March 26, 2010

மனதை படிக்கும் கம்ப்யூட்டர் வடிவமைப்பு

பிரிட்டனை சேர்ந்த விஞ்ஞானிகள், மனிதர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை படிக்கும் வகையிலான கம்ப்யூட்டரை வடிவமைத்துள்ளனர். இதுகுறித்து, லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி மற்றும் அவரது சகாக்கள் கூறியதாவது,  கம்ப்யூட்டரால், மனிதர்களின் மூளையை ஸ்கேன் செய்வதன் மூலம், அவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை புரிந்து கொண்டு, அவற்றை அப்படியே வெளிப்படுத்த முடியும். இதற்காக, பத்து தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களிடம் ஆய்வு நடத்தப் பட்டது. இவர்களுக்கு சில பெண்கள் கடிதங்களை தபால் பெட்டியில் போடுவது, பேப்பர் கப்பில் காபி அருந்துவது போன்ற காட்சிகள் அடங்கிய, சில வினாடிகள் மட்டுமே ஒளிபரப்பாகக் கூடிய படம் காண்பிக்கப்பட்டது.  அதன் பின், அவர்கள் என்ன பார்த்தனர் என்பதை திரும்ப நினைவுப்படுத்தி பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். அப்போது ஸ்கேனர்...

ஏசரின் லிக்விட் மொபைல்

லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் தயாரிப்பில் முன்னணியில் இயங்கும் ஏசர் நிறுவனத்தின் மொபைல் போன்கள் அண்மையில்  அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. உலகின் முதல் ஆண்ட்ராய்ட் 1.6 ஹை டெபனிஷன் போனாக, ஏசர் நிறுவனத்தின் லிக்விட் மொபைல் ஸ்மார்ட் போன் வந்துள்ளது. குவால்காம் ஸ்நாப்ட்ராகன் (1GHz) என்ற ப்ராசசருடன் வந்துள்ள முதல் மொபைல் போனும் இதுவே.  இதில் 3.5 அங்குல அகலத்தில் டச் ஸ்கிரீன் 480 x 800 பிக்ஸெல்களுடன் தரப்பட்டுள்ளது. ஜியோ டேக்கிங் இணைந்த 5 எம்பி கேமரா, ஆட்டோ போகஸ், எல்.இ.டி. பிளாஷ், ஆக்ஸிலரேட்டர், செல்ப் டைமர், 2560 x 1920 ரெசல்யூசனுடன் தரப்பட்டுள்ளது.  புளுடூத், வை–பி, ஏ.ஜி.பி.எஸ். (AGPS)தொழில் நுட்பம் இன்டர்நெட் நெட்வொர்க் இணைப்பிற்கு துணைபுரிகின்றன.3G/GSM/GPRS/EDGE நெட்வொர்க் தொழில் நுட்பம் இயங்குகின்றன. வை–பி, புளுடூத் ஆகியவையும்...

கூகிள் குரோம் புதிய பதிப்பு 4 வெளியீடு!

கூகிள் தனது வலை உலாவியான குரோமின் புதிய பதிப்பை அண்மையில் வெளியிட்டுள்ளது. முன்பை விட அதிக பாதுகாப்புகள் மற்றும் சில பிழைகளை நீக்கி சரிசெய்து வெளியிட்டுள்ளது.இப்போதைய தொழில்நுட்பம் மற்றும் சவால்களை எதிர்கொள்ளுமாறு உருவாக்கப்பட்டுள்ளது. பழைய பதிப்புகளை வைத்து உள்ளோர் புதிய பதிப்பை மேம்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள். இந்த புதிய பதிப்பில் முன்பை விட வேகம், பாதுகாப்பு, எளிமை போன்றவை வடிவமைக்கப்பட்டுள்ளன. தரவிறக்கச்சுட...

காசநோயை குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பு

காசநோய் ஏற்பட்டால் அதை குணப்படுத்துவது மிகவும் கடினமானது. இதற்கு நீண்டகாலம் மருந்து சாப்பிட வேண்டும். மருந்து சாப்பிட்டாலும் குணமாகாமல் ஏராளமானோர் உயிரிழந்து விடுகின்றனர்.ஆனால் இப்போது காசநோயை உடனடியாக குணப்படுத்தும் மருந்தை அவுஸ்திரேலியா சிட்னி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். ஒருவர் உடலில் காசநோய் தாக்கி அடுத்தவருக்கு தொற்று ஏற்படுத்தும் நிலைவருவதற்கு முன்பு இந்த மருந்தை சாப்பிட்டால் சில நாட்களில் குணமாகி விடுகிறது. நீண்ட காலம் மருந்து சாப்பிட தேவையில்லை. இந்த மருந்து தற்போது ஆய்வு நிலையில் உள்ளது. விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. உலகம் முழுவதும் 200 கோடி மக்களை காசநோய் தாக்கி இருக்கிறது. 58 நாடுகளில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த மருந்தால் காசநோய் பெரிய அளவில் தடுக்கப்பட்டு விடும் என்று எதிர் பார்க்கப்ப...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review