December 29, 2009

உலகில் முதலாவதாக ஏழுவகை இதய குறைபாடுகளுக்கு ஒரே ஆபரேஷன்

உலகிலேயே முதல் முறையாக இதயத்தில் ஏற்பட்ட ஏழுவிதமான கோளாறுகளை ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்து சென்னை, மியாட் மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். சென்னையைச் சேர்ந்தவர் நாராயணசாமி (53). மருந்து கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி லட்சுமி. நாராயணசாமிக்கு பிறவியிலேயே இதய பாதிப்பு இருந்தது. இதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளவில்லை. கடந்த மாதம் அவருக்கு அதிகமான மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனைக்கு வந்தார். நாராயணசாமியை, மியாட் மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாஷி பரிசோதித்தார். இதில், அவருக்கு இரண்டு பெரிய ரத்த நாளங்கள் மகாதமணியில் இருந்து ரத்தத்தை நுரையீரலுக்கு கொண்டு செல்வதும், "வென்ட்ரிக்கல் செப்டம்' எனப்படும் இதய அறைகளுக்கு இடையே துளை இருப்பதும், "ஏட்ரியல் செப்டம்' எனப்படும்...

சுகமான தூக்கம், சுறுசுறுப்பான விழிப்பு

அதிகாலைத் தூக்கம் ஆனந்தம் தரும் ஆழ்ந்த உறக்கமாக இருக்கும். வெயில் சுள்ளுன்னு முகத்தில் விழுந்தபிறகுதான் எழத்தோன்றும். இல்லாவிட்டால் பசி வயிற்றைக் கிள்ளிய பிறகு எழுவோம். அப்படி இருக்கும்போது, அதிகாலையில் அலாரம் வைத்து எழுப்பினால் எப்படி இருக்கும்? சத்தம்போட்ட கடிகாரத்துக்கு உச்சி மண்டையில் ஒரு தட்டு. செல்போனுக்கும் அதே கதிதான். மீண்டும் தூக்கத்துக்குள் புகுந்து சொர்க்கப் பிரவேசம் செய்வோம். இனி அப்படி தூக்கத்தைக் கெடுத்து எழவேண்டாம். உங்கள் உடலுக்குத் தேவையான ஓய்வு கிடைத்தபிறகு எழுப்பிவிடும்படியான `அலாரம்' உருவாக்கிவிட்டோம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இந்தக்கருவி கடிகாரம் வடிவில் இருக்கிறது. இங்கிலாந்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஸ்லீப்டிராக்கர் எனப்படும் இந்தக்கருவியை கையில் கட்டிக் கொண்டு படுத்தால்போதும். நமது ஆழ்ந்த தூக்கத்தை கெடுக்காமல்...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review