிசார்ட்டுகளூக்கு பெயர் பெற்ற இந்த நகரம் தான் கெர்மனியிலேயே அதிக சுற்றுலா பயணிகளை கவரும் கடற்கரையாக கருதப்படுகிறது. இங்குள்ள ரிசார்ட்டுகளில் இருந்து சூர்ய அஸ்தமனத்தை கண்டு களிப்பது கண்கொள்ள காட்சியாக புகழப்படுகிறது.

இதற்காகவே வந்து குவியும் சுற்றுலா பயணிகள் உள்ளனர். சூர்ய அஸ்தமனம் அற்புதமானது என்றாலும் கொஞ்சம் ஆபத்தானது.சூரிய‌ன் ம‌றையும் நேர‌ம் நெருங்கிய‌துமே க‌ட‌ற்க‌ரையின் குண‌மே மாறிவிடும் என்று கூற‌ப்ப‌டுகிற‌து.

திடிரென‌ இருள் சூழ்ந்து க‌ட‌ற்க‌ரையே க‌ண்ணுக்கு புல‌ப்ப‌டாம‌ல் போய்விடுமாம். அதிலும் க‌ட‌ற்க‌ரை ப‌னியில் உறைய‌த்துவ‌ங்குவ‌தால் நில‌மை மேலும் சிக்க‌லாகி விடுமாம்.

என‌வே சுற்றுலா ப‌ய‌ணிக‌ள் மாலை நேர‌ங்க‌ளில் க‌ட‌ற்க‌ரையில் அதிக நேர‌ம் செல‌விட‌ வேண்டாம் என்று கேட்டுக்கொள்ள‌ப்ப‌டுவ‌தும் உண்டு.
ஆனால் சூர்ய‌ அஸ்த‌ம‌ன‌ அழகால் உந்தித‌ள்ள‌ப்ப‌டும் ப‌ல‌ர் ஆப‌த்தை பொருட்பாடுத்தாம‌ல் க‌ட‌ற்க‌ரையிலேயே காத்திருப்ப‌தும் உண்டு.

இப்ப‌டிதான‌ ச‌மீப‌த்தில் 40 வ‌ய‌து ம‌னித‌ர் ஒருவ‌ர் சூர்ய‌ அஸ்த‌ம‌ன‌த்தை ப்ட‌ம் எடுப்ப‌த‌ற்காக‌ காமிராவோடு காத்திருந்தார்.

அந்த‌ அற்புத‌ காட்சியை கிளிக் செய்துவிட்டாலும் அத‌ன் பிற‌கு உரைந்து கிட‌ந்த‌ ப‌னிக்க‌ட்டி மீது சிக்கி கொண்டார். அங்கிருந்த‌ பார்த்தால் க‌ட‌ற்க‌ரை க‌ண்ணில் ப‌ட‌வே இல்லை.ப‌த‌றிப்போன‌ ம‌னித‌ர் உத‌விக்கு த‌வித்திருக்கிறார். ஆனால் அருகாமையில் யாருமே இல்லாத்தால் மேலும் த‌வித்து க‌டைசியில் த‌ன‌து காமிராவை கொண்டு பிளாஷ் அடித்து உத‌விக்கு செய்கை செய்துள்ளார்.

வெளிச்ச‌ம் ம‌ங்க‌த்துவ‌ங்கி விட்ட‌ ஆள‌ற்ற‌ க‌ட‌ற்க‌ரையில் உயிருக்கு போராடும் ஒருவ‌ர் காமிராவில் பிளாஷ் அடிக்கும் காட்சி எப்ப‌டி இருந்திருக்கும் நினைத்துப்பாருங்க‌ள். அவ‌ர‌து அப‌ய‌க்குர‌ல் யார் காதிலும் விழாம‌லேயே போயிருக்கும்.

ஆனால் ந‌ல்ல‌ வேளையாக‌ பெண்ம‌ணி ஒருவ‌ர் த‌ன‌து வீட்டில் அம‌ர்ந்த‌ ப‌டி க‌ம்ப்யூட்ட‌ர் மூல‌ம் அந்த‌ சூர்ய அஸ்த‌ம‌ன‌க்காட்சியை க‌ண்டு க‌ளித்துக்கொண்டிருந்தார். ந‌க‌ர‌ நிர்வாக‌ம் வெப்கேம் மூல‌ம் க‌ட‌ற்க‌ரை காட்சியை ப‌திவு செய்து இண்ட்நெர்நெட் வ‌ழியே க‌ண‌ச்செய்து வ‌ருகிற‌து.

சூர்ய‌ அஸ்த‌ம‌ன‌ அழ‌கில் மூழ்கியிருந்த‌ அந்த‌ பெண்ம‌ணி காமிரா பிளாஷ் வெளிச்ச‌ம் மீன்னுவ‌தை பார்த்து யாரோ அப‌ய‌க்குர‌ல் கொடுப்ப‌தை புரிந்து கொண்டு உட‌னே அதிகாரிக‌ளூக்கு த‌க‌வ‌ல் கொடுத்தார்.

அதிகாரிகளும் விரைந்து சென்று அவரை காப்பாற்றியுள்ள‌ன‌ர்.

February 16, 2010

இணையதள பண பரிமாற்றத்தில் பேபால் மற்றும் வென்ராக் இணைந்து புதிய சேவை

ஒன்லைன்-ல் ஒரு பொருள் வாங்குவதில் இருந்து புத்தகம் வாங்குவது வரை நாம் அத்தனைக்கும் பயன்படுத்துவது பேபால்( Paypal) தான் இந்த பேபால் தான் உலகம் முழுவதும் அனைவரும் அதிகமாக இணையதளம் மூலம் பொருள்களை வாங்க விற்க பயன்படுத்தும் சேவை.

பேபால் மூலம் ஒரு பொம்மை விற்பவர் கூட தனக்கென்றுஉள்ள இணையதளத்தை இலவச பேபால் கணக்கை தொடங்கி விடலாம் ஒவ்வொரு பொருளும் விற்றபின் நாம் சிறு தொகையை சேவைக்காக பிடித்துவிடுகின்றனர். 

இந்த பேபால் இப்போது வரை பணம் அனுப்புபவரின் முழு தகவல்களையும் சேமித்து வைப்பதில்லை எளிய முறையில் பணம் யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம் ஆனால் பணம் அனுப்பியவரின் எந்த முகவரியையும் டிரேஸ் செய்வதில்லை இதுமட்டுமல்ல மேலும் பணம் அனுப்ப பயன்படுத்தும் இமெயில் முகவரியை கூட சில நேரங்களில் தவறாக பயன்பபடுத்தலாம் ஆனால் இந்த எந்தப்பிரச்சினையும் இல்லாமல் இணையதளத்தில் ப்ண பரிமாற்றம் செய்ய பேபால் மற்றும் வென்ராக் இணைந்து புதிதாக 'பில்பிலோட்' என்ற சேவை வர இருக்கிறது. 

ஒரு பொருள் வாங்க பணம் அனுப்புவதற்கு பணம் அனுப்புவதில்லிருந்து அதன் அத்தனை விபரங்களையும் துல்லியாமாக கண்டுபிடித்து நமக்கு கொடுக்கும் அதுமட்டுமின்றி பணம் பெறுபவர்கள் தவறுதலாகவோ அல்லது தெரிந்தோ மாற்றி அனுப்பியிருந்தால் கூட தவறுதலாக பணம் அனுப்பியவரின் தகவல்களை கூட தெரிந்து கொள்ளலாம்.பேபால் மூலம் பணம் வெளிநாடுகளில் இருக்கும் நபர்களுக்கு அனுப்பினால் சென்று கிடைக்க மூன்று முதல் நான்கு வரை எடுத்துக்கொள்ளும் ஆனால் இந்த பில்பிலோட் சேவைமூலம் பணம் வெகு விரைவில் நம் கணக்கில் கிடைக்க ஏற்பாடும் செய்துள்ளனர். 

அதேபோல் இணையதள செக்யூரிட்டிக்கும் நம் கணக்கிற்கும் பாதுகாப்பு அதிகப்படுத்த்ப்பட்டுள்ளது.இணையதளத்தில் மட்டுமல்ல மொபைல்போன் மற்றும் வாய்ஸ் ரெககனேசன் மூலமும் பணம் அனுப்பும் தொழில்நுட்ப வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

தகவல்களை குறித்து வைக்க ஹாட்நோட்ஸ் (Hot Notes)




கம்ப்யூட்டரில் மிகவும் கவனமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கையில் திடீரென நமக்கு ஒரு போன் அழைப்பு வரலாம். அவசரமாய் ஏதேனும் தகவல்களை போன் செய்பவர் கூறுவார்.

அப்போதுதான் பேனா, பென்சில் மற்றும் பேப்பரைத் தேடுவோம். எதிர் முனையில் இருப்பவர், என்னய்யா இதெல்லாம் பக்கத்தில் வைத்துக் கொள்வதில்லையா என்று அங்கலாய்ப்பார். ஏன், கையில் இருக்கும் கம்ப்யூட்டரில் தகவலைக் குறித்துக் கொள்ள முடியாதா? 

முடியும். நோட்ஸ், ஸ்டிக்கி நோட்ஸ், அர்ஜன்ட் நோட்ஸ் என இதனைக் குறிப்பிடுவோம். இது போல நோட்ஸ் குறிப்புகளை, டெஸ்க்டாப்பில் எழுதி வைக்கும் வசதியைத் தர பல புரோகிராம்கள் இருந்தாலும், ஹாட்நோட்ஸ் (Hot Notes) என்னும் புரோகிராம், இவ்வகையில் சிறப்பானதாக இருந்தது. 

மெசேஜ், லிஸ்ட், ஸ்கிரிப்பிள் என மூன்று வகைகளில், மூன்று தனி தனிக் கட்டங்களில் நாம் அவசரத் தகவல்களை எழுதி வைக்கலாம். இந்த கட்டங்கள் ஒளி ஊடுறுவும் தன்மை உடையதாய், டெஸ்க் டாப்பில் உள்ளதை மறைக்காதவகையில் இருக்கும். சிறிய அளவில் இதில் படங்களைக் கூட வரைந்து வைக்கலாம். அல்லது படத்தை ஒட்டியும் வைக்கலாம். வேஸ்ட் பாஸ்கட் என்னும் வசதியில், அதிகம் பயன்படாத குறிப்புகளை எழுதி வைக்கலாம். தேவைப்பட்டால், ரீசைக்கிள் பின்னிலிருந்து எடுத்துக் கொள்வதைப் போல எடுத்துக் கொள்ளலாம். முக்கியமான தகவல்களை பேக்கப் பைலாக வைத்துக் கொள்ளவும் இதனைப் பயன்படுத்தலாம். 

நினைவில் வைத்துக் கொண்டு, வரும் நாட்களில் மேற்கொள்ள வேண்டிய வேலைகளை, இதில் ஒரு நினைவூட்டல் போர்டு மாதிரி எழுதி வைத்துக் கொள்ளலாம்.இது எங்கும் எடுத்துச் செல்லும் வகையில் போர்ட்டபிள் வெர்ஷனாகவும் கிடைக்கிறது. இதனை பிளாஷ் டிரைவில் எடுத்துச் சென்று எந்த பெர்சனல் கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தலாம்.

வண்ண விளக்குகளால் மூளைக்கு ஆபத்து

வண்ண விளக்குகள் வசீகரமானவை. கண்களை கவர்ந்திழுக்கும். பலரும் விரும்புவதால் வண்ணவிளக்குகள் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

குறிப்பாக பூஜையறை, படுக்கை அறை மற்றும் பெரியவர்களின் படங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் `ஜீரோ வாட்ஸ்’ பல்புகளாவது ஒவ்வொரு வீடுகளிலும் ஒளிரும். 

அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலைக்கழக நரம்பியல் வல்லுனர்கள், விளக்கு ஒளியால் ஏற்படும் நரம்பியல் மாற்றங்கள் குறித்து ஆய்வு நடத்தினார்கள். இதில் வண்ண விளக்குகளில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகள் மூளையைப் பாதிப்பது தெரியவந்துள்ளது. 

இதற்காக ஆய்வகத்தில் பல வண்ண விளக்குகளுக்கு இடையே எலிகள் பரிசோதித்துப் பார்க்கப்பட்டன. ஆய்வில் விளக்குகளை அணைக்கும்போது ஏற்படும் எலக்ட்ரிக் கதிர்வீச்சு மூளை செல்களான நிரான்களைப் பாதிக்கின்றன. அவற்றின் செயல்பாட்டை தடுப்பதால் பல விபரீத வியாதிகள் ஏற்படுகின்றன. 

குறிப்பாக உடல் வலி, பார்கின்சன் என்னும் ஞாபகமறதி வியாதி, மூளை முடக்கம், இதயக் கோளாறுகள், நோய் எதிர்ப்பு அமைப்பு (இம்ன் சிஸ்டம்) செயல்களில் பாதிப்பு மற்றும் இன்னும் பல வியாதிகளுக்கு வழி வகுக்கிறது.
ஒவ்வொரு வண்ண விளக்கும் வேறுவேறு பாதிப்புகளை உருவாக்குவது குறிப்பிடத்தக்கது. சிவப்பு வண்ண விளக்கு நிரான்களை செயலிழக்கச் செய்கிறது. நீல வண்ண விளக்குகள் ஒரு வகை ஜீன்களைப் பாதிக்கிறது. மஞ்சள் விளக்குகள் வேறுவகை ஜீன்களைப் பாதிக்கிறது. 

உடலியக்கம் பல மின்தூண்டல்களால்தான் நடைபெறுகிறது. இதற்கிடையே விளக்குகளை அணைக்கும்போது ஏற்படும் மின் அதிர்வுகள், மூளையை பாதிக்கிறது என்கிறது ஆய்வு.

February 15, 2010

இதயம் சில உண்மைகள்!


பெண்களின் இதய துடிப்பு ஆண்களை விட அதிகம். பொதுவாக எல்லா பெரிய உயிரினங்களின் இதய துடிப்பு மெதுவாகவும் (யானை – நிமிடத்திற்கு 20-30) சிறிய உயிரினங்களில் இதய துடிப்பு வேகமாகவும் இருக்கும்.

(எலி - நிமிடத்திற்கு 500-600). மனித இனத்தில் பெண்கள் உருவத்தில் ஆண்களைவிட சிறியவர்களாக இருப்பதால் அவர்களின் இதயத்துடிப்பு வேகமாக இருக்கும்.

2. மனித இதயத்தின் எடை அரை கிலோகிராமிற்கு குறைவாகவே இருக்கும்.

3. நீளமான மோதிர விரல் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு குறைவு என்பதினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.

4. மனிதனின் இதய துடிப்பு ஒரு நாளைக்கு 100,000 தடவைகளும் ஒரு வருடத்திற்கு 30 மில்லியன் தடவைகளும் வாழ் நாளில் 2.5 பில்லியன் தடவைகளும் துடிக்கின்றன .

5. ஒரு மனிதனின் வாழ்நாளில் சராசரியாக 1 மில்லியன் பேரல் இரத்தத்தை பம்பு (pump) பண்ணுகிறது. (ஒரு பேரல் என்பது 117.34 லிட்டேர்கள் …நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்)

6. பல் ஈறுகளில் நோய்தொற்று உள்ளவர்களுக்கு மாரடைப்பு வரைவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

7. நம் இதயத்தின் அளவு நமது கையின் ஒரு பிடி அளவே (clenched fist).

8. கருவில் உருவாகும் முதல் உறுப்பு இதயமே.

9. நாம் இதயத்தின் மேல் கை வைஎன்றால் உடனடியாக நாம் நமது கையை நெஞ்சின் இடதுபக்கம் வைப்போம் ஆனால் இதயம் நெஞ்சின் நடுவில்தான் இரண்டு நுரைஈரல்லுக்கும் மத்தியில் இருக்கிறது. இதயத்தின் அடிபகுதி மட்டுமே சற்று இடப்பக்கம் சாய்ந்து இருக்கும் எனவேதான் நாம் அவ்வாறு உணருகிறோம்.

10. லப்..டப் ..லப்..டப் ..என்னும் சத்தம் நமது இதயம் ஏற்படுத்துகிறது என்பது நமக்கு தெரியும். நமது இதயத்தின் வால்வுகள் திறந்து மூடும் போதே இந்த சத்தம் உருவாகிறது.

பேஸ்புக்குக்கும்,ட்விட்டர்கும் சவாலாக கூகுள் வண்டு (Buzz)

தொட்ட இடங்களில் எல்ல்லாம் முதல்வனாக வரும் நம் கூகுளின் பெரிய சமூகவலைப்பின்னலாக வரும் கூகுள் வண்டு (இரை). பெயர் கொஞ்சம் புதிதாக தான் இருக்கிறது. வண்டு எனபது எல்லா பூக்களில் இருந்தும் இரையைத் தேடி எடுத்து அதை கூட்டில் சேமித்து வைக்கும் அதே தான் இந்த கூகுள் வண்டு (Buzz)

முதலில் இந்த கூகுள் பஸ் என்ன வேலை செய்கிறது என்று பார்ப்போம் கடந்த ஆறுமாதமாக மக்கள் தேடுபொறிகளை பயன்படுத்துவது குறைந்திருக்கிறது இதற்கு முக்கிய காரணமாக இருப்பது பேஸ்புக்கும் டிவிட்டரும் தான். 

மக்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்வது மட்டும் இல்லாமல் புகைப்படம் வீடியோ என அத்தனையையும் இதில் பகிர்ந்து கொள்கின்றனர் அதனால் மக்கள் தேடுபொறிகளை பயன்படுத்துவது கொஞ்சம் குறைந்துள்ளது இந்த பிரச்சினையை மையமாக வைத்துதான் கூகுள் லைவ் தேடுதல் வந்தது நமக்கு தெரியும் ஆனாலும் எதிர்பார்த்த அளவு பெரியதாக மக்கள் அதை பயன்படுத்துவதில்லை. 

இதற்காக கூகுள் உலகிலே அதிகளவு பயன்படுத்தும் தன் ஜிமெயிலை வைத்து காய் நகர்த்தியிருக்கிறது, ஜிமெயிலில் புதிதாக வந்துள்ளது 'Buzz' என்ற வசதி இதன் மூலம் நாம் செய்தி,படம், வீடியோ மற்றும் ஃபீட்ரீடர் என்ற அனைத்து வசதியையும் ஜிமெயிலில் பயன்படுத்தலாம். 

உதாரணமாக நாம் விரும்பும் பிளிக்கர் புகைப்படத்தை நம் நண்பருடன் எளிதாக பகிர்ந்துகொள்ளலாம். அதே போல் வீடியோ,டிவிட்டர் மற்றும் ஃபீட்ரீடர் வசதியை கூட பயன்படுத்தலாம்.இதை எல்லாம் விட பெரிய சிறப்பு இந்த வசதியை மொபைலிலும் பயன்படுத்தலாம். 

இத்தனையையும் ஜிமெயிலிலே செய்யலாம் என்றால் கொஞ்சம் அல்ல அதிகமாகத்தான் ஆவல் இருக்கிறது ஆனால் இப்போது இந்த கூகுள் வண்டு பயன்படுத்த சிலருக்கு மட்டுமே அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.

February 13, 2010

நல்ல கேமரா வாங்க உதவும் பிகாசா தளத்தின் வசதி

நீங்கள் கேமரா அல்லது கேமரா வசதி உள்ள மொபைல் வாங்கப்போவதாக வைத்துக் கொள்ளுவோம். அந்த கேமராவில் எடுக்கப்படும் புகைப்படங்கள் எப்படி இருக்கும்? என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கும்.

உங்கள் நண்பர்கள் அந்த கேமரா வைத்து இருந்தால் நீங்க அவற்றை உபயோகித்து பார்த்து அவற்றின் புகைப்படங்களின் துல்லியத்தை அறிந்து கொள்ளலாம். அல்லது இணையத்தில் பல்வேறு கேமராக்களில் எடுத்த புகைப்படங்களின் மாதிரிகளை சிலர் தரவேற்றி இருப்பர். அவையும் மிகக் குறைவான அளவிலேயே உள்ளன.
அவற்றை கேமரா மாடல் எண்ணை கூகுளில் தேடி கண்டுபிடித்து பல காமெராக்களின் புகைப்படங்களை ஒப்பிட்டு கொள்ளமுடியும். நீங்கள் விரும்பும் கமெராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில நேரம் கிடைக்காமல் போகலாம். ஆனால் தற்போது அதிக புகைப்படங்களுடன் உள்ள ஒரு தளம் புகைப்படங்களை கேமரா மாடல் வாரியாக பிரித்துக் காட்டுகிறது.
கூகிள் பிகாசா இணையதளம். பயனர்கள் புகைப்படங்களை தரவேற்றி கொள்ளும் சேவையையை வழங்குகிறது என்பதனை பெரும்பாலானோர் அறிந்திருப்பீர்கள். அங்கே உள்ள புகைப்படங்களை நீங்கள் பார்த்த்துக் கொள்ள முடியும். இப்போது புது வசதியாக நீங்கள் அங்கே குறிப்பிட கேமரா மாடலில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தேடி பார்த்துக் கொள்ளலாம்.
Picasaweb இணைய தளத்திற்கு சென்று கொள்ளுங்கள். அங்கே நீங்கள் தேட விரும்பும் புகைப்படங்களை தேடுங்கள். உதாரணத்திற்கு நான் 'india' என்று தேடுகிறேன். எல்லா புகைப்படங்களும் தோன்றும். இடது புறத்தில் 'Show Options' கிளிக் செய்து கொண்டு, அங்கே காமெரா மாடலை தேர்வு செய்து கொண்டு எண்டரை தட்டுங்கள். நீங்கள் விரும்பிய கமெராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தோன்றும்.
Sony DSC-W50 இல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இங்கே. Canon EOS 40D -இல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இங்கே. மொபைல் போன் கேமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை மொபைல் மாடல் கொடுத்து தேடுவதன் மூலம் பெறலாம். Sony Ericsson K800i மொபைல் மூலம் எடுக்கபட்ட புகைப்படங்கள் இங்கே.
இவ்வாறு கேமரா மாடல்களை குறிப்பிட்டு அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒப்பிட்டு உங்களுக்குத் தேவையான மிகச்சரியான காமெராவை தேர்ந்தெடுத்துக் கொள்ள பிகாசாவின் இந்த வசதி உதவுகிறது.

இளம் வயதில் வரும் `ஹார்ட் அட்டாக்’

- சிறிய விஷயங்களுக்குக் கூட நீங்கள் டென்ஷன் ஆகிறீர்களா?
- பிரச்சினையை சமாளிக்கத் தெரியாமல் அடிக்கடி சத்தம் போடுகிறீர்களா?
- எதற்கெடுத்தாலும் முக்கு நுனியில் கோபத்தை கொண்டு வருகிறீர்களா?’
இத்தனைக்கும் ஆம் என்றால் முதலில் அவற்றை கைவிட முயற்சிங்கள். இல்லாவிட்டால் இளம் வயதில்கூட `ஹார்ட் அட்டாக்’ வரும் அபாயம் உள்ளது.
ஆத்திரபடும் போது `ஸ்ட்ரெஸ்’ அதிகமாகி ரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது. அட்ரினலின் சுரப்பி அதிக வேலை செய்கிறது. அதனால் இதய தசைகளுக்கு அதிக ஆக்ஸிஜன் தேவைபடுகிறது. அப்படி கிடைக்காதபோது `ப்ளேட்லெட்ஸ்’ என்ற பிசுபிசுப்பான திரவம் சுரந்து, த்தக்குழாய்களில் படிந்து, அதில் அடைப்பை ஏற்படுத்துகிறது. அடைப்பு ஏற்படுவதால் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. அஞ்சைனா என்ற மார்பு வலி, ரத்தக் குழாயில் 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை அடைப்பு ஏற்பட்டால் வரும்.
உணவு மற்றும் பழக்க வழக்க முரண்பாடே இதய பாதிப்பிற்கு அடிபடை காரணியாக இருக்கிறது. ஆனாலும், மன அழுத்தம் ஆகும் போது தான் அதிக பாதிப்பு இதயத்தில் ஏற்படுகிறது. கொலஸ்ட்ரால் போன்றவற்றால் ரத்த அழுத்தம் ஏற்படுபவர்களைவிட ஆத்திரம் மற்றும் டென்ஷன் அடைபவர்களுக்குத் தான் மன அழுத்தம் அதிகம். மற்ற இதயநோயாளிகளை விட `டென்ஷன் பார்ட்டிகளை’ நான்கு மடங்கு அதிகமாக இதயநோய் தாக்கும்.
அமைதியாக செயல்படுபவர்களுக்கு பொதுவாகவே எந்த உடல் பாதிப்பும் வருவதில்லை. அவர்களின் உணவு, பழக்க வழக்கங்களில் மாற்றம் இருந்தால் மட்டுமே பாதிப்பு ஏற்படும். ஆனால் எதற்கெடுத்தாலும் கோபப்படுவோருக்கு மன அழுத்தம் ஏற்பட்டு, பல நோய்களுக்கு அது திறவுகோலாகிறது. இளைய தலைமுறையினருக்கு அதிகளவில் இப்போது மன அழுத்தம் ஏற்படுவதாக தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதனால் இளந்தலைமுறையினர் மன அழுத்தத்தை தவிர்த்து மகிழ்ச்சிடன் வாழ முன்வர வேண்டும்.

சூரியனில் ஆய்வு நடத்த நாசா திட்டம்

சூரியனில் ஆய்வு நடத்த அமெரிக்காவின் “நாசா” நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சூரிய மண்டலத்தில் நிகழும் அதிசயங்கள், இதன் மூலம் பூமியில் ஏற்படும் குழப்பங்களுக்கும் தீர்வுகாண முடியும்.இதற்காக வருகிற 9-ந்தேதி முதல் விண்வெளியில் காப்ளக்ஸ்-41 என்ற ஆய்வ கத்தை ஏற்படுத்த முடிவு செய் யப்பட்டுள்ளது. இங்கிருந்து 5 ஆண்டுகள் ஆய்வு நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

மொபைலில் கால் வைக்கும் ‘பயர்பொக்ஸ்’



அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டு உலகத்தில் முதலாவதாக இருக்கும் பயர்பொக்ஸ் இணைய உலாவி இனி மொபைல் துறையிலும் கால் பதிக்க இருக்கிறது.

இணையத்தில் பாதுகாப்பு, அதிக அளவு வசதிகள்,எல்லா செயல் நிரல்களும் சரியாக தெரிவதாக இருக்கட்டும் அனைத்திலும் பயர்பொக்ஸ்  தனி முத்திரை பதித்ததுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
 
அந்த அளவிற்கு கணினியில் முதலிடத்தில் உள்ள இணைய உலாவி பயர்பொக்ஸ் இன்னும் மொபைலில் சிறப்பாக வரவில்லையே என்று நினைப்பவர்களுக்கு உண்மையிலே மகிழ்ச்சியான செய்தி தான் இப்போது நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் பயர்பொக்ஸ் இனி மொபைலிலும் வரப்போகிறது.
 
அனைத்து வசதிகளும் கொண்டு பயர்பொக்ஸ் இணைய உலாவி Nokia N90-ல் முதன் முதலாக வரப்போகிறது.
 
டிவிடரிலிருந்து யூடியுப் வரை அனைத்தும் பயன்படுத்தும் வண்ணம் தயாராகி இருக்கிறது. இதைத் தவிர புக்மார்க் ,பாஸ்வேர்ட்ஸ் சேமித்து வைத்தல் போண்ற எண்ணற்ற வசதிகளும் இதில் உள்ளது. இதுவரை அதிக அளவு பயனாளர்களை கொண்டு மொபைல் உலாவியில் முதலிடத்தில் இருந்து வந்த ஒபேரா (opera)-க்கு சரியான போட்டியாக பயர்பொக்ஸ்  மொபைல் இணைய உலாவி வந்துளளது.
 
இதை மேலும் விரிவுபடுத்தி அனைத்து லேட்டஸ்ட் மாடல் மொபைலும் சப்போர்ட் செய்யும் வகையில் விரைவில் வர இருக்கிறது.
 
அதைப்போல் மொபைல் மூலமாக ஹக் செய்வதும் இனி அதிகஅளவு குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

February 07, 2010

மொபைலில் தமிழ் தளங்களை காண ஸ்கைபயர் உலாவி

பொதுவாக மொபைல் உலாவிகளில் இணையதளங்கள் முழுமையாக தெரியாது. இணைய பக்கங்களில் உள்ள வீடியோக்களை காண முடியாது. இணையதளங்களின் வசதியை முழுமையாக உபயோகிக்க முடியாது. இது போன்று சில குறைபாடுகள் மொபைல் உலாவியில் உண்டு.

ஸ்கைபயர் (Skyfire). கணினியில் இணையதளங்கள் தெரிவது போன்று ஸ்கைபயர் மொபைல் உலாவியில் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. யூடியுப் போன்ற வீடியோ தளங்களில் வீடியோக்கள் உலாவியின் உள்ளேயே ப்ளே ஆகின்றன. மொத்தத்தில் ஓரளவுக்கு கணினியில் பிரவுசிங் செய்வது போன்ற அனுபவத்தை ஸ்கைபயர் தருகிறது.

ஸ்கைபயரின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு 1.5 சிம்பியன் இணையங்குதளத்தை உபயோகிக்கும் மொபைல் போன்களுக்கு என்று வெளியாகி உள்ளது. இது தொடுதிரை (Touch Screen) மொபைல்களையும் ஆதரிப்பது சிறப்பம்சம். 

தமிழர்களாகிய நமக்கு ஸ்கைபெயரில் சிறப்பம்சம் என்னவெனில் தமிழ் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. பொதுவாக ஒபேரா மினி தவிர மற்ற மொபைல் உலாவிகளில் தமிழ் இணைய தளங்களை பார்க்க முடியாது. ஒபேரா மினி இணைய உலாவியில் தமிழ் தளங்களை காண சிறிய மாற்றம் செய்ய வேண்டும். ஆனால் ஸ்கைபயர் இணைய உலாவியில் எந்த மாற்றமும் செய்ய தேவை இல்லை. 

நீங்கள் மொபைல் போனில் இணையம் உபயோகிப்பவராக இருந்தால் நீங்கள் கண்டிப்பாக சோதித்து பார்க்க வேண்டிய இணைய உலாவி ஸ்கைபயர். இது நிச்சம் உங்களை கவரும். 

ஸ்கைபயரின் இணையதளம். உங்கள் கணினியில் தரவிறக்க இந்த சுட்டிக்கு செல்லுங்கள். தரவிறக்கிய பின் உங்கள் மொபைலுக்கு மாற்றி நிறுவி கொள்ளுங்கள். நேரடியான உங்கள் மொபைலில் இருந்து ஸ்கைபயரை தரவிறக்க உங்கள் மொபைலில் இருந்து இந்த m.skyfire.com முகவரியை அணுகுங்கள். உங்கள் மொபைலுக்கு ஏற்ற பதிப்பு தரவிறக்கப்பட்டு நிறுவப்படும்.
- TVS50

ஸ்பைஸ் மொபைல்ஸ் டூயல் சிம் கேமரா போன்கள்

தொடர்ந்து பல நிறுவனங்கள் மொபைல் இணைப்பு சேவையினை மிகக் குறைந்த கட்டணத்தில் தர முன்வருவதால் பலர் ஒன்றுக்கு மேற்பட்ட சிம்களை வைத்துக் கொண்டு, தங்கள் மொபைல் அழைப்புகளை வகைப்படுத்தி வருகின்றனர்.

அவ்வாறு திட்டமிடுவதற்கு இரண்டு சிம்கள் உள்ள மொபைல் போன் ஒரு வரப்பிரசாதமாகும்.

ஸ்பைஸ் எம் 7070:
இந்த மொபைலில் இரண்டு ஜி.எஸ். எம். சிம்களை குழப்பமின்றி எளிதாகப் பயன்படுத்தலாம். இது ஒரு டிஜிட்டல் கேமரா மொபைல். இந்த கேமரா 5 மெகா பிக்ஸெல் திறனுடன், 8 எக்ஸ் டிஜிட்டல் ஸூம், டூயல் எல்.இ.டி. பிளாஷ், ஆட்டோ போகஸ் லென்ஸ் ஆகிய வசதிகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் குறைவான ஒளியில் கூட தெளிவான போட்டோக்களை ஒருவர் எடுக்க முடியும். மேலும் இதில் உள்ள ஃபேஸ் டிடக்ஷன் வசதி தானாக போகஸ் செய்து கொண்டு புகைப்படங்களை எடுக்கிறது. கூடுதலாக பல ஷாட் மோட்களும் தரப்பட்டுள்ளன. மேலும் படம் எடுக்கும் போது கேமரா அசைக்கப்பட்டாலும் படங்களைத் தெளிவாக இதில் எடுக்க முடியும். 

விநாடிக்கு 15 பிரேம்கள் வரை வீடியோ ரெகார்டிங் இதில் மேற்கொள்ள முடியும். வீடியோ பிளே செய்வதும் இதில் எளிதாகவும் நன்றாகவும் உள்ளது. இதன் மெமரியை 16 ஜிபி வரை நீட்டிக்க முடியும். இதில் ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், ஜாவா தொழில் நுட்பமும்,அ2ஈக இணைந்த வசதி கொண்ட புளுடூத் வசதியும், மியூசிக் மற்றும் வீடியோ பிளேயரும் உள்ளன. 

ரெகார்டிங் வசதி கொண்ட எப்.எம். ரேடியோ தரப்பட்டுள்ளது. இதன் திரை 2.4 அங்குல அகலத்தில் உள்ளது. 1000 முகவரிகளை இதில் போட்டு வைக்கலாம். இதன் குறியீட்டு விலை ரூ.7,999.

ஸ்பைஸ் மொபைல் டி 1111:
ஒரு ஜி.எஸ்.எம். + ஒரு சி.டி.எம்.ஏ. சிம் என இரண்டு சிம்களைப் பயன்படுத்தக் கூடிய மொபைலாக ஸ்பைஸ் மொபைல்ஸ் தந்திருப்பது டூயல் சிம் மொபைல் டி 1111. இந்த போன் விண்டோஸ் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குவது இதன் சிறப்பாகும். 

பொதுவாக இந்தியாவில் டூயல் சிம் வகை போன்கள் விண்டோஸ் மொபைல் சிஸ்டத்தில் இயங்கும் வகையில் கிடைப்பதில்லை. அந்த வகையில் இந்த போன் தனித்தன்மை கொண்டதாகும். மேலும் இதில் டச் ஸ்கிரீன் மற்றும் கீ போர்டு என இரண்டும் இருப்பது இதற்கு கூடுதல் மதிப்பைத் தருகிறது. 

இதன் திரை 2.8 அங்குல அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்கிராட்ச் ஏற்பட முடியாத தடுப்பு திரைக்கு தரப் பட்டிருப்பது மட்டுமின்றி, போனைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள மென்மையான லெதர் பை மற்றும் ஸ்கிரீன் கார்ட் தரப்பட்டுள்ளது. 

கீ போர்டு சிறியதாகத் தோற்றமளித்தாலும், பயன்படுத்த வசதியாக கீகள் நன்றாக இடம் விட்டு அமைக்கப்பட்டுள்ளன. பார்ப்பதற்கு மிகத் தடிமனாகத் தோற்றமளித்தாலும் இதன் எடை குறைவாகவே உள்ளது. 

இதில் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் மொபைல் பதிப்பு 6. இதன் வசதிகள் அனைத்தும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. எழுத்துக்களைச் சற்றுப் பெரிதாக்கி தொட்டுப் பயன்படுத்தலாம். 

கீ பேட் பெரிதாக இருந்தாலும் டிக்ஷனரி மோட் வகையில் பயன்படுத்தும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாற்ற இயலவில்லை. இந்த வகை கீ பேடிற்கு பழக்கமில்லாதவர்களுக்கு இது சற்று சிரமம். இதன் விண்டோஸ் மீடியா பிளேயர் கூடுதல் வசதிகளுடன் தரப்படவில்லை என்பதால் ஆடியோவின் தன்மையை அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும். 3ஜிபி மற்றும் எம்பி4 வீடியோ இயக்கம் சிறப்பாக உள்ளது. 

நெட் தொடர்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் வாப் தரப்பட்டுள்ளன. பிரவுசர்களாக பழைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு மற்றும் ஆப்பரா மினி தரப்பட்டுள்ளது. ஆப்பரா மினி வேகமாக இயங்குவதால் அதனையே பயன்படுத்தலாம்.

குழந்தைகளுக்கு பாதுகாப்பான சைபர் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்

சிறிய வயது உள்ள குழந்தைகள் முதல் படிக்கும் மாணவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில் இந்த டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் உள்ளது. முற்றிலும் வண்ணமயமாக்கப்பட்ட குழந்தைகள் விளையாடும் பிளே ஸ்டேசன் போல் உள்ளது.

முதலில் இதன் ஹார்டுவேர் கான்பிக்ரேசன் பற்றி பார்ப்போம்.
  • Intel Pentium Dual Core E5200 CPU
  • 19”inch touchscreen LCD
  • 500GB HDD
  • 4GB RAM
  • DVD super drive
  • Intel GMA 3100 3D Graphic Card
  • Realtek HD audiO 
  •  Windows 7 OS

இந்த டெஸ்க்டாப் கம்யூட்டருக்கு பிரிமியர் கிட்ஸ் சைபர்நெட் ஸ்டேசன் (Premier Kids Cybernet station) என்று பெயர் வைத்துள்ளனர். தண்ணீர் கீபோர்டில் பட்டால் கூட எந்த பழுதும் ஏற்படாது என்பதில் இருந்து மானிட்டரை தொட்டு இன்புட் கொடுக்கலாம் என்பதுவரை அனைத்தும் கொஞ்சம் வித்தியாசமாக தான் உள்ளது.

இண்டெர்நெட்டில் ஆபாச இணையதளங்களை தடுக்கும் மென்பொருளும் எந்த வைரஸும் கம்யூட்டரை தாக்காத வண்ணம் உள்ள மென்பொருள்களையும் வடிவமைத்துள்ளனர். இதனுடன் குழந்தைகள் அறிவை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான பேக்கேஸும் சேர்த்தே கொடுக்கின்றனர் இதில் 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் பயன்படுத்த டொட்லர் என்று முதல் பேக்கேஸ். இரண்டாவது 5  முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகள் பயன்படுத்த கைண்டர்கெர்டன் என்ற பேக்கேஸ்.மூன்றாவதாக 11 முதல் 15  வயது வரை உள்ள தொடக்க மற்றும் மேல்நிலை மாணவர்களுக்கான  பேக்கேஸும் உள்ளது.

இத்தனை வசதிகளும் உள்ள இந்த டெஸ்க்டாப் கம்ப்யூட்டரின் விலை கொஞ்சம் அதிகம் தான் இதன் விலை $1999 அமெரிக்க டாலர்.

வைரஸ் பரவலை தடுக்க மைக்ரோசாப்ட்டின் 'பாதுகாப்பு கவசம்'

கடந்த வாரம் சீனாவில் கூகுள் நிறுவன செயல்பாடுகளை பெருமளவில் பாதித்த வைரஸைப் போல, தற்போது இன்டர்நெட் எக்ஸ்புளோரரை குறி வைத்து பரவி வரும் வைரஸ் தாக்குதலிலிருந்து தனது வாடிக்கையாளர்களைக் காக்க புதிய வகை சாப்ட்வேரை களம் இறக்கியுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறுகையில், கூகுள் உள்பட சீனாவில் இயங்கி வரும் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் குறி வைத்து கடந்த வாரம் வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டது. 

குறி்ப்பாக இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் மூலமாக இந்த வைரஸ் பரப்பப்பட்டது. 

இதையடுத்து எக்ஸ்புளோரர் பிரவுசரை பயன்படுத்துவோரைக் காக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு புதிய சாப்ட்வேரை வெளியிட்டுள்ளது. இதை நிறுவிக் கொண்டால் இந்த வைரஸ் தாக்குதலிலிருந்து தப்பிக்க முடியுமாம். 

இதுகுறித்து உலகின் முன்னணி பாதுகாப்பு சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமான சிமென்டெக்கின் பாதுகாப்பு ஆய்வாளர் ஜான் ஹாரிசன் கூறுகையில், மைக்ரோசாப்ட்டின் பலவீனமான பிரவுசர்களின் ஓட்டைகளைப் பயன்படுத்தி அவற்றை செயலிழக்க வைக்கக் கூடிய வைரஸ்கள் களம் இறக்கப்பட்டுள்ளன.
இப்போது இந்த வைரஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-6ஐ வெகுவாக தாக்குகிறதாம். 7 மற்றும் 8வது வெர்சனை தாக்கக் கூடிய வகையில் அந்த வைரஸ்களை வலுவாக்கும் முயற்சிகளிலும் 'ஹேக்கர்கள்' ஈடுபட்டுள்ளனர். 

கிட்டத்தட்ட 100 முன்னணி இணையத் தளங்களில் இதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். இவை மிகவும் அபாயகரமானவை. பிரவுசர் வழியாக நுழைந்தவுடனேயே இது கம்ப்யூட்டரைத் தாக்கி விடும் என்றார். 

தற்போதைய புதிய சாப்ட்வேரால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூலம் வைரஸ் தாக்குவதைத் தடுக்க முடியும் என மைக்ரோசாப்ட் கூறுகிறது. 

மேலும், சில வகை வைரஸ்கள் மூலம் நமது கம்ப்யூட்டரில் உள்ள டேட்டாக்கள் உள்ளிட்டவற்றை தொலை தூரத்திலிருந்தபடி உளவு பார்க்கும் வேலைகளையும் சிலர் செய்ய ஆரம்பித்துள்ளனராம் என்கிறார் மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் பாமர். 

சீனாவில் கூகுள் நிறுவனத்திற்கு ஏற்பட்ட பெரும் வைரஸ்-உளவு சாப்ட்வேர் தாக்குதலால், அங்கிருந்து தனது அலுவலகங்களை இடம் மாற்றப் போவதாக கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. அதேசமயம், மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னிடம் அப்படிப்பட்ட திட்டம் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளது. 

வைரஸ் தடுப்பு சாப்ட்வேரை நிறுவிக் கொள்ள தனது இணையதளத்திற்குச் செல்லுமாறு வாடிக்கையாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

ஹக்கர்களின் அட்டகாசம் யூடியுப்யையும் விடவில்லை

நாளுக்கு நாள் பெருகிவரும் ஹக்கரின் அட்டகாசம் இப்போது யூடியூப் வரை சென்றுள்ளது. சென்ற வாரம் தான் டிவிட்டரை ஒரு வழிபடுத்தினார்கள் அதற்குள் இரண்டு நாட்களுக்கு முன் யூடியுப்பையும் ஒரு கை பார்த்துள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன் யூடியுப் இணையதளத்தை திறந்தால் YouTube is currently experiencing some downtime issues, reporting a “Http/1.1 Service Unavailable” error or a a 500 Internal Server  error. இப்படி ஒரு செய்தி தெரிந்தது உலகத்தின் பல பகுதிகளில் இருந்தும் யூடியுப் இணையதளத்தை திறந்தவர்கள் ஒன்றும் புரியாமல்  விழித்தனர் ஒருத்தர் டிவிட்டரில் எனக்கு இங்கு யூடியூப் தெரியவில்லை என்று ஒரு டிவிட்டை தட்டி விட விஷயம் காட்டுத்தீ போல பரவ ஆரம்பித்தது. சரியாக 20 நிமிடம் ஒன்றும் செய்ய முடியவில்லை அடுத்து உடனடியாக நம் கூகுள் இந்த பிரச்சினையை பெரிதாகும் முன் சரி செய்தது. இதைப்பற்றி கூகுளிடம் கேட்டதற்கு அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை, ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் நம்மிடமே கைவரிசை காட்டிவிட்டனரே என்று குழப்பத்தில் உள்ளனர். இப்போது தான் அனைவருக்கும் சீனாவின் இராஜதந்திரம் கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்திருக்கிறது. 

இப்படியே சென்றால் சீனாவுக்கும் இண்டெர்நெட் வசதியே இல்லாமல் செய்தாலும் செய்துவிடுவார்கள் போல அல்லது சீனா முழுவதையும் இன்ட்ராநெட் ஆக மாற்றினாலும் ஆச்சர்யப்படுவதிற்கு ஒன்றுமில்லை.

Twitter மூலம் நட்சத்திரமான 16 வயது சிறுவன்

ட்விட்டரில் அரட்டையடித்து நேரம் வீணாக்கும் காங்கோன் போன்றவர்கள் இருக்கும் உலகில் உருப்படியான வேலைகளை செய்து பெயரெடுக்கும் நபர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

அமெரிக்காவில் இருக்கும் Adorian Deck எனும் 16 வயது மட்டுமே நிரம்பிய பாலகன் ட்விட்டர் கணக்கு ஒன்றை ஆரம்பித்து அதில் திகைக்கவைக்கும் தகவல்களைப் போடத்தொடங்கினான். OMGFacts (Oh My God) எனும் அடைபெயருடன் இவன் கடந்த செப்டம்பர் மாதம் ஆரம்பித்த ட்விட்டர் கணக்கில் அறிவியல், கணக்கியல், வரலாறு பூகோளம் போன்றவற்றில் இருந்து திகைக்கவைக்க கூடிய தகவல்களை வெளியிட்டு வந்தான். 

இந்த ட்விட்டர் கணக்கு பிரபலமாக பல பிரபலங்களும் இவனைப் பின்தொடரத்தொடங்கினமை மேலும் சிறப்பு. இதுவரை சுமார் 310,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ள இந்தச் சிறுவன் ஒரு ட்விட்டர் நட்சத்திரம் ஆகிவிட்டான்.

அதிக வேலை முளையை பாதிக்குமாம்!

இன்றைய சமுதாயத்தில் சொந்தமாக தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி… அடுத்தவர்களிடம் வேலை பார்ப்பவர்களாக இருந்தாலும் சரி… குறிப்பிட்ட அளவில்தான் உழைக்க வேண்டும். வாழ்க்கையே உழைப்பு ஆனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஒரு வாரத்திற்கு 40 மணி நேரம்தான் உழைப்புக்கு செலவிட வேண்டும். உடல் உழைப்பை வெளிப்படுத்தி செய்யும் வேலையாக இருந்தாலும், சிந்தித்து செய்யும் வேலையாக இருந்தாலும் இந்த கால அளவை தாண்டி ஒருவர் வேலை செய்வது அவருக்கு நல்லதல்ல என்கிறது இந்த ஆய்வு. 

வாரத்திற்கு 40 மணி நேரத்தையும் தாண்டி வேலை செய்தால், அதனால் ஏற்படும் பாதிப்பு உடனே தெரியாது என்று கூறியுள்ள ஆய்வை மேற்கொண்டவர்கள், நடுத்தர வயதை கடந்த பின்புதான் இந்த பாதிப்பு உங்களுக்கு தெரிய வரும். குறிப்பாக, முளையின் சுறுசுறுப்பு குறைய ஆரம்பிக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள். 

அவர்கள் மேலும் கூறும்போது, சாப்ட்வேர் நிறுவனங்களில் வாரத்திற்கு 5 நாட்கள் வேலை செய்பவர்கள் தினமும் 10 மணி நேரத்துக்கு குறையாமல் வேலை செய்கின்றனர். இதனால்தான் இவர்கள் எளிதில் சோர்வடைகின்றனர், மன அழுத்தத்துக்கும் ஆளாகின்றனர். அதில் இருந்து விடுபடத்தான் விடுமுறை நாட்களை ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று கழிக்கின்றனர் என்றனர். 

நீங்களும் 40 மணி நேரத்தையும் தாண்டி, அலுவலகத்தையே கட்டி அழுபவர் என்றால் இப்போதே உஷாராகிவிடுங்கள். இல்லையென்றால்… பிரச்சினை உங்களுக்குத்தான்!

டிவி க்களில் ஸ்கைப்

வாய்ஸ் ஓவர் புரோட்டோகால் தொழில் நுட்பத்தின் உதவியுடன் இன்டர்நெட் இணைப்பில் உள்ள இருவர், தங்களின் பெர்சனல் கம்ப்யூட்டர், மொபைல் போன், கார்ட்லெஸ் போன், வீடியோ போன் ஆகியவற்றின் மூலம் திரையில் ஒருவரை ஒருவர் பார்த்து உரையாடிக் கொள்ளலாம்.

இதனால் ஆயிரக்கணக்கான மைல்கள் தள்ளி இருப்பவர்கள் கூட ஒரே அறையில் அமர்ந்து பேசுவது போன்ற நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த வகையில் இலவச அப்ளிகேஷன் புரோகிராம்களைப் பல நிறுவனங்கள் அளித்து வந்தாலும், ஸ்கைப் இதில் முன்னணி இடம் பிடித்துள்ளது. 

இனி இந்த வகைத் தொடர்பினை, "டிவி'க்கள் வழியாகவும் தருவதற்கு ஸ்கைப் முன்வந்துள்ளது. முதன் முதலாக "டிவி'க்களில் இந்த தொழில் நுட்பத்தினை ஸ்கைப் கொண்டு வருகிறது. 

இதற்கான ஒப்பந்தத்தினை எல்.ஜி. மற்றும் பானாசோனிக் நிறுவனங்களுடன் மேற் கொண்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் இன்டர்நெட் வசதி இணைந்த "டி.வி'க்களைத் தயாரித்து வழங்கி வருகின்றன. 

இணையத் தொடர்பினை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்படும் தொலைக் காட்சிப் பெட்டிகள் மூலம் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளலாம். இதற்கான புரோகிராமினை ஸ்கைப் வழங்குகிறது. பானாசோனிக் நிறுவனம் இது பற்றிக் கூறுகையில் தங்களின் 2010 Viera Castenabled HDTV செட்களை வைத்திருப் பவர்கள் இந்த தொழில் நுட்பத்தை எளிதில் பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது. 

வர்த்தக ரீதியாகப் பொது மக்களுக்கு இந்த வகை "டிவி'க்கள் வரும் மாதங்களில் கிடைக்கும். எல்.ஜி. நிறுவனம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் Netcast Entertainment Access தொழில் நுட்பம் உள்ள தங்கள் நிறுவனத்தின் 26 மாடல் எல்.இ.டி., எல்.சி.டி. மற்றும் பிளாஸ்மா டிவிக்களில் ஸ்கைப் புரோகிராமினைப் பயன்படுத்தி வீடியோ கால்களை மேற்கொள்ளலாம் என்று கூறியுள்ளது. 

வீடியோ அழைப்புகளை இந்த "டிவி'க்கள் மூலம் மேற்கொள்ள, இந்த இரு நிறுவனங்களும், மைக்ரோபோன் இணைந்த வீடியோ கேமராக்களை "டிவி'க்களில் இணைக்கும் வகையில் வடிவமைத்துத் தர இருக்கின்றன. இன்டர்நெட் இணைப்பு குறித்துக் கூறுகையில் குறைந்தது விநாடிக்கு 1 மெகா பிட் வேகம் உள்ள இணைப்பு வேண்டும் என ஸ்கைப் அறிவித்துள்ளது. 

ஸ்கைப் இணைக்கும் வகையில் உள்ள டிவிக்களை எல்.ஜி. வரும் ஏப்ரல் மாதத்திற்குள்ளும், ஸ்கைப் இணைந்த எச்.டி.டி.விக்களை வரும் மார்ச் மாதத்திற்குள் பானாசோனிக்கும் தருவதாக உறுதி அளித்துள்ளன. 

இதுவரை உயர் தொழில்நுட்ப ஆய்வு மையங்கள், சில சிறப்பு கருத்தரங்க அமைப்புகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த இந்த தொழில் நுட்பம் மக்களுக்காக வர்த்தக ரீதியில் கிடைக்கப் போகிறது என்பது, தொலை உணர்வு வசதியை மக்களுக்கு அளிப்பதில் நாம் இன்னும் ஒரு படி உயர்கிறோம் என்பதைக் காட்டுகிறது. 

இனி பல்லாயிரக்கணக்கான மைல் தொலைவில் வசிக்கும் தங்கள் பிள்ளைகளை, பெற்றோர்கள் தங்கள் டிவி திரைகள் மூலம் தங்களின் வீடுகளுக்கே கொண்டு வந்து பார்த்துப் பேசி மகிழலாம்.

February 04, 2010

மொபைல் இணைய தேடல்

மொத்த இன்டர்நெட் தேடலில், மொபைல் போன் வழியாகத் தேடுவது இப்போது 1.3 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது. சென்ற ஆண்டு இறுதியில், டிசம்பர் மாதத்தில் இந்த தேடல் மிக அதிகமாக இருந்ததாக இவற்றைக் கவனித்து வரும் வெப் மெட்ரிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

சென்ற பிப்ரவரி மாதத்தில், மொத்த இன்டர்நெட் பயன்பாட்டில் 0.57 சதவீதம் ஆக இருந்த மொபைல் வழித் தேடல் தற்போது 1.35 சதவீதம் டிசம்பரில் உயர்ந்தது. இதனால் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் வழி தேடல் 99.28சதவீதம் லிருந்து 98.36% ஆகக் குறைந்தது. 

மொபைல் வழி இன்டர்நெட் தேடலில் கூகுளின் ஆண்ட்ராய்ட் அதிகம் பயன்படுத்தப்பட்டது. இதன் பயன்பாடு 58.4 சதவீதம். பிளாக்பெரி 22.2 சதவீதம், ஐபோன் 20.1சதவீதம், சிம்பியன் 19.01 சதவீதம் மற்றும் ஜாவா எம்.இ. 15.6 சதவீதம் ஆக இருந்தன.

புகைத்தால் பார்வை பறிபோகும்

புகைத்தால் புற்றுநோய் மட்டுமல்ல பார்வையும் பறி போகிறதாம். சமீபத்திய ஆய்வின் எச்சரிக்கை இது.

தீய பழக் கங்கள் தீயைப்போல வேகமாகப் பரவுகின்றன. முலை முடுக்குகளிளெல்லாம் சிகரெட், பாக்கு வகைகள் விற்கும் பெட்டிக்கடை காட்சி அளிக்கின்றன. புகைப்பதால் ஏற்படும் தீமைகளும் நாம் அறியாதவைகள் இல்லை. இருந்தும் பலர் இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறார்கள் என்பதைத்தான் இவை காட்டுகின்றன. 

புகைக்கும் பழக்கத்தால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பது பலருக்கும் தெரிந்ததுதான். ஆனால் பின்னாளில் பார்வையும் பறிபோகும் வாய்ப்பு இருக்கிறது என்கிறது புதிய ஆய்வு. 

அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக குழுவின் ஆய்வில் இது தெரியவந்துள்ளது. 2 ஆயிரம் முதாட்டிகளை ஆய்வு செய்தனர். (அங்கு ஆண்/பெண் பேதமில்லாமல் புகைப்பழக்கம் உண்டு) இவர்கள் 78 முதல் 83 வயதுக்கு உட்பட்டவர்கள். 

ஆய்வு முடிவில் புகைப்பழக்கம் உடையவர்களுக்கு வயதான பிறகு பார்வை இழக்கும் ஆபத்து உயர்ந்திருந்தது தெளிவானது. இவர்கள் ஏ.எம்.டி. என்ற பார்வைக்கோளாறால் பாதிக்கப்பட்டு இருந்தனர். 

ஏ.எம்.டி. என்பது வயதானவர்களுக்கு ஏற்படும் பார்வைக் குறைபாடாகும். மாக்யுலா எனப்படும் பார்வை செல்கள் மீண்டும் உற்பத்தி ஆவது 70 வயதுக்கு மேல் குறைவதால் இந்த பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதில் புகைப்பழக்கம் உடையவர் களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக இருக்கிறது. 

ஆய்வின்படி புகைப்பழக்கம் இல்லாதவர்களைவிட புகைப்பவர்களில் 11 சதவீதம் பேர் ஏ.எம்.டி. பாதிப்பால் பார்வை இழக்கிறார்கள். 

புகைப்பழக்கம் இருப்பவர்கள் 70 முதல் 80 வயதை கடக்கும்போது மற்றவர்களைவிட 5 மடங்கு வேகமாக ஏ.எம்.டி. பாதிப்புகள் ஏற்படுகிறது. 

இத்தகைய கொடிய துன்பத்தைத் தரும் பழக்கத்தை ஆரம்பத்திலே கிள்ளி எறிவதுதான் சிறந்தது என்று டாக்டர்கள் மீண்டும் எச்சரிக்கை செய்கிறார்கள்.

February 03, 2010

ஆளில்லா வானூர்தி (Unmanned Aerial Vehicle)

மனிதர்களின் கட்டுப்பாடற்றுத் தன்னியக்கமாகவோ அல்லது மனிதர்களின் தொலைக்கட்டுப்பாட்டின் மூலமாகவோ இயங்கும் வானூர்திகளே ஆளில்லா வானூர்திகள் (Unmanned Aerial Vehicles) என்றழைக்கப்படுகின்றன.

பெரும்பாலான ஆளில்லா வானூர்திகள் தொலைக்கட்டுப்பாட்டுக் கருவிகளின் மூலமே இயக்கப்படுவதன் காரணமாக இவ்வகை வானூர்திகள் தொலைக்கட்டுப்பாட்டு செலுத்தி வாகனம் (Remotely Piloted Vehicle) என்றும் அழைக்கப்படுகின்றன. இவ்வகையான வானூர்திகள் இராணுவப் பயன்பாட்டிலேயே பெருமளவிற் காணப்படுகினறன. இவை தாரை (jet) அல்லது தாட்பாழ் (piston) இயந்திரத்தின் மூலம் இயங்குகினறன. 

பொதுவாக இவ்வகை வானூர்திகள் அவற்றின் வடிவமைப்பு, அளவு, கட்டமைப்பு மற்றும் குணவியல்புகளிற்கேற்ப வகைப்படுத்தப்படுகின்றன. ஆரம்பகாலங்களிலிருந்து ஆளில்லா வானூர்திகள் தொலைக்கட்டுப்பாட்டுக் கருவிகளின் மூலமாகவே இயக்கப்பட்டுவந்த போதிலும், நவீன ஆளில்லா வானூர்திகள் தன்னியக்க கட்டுப்பாட்டுக் கருவிகளையும் கொண்டுள்ளன. இவ்வகை வானூர்திகள் தொலைக்கட்டுப்பாட்டு மூலமாகவோ அல்லது முற்கூட்டியே பதிவுசெய்யப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்திற்கேற்ப தன்னியக்கமாகவோ இயக்கப்படுகின்றது. 

நவீன இராணுவப் பயன்பாட்டிலுள்ள ஆளில்லா வானூர்திகள் கண்காணிப்புப் பணி மட்டுமல்லாது தாக்குதல் நடாத்தும் திறன்வாய்ந்தவையாகவும் காணப்படுகின்றன. இவைதவிர இராணுவப் பயன்பாடற்ற செயற்பாடுகளான தீயணைப்பு, பொதுப் பாதுகாப்புச் சேவையினரின் கண்காணிப்புப் பணி போன்றவற்றிலும் ஆளில்லா வானூர்திகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆளில்லா வானூர்திகள் அவற்றின் பயன்பாட்டுரீதியாக ஆறு வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. 

1. எதிரிப் படைகளின் தரை இலக்குக்களைத் தாக்கியழித்தல் (aerial attack)
2. சமர்க்கள அவதானிப்புப் பணி (reconnaissance)
3. வான் யுத்தம் (dog fight)
4. வான்வழி இராணுவப் போக்குவரத்து
5. ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பணி (research and development)
6. பொது மற்றும் வர்த்தகப் பணி (civil and commercial purpose)

இவ் ஆறு வகையான ஆளில்லா வானூர்திகளும் அவற்றின் பறப்பு வீச்செல்லை (range), பறப்பு உயரம் (altitude) போன்றவற்றின் அடிப்படையிலும் இவ்வகை வானூர்திகள் வகைப்படுத்தப்படுகின்றன. அமெரிக்க இராணுவம் பல்வேறுபட்ட ஆளில்லா வானூர்தித் தொகுதியமைப்பாகப் (unmanned aircraft system) பயன்படுத்திவருகின்றது. இவ்வகையான தொகுதிகளிலுள்ள வானூர்திகள் இணைக்கப்பட்ட வலையமைப்பினூடு இணைந்து செயற்படுவதுடன் தரையிலுள்ள துருப்புக்களுடன் தொடர்பைப் பேணி தகவல்களை வழங்குகின்றன. இவ்வகையான ஆளில்லா வானூர்தித் தொகுதிகளின் வலையமைப்பு Tier என்ற சொற்பதத்தினாற் குறிக்கப்படுகின்றது. இராணுவத் திட்டமிடலாளர்கள் தனித்துச் செயற்படும் வானூர்திகளை இவ் வலையமைப்பில் தொழிற்படும் வானூர்திகளிலிருந்து பிரித்தறிய இச் சொற்பதத்தைப் பயன்படுத்துகின்றனர். இந்த ஆளில்லா வானூர்தி தொகுதி வலையமைப்பானது பல்வேறுபட்ட வகையான ஆளில்லா வானூர்திகளைக் கொண்டிருக்கும். அகெரிக்க வான்படை மற்றும் அமெரிக்கக் கடற்படை ஆகியன தமக்கெனத் தனித்தனியான ஆளில்லா வானூர்தித் தொகுதியமைப்பைக் கொண்டுள்ளன. இவ்விரு தொகுதியமைப்புக்களும் ஒன்றுக்கொன்று தொடர்பின்றித் தனித்தனியாகவே இயக்கப்படுகின்றன. 

ஆளில்லா வானூர்திகள் பல்வேறுபட்ட செயற்பாடுகளைக் கொண்டவையாகக் காணப்பட்ட போதிலும், அவற்றின் பொதுவானதும் பெரும்பாலானதுமான பயன்பாடு ஏதோவொரு வகையான அவதானிப்புப் பணியாகவே காணப்படுகின்றது. போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் பயன்பாட்டில் ஆளில்லா வானூர்திகள் மிகக்குறைந்தளவிலேயே பயன்படுத்தப்படுகின்றன. 

அவதானிப்புப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்படும் இவ்வகை வானூர்திகள் இராணுவம்சார் அவதானிப்பு நடவடிக்கை, தாவர மற்றும் விலங்குகளின் அவதானிப்பு, கடல்சார் அவதானிப்புப்பணி போன்றவற்றிற்குப் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வகையான பயன்பாட்டிற்காக கட்புல ஒளிப்படக்கருவி (visual light camera), அகச்சிவப்புக்கதிர் ஒளிப்படக்கருவி (infrared camera) மற்றும் ரேடார் அவதானிப்புக் கருவி போன்றன பயன்படுத்தப்படுகின்றன. வேறுசில சிறப்புப் பயன்பாட்டிற்காக நுண்ணலை உணரி (microwave sensor) மற்றும் புறஊதாக்கதிர் உணரி (ultraviolet sensor) போன்றனவும் பயன்படுத்தப்படுகின்றன. இவைதவிர வளியிற் காணப்படும் நுண்ணுயிர்கள் (microorganism) மற்றும் இராசயணப் பொருட்கள் போன்றவற்றை அவதானிப்பதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இவ்வகை வானூர்திகள் உயிரி உணரி (biological sensor) மற்றும் இரசாயண உணரி (chemical sensors) போன்றவற்றைப் பயன்படுத்துகினறன. 

தற்காலப் பயன்பாட்டிலிருக்கும் கண்காணிப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் ஆளில்லா வானூர்திகள் அதிலுள்ள கருவிகள் மூலம் அவதானிக்கும் காட்சிகளை உடனுக்குடன் தரைக்கட்டுப்பாட்டு மையத்திற்கு தொலைத்தொடர்புக் கருவிகள் மூலம் அனுப்பிக்கொண்டிருக்கும். இதன்காரணமாக இவ்வானூர்திகள் எதிரிப்படைகளாற் சுட்டுவீழ்த்தப்பட்டாலும் அவதானிப்பின் மூலம் பெறப்பட்ட தகவல்கள் தொலைவதற்கான வாய்ப்பு இல்லை. ஆனால் ஆரம்பகாலங்களிற் பயன்படுத்தப்பட்ட இவ்வகை ஆளில்ல அவதானிப்பு வானூர்திகள் அவதானிக்கும் காட்சிகளையும் தரவுகளையும் அதனுள்ளிருக்கும் பதிவுக்கருவியிற் பதிந்து வைத்துக்கொள்ளும். வானூர்தி தளம் திரும்பியதும் அதனுள்ளிருக்கும் கருவியிற் பதியப்பட்டிருக்கும் தகவல்கள் பெற்றுக்கொள்ளப்படும். 

மனிதர்கள் செல்வதற்கு ஆபத்தானவையாகக் காணப்படும் இடங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வுப் பணிகளில் இவ்வகை வானூர்திகளின் பயன்பாடு மிகமுக்கிய இடத்தை வகிக்கின்றது. நவீன இராணுவங்களின் பயன்பாட்டில் ஆளில்லா வானூர்திகள் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு மட்டுமன்றி தாக்குதல் நடவடிக்கைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை வானூர்திகள் தரையிலுள்ள பாரிய எதிரித்தளங்களைத் தாக்கியளித்தற் செயற்பாடுகளுக்கு மட்டுமன்றி தனிமனித இலக்குக்களை அழிக்கும் செயற்பாட்டிற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

பதட்டத்தை வெல்லப் பதினொரு வழிகள்

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று. ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும்.

எனவே பதட்டம் எதனால் உண்டாகிறது, அதனை எப்படித் தவிர்க்கலாம் என்று அறிய வேண்டும். 

சிறு குழந்தைகளை நாம் எப்படி நடத்துகிறோமோ, அவர்களுக்கு என்ன கற்றுத்தருகிறோமோ அதுதான் பொதுவாக அவர்களது குண நலங்களுக்கு அடிப்படையாகிறது. எனவே சிறு குழந்தைகளாக இருக்கும்பொழுதே அவர்களைப் பலருடன் பழகவும், பல சூழல்களைக் கையாளவும் கற்றுக்கொடுத்துவிடுவதும், குழந்தைகளை மட்டம் தட்டி, கேலி செய்யாமல் தட்டிக்கொடுத்து வளர்ப்பதும் மிகவும் அவசியம். சிறு குழந்தைகளாக இருக்கையில் பிறருடன் பேச, பழக வெட்கப்படும் குழந்தைகளை அப்படியே விட்டுவிடாமல், மெள்ள மெள்ளப் பலருடன் பழக வாய்ப்பினை உண்டாக்கி, பயிற்சி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், வளர்ந்தபின், பள்ளி அல்லது கல்லூரியில் படிக்கையில், நான்கு பேருடன் பேசவோ, வெளியில் செல்லவோ நேர்கையில் பதட்டத்தால் அவர்கள் ஆக்கிரமிக்கப்பட்டுவிடக்கூடும். இத்தகையவர்கள் தமது ஆசிரியர்களிடன் தமது சந்தேகங்களைக் கேட்கவோ, தமது உடன் படிப்பவர்களுடன் பேசவோ நேரும்பொழுது அதிகக் கூச்சத்தாலும் பயத்தாலும் ஆக்கிரமிக்கப்பட்டுவிடுவர். பொது இடங்களுக்குச் செல்வது, சிறிய குழுவுடன் பேச நேர்வது இவை அவர்களுக்கு அதிகப் பதட்டத்தை உண்டாக்கும். 

அதேபோல், சிறு குழந்தைகளாக இருக்கையில் கேலிக்கு ஆளாகி வளர்ந்தவர்கள், பெற்றோராலும் மற்றவர்களாலும் திட்டி, மட்டம் தட்டி வளர்க்கப்பட்டவர்கள், பெரியவர்களாகியபின் கூட எந்தச் செயலைச் செய்வதானாலும், குழப்பமும் பதட்டமும் அடைவார்கள். பிறருடன் பேசுகையில் கைகால்கள் நடுங்குதல், உடல் வியர்த்தல், புதிய இடங்களுக்குச் செல்லத்தயங்குதல் இவையெல்லாம் பதட்டமான மனநிலைக்கு அறிகுறி. புதிய சூழலுக்கு ஆட்படுகையில் சிலர் பதட்டத்தால் மயக்கமடைவதும் மாரடைப்பு ஏற்படுவதும்கூட நடப்பதுண்டு. 

இத்தகைய பதட்டமான மனநிலை உடையவர்கள், தாழ்வு மனப்பான்மைக்குள் விழுந்துவிடுவதும் மனச்சோர்விற்கு ஆளாவதும் அதிகம். பதட்டம் என்ற ஒரு குணம் இவர்களது நேரத்தையும் ஆற்றலையும் விழுங்கி, இவர்களது திறமைகளைப் பிரகாசிக்க விடாமல் வீணடிக்கச் செய்கிறது. எனவே, இவர்கள் தம்மையே சுய பரிசோதனை செய்துகொண்டு, தாம் இந்தப் பதட்டம் என்னும் சிறையில் இருந்து விடுபட நினைத்தால் அதற்கு என்ன வழி? 

பதட்டத்தை வெல்ல நினைப்பவர்களுக்கு!
 
முதலில் வாழ்த்துக்கள். நீங்கள் பதட்டத்தை வெல்ல வேண்டும் என நினைப்பதே ஒரு நல்ல அறிகுறி. நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?
நமது எண்ணங்களே நாம் வாழ்வின் அடிப்படை. நமது நேர்மறை எண்ணங்கள் நமக்கு நற்பலனையும், எதிர்மறை எண்ணங்கள் தோல்வியையும் உண்டாக்குகின்றன. தவறு செய்துவிடுவோமோ என்ற அச்சத்துடன் செய்யும் வேலைகள் தவறாகவேதான் முடியும். எனவே எதிர்மறையான சிந்தனைகள் (Negetive Thinking) தோன்றும்பொழுது கவனமாக உங்கள் மனத்தை வேறு நேர்மறை எண்ணங்களுக்குத் (Positive Thinking) திருப்புங்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாக இருக்கும் என்றாலும் கொஞ்ச நாளில் உங்கள் மனமானது தானாகவே நேர்மறைக்கு மாறிவிடக் காண்பீர்கள். 

ஒரு தாளைக் கையில் எடுத்துக்கொள்ளுங்கள். உங்களிடம் உள்ள குறைபாடுகள் என்னென்ன? எந்தெந்த விஷயங்கள் உங்களுக்குப் பதட்டத்தைத் தூண்டுகின்றன எனப் பட்டியலிடுங்கள். பின் நிதானமாக அக்காகிதத்தைக் கிழித்து குப்பைத்தொட்டியில் எறியுங்கள். இக்குறைபாடுகள் என்னை விட்டு வெகு விரைவில் நீங்கிவிடும் என்றும், இனி இச்சூழல் என்னை அச்சுறுத்தாது. இத்தகைய சூழலை எதிர்கொள்ளும் தெம்பு எனக்கிருக்கிறது என்றும் திடமான குரலில் உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள். சுய அறிவுரை(Autosuggestion) என்ற இந்த முறை ஆழ்மனத்தில் உங்களைப் பற்றி நீங்களே பதித்து வைத்திருக்கும் தவறான பிம்பத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடும். 

உங்களிடம் உள்ள திறமைகள் மற்றும் உங்கள் நிறைகள் என்னென்ன என்பதைப் பட்டியலிடுங்கள் (குறைந்தபட்சம் பத்து). எனக்கு எந்தத் திறமையுமே இல்லை என்று பதில் சொல்லாதீர்கள். 'எறும்பும் தன் கையால் எட்டுச் சாண்' என்பார் அவ்வைப்பிராட்டி. இனிமையான குரலா, உயரமா, நினைவு வைத்துக்கொள்ளும் திறமா, கணக்கில் புலியா, வேகமாக ஓட வல்லவரா, சமையலில் திறமைசாலியா, பிறருக்கு உதவும் குணமும் மனமும் உள்ளவரா? என்னென்னவெல்லாம் உங்களுடைய நல்ல குணங்கள் அல்லது திறமைகள் என்று கருதுகிறீர்களோ அவை எல்லாவற்றையும் பட்டியலிட்டுப் பாருங்கள். உங்கள் மனம் சோர்வடைகையில் அப்பட்டியலை எடுத்துப் படித்துப் பாருங்கள். 

நீங்கள் என்னென்ன செய்ய விரும்புகிறீர்கள் அல்லது வாழ்வில் உங்கள் இலக்கு என்ன? இதைச் சற்று ஆழ யோசியுங்கள். இந்தப் பதட்டம் அதற்கு எந்த வகையில் தடையாக இருக்கும் என்பதைச் சிந்தித்து, "இதில் இருந்து நான் வெளியில் வந்தே தீருவேன். என் இலக்கை அடைந்தே தீருவேன்" என்று இரவில் படுக்கைக்குச் செல்லுமுன் உரக்கச் சொல்லிக்கொள்ளுங்கள். 

காலை எழுந்தவுடன் கண்ணில் படுகின்ற மாதிரியான இடத்தில், நல்ல ஆரோக்கியமான பொன்மொழிகள், உற்சாகமூட்டும் சுவரொட்டிகள் இவை இருக்குமாறு ஏற்பாடு செய்துகொள்ளுங்கள். இரவு படுக்கைக்குச் செல்லுமுன், சிறியதோ பெரியதோ, உங்களுக்கு நடந்த நன்மை ஒன்றை நினைவு படுத்திக்கொள்ளுங்கள். 

எப்பொழுதும் ஏதாவது பரபரப்பாகச் செய்துகொண்டு இருங்கள். 'Idle man's brain is devil's workshop' என்பது ஆங்கிலப்பழமொழி. தனியாக இருக்கையிலும், வேலையில்லாமல் இருக்கையிலும் நமது மனக்குரங்கு பல கிளைகளில் தாவித்தாவிச் செல்லும். அவ்வாறு அக்குரங்கு தாவும் பல நினைவுக்கிளைகள் எதிர்மறையானதாக இருக்கும். எனவே மனத்தை அலைபாய விடாமல் ஒரு நிலைப்படுத்தவேண்டுமானால் உடலுக்கும் மனதிற்கும் வேலை கொடுத்துக்கொண்டே இருப்பது அவசியம். 

தியானம் பதட்டத்திற்கு அருமருந்து. தியானமும், மூச்சுப்பயிற்சியும் பதட்டத்தைப் பெருமளவு கட்டுப்படுத்தக் கூடியவை. முடிந்தால் முறையாக ஒரு குருவை நாடி தியானம், யோகா, பிராணாயாமம் முதலியவற்றைக் கற்றுக்கொள்ளுங்கள். முடியாத பட்சத்தில் மெல்லிய இசையை ஒலிக்க விட்டு (ஓம் என்ற ஒலி மனதை ஒருநிலைப்படுத்துவதற்குப் பெரிதும் உதவுகிறது. இல்லையென்றால் தியானத்திற்கென்றே சீராக ஒலிக்கும் இசைத்தட்டுகள் கிடைக்கின்றன, அவற்றையும் பயன்படுத்தலாம்.) கண்களை மூடி இசையினையும் உங்கள் சுவாசத்தையும் மட்டும் கவனித்தவாறு பத்து நிமிடங்கள் அமர்ந்திருங்கள். உங்கள் மனம் உங்கள் கட்டுப்பாட்டை விட்டு நழுவி வேறு எண்ணங்களுக்குச் செல்லத்தான் செல்லும். ஒவ்வொருமுறையும் அதை ப் பிடித்து இழுத்து வருவது உங்கள் பொறுப்பு. நாள்பட நாள்பட தியானம் செய்வது பழகிவிடும். உங்கள் ஒருமுகப்படுத்தும் திறனும் கூடிவிடும். 

உங்களை உணர்ச்சிவசமாக்கும் செய்திகளை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இரவில் படுக்கைக்குச் செல்லுமுன் தவிர்த்துவிடுங்கள். உங்கள் நண்பர்களில் கூட எப்பொழுதும் யாரையாவது எதிர்மறையாக விமர்சிக்கும், கேலி செய்யும் நபர்கள் இருந்தால் அவர்களை விட்டு விலகியே இருங்கள். நேர்மறைச்சிந்தனை, உற்சாகம் இவற்றுடன் இருப்பவர்களுடன் உங்கள் நட்பை உருவாக்கிக்கொள்ளுங்கள். 

உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களில் யார் உங்கள் நம்பிக்கைக்குரியவரோ அவரிடம் உங்கள் மனத்தில் உள்ள சுமைகளை, சந்தேகங்களை, பயங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். புதியவர்களுடன் பழக நேர்ந்தால் எப்படிப்பழகுவது, ஒரு குழுவில் பேசுவது எப்படி என்றெல்லாம் அவருடன் சேர்ந்து பயிற்சி செய்து பாருங்கள். நீங்கள் புதிய இடத்தில் பலருடன் கலகலப்பாகப் பழகுவது, பொது இடத்தில் தைரியமாக உரையாடுவது, ஆய்வரங்கில் கலந்து கொள்வது இவை போல நேர்மறையாகக் கற்பனை செய்து பாருங்கள். 

அழகாக, கம்பீரமாக உடையணியுங்கள். நிமிர்ந்து நில்லுங்கள், நடங்கள். உங்களைக் கண்ணாடியில் பார்க்கையில் உங்களுக்கு தன்னம்பிக்கை ஊற்றெடுக்க வேண்டும். கண்ணாடி முன் நின்று பேசிப்பழகுங்கள். நிறைய நகைச்சுவைப் புத்தகங்கள், தன்னம்பிக்கை அளிக்கும் நூல்கள், பொது அறிவை மேம்படுத்தும் புத்தகங்கள் அல்லது இவை தொடர்பான வலைத்தளங்களைப் படியுங்கள். 

தண்ணீரில் இறங்காமல் கரையில் நிற்கும்வரை நீச்சல் பழகுவது என்பது முடியாது. நீங்களாகவே பேருந்தில் பக்கத்தில் அமர்ந்திருக்கும் உங்கள் சக பயணியிடம் மெல்லப் பொது விஷயங்களைப் பற்றிப் பேச்சுக் கொடுப்பது, உங்கள் நண்பர்கள் மத்தியில் ஒரு புதிய கதை அல்லது நகைச்சுவைத் துணுக்கைப் பகிர்ந்துகொள்வது என்று மெல்ல மெல்லப் பயிற்சி செய்யுங்கள். உங்கள் அலுவலகக் கூட்டங்களில் குறைந்த பட்சம் ஒரு கேள்வி கேட்பது அல்லது ஒரு யோசனை சொல்வது என்று முடிவு செய்து அதைச் செயல் படுத்திப்பாருங்கள். 

கொஞ்ச நாளில் 'பதட்டமா! போயே போச்சே, போயிந்தி, Its gone' என்பீர்கள்

February 02, 2010

வருகிறது பாக்டீரியா`வெடிகுண்டு’

`வெடிகுண்டு’ விஞ்ஞானம் வளர வளர ஆயுதங்களும் பெருகி வருகின்றன. ஒளியையும், காற்றையும் எதிர்காலத்தில் ஆயுதமாகப் பயன்படுத்துவார்கள் என்று பிரபல ஜோதிடர் நாஸ்டர்டாமஸ் கணித்துக் கூறி இருக்கிறார்.

வளர்ந்து வரும் அறிவியல் நவீனங்களும் அதை உண்மைப்படுத்தும் விதத்திலேயே ஆயுதங்களைக் குவித்து வருகின்றன. 

சமீபத்தில் அமெரிக்கா, ஒளியை சிறிய அளவிலான ஆயுதமாக பயன்படுத்தும் யுக்தியை கண்டுபிடித்து உள்ளது. ஆனால் அது ராணுவவீரர்களின் மருத்துவ உதவிக்கு பயன்படும் கத்தி என்று அமெரிக்கா அறிவித்தது. இதேபோல விதவிதமான ஆயுதங்கள் பல நாடுகளிடம் இருக்கின்றன. இந்தப் பட்டியலில் புதிதாகச் சேர இருக்கிறது பாக்டீரியா வெடிகுண்டு. 

பாக்டீரியா என்பது நுண்ணுயிரியாகும். இதில் சைனோ பாக்டீரியா என்ற ஒரு வகை பாக்டீரியாக் களில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்தி பெட்ரோலியம் தயாரிக்கிறார்கள் இதே பாக்டீரியாவில் வேறுசில மாற்றங்களை ஏற்படுத்தினால் அது வெடிக்கும் தன்மை உடையதாக மாறிவிடுகிறது. 

அதாவது இந்த பாக்டீரியாவுடன், பாக்டீரியாபேஜ் எனப்படும் மற்றொரு வகை பாக்டீரியாக்களின் ஜீன்களைச் சேர்த்தால் அது இந்த மாற்றத்தைப் பெறுகிறது. பின்னர் அந்த பாக்டீரியாக்கள் `நிக்கல்’ என்ற உலோகத்தை நுகரும் வாய்ப்பு ஏற்பட்டால் வெடித்துச் சிதறுகிறது. எனவே இதனை சிறிய வெடி குண்டாக பயன்படுத்த முடியும். 

பாக்டீரியாக்கள் நுண்கிருமிகள் என்பதால் வேகமாகப் பரவும். அதில் இந்த மாற்றங்களைச் செய்து அனுப்பினால் எதிரிகளின் கோட்டைக்குள் எவ்வித பரிசோதனையிலும் சிக்காமல் உள்ளே நுழைந்து தாக்குதலை வெற்றிகரமாக முடித்துவிடும். எனவே இது ஒரு ஆபத்தான ஆயுதமாக அவதாரம் எடுக்க இருக்கிறது.

கணிணி வேகம் அதிகரிக்க

நமது கணிணியில் நாமோ அல்லது நம் வீட்டு குட்டீசோ விளையாட Game சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்திருப்போம் இதனை கணிணி software Registery ல் அப்டேட் செய்து விடும் நாம் இந்த game விளையாட தொடங்கும் போது புதிய சில Instructions மூலம் இயங்க வைக்கும் சிலநாட்களில் அதனை Delete செய்து அடுத்த Game விளையாடுவோம் .

நாம் அதனை remove செய்தாலும் அந்த instructions நமது கணினியிலேயே தங்கிவிடும். 

ஒவ்வொரு முறை கணிணியை இயக்கும்போதும் கணிணி இந்த instructions ஐ செயல்படுத்த முயற்சிக்கும் நாம் அந்த Software ஐ ஏற்கனவே delete செய்துவிட்டோம் எனவே அதனை கண்டுபிடிக்க முடியாது இதற்க்கு registry error என்று பெயர் . இவ்வாறு பல software நாம் பயன்படுத்தி நீக்கியிருந்தால் நமது கணிணி மேற்கூறிய செயல்களால் மெதுவாக செயல்பட தொடங்கும் .இதனை கண்டறிந்து நீக்கினாலே மீண்டும் அந்த வேகத்தை பெற்றுவிடமுடியும் . இதனை எவ்வாறு கண்டறிவது, இதனை கண்டறிந்து நீக்க எனப்படும் software உள்ளது. இதனை நிறுவி அவற்றை முழுமையாக நீக்கலாம்.

February 01, 2010

ஹேக்கர்களின் புதிய இலக்குகள்

கம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தி வரும் மேக் அபி நிறுவனப் பிரிவு, இந்த ஆண்டில் அடோப் பிளாஷ் மற்றும் அடோப் அக்ரோபட் ரீடர் தொகுப்புகளை வைரஸ் மற்றும் பிற நாசவேலை புரோகிராம்கள் தங்கள் இலக்காகக் கொள்ளலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த சைபர் கிரிமினல்கள் இதுவரை மைக்ரோசாப்ட் சிஸ்டம் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம்களைத்தான் தங்கள் இலக்காக வைத்துச் செயல்பட்டு வந்தனர். அதில் உள்ள பிரச்னைக்குரிய இடங்களைக் கண்டறிந்து, அவற்றின் மூலம் வைரஸ் களையும், மால்வேர்களையும் அனுப்பி நாசவேலைகளை மேற்கொண்டு வந்தனர். ஏனென்றால் இவைதான் கம்ப்யூட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் இப்போது பிளாஷ் மற்றும் அடோப் அக்ரோபட் ரீடர் போன்றவை அதிகம் பயன்படுத்தப்படுவதால், இவர்களின் கவனம் இவற்றின் பக்கம் திரும்பியுள்ளது. மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் தொகுப்புகளைச் சரியான பாதுகாப்பு வளையத்தில் அமைத்து வருகிறது. 

அடோப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தங்கள் அப்ளிகேஷன் புரோகிராம்கள் மீது ஹேக்கர்களின் கவனம் திரும்பி இருப்பதனையும், பலர் புதிய மால்வேர் புரோகிராம்கள் மூலம் தங்கள் புரோகிராம்களுக்குள் புக முயற்சிப்பதனையும் ஒத்துக் கொண்டுள்ளார். அதற்கேற்ற வகையில் அவற்றை முறியடிக்க தங்கள் நிறுவனம் பேட்ச் பைல்களைத் தந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இவற்றுடன் மொஸில்லா நிறுவனத்தின் பயர்பாக்ஸ் பிரவுசர் மற்றும் ஆப்பிள் நிறுவனத் தின் குயிக் டைம் புரோகிராமில் இத்தகைய தாக்குதல்கள், அண்மைக் காலங்களில் அதிகமாகி உள்ளதையும் மேக் அபி நிறுவனம் கண்டறிந்து தெரிவித்துள்ளது. 

மேலும் இது பற்றிக் கூறுகையில், சோஷியல் நெட்வொர்க் தளங்களான பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களிலும் இந்த தாக்குதல் அதிக அளவில் இந்த ஆண்டு இருக்க வாய்ப்புகள் உண்டு எனவும் தெரிவித்துள்ளது. 

ஆனால் பன்னாட்டளவில் இது குறித்த விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளதால், இந்த சைபர் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட்டு அமலாக்கப்பட இருக்கின்றன. எனவே இந்த வகை குற்றங்கள் குறையவும் வாய்ப்புகள் உள்ளன.

விண்டோஸ் 7 க்கு மேன்படுத்தலாமா?

விண்டோஸ் 7 வெளியானதிலிருந்து அதன் பரபரப்பு பற்றிக் கொண்டது. விண்டோஸ் 7 பற்றி எல்லா தரப்பினரிடம் இருந்தும் நல்ல கருத்துக்கள் வருகின்றன. விண்டோஸ் 7 ஐ நிறுவுதல் அல்லது மேம்படுத்தலும் இலகுதான் ஆனால் உடனடியாக செய்யலாமா செய்வதில் உள்ள சிக்கல்கள் என்ன என்பதை பற்றி கேள்விகள் எழலாம் அவற்றை பற்றி பார்க்கலாம்.ஏன் அப்கிரேட் செய்ய வேண்டும்?

1. விண்டோஸ் 7 நீங்கள் எங்கிருந்தும் கணணியை இயக்குவதை இலகுவாக்கிறது. அனைத்து டேட்டாக்களையும் பாதுகாப்பாக கையாள உதவுகிறது. நாளந்த நடவடிக்கைகளை சற்று இலகுவாக்குகிறது.

2. உங்கள் தகவல்களுக்கு அதிக பாதுகாப்பளித்தல். விண்டோஸ் 7 இல் இருக்கும் NAP எனும் தொழில்நுட்பம் அதிக பாதுகாப்பை நெட்வேர்க் கணணிகளுக்கு வழங்குகிறது. தேவையற்ற அப்பிளிகேஸன்களை நிறுத்தி வைக்க உதவுகிறது.

3. விண்டோஸ் 7 இலகுவாக மனேஜ் செய்து கொள்ள முடிகிறது. இதற்கு MDOP எனும் தொழில்நுட்பம் உதவுகிறது.

4. விண்டோஸ் 7 விஸ்டாவை தழுவிய பதிப்பு போன்று தோன்றினாலும் விஸ்டாவை விட அதிக நிலையான (Stable) பதிப்பாக இருக்கிறது. விஸ்டாவை விட வேகமாகவும் குறைவான வழங்களை பயன்படுத்தியும் இயங்குகிறது. மற்றைய இயங்கு தளங்களை விட அதிக Performance ஐ காட்டுகிறது.

மேம்படுத்த முடிவு செய்து விட்டீர்களெனில் அதிலுள்ள சிக்கல்கள் என்ன?

1. அனைத்து மென்பொருட்களும் இயங்குமா என்பதை எவ்வாறு உறுதிப்படுத்துவது? மற்றும் நிலையான பதிப்பென்பதை எவ்வாறு உறுதிப்படுத்துவது. இந்த சிக்கலில் இருந்து விடுபட நீங்கள் பாவிக்கும் மென்பொருட்களின் நிறுவனங்களின் இணையத்தளங்களை தொடர்பு கொண்டு அவர்களின் பதிப்புக்கள் விண்டோஸ் 7 க்கு இசைவாக்கப்பட்டுள்ளதா என்பதை பார்ப்பதாகும்.

2. அப்பிளிக்கேஸன் மைகிரேஸன் என்பது சிறிய, பெரிய நிறுவனங்களுக்கு பொருந்தும். விஸ்டா பதிப்பு வெளியாகும் போதும் இதே சிக்கலை இந்நிறுவங்கள் எதிர்கொண்டது. இன்னும் விரிவாக கூறினால் நிறுவனத்துக்கென உருவாக்கப்பட்ட அப்பிளிகேஸன் கள் விண்டோஸ் 7 ற்கு ஏற்றவாறு மாற்றம் செய்ய வேண்டும். இதற்கு முழுவதுமாக விண்டோஸ் 7 க்கு மாறுவதற்கு முதல் வியாபார அப்பிளிகேசன்களை ஒரு சில கணனிகளில் பரீட்சித்து விட்டு மேலும் தொடர்வது தீர்வாக இருக்கும் .

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review