December 06, 2009

எல்.ஜி.தரும் ஐ.டி.900 கிறிஸ்டல்

ஒளி ஊடுருவும் தன்மையுடன் கூடிய அழகான கீ பேட் கொண்டு தன் ஜி.டி. கிறிஸ்டல் மொபைல் போனை எல்.ஜி. நிறுவனம் வடிவமைத்துள்ளது. அண்மையில் இது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
இதனுடைய கிறிஸ்டல் டச் பேட் முதலில் எண் எழுத்துக்கள் கொண்ட கீ பேட் போலத் தோற்றமளிக்கிறது. ஆனால் அது போனைக் கண்ட்ரோல் செய்யக் கூடிய டச் பேட் போல விரிகிறது. லேப் டாப் கம்ப்யூட்டரில் உள்ள டச் பேட் போல செயல்படுகிறது.
ஹேண்ட்ரைட்டிங் பேட் போல இயங்குகிறது. இதன் மூலம் பல வகைகளில் டச் கமாண்ட் கொடுத்து இயக்கலாம். கூடுதலாக சைகை வழி கட்டளை (Gesture Command) 8 எம்பி திறன் கொண்ட ஆட்டோ போகஸ் கேமரா இணைக்கப் பட்டுள்ளது.
எம்பி3 பிளேயர் தரப்பட்டுள்ளது. வை–பி இணைப்பு, 3ஜி வசதி, 3 அங்குல அகலத்தில் டச் ஸ்கிரீன், டிவிடி ரெசல்யூசனில் வீடியோ ரெகார்டிங், 1.5 ஜிபி மெமரி, 16 ஜிபி வரை மெமரி யை நீட்டிக்கும் வசதி ஆகியவை தரப்பட்டுள்ளன.
சொகுசான வசதியைத் தரக்கூடிய ஒரு போனைத் தரத் திட்டமிட்டு இந்த போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்டலில் அழகான ஸ்லைடிங் கீபேட் தான் இதன் சிறப்பம்சம் என இந்நிறுவன விற்பனைப் பிரிவு தலைவர் இதனை அறிமுகப்படுத்திய விழாவில் குறிப்பிட்டார்.
நடப்பு ஆண்டின் சிறந்த வடிவமைப்பிற்கான விருதை இந்த போன் பெறும் என்றும் இவர் கூறினார். குரோம் மற்றும் டைட்டன் வண்ணங்களில் கிடைக்கும் இந்த போனின் விலை ரூ. 26,000.

7550 வருடங்களுக்கு முன் வாழ்ந்த இராட்சத 'எருது' மண்டையோடு கண்டுபிடிப்பு!

7500 வருடங்களுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்ததாக கருதப்படும் இராட்சத 'எருது'னுடைய மண்டையோடும் பாக எலும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சாதாரன மனிதனின் உயரத்தை விட (6 அடிக்கு மேல்) பெரிதாக தோற்றமளிக்கும் எருது வகையை சேர்ந்த இவ்விலங்குகள், பிரித்தானியா, மற்றும் சுற்றுப்புற சூழலில் 7500 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாகவும், சுமார் 4000 வருடங்களுக்கு முன்னர்
அழிந்து போனதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வீதி திருத்தும் இயந்திர ஓட்டுனராக கடமைபுரியும் ரதபோர்ட் என்பவர், பிரித்தானியாவின் நோர்த் அம்பர்லேண்ட் பிரதேசத்தின் ஆற்றங்கரையோரமாக மண்ணை தோண்டிக்கொண்டிருக்கும் போது, கற்குழிகளில் இருந்து இம் மண்டையோட்டினையும் ஏனனய எலும்புகளையும் கண்டுபிடித்ததுடன், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கும் தகவல் அளித்துள்ளார்.
இவ் எலும்புக்கூடுகள் நல்ல நிலைமையில், இவ்வளவு நாள் இருந்து வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக புருடோவினை மையமாக கொண்டியங்கும், சுற்றுப்புற சூழல் ஆராய்சி நிலையத்தின், இயக்குனர் ரியான் மோலி தெரிவித்துள்ளார்.
'ஔரோச்' என இவ்விலங்குகள் அழைக்கப்படுகின்றன. கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகளின் ரேடியோ காபன் வெளிப்பாடுகளினை ஆராய்ந்ததன் மூலம் 5670-5520 BC காலப்பகுதியில் இவை வாழ்ந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இவ்விலங்குகள் அக்காலத்தில் வாழ்ந்த மனிதர்களினால் இரவு நேர உணவுக்காக வேட்டையாடப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தற்சமயம், நியூகாஸ்ட்டில் பிரதேசத்தில் அமைந்திருக்கும் நூதனசாலைக்கு இவ் ஔரோச்களின் மண்டயோடுகள் எடுத்துச்செல்லப்பட்டுள்ளன.
ஏற்கனவே பிரித்தானியாவின் நோர்த் அம்பேர்லேண்ட் பிரதேசத்தில் இரு இராட்சத சிவப்பு நிறக்கரடிகளின் எலும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமையினால், ஔரோச்களின் புதிய கண்டுபிடிப்புக்கள், அக்காலத்தில் பூமியில் வாழ்ந்த இராட்சத விலங்குகள் பற்றிய ஆய்வில் புதிய திருப்பத்தினை கொண்டு வந்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review