May 02, 2010

இந்திய மாணவர்கள் தயாரித்த செயற்கை கோள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான `இஸ்ரோ’ தனது விண் வெளி ஆய்வுப் பணிகளில் கல்லூரி மாணவர்களையும் இணைத்துள்ளது. இதன்படி பெங்களூர் மற்றம் ஐதராபாத் ஆகிய நகரங்களைச் சேர்ந்த 7 பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்ந்து `ஸ்டுட் சாட்’ என்ற பெயரில் ஒரு சிறிய செயற்கைகோளை உருவாக்கி உள்ளனர். `ஸ்டுடன்ட் சாட்டிலைட்’ என்பதன் சுருக்கமே `ஸ்டுட் சாட்’ என்பதாகும். (Student Satel lite&STUD SAT)  சுமார் 55 லட்சம் ருபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த செயற்கைகோள் 10x10x13.5 சென்டி மீட்டர் அளவு கொண்டது. இதன் எடை சுமார் 850 கிராம். இந்த செயற்கைகோளில் தகவல் தொடர்பு கருவி, பேட்டரி, கண்ட்ரோல் கருவிகள் மற்றும் சக்திவாய்ந்த கேமிரா ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.  விரைவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மற்ற செயற்கை கோள்களுடன் மாணவர்கள் செயற்கைக் கோளும் விண்ணில் செலுத்தப்படுகிறது....

எல்.ஜி.யின் புதிய சாக்லேட்எல்.ஜி.நிறுவனம்

2006 ஆம் ஆண்டில் தன் சாக்லேட் சிரீஸ் மொபைல் போன்களை அறிமுகப்படுத்தியது. இப்போது மேலும் இரண்டு சாக்லேட் போன்களைக் கொண்டு வந்துள்ளது. அவற்றில் அண்மைக் காலத்தில் வந்தது எல்.ஜி. சாக்லேட் பி 20. சாக்லேட் சிரீஸ் போன்கள் அனைத்துமே ஸ்டைலான வடிவமைப்பு கொண்டவை. கண்ணாடி பளபளப்பு, பியானோ கருப்பு மற்றும் ஸ்லிம்மான வடிவம் என இந்த போனும் அசத்துகிறது. போனின் முன்புறத்தில் இரண்டாவது கேமரா உள்ளது. மற்ற இடம் எல்லாம் சரியான கருப்பில் முதல் பார்வையில் தெரிவதில்லை.  போன் செயல்படத் தொடங்குகையில் தான் ஸ்கிரீன் வெளிச்சத்தில் கீழே உள்ள பட்டன்கள் தெரிகின்றன. இடது பக்கத்தில் கம்ப்யூட்டருடன் இணைக்க, சார்ஜ் செய்திட மற்றும் ஹெட்செட் இணைக்க ஒரே ஒரு போர்ட் தரப்பட்டுள்ளது. பின்புறம் கேமரா, எல்.இ.டி. பிளாஷ் தரப்பட்டிருப்பதும் உற்று நோக்கினால் மட்டுமே தெரிகிறது.  ...

24 விண் கற்களில் தண்ணீர் : நாசா கண்டுபிடிப்பு

நிலவில் தண்ணீர் இருப்பதை இந்தியாவின் சந்திராயன் ஓடம் கண்டுபிடித்தது. இதே போல சூரியனை சுற்றி வரும் பல்வேறு கோள்களிலும் தண்ணீர் இருக்கிறதா? என்று ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.  சூரியனை சுற்றி வரும் கோள்களை தவிர ஏராளமான விண்கற்களும் விண்ணில் சுற்றி வருகின்றன. இவற்றில் பல கற்கள் ராட்சத அளவில் இருக்கின்றன. அதாவது 200 கிலோ மீட்டருக்கு மேல் அகலமாக இருக்கின்றன. அந்த கற்களை அமெரிக்காவில் நாசா விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஹவாய் தீவில் ராட்சத டெலஸ்கோப்பை அமைத்து உள்ளனர். அதன் மூலம் இந்த கற்களை ஆய்வு செய்தனர்.  அதில் தண்ணீர் இருப்பது தெரிய வந்தது. உறைந்த நிலையில் மேல் பகுதிகளில் தண்ணீர் இருந்தன. தண்ணீர் இருப்பதால் அவற்றில் உயிரினங்கள் வாழவும் வாய்ப்பு இருக்கலாம் என கருதப்படுகிறது. அதுபற்றியும் ஆய்வு நடந்து வருகிற...

MICROSOFT நிறுவனத்தின் WINDOWS 8

MICROSOFT நிறுவனத்தின் அடுத்த இயங்குத்தளம் WINDOWS 8 ஜூலை 2012 ல் வருகிறது.  இது WINDOWS 7 னை விட வேகமாகவும், பயனாளர்க்கு உதவியாகவும் என்று அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது. விண்டோஸ் பயனாளர்க்கு புதிய வசதிகளை அறிமுகம் ஆகிறது. விண்டோஸ் 8 128 BIT என்று எதிர்பார்க்கபடுகிறது .  INTEL நிறுவனத்தின் உதவியுடன் USB 3.0 இதில் அறிமுகம் செய்யப்படுகிறது. USB 2.0 வில் அதிக பச்சமாக 480 MBits/s. USB 3.0 வில் அதிக பச்சமாக 5 Gbits/S . விண்டோஸ் 7 உள்ள குறைகளை கண்டறிந்து விண்டோஸ் 8 உருவாக்கப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது....

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review