December 06, 2009

எல்.ஜி.தரும் ஐ.டி.900 கிறிஸ்டல்

ஒளி ஊடுருவும் தன்மையுடன் கூடிய அழகான கீ பேட் கொண்டு தன் ஜி.டி. கிறிஸ்டல் மொபைல் போனை எல்.ஜி. நிறுவனம் வடிவமைத்துள்ளது. அண்மையில் இது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
இதனுடைய கிறிஸ்டல் டச் பேட் முதலில் எண் எழுத்துக்கள் கொண்ட கீ பேட் போலத் தோற்றமளிக்கிறது. ஆனால் அது போனைக் கண்ட்ரோல் செய்யக் கூடிய டச் பேட் போல விரிகிறது. லேப் டாப் கம்ப்யூட்டரில் உள்ள டச் பேட் போல செயல்படுகிறது.
ஹேண்ட்ரைட்டிங் பேட் போல இயங்குகிறது. இதன் மூலம் பல வகைகளில் டச் கமாண்ட் கொடுத்து இயக்கலாம். கூடுதலாக சைகை வழி கட்டளை (Gesture Command) 8 எம்பி திறன் கொண்ட ஆட்டோ போகஸ் கேமரா இணைக்கப் பட்டுள்ளது.
எம்பி3 பிளேயர் தரப்பட்டுள்ளது. வை–பி இணைப்பு, 3ஜி வசதி, 3 அங்குல அகலத்தில் டச் ஸ்கிரீன், டிவிடி ரெசல்யூசனில் வீடியோ ரெகார்டிங், 1.5 ஜிபி மெமரி, 16 ஜிபி வரை மெமரி யை நீட்டிக்கும் வசதி ஆகியவை தரப்பட்டுள்ளன.
சொகுசான வசதியைத் தரக்கூடிய ஒரு போனைத் தரத் திட்டமிட்டு இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்டலில் அழகான ஸ்லைடிங் கீபேட் தான் இதன் சிறப்பம்சம் என இந்நிறுவன விற்பனைப் பிரிவு தலைவர் இதனை அறிமுகப்படுத்திய விழாவில் குறிப்பிட்டார்.
நடப்பு ஆண்டின் சிறந்த வடிவமைப்பிற்கான விருதை இந்த போன் பெறும் என்றும் இவர் கூறினார். குரோம் மற்றும் டைட்டன் வண்ணங்களில் கிடைக்கும் இந்த போனின் விலை ரூ. 26,000.

7550 வருடங்களுக்கு முன் வாழ்ந்த இராட்சத 'எருது' மண்டையோடு கண்டுபிடிப்பு!

7500 வருடங்களுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்ததாக கருதப்படும் இராட்சத 'எருது'னுடைய மண்டையோடும் பாக எலும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சாதாரன மனிதனின் உயரத்தை விட (6 அடிக்கு மேல்) பெரிதாக தோற்றமளிக்கும் எருது வகையை சேர்ந்த இவ்விலங்குகள், பிரித்தானியா, மற்றும் சுற்றுப்புற சூழலில் 7500 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாகவும், சுமார் 4000 வருடங்களுக்கு முன்னர்
அழிந்து போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வீதி திருத்தும் இயந்திர ஓட்டுனராக கடமைபுரியும் ரதபோர்ட் என்பவர், பிரித்தானியாவின் நோர்த் அம்பர்லேண்ட் பிரதேசத்தின் ஆற்றங்கரையோரமாக மண்ணை தோண்டிக்கொண்டிருக்கும் போது, கற்குழிகளில் இருந்து இம் மண்டையோட்டினையும் ஏனனய எலும்புகளையும் கண்டுபிடித்ததுடன், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கும் தகவல் அளித்துள்ளார்.
இவ் எலும்புக்கூடுகள் நல்ல நிலைமையில், இவ்வளவு நாள் இருந்து வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக புருடோவினை மையமாக கொண்டியங்கும், சுற்றுப்புற சூழல் ஆராய்சி நிலையத்தின், இயக்குனர் ரியான் மோலி தெரிவித்துள்ளார்.
'ஔரோச்' என இவ்விலங்குகள் அழைக்கப்படுகின்றன. கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகளின் ரேடியோ காபன் வெளிப்பாடுகளினை ஆராய்ந்ததன் மூலம் 5670-5520 BC காலப்பகுதியில் இவை வாழ்ந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இவ்விலங்குகள் அக்காலத்தில் வாழ்ந்த மனிதர்களினால் இரவு நேர உணவுக்காக வேட்டையாடப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தற்சமயம், நியூகாஸ்ட்டில் பிரதேசத்தில் அமைந்திருக்கும் நூதனசாலைக்கு இவ் ஔரோச்களின் மண்டயோடுகள் எடுத்துச்செல்லப்பட்டுள்ளன.
ஏற்கனவே பிரித்தானியாவின் நோர்த் அம்பேர்லேண்ட் பிரதேசத்தில் இரு இராட்சத சிவப்பு நிறக்கரடிகளின் எலும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமையினால், ஔரோச்களின் புதிய கண்டுபிடிப்புக்கள், அக்காலத்தில் பூமியில் வாழ்ந்த இராட்சத விலங்குகள் பற்றிய ஆய்வில் புதிய திருப்பத்தினை கொண்டு வந்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

December 05, 2009

விரைவில் ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை

விரும்பாத கர்ப்பத்தைத் தவிர்க்க பெண்கள் இனி மாத்திரை, பப்பாளியைத் தேடத் தேவையிருக்காது. ஏனெனில், ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை விரைவில் அறிமுகமாக உள்ளது.

இதுபற்றி எடின்பெர்க்கில் உள்ள குயின் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த இனப்பெருக்கவியல் மைய ஆராய்ச்சியாளர் மைக்கேல் வெல்ஷ் கூறியதாவது:ஆணின் உடலில் சுரக்கும் ஆன்ட்ரோஜன்தான் உயிரணுக்கள் உருவாக முக்கிய காரணம். அதை தற்காலிகமாக குறைக்கும் வழியை கண்டுபிடித்தால், பெண்ணின் தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்கலாம் என்பதால் அதற்கான ஆராய்ச்சியில் இறங்கினோம்.


எலிகளை பயன்படுத்தி நடந்த ஆராய்ச்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. இது மனிதனுக்கும் பொருந்தும் என்று நம்பலாம். எலிகளில் உயிரணுக்களை உருவாக்கும் ஜீன் ஒன்று மருந்து மூலம் நீக்கப்பட்டது. அந்த ஜீன் மறைந்ததும், உயிரணு உருவாவது குறைந்தது தெரிய வந்தது. இந்த மருந்து செலுத்தப்படாத எலிகளின் விதைப்பையில் உயிரணுக்கள் அதிகளவில் உற்பத்தியானது தெரிய வந்தது. எனவே, ஆன்ட்ரோஜன் சுரக்க காரணமான ஜீனை தற்காலிகமாக மறையச் செய்யும் மருந்தை உருவாக்குவதில் வெற்றி கிடைத்துள்ளது. அதை மாத்திரை வடிவில் ஆண்கள் பயன்படுத்தினால், உயிரணு உற்பத்தி குறைந்து தற்காலிக மலட்டுத்தன்மை ஏற்படும்.

ரத்தத்தில் மாத்திரையின் வீரியம் இல்லாமல் போனதும் மீண்டும் அந்த ஜீன் வெளிப்பட்டு ஆன்ட்ரோஜனை அதிகரித்து விடும். பிறகு, உயிரணுக்கள் வழக்கம்போல உற்பத்தியாகி விடும். இந்த மாத்திரை பயன்பாட்டுக்கு வந்தால், கருத்தடை மாத்திரையில் இருந்து பெண்களுக்கு சுதந்திரம் கிடைக்கக்கூடும்.

December 04, 2009

சூரியனை விட வெப்பம் மிகுந்த நட்சத்திரம் கண்டுபிடிப்பு


சூரியனை விட 35 மடங்கு வெப்பம் மிகுந்த நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து 3500 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இந்த சூடான நட்சத்திரம் உள்ளது.

இது 2 லட்சம் டிகிரி வெப்பத்தை உமிழ்ந்து கொண்டிருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டிருக்கிறது என்கிறார்கள் இதை தங்களது ஹபிள் ஸ்பேஸ் டெலஸ்கோப் மூலம் கண்டறிந்துள்ள, மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வான ஆராய்ச்சியாளர்கள்.

இந்த நட்சத்திரத்தை கண்டுபிடித்தது ஒரு சாதனை என்றால் மேகங்கள் மற்றும் தூசு மண்டலத்தைக் கடந்து படம் பிடித்தது பெரிய சாதனை எனப்படுகிறது.

விண்டோஸ் டிபிராக் : ஸ்மார்ட் டிபிராக்

கம்ப்யூட்டரில் பைல்களைத் தொடர்ந்து எழுதுவதும் அழிப்பதுவுமாக இருக்கையில் அவை தொடர்ச்சியாக ஹார்ட் டிஸ்க்கில் எழுதப்படுவதில்லை. ஏனென்றால் அவ்வப்போது பைல்களை அழிக்கையில் ஏற்படும் வெற்றிடங்கள் தொடர்ச்சியாக அடுத்த பைலுக்குக் கிடைப்பதில்லை. இதனைச் சரி செய்திடத்தான் விண்டோஸ் நமக்கு டிபிராக் (‘Defrag’) என்னும் புரோகிராமினைத் தந்துள்ளது.

இதன் மூலம் துண்டு துண்டாக ஹார்ட் டிஸ்க்கில் எழுதப்படும் புரோகிராம்கள் மீண்டும் ஓரளவிற்குத் தொடர்ச்சியாக எழுதப்படுகின்றன. இவ்வாறு எழுதப்பட்ட பின் இந்த பைல்களை ஹார்ட் டிஸ்க்கில் இருந்து படிப்பது விரைவாக நடக்கிறது. எனவே இந்த டிபிராக் செயல்பாட்டினை நாம் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் ஹார்ட் டிஸ்க்கில் வெற்றிடங்கள் சிதறலாக இல்லாமல் தொடர்ச்சியாக நமக்குக் கிடைக்கிறது. ஆனால் ஒரு முறை டிபிராக் செய்திட கம்ப்யூட்டர் பிராசசரின் வேகம் மற்றும் ஏற்கனவே பைல்கள் ஹார்ட் டிஸ்க்கில் எழுதப்பட்ட விதம் ஆகியவற்றின் அடிப்படையில் நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இது சில வேளைகளில் நம் பொறுமையைச் சோதிக்கும் வகையில் இருக்கும். அந்நேரத்தில் நம்மால் வேறு எந்த வேலையையும் கம்ப்யூட்டரில் மேற்கொள்ள முடியாது.

இவ்வாறு இல்லாமல், எப்போதெல்லாம் கம்ப்யூட்டரில் எந்த செயல்பாடும் மேற்கொள்ளப்படாமல், பைல்கள் எதுவும் எழுதப்படாமல் இருக்கும் நேரத்தில், பின்னணியில் இந்த டிபிராக் செயல்பாடு தானாகவே மேற்கொள்ளப்பட்டால் எப்படி இருக்கும். முதலில் நமக்கு நேரம் மிச்சமாகும். இரண்டாவதாக டிபிராக் உடனுடக்குடன் செய்யப்படுவதால் புரோகிராம்களையும் பைல்களையும் இயக்குவது வேகமாகவும் எளிதாகவும் மேற்கொள்ளப்படும்.

lankasri.com

இந்த வேலையைத்தான் Smart Defrag செய்கிறது. இது ஒரு இலவசமாக டவுண்லோட் செய்யப்படக் கூடிய புரோகிராம். இதனைப் பதிந்துவிட்டால் எப்போதெல்லாம் உங்கள் கம்ப்யூட்டர் ஒன்றுமே செய்யாமல் சும்மா இருக்கிறதோ அப்போதெல்லாம் ஸ்மார்ட் டிபிராக் செயல்பட்டு ஹார்ட் டிஸ்க்கை ஒழுங்கு செய்கிறது. மீண்டும் நீங்கள் கம்ப்யூட்டரில் பணியாற்றத் தொடங்கியவுடன் தற்காலிகமாகத் தன் செயல்பாட்டினை நிறுத்தி வைக்கிறது. நீங்கள் உங்கள் வேலையை நிறுத்தும் வரை காத்திருக்கிறது.

பின் மீண்டும் நீங்கள் வேலையை நிறுத்தியவுடன் தன் பணியை விட்ட இடத்தில் இருந்து தொடர்கிறது. இதனால் நாம் கம்ப்யூட்டரை டிபிராக் செய்வது குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. இந்த புரோகிராமை பின்னணியில் இயங்கச் செய்துவிட்டு நம் இஷ்டப்படி கம்ப்யூட்டரை இயக்கிக் கொண்டிருக்கலாம். நம் சிஸ்டமும் ட்யூன் செய்யப்பட்டு எப்போதும் விரைவாகவும் எளிதாகவும் இயங்கும்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review