November 09, 2009

மர்மமான கூகுல்

கூகுல் சார்ந்த புதுமையான மற்றும் வியக்க வைக்கக்கூடிய சேவை ஒன்று அறிமுகமாகியுள்ள‌து.

மர்ம்மான கூகுல்(மிஸ்டிரி கூகுல்)இது தான் அந்த சேவை.கருப்பு நிற பின்னணியில் தேடல் காட்டத்திற்கு மேல் நிலவு மின்னிக்கொண்டிருக்க ஒரு வித அமாணுஷ்ய தன்மையோடு காட்சி தரும் இந்த சேவையில் என்ன சிறப்பு என்றால் நிங்கள் குறிப்பிட்ட ஒரு பதத்தை சொல்லி தேடும் போது வழக்கமாக கூகுல் செய்வது போல அதற்கு பொருத்தமான தேடல் முடிவுகள் தோன்றுவதற்கு பதிலாக கிளி சீட்டை பொருக்கி எடுப்பது போல எங்கிருந்தோ எடுக்கப்பட்ட ஒரு முடிவு வந்து நிற்கும்.

அநேக‌மாக‌ உங்க‌ளுக்கு முன் கூகுலில் தேடிய‌ ந‌ப‌ர் பார்த்த‌ இணைய‌ப‌க்க‌ம் மர்ம‌ கூகுலால் காட்ட‌ப்ப‌டும்.

ஒரு மெலிதான‌ ஆச்ச‌ர்ய‌த்தை அளித்து நீங்க‌ள் பார்க்க‌ வாய்ப்பில்லாத‌ புதிய‌ த‌ள‌த்தை உங்க‌ள் பார்வைக்கு வைத்து புதிய‌ அனுப‌வ‌ம் அளிப்ப‌தே இந்த‌ சேவையிப் நோக்க‌ம்.ப‌ல‌ நேர‌ங்க‌ளில் மர்ம‌ கூகுல் அழைத்துச்செல்லும் த‌ள‌ம் முற்றிலும் எதிர்பாராததாக ஆனால் சுவையான‌தாக‌ இருக்கிற‌து.

நெத்திய‌டி போல‌ தேட‌ல் முடிவுக‌ளை த‌ருவ‌தாக தேடியந்திரங்கள் பெருமைப்ப‌ட்டுக்கொள்ளும் நிலையில் தேட‌லில் சூவார்ஸ்ய‌த்தை புக்குத்தும் வ‌கையில் இந்த‌ சேவையை அறிமுக‌ம் செய்யப்பட்டுள்ள‌து.

பச்சை தேயிலை மற்றும் காளான் புற்று நோயை குறைக்கிறது

பச்சை தேயிலை மற்றும் காளான் போன்றவை மார்பக புற்று நோயை ஏற்படுத்தும் வாய்ப்பை குறைப்பதாக சர்வதேச புற்றுநோய்க்கான சஞ்சிகை செய்திவெளியிட்டுள்ளது. பெண்கள் பச்சை தேயிலை மற்றும் காளான் போன்றவற்றை அதிகமாக உட்கொண்டார் இந்த ஆபத்திலிருந்து தப்பிகொள்ளலாம் என தெரிவிக்கபப்டுகிறது.

இவ்விடயம் 20-87 வயதுக்குட்பட்ட மார்பக புற்றுநோய்க்குள்ளான 1009 பெண்களை உள்ளடக்கிய 2000 சீன பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

பச்சை தேயிலை மற்றும் காலான் போன்றவை மார்பக புற்றுநோயை குறைக்குமா?

நாலாந்தம் 10 கிராம் அளவான காளானை உட்கொண்டால் மார்பக புற்றுநோய் ஏற்படும் பாதிப்பு குறைவடையும் மேலும் பச்சை தேயிலை பாணத்தை நாளாந்தம் உட்கொள்ளும் சமயத்தில் பெண்களிடையே மார்பக புற்றுநோய் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

அதேவேளை நாள்தோறும் 4 கிராம் காளான் உண்பவர்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியம் 50 சதவீதமாகும்.மேலும் பெண்களை பச்சை தேயிலை பயன்படுத்துவதன் மூலமும் புற்று நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.பச்சைத் தேயிலை மற்றும் களான் பயன்படுத்தும் பெண்களிற்கு மார்பு புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியில் 11 சதவீதமாகும். ஆய்விற்காக பயன்படுத்தப்பட்ட பச்சை தேயிலை என்பது கபினே அடங்கிய இளம் தேயிலை இலைகளாகும்

ஆனால் சீன மக்கள் இன்னும் புற்றுநோயை தவிக்க பல உணவுக்கட்டுபாடுகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.இதனால் மேற்கேத்திய நாடுகளையும் பார்க்க புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் அளவு 4-5 சதவீதமான அளவு குறைந்துள்ளது.

ஆயுளை நீட்டிக்கும் சுறுசுறுப்பு

சிலரைப் பார்த்தால் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். அவர்களது முகத்திலும் ஒரு பிரகாசம் தெரியும்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள் என்னத்த செஞ்சு… என்னத்த நடக்க… என்று எப்போதும் படுசோம்பேறிகளாக இருப்பார்கள்.

இந்த இரு தரப்பினரில் யாருக்கு ஆயுள் அதிகம் என்று அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்Justify Fullபட்டனர்.

காலையில் எழுந்தது முதல் இரவில் படுக்கையறைக்கு செல்லும் வரை என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பது பற்றிய கேள்விகள் அவர்களிடம் கேட்கப்பட்டன.

ஆய்வின் முடிவில், நீங்கள் எதிர்பார்த்தது போலவே சுறுசுறுப்பாக செயல்படுபவர்களுக்குத்தான் ஆயுள் அதிகம் என்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் சோம்பேறிகளாக திரிபவர்களைக் காட்டிலும் 4 ஆண்டுகள் அதிகம் உயிர் வாழ்கிறார்களாம்.

இந்த ஆய்வின் மூலம் சுறுசுறுப்பாக இருப்பவர்களின் ஆயுள் ரகசியம் எது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ரகசியம் உடற்பயிற்சிதான்!

தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால் மூளையின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதும், அதன் காரணமாக ரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் மூளைக்கு அதிகமாக கொண்டு செல்லப்படுவதும், இதனால் ஞாபக சக்தி அதிகரித்து சுறுசுறுப்பு கிடைப்பதும் ஆய்வில் தெரிய வந்தது.

மேலும், தினமும் உடற்பயிற்சி செய்து வருபவர்களுக்கு இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது பெரும்பாலும் தடுக்கப்படுகிறது என்பதும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நீங்களும் சுறுசுறுப்பாக வேண்டும் என்றால், தினமும் உடற்
பயிற்சி செய்யுங்கள். எடுத்தவுடன் மணிக்கணக்கில் செய்ய முயற்சிக்க வேண்டாம். முதலில் 5 நிமிடங்கள் செய்யுங்கள். அதன்பிறகு படிப்படியாக நேரத்தை அதிகரியுங்கள்.

Nikon நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய சாதனங்கள் (இதை பற்றி சொல்லித்தெரிந்து கொள்வதை விட நீங்களே வீடியோவில் பாருங்களேன்! )

தொழில்நுட்ப உலகம், மக்களை மாயமாக கட்டி இழுக்க, எத்தனையோ முயற்சிகளை போட்டிபோட்டு செய்துகொண்டு இருக்கிறது.புதிய கற்பனைகள், கவர்ச்சிகள், வசதிகள் என வியாபார உத்திக்காகத்தான் இவை கொண்டுவரப்படுகின்ற போதும், சின்ன குழந்தைகளிடம் இருந்து இளைஞர்கள் முதியவர்கள் வரை, இச்சாதனங்களுக்கு அடிமையாக தவறுவதில்லை.

பார்த்தவுடன் பற்றிக்கொள்வது போல, வாங்கிவிடுவதற்கு ஆசை வருத்தூண்டும், புதிய இரண்டு சாதனங்கள் சந்தைக்கு வந்துள்ளன.

உலகின் முதலாவது புரொஜெக்டருடன் கூடிய டிஜிட்டல் கமெராவினை (first compact digital camera built-in projector) நிக்கொன் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. 'Nikon COOLPIX S1000pj ' எனப்பெயரிடப்பட்ட இக்கமெராவினை கொண்டு, நீங்கள் எடுக்கும் புகைப்படத்தினை, பெரிதாக்கி எந்த திரையிலும் உடனுக்குடன், பார்வையிடலாம்.

இதுவரை கமெரா திரையில் மாத்திரமே இந்த வசதி இருந்தது. கடந்த மாதம் முதல் சந்தைக்கு வந்த இக்கமெரா, இப்புதிய வசதியை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது.

இதை பற்றி சொல்லித்தெரிந்து கொள்வதை விட நீங்களே வீடியோவில் பாருங்களேன்!

விண்வெளியில் விருந்தினர் மாளிகை

இந்தியாவின் சந்திரயான்-1 விண்கலம் நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித் துள்ளது. இது விண்வெளி ஆராய்ச்சின் புதிய பரிணாமம்போல அமைந்துவிட்டது. இதையடுத்து நிலவை மையமாக வைத்து பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது. அதாவது நிலவு ஒரு விருந்தினர் மாளிகைபோல செயல்பட இருக்கிறது.

முதல்கட்டமாக நிலவை ஒரு மினி ஆராய்ச்சி கூடம்போல பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது. விண்வெளி ஓடங்களில் எரிபொருளாக பயன்படுவது ஹைட்ரஜன்தான். எனவே விண்கலங்களின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யும் இடமாக நிலவை பயன்படுத்த திட்ட மிடப்பட்டு இருக்கிறது.

விண்வெளி ஆராய்ச்சி பயணத்தில் எரிபொருள் தீர்ந்துவிடும்போது நிலவில் இறங்கி எரிபொருளை நிரப்பிக் கொள்ளப் போகிறார்கள். இதனால் மற்ற கிரகங்களைப் பற்றிய ஆராய்ச்சியையும் வேகமாகச் செயல்படுத்த முடியும்.

மேலும் ஏற்கனவே நடந்த ஆய்வின்படி குறிப்பிட்ட ரசாயனத்தை நிலவின் பாறைகள் மீது தெளிப்பதால் ஆக்சிஜன் வெளிப்படும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருந்தனர். தற்போது நிலவில் ஆக்சிஜனும், ஹைட்ரஜனும் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதால் இதே முறையில் கூடுதலாக ஆக்சிஜனை வெளிப்படச் செய்து செயற்கை முறையில் நீர் உற்பத்தியை பெருக்கவும் முடியும். இதன் மூலம் உயிரினங்களின் தோற்றம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கும். மேலும் மனிதர்களின் புதிய குடியேற்றத் தேவையையும் பூர்த்தி செய்ய முடியும்.

இது குறித்து, ஆய்வாளர் குழுவைச் சேர்ந்த லாரி டெய்லர் கூறும்போது, “நிலவில் காணப்படும் சாதகமான சூழல் சில ஆயிரம் ஆண்டுகளில் உயிரினங்கள் வசிக்கக்கூடிய நிலைமையை அடையும். அங்குள்ள ஹைட்ரஜன், விண்கலங்களின் எரிபொருள் தேவையை 85 சதவீதம் பூர்த்தி செய்யும்” என்றார்.

இண்டெர்நெட் எனது பிறப்புரிமை - ஃபின்லாந்து இப்போது இண்டெர்நெட் தொடர்பான முன்னோடி சட்ட�ம் ஒன்றை கொண்டு வந்துள்ளது

நோக்கிய தேசமான ஃபின்லாந்து வளமான தேசம் மட்டுமல்ல வழி காட்டும் தேசமும் கூட.மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தும் நலவாழ்வு அரசாக விளங்கும் ஃபின்லாந்து இப்போது இண்டெர்நெட் தொடர்பான முன்னோடி சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது.

அந்த சட்டத்தின் படி ஃபின்லாந்தில் இனி இண்டெர்நெட் என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றாக சேர்ந்திருக்கிறது.அதிலும் வழக்கமான இண்டெர்நெட் அல்ல அறிஞரின் தங்கு தடையில்லா அருவிப்பேச்சைப்போல தடையில்லாமல் பாயும் அதிவேக இண்டெர்நெட். அதாவது பிராட்பேண்ட் இணைப்பு.

இதன் மூலம் உலகிலேயே பிராட்பேண்ட் இணைப்பை அடிப்படை உரிமையாக்கிய முதல் தேசம் என்னும் பெருமையை ஃபின்லாந்து பெற்றிருக்கிறது.

இதன்பயனாக் ஜூலை மாதத்திற்குள் ஃபின்லாந்துவாசிகள் பிராட்ப்பேன்ட் இணைப்பை பெறக்கூடும்.அடுத்த சில ஆண்டுகளில் அவர்களுக்கு 150 எம்பி அளவு இணைப்பு கிடைக்ககூடும்.

ஃபின்லாந்து மக்கள் கொடுத்து வைத்தவர்கள் அல்லவா?

இண்டெர்நெட் இணைப்பு என்ன அத்தனை முக்கியமா என்று சிலருக்கு தோன்றலாம்.ஆனால் இண்டெர்நெட் சமுக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தொழில்நுட்பம் என்பதை மறந்து விடக்கூடாது.இண்டெர்நெட் எத்தனையோ புதிய வாசல்களுக்கு திரந்துவிட்டுள்ளது.

ரத்தப் புற்று நோய்க்கு முடிவு!

கொடிய வியாதிகளில் ஒன்றான புற்றுநோயில் பல வகைகள்ள்ளன. அவற்றில் ரத்தப்புற்றுநோய் குறிப்பிடத்தகுந்தது. இதன் பாதிப்பும் எய்ட்ஸ் போலவே ரத்த வெள்ளையணுக்களை அழித்து, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியே இல்லாமல் செய்து விடும். மேலும் எலும்புகளையும் தாக்கும். நாளடைவில் ரத்த சிவப்பணுக்களையும் தாக்கி அனிமீயா எனப்படும் மற்றொரு வியாதியையும் தூண்டிவிடும்.

ரத்தப் புற்றுநோயானது சீரான முறையில் வளர்ச்சி அடையாமல் தாறுமாறாக பெருகி கோரமான பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே இதை கட்டுப்படுத்துவதும் சிரமமாக இருந்து வந்தது.

இங்கிலாந்தில் மட்டும் ஆண்டு தோறும் 7 ஆயிரம் பேர் இந்த கொடிய வியாதியால் பாதிக்கப்பட்டு சுமார் 4 ஆயிரம் பேர் இறந்து வந்தனர். இதன் பாதிப்பை கட்டுப்படுத்த நடந்து வந்த ஆய்வுகள் தற்போது கைகொடுத்து உள்ளன.

புற்று நோய்க்கான காரணங்கள் இதுவரை ஆராய்ச்சியாளர்களுக்கு தெளிவில்லாமலே இருந்து வந்தது. புகைப் பழக்கத்தாலும், கதிர்வீச்சு பாதிப்பாலும், ஒருவித வைரஸ் களின் தாக்குதலாலும் புற்றுநோய் ஏற்படுவதாகவே அறியப்பட்டு இருந்தது. தற்போதுதான் புற்றுநோயோடு தொடர்பு உடைய ஜீன்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கேம்ப்பிரிட்ஜ் பல் கலைக் கழகத்துக்கு உட்பட்ட குர்டான் இன்ஸ்டிட் ஆய்வாளர்கள், ரத்தப் புற்றுநோயான லுக்கேமியாவை ஏற்படுத்தும் ஜீன்களை அடையாளம் கண்டுள்ளனர். இந்த ஜீன்களுக்கு ஜேக்-2 என்று பெயரிடப்பட்டு உள்ளது.

ஆரம்பத்தில் இந்த ஜேக்2 ஜீன்கள் செல்களின் உட்புறத்தோல் என்றே கருதப்பட்டது. ஆனால் இவற்றுக்கு ரத்தப்புற்றுநோயுடன் தொடர்புடையது தெரியவந்துள்ளது. ஒரு வித நொதி இந்த ஜீன்கள் உருவாக காரணமாக இருக்கின்றன. இந்த ஜீன்கள் மற்ற ஜீன்களின் மேல் ஆதிக்கம் செலுத்தி, புரத மூலக்கூறுகளை ஹிஸ்டோன் என்னும் மூலக்கூறாக மாற்றிவிடுகிறது. ஜேக் 2 ஜீன்களில் ஒழுங்கற்ற மாறுதல் ஏற் படும்போது மற்ற செல்களும் பாதிக்கப்பட்டு புற்றுநோய் உருவாக காரணமாகிறது.

எனவே ஜேக்-2 ஜீன்களை கட்டுப்படுத்தி, ரத்தப் புற்றுநோய்க்கு தீர்வு காணலாம் என்று தெரியவந்துள்ளது. விரைவில் தீர்வு ஏற்படும் என்று நம்பலாம்.

கழுத்து வலி தான்னு சும்மா இருக்காதீங்க

கழுத்து வலி, பெரும்பாலோருக்கு வரும். அதிலும், கம்ப்யூட்டரே கதி என்று இருக்கும் இளைய வயதினருக்கு அடிக்கடி வரும். அதற்கு ஏற்ப பழக்கத்தை மாற்றினால், கழுத்து வலி போய்விடும். ஆனால், சில வகை கழுத்து வலிகள் இருக்கின்றன. கீழ் கண்ட காரணங்களில் கழுத்து வலி வந்தால் உஷாராகி விடவேண்டும்.

* அதிக காய்ச்சல் ஏற்படும் போது…
* காரணமே இல்லாமல் எடை குறைவது.
* தலை சுற்றல், மயக்கம் வரும் போது.
* கை நடுக்கம் போன்ற நரம்பு கோளாறுகள்.
* கழுத்து வலி அதிகமாக இருக்கும் போது.
* கழுத்து இறுக்கமாக இருக்கும் போது.

இப்படிப்பட்ட காரணங்களினால், கழுத்து வலி வந்தால் , தைலம் தடவிக்கொண்டிருக்கக் கூடாது; டாக்டரிடம் போய் விட வேண்டும்.

அல்சீமர்ஸ் நோய் பரம்பரையாக நீடிக்குமா?

முதுமையில் வரும் அல்சீமர்ஸ் நோய், யாருக்கு வரும் என்று கேட்டால், அதற்கான அறிகுறியை கூட சொல்ல முடியாது. ஆராய்ச்சியாளர்கள் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.
நம் நாட்டிலும் இப்போது இந்த நோய் தலைதூக்கி வருகிறது. முதலில் நினைவாற்றல் மங்கும்; போகப்போக முடக்கி விடும். இது பரம்பரையாக நீடிக்கும் நோய் என்று சொன்னாலும் மரபணு ரீதியாக மாற்றம் செய்தால் தப்பிக்க வழியுண்டா என்றும் ஆராய்ச்சியாளர்களால் சரிவர சொல்ல முடியவில்லை. ஆனால், அல்சீமர்ஸ் வருவதை தவிர்க்க இரு வழிகள் உள்ளன; ஒன்று ; முடிந்தவரை உடற்பயிற்சி; மூளைக்கு வேலை; இரண்டாவது, அதிக பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவது.

டென்ஷன் தலைவலி யாருக்கு வரும்?

ஒற்றைத் தலைவலி, தொகுப்பு தலைவலி போன்ற பல தலைவலிகள் உள்ளன. ஆனால், பெரும்பாலோருக்கு வருவது டென்ஷன் தலைவலி தான். இது அரை மணி நேரம் முதல் ஒரு வாரம் முழுக்க நீடிக்கும்.
கம்ப்யூட்டர் உட்பட “ஒயிட் காலர்’ பணிகளில் இருப்பவர்களுக்கு இது சகஜமாக வரும். டென்ஷன் ஏற்பட்டதும், கழுத்து, முகத்தில் உள்ள தசைகளில் சில இறுக்கமாகும் அதன் பின் தலைவலி ஆரம்பிக்கும்.
தசைகள் தளர்வடைந்ததும் தலைவலி போச்ச். டென்ஷன் ஏற்பட்டதும் தசைகள் ஏன் இறுக்கமடைகின்றன என்பதற்கு நிபுணர்களிடம் பதில் இல்லை.

குழந்தைகளுக்கும் மன அழுத்தம் வரும்

பெரியவர்களுக்கு மட்டும் தான் ஸ்ட்ரெஸ் என்று சொல்லப்படும் மன அழுத்தம் வருமா? குழந்தைகளுக்கு கூட வருமாம். சிறிய வயதில் சில அசாதாரண காரணங்களில், இழப்புகளால் இப்படி குழந்தைகளுக்கு மன அழுத்தம் வரும் என்கின்றனர் நிபுணர்கள். சிறிய குழந்தையாக இருந்தால், வீட்டில் அடம் பிடிக்கும்; பெற்றோருக்கு கவலையை ஏற்படுத்தும். பெரிய குழந்தையாக இருந்தால், பள்ளியில் படிக் காது; அடிக்கடி சண்டை போடும். மன அழுத்தத்துக்கு இது தான் அறிகுறி. பெற்றோர் இதை உணராமல் அடிக்கவோ, கோபப்படவோ கூடாது என்பதும் டாக்டர்களின் கருத்து.

நீச்சல் நல்லது ஆனால்…

நீச்சல் பயிற்சி பெறுவது நல்லது தான். ஆனால், குளோரின் கலந்த தண்ணீர் உள்ள நீச்சல் குளமாக இருந்தால் அதில் பயிற்சி பெறுவது நல்லதல்ல என்று பெல்ஜியம் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
குளோரின் கலந்த தண்ணீரில் நீச்சல் அடிக்கும் போது, பலருக்கு ஆஸ்துமா மற்றும் அலர்ஜி நோய் வருகிறது. சிலருக்கு தோல் பிரச்னை ஏற்படுகிறது என்பது சில பேரை சோதித்தபோது தெரியவந்துள் ளது.
இளம் வயதினர், குளோரின் கலந்த தண்ணீரில் நீச்சல் பயின்றால், உடனே பாதிப்பு வராது; சுவாசக் கோளாறில் ஆரம்பித்து கடைசியில் ஆஸ்துமாவில் கொண்டு விடும் ஆபத்து உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பர்கர், பிட்சாவுக்கு மட்டும் ஜொள்ளு வளர் இளம் வயதினர் அதிகம் விரும்பிச் சாப்பிடுவது பர்கர், பிட்சா , ஐஸ்கிரீம் போன்றவை தான். இவற்றில் எல்லாவற்றிலும் “சாச்சுரேட்டட்’ கொழுப்பு உள்ளது. இந்த வகை கொழுப்பு அயிட்டங்களை சாப்பிடுவோரை, இன்னும் சாப்பிடத் தூண்டுவது எது தெரியுமா? மூளையில் உள்ள ஒரு வகை ரசாயனம் தான்.

பொதுவாக, பசித்தால் சாப்பிட மூளை கட்டளையிடும். கட்டளை வந்த பின், பசியெடுக்கும். பசி தீர்ந்தவுடன், மீண்டும் கட்டளை வரும், பசியை தூண்டும் சுரப்பி முடங்கி விடும். ஆனால், கொழுப்பு உணவு வகைகளை சாப்பிடும் போது, இந்த சுரப்பிகளை முடக்க கட்டளையிட்டாலும், முடங்காது. மூளையில் உள்ள ரசாயனம் செய்யும் வேலை தான் இது.

வாடிக்கையாளர்களை இழந்து வரும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்

பிரவுசர் சந்தையில் தொடர்ந்து தன் வாடிக்கையாளர்களை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இழந்து வருகிறது. இந்த பிரவுசரின் நான்கு போட்டியாளர்களின் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

உலக அளவில் ஏறத்தாழ 40 ஆயிரம் இணைய தளங்களையும், பல்வேறு வகையான புள்ளிவிபரங்களையும், தொழில் நுட்பத்தி னையும் பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டு வரும் நெட் அப்ளிகேஷன்ஸ் என்னும் அமைப்பு, அண்மையில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பிரவுசர் பயன்பாடு குறித்த ஆய்வு முடிவுகளை அறிவித்துள்ளது. அதன்படி இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் வசம் இருந்த அதன் பயனாளர் எண்ணிக்கை 67 சதவிகிதத்திலிருந்து 65.7 % ஆகக் குறைந்துள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட பயர்பாக்ஸ் பிரவுசர் தொடர்ந்து முன்னேறி வருகிறது. சென்ற இரண்டு மாதங்களில் இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 23 சதவிகிதத்திலிருந்து 23.8% ஆக உயர்ந்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் சபாரி பிரவுசரின் ரசிகர்கள் எண்ணிக்கை4.1% லிருந்து 4.2% ஆக உயர்ந்துள்ளது. கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 2.8%லிருந்து 3.2% ஆகக் கூடியுள்ளது. ஆப்பராவின் பயனாளர்கள் 2%லிருந்து 2.2% ஆக உயர்ந்துள்ளனர். இந்த சதவிகிதம் என்ன மிகக் குறைவு என்று எண்ணாதீர்கள். பல கோடிக்கணக்கான இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக் கையோடு இதனைப் பொருத்திப் பார்த்தால் பல லட்சக் கணக்கில் இவர்களின் எண்ணிக்கைய நீங்கள் உணரலாம்.

அண்மையில் தான் மொஸில்லாவின் பயர்பாக்ஸ் புதிய ஒரு மைல்கல்லைத் தன் பயணத்தில் கடந்தது. இதன் பதிப்பு 3.5 வெளியிடப்பட்டு, பழைய பிரவுசர் இடத்தில் அமர்ந்தது. இதன் வசதிகள் பலரின் கவனத்தை இழுத்தது. அதிவேக ஜாவா ஸ்கிரிப்ட் மற்றும் பில்ட் இன் வீடியோ எனப் பல புதிய தொழில் நுட்ப வசதிகளுடன், வாடிக்கையாளர்களைக் கட்டிப் போட்டிருப்பதுடன், புதியவர்களையும் ஈர்க்கிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்த வரை, அதன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வாடிக்கையாளர்களை இழந்தாலும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8, இப்போது அதிகமான பயனாளர்களைக் கொண்டதாக மாறிவருகிறது. இது சற்று ஆறுதல் அளிக்கும் செய்தியாக மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு அமையலாம்.


lankasri.com

மூளையை வளர்க்கும் இணைய தேடல்

இண்டெர்நெட்டை பொருத்தவரை மூன்றுவிதமான தலைமுறை இருகின்றன தெரியுமா?

முதல் தலைமுறை இண்டெர்நெட்டோடு பிறந்து இணைய சூழலில் வளரும் டிஜிட்டல் தலைமுறை.இரண்டாவது தலைமுறை இண்டெர்நெட்டின் வளர்ச்சியை பார்த்து அதனோடு பரிட்சயம் செய்து கொண்ட தலைமுறை.30 வயதுக்கு மேற்பட்டவர்களை இந்த தலைமுறையில் தான் சேர்க்க வேண்டும்.

மூன்றாவ‌து த‌லைமுறை இண்டெர்நெட் என்றாலே ப‌ய‌ந்து ஒதுங்கி கொள்ளும் முத்த‌ த‌லைமுறை.விதிவிலக்கான‌ ஒரு சில‌ரைத்த‌விர‌ பெரும்பாலான‌ தாத்தா பாட்டிக‌ளை இந்த‌ பிரிவில் தான் சேர்க்க‌ வேண்டும்.

இப்ப‌டி இண்டெர்நெட் என்றால் ஏதோ புரியாத தொழில்நுட்ப‌ம் என்று க‌ருதக்கூடிய‌ தாத்த‌க்க‌ளுக்கும் பாட்டிக‌ளுக்கும் இண்டெர்நெட்டை அறிமுக‌ம் செய்து வைப்ப‌தை விட‌ பெரிய‌ சேவை வேறு இருக்க‌ முடியாது தெரியுமா?

இண்டெர்நெட் அறிமுக‌ம் வ‌ய‌தான‌வ‌ர்க‌ளுக்கு புதிய‌ உல‌கை திற‌ந்துவிடும் என்ப‌து ஒருபுற‌ம் இருக்க‌ அது அவ‌ர்க‌ளின் மூளை செய‌ல்பாட்டின் மேம்பாட்டிற்கு முக்கிய‌ ப‌ங்கு வ‌கிக்கும் என்ப‌தே விஷ‌ய‌ம்.அதாவ‌து இண்டெர்நெட்டில் த‌க‌வ‌ல்க‌ளை தேடுவ‌து மூளைக்கான‌ மிக‌ச்சிற‌ந்த‌ ப‌யிற்சியாக‌ அமையும் என‌ தெரிய‌ வ‌ந்துள்ள‌து.

அதிக‌ம் இல்லை ஒரு வார‌ கால‌ம் கூகுல் தேட‌லில் எடுப‌ட்டாலே போதும் பெரிய‌வ‌ர்க‌ளின் மூளை செய‌ல்பாடு சுறுசுறுப்பாகி முடிவெடுக்கும் ம‌ற்றும் புரிந்து கொள்ளும் ஆற்ற‌ல் மேம்ப‌டுபவ‌தாக‌ க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டுள்ள‌து.

அமெரிக்காவைச்சேர்ந்த‌ யுசிஎல்ஏ என்னும் அமைப்பு இது தொட‌ர்பான‌ ஆய்வை ந‌ட‌த்தியுள்ள‌து.55 வ‌ய‌து முத‌ல் 78 வ‌ய‌தான‌வ‌ர்க‌ளை கொண்டு ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட இந்த‌ ஆய்வில் எப் எம் ஆர் ஐ ஸ்கான் முறையில் முளையின் செய்ல்பாடு ஆல‌சி ஆராய‌ப்ப‌ட்ட‌து. ஆய்வில் ப‌ங்கேற்றோர் இண்டெர்நெட்டை ப‌ய‌ன்ப‌டுத்தும் போது அவ‌ர்க‌ள் மூலையில் நிக‌ழும் ராசாய‌ண‌ மாறுத‌ல்க‌ள் க‌வ‌னிக்க‌ப்ப‌ட்ட‌ன‌.

அப்போது தேடலில் ஈடுப‌ட்டவ‌ர்க‌ளின் மூளை செய‌ல்பாடு மிக‌வும் சுறுசுறுப்பாக‌ இருப்ப‌து க‌ண்டுபிடிக்க‌ப்ப‌ட்ட‌து.முளையில் முடிவெடுக்க‌ ப‌ய‌ன்ப‌டும் ப‌குதியில் இந்த‌ செய‌ல்பாடு அமைந்திருந்த‌தை ஆய்வால‌ர்க‌ள் க‌வ‌னித்துள்ள‌ன‌ர்.

இந்த‌ வ‌கை செய‌ல்பாடு முடிவெடுப்ப‌து ம‌ற்றும் புரிந்து கொள்ளுத‌லில் முக்கிய‌ பாங்காற்றும் என்று க‌ருத‌ப்ப‌டுகிற‌து.என‌வே இண்டெர்நெட்டில் த‌க‌வ‌ல்க‌ளை தேடுவ‌து மூளைக்கான‌ ப‌யிற்சியாக‌ அமையும் என்று க‌ருதப்ப‌டுகிற‌து.ஒரு வார‌ கால‌ம் தேட‌லில் ஈடுப‌ட்டாலே போதுமான‌து என்றும் தெரிய‌ வ‌ந்துள்ள‌து.

அல்சைம‌ர்ஸ் போன்ற‌ நினைவுத்திற‌ன் குறைபாட்டினால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு இணைய‌ தேடல் உத‌வ‌லாம் என்று எதிர்பார்க்க‌ப்ப‌டுகிற‌து.

என‌வே உங்க‌ள் வீட்டில் பெரிய‌வ‌ர்க‌ள் இருந்து அவ‌ர்க‌ள் இண்டெர்நெட் விஷ‌ய‌த்தில் ப‌ய‌ந்தாங்கொலிக‌ளாக‌ இருந்தால் அவ‌ர்க‌ளுக்கு இண்டெர்நெட்டை க‌ற்றுக்கொடுப்ப‌து மிக‌ச்சிற‌ந்த‌ உத‌வியாக‌ இருக்கும்.

உடற்பயிற்சினால் உண்டாகும் நன்மைகள்

உடற்பயிற்சியின்போது நம் உறுப்புகள் நம் கட்டுப்பாட்டிற்குள் இயங்குகின்றன, அதனால் உடலுக்கு நலமும் பலமும் வளமும் மிகுதியாக கிட்டுகின்றன.

பெண்கள் உடற்பயிற்சி செய்தால் அவர்கள் மார்பகம் எடுப்பாக அமையும். இடை குறுகலாகவும், உடலில் பொலிவூட்டும் நிறம் அமையும். கண்களின் ஒளி மிகும். குரல் இனிமையாக, எடுப்பாக இருக்கும்.

செயலாற்றக் கூடிய சக்தியை உடல் பெறும். உடல் தசைகள் உருண்டு திரண்டு செழுமையுறும்; உள்ளூறுப்புகள் தூய்மைபட்டு வலிமை பெறும். நரம்புகள் வலிமை பெறும்; தொடைத் தசைகளும் கெண்டை கால்களும், தசைகளும் சீர்பட்டு ஒழுங்காகும்.

கை, கால், கணுக்கால், மார்பகம், இடுப்பு ஆகிய இடங்களில் தேவையான அளவு தசைகள் அமையும். கன்னத்திலே தொங்குகின்ற தசை, தோல்களிலே கனத்து தடித்திருக்கின்ற தசை, விலா எலும்புகளுக்குக் கீழே விரிந்து வளர்ந்து அடர்ந்திருக்கின்ற தசை ஆகியன மறையும்.

ஊளைச் சதையை ஒழிப்பது போலவே ஒல்லியாய் இருப்பவரின் உடலில் போதுமான தசைகள் அமைய உடற்பயிற்சி உறுதுணை செய்யும். உடல் எடை அளவோடு அமையும்.

மூங்கிலைப் போன்ற உருண்டு திரண்ட தோள்கள் உருவாகும்; நடையில் நளினம் மலச்சிக்கலைத் தவிர்க்கும். மனத்தை மகிழ வைக்கும்; சுறுசுறுப்போடு இயங்கும் ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் தரும்.

இரத்த ஒட்டத்தை பெருக்கி உடலை வளம் பெறச் செய்யும். அடிக்கடி ஏற்படும் தலைவலி அறவே நீங்கும்.

இத்தனைக்கும் மேலாக எடுப்பும், சிறப்பும் மிகுந்த உடலமைப்பைத் தந்து, வாழ்வின் இன்பத்தை அனுபவிக்கத் தூண்டும்; நல்ல உடலில் நல்ல மனம் என்பார்கள், அந்த நல்ல மனம் அமைய வழி வகுக்கும்.

உடல் செழுமையும் வளமும் பெற

பயிற்சி 1

ஓரடி அகளம் இடைவெளி இருக்குமாறு கால்களை விறைப்பாக வைத்து, இடுப்பின் இருபுறமும் இருகைகளையும் ஊன்றி நிமிர்ந்து நிற்க வேண்டும். மூச்சை நன்றாக உள்ளே இழுக்கவும், சற்று நேரம் கழித்து மூச்சினை வெளியே விட வேண்டும். இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும்.
பயிற்சி 2

முதல் பயிற்சியை போல் நிற்கும் நிலையில் மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ளவேண்டும். கால்களை உயர்த்தி, முன் பாதங்களில் நிற்க வேண்டும். சற்று நேரம் கழித்து முன் நிலைக்கு வந்து மூச்சை விட வேண்டும். இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும். பயிற்சி

பயிற்சி 3

முதல் பயிற்சியை போல் இருகைகளையும் தொடையின் பக்கவாட்டில் தொங்க வேண்டும். மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ள வேண்டும். கைகளை பக்கவாட்டில் தோள் அளவுக்கு உயர்த்த வேண்டும். சற்று நேரம் கழித்து முன் நிலைக்கு வந்து மூச்சை விட வேண்டும். இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும்.

பயிற்சி 4

மூன்றாம் பயிற்சியை போலவே நிற்கும் நிலையில் மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ளவேண்டும். கைகளை பக்கவாட்டில் தோள் அளவுக்கு உயர்த்தி முன் பாதங்களில் நிற்க வேண்டும். குதிகால் தரையில் படாமல் சற்று நேரம் நின்ற பிறகு முன் நிலைக்கு வந்து மூச்சை விட வேண்டும்.இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும். பயிற்சி 5 முதல் பயிற்சியை போலவே இரு கைகளையும் ஊன்றி நிற்க வேண்டும். மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொள்ளவேண்டும். குதிகால் தரையில் இருக்கும்படியே குதிகால் மீது உட்கார வேண்டும் கீழே குனியாமல், நேர்கொண்ட பார்வை இருக்க வேண்டும். சற்று நேரம் நின்ற பிறகு முன் நிலைக்கு எழுந்த பிறகே மூச்சை விட வேண்டும்.

இவ்வாறு 20 முறை செய்ய வேண்டும். மூச்சை இழுக்கும் முக்கியத்துவத்தை அறிவோம் அதனை முறையாக கற்று கொள்ளப் பயிற்சிகளைத் தெரிந்து கொள்ளவேண்டும். மூச்சை இழுத்து விடும் பயிற்சிக்கு மேற்கூறிய பயிற்சிகளை, முன்னே குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையில் செய்ய வேண்டும். தினந்தோறும் பயிற்சியின் அளவை மிகுதிபடுத்திக் கொண்டே வர வேண்டும். ஒரே மூச்சில் எவ்வளவு காற்றை அதிகம் இழுக்கிறோமோ அவ்வளவுக்கு இரத்த ஓட்டம் விரைவு பெரும். உடல் செழுமையும் வனப்பும் பெறும். அழகு மிளிரும்.நிமிர்ந்த மார்பு வாய்க்கும். மார்பகங்கள் செழிப்பாய் இருக்கும் . இடை குறுகும், தோல் அழகிய நிறம் பெறும். கண்கள் ஒளியுடன் திகழும். உடலுக்கு மிகுந்த சக்தி கிட்டும்.

ஆகவே, பயிற்சியை செய்யும் போது மூச்சை இழுத்துவிட வெளிவிடுகின்ற முறையைச் சரிவரக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இளம்பெண்களை குறிவைக்கும் நோய்கள்

அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக முத்திரை பதித்து வரும் இன்றைய இளம்பெண்களுக்கு ஒரு சவாலாக இருப்பது இதயத் தாக்குதல்தான்! நாம் இளமையாக இருக்கிறோம்… உடல் நலத்தோடு இருக்கிறோம்… இதற்கு மேல் ஒரு பெண்ணாகவும் இருக்கிறோம் என்று நீங்கள் நினைத்தாலும், இதயத்தாக்குதல் என்பது உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கும் ஒரு சிக்கல் என்று எச்சரிக்கிறார்கள், மருத்துவ ஆய்வாளர்கள்.

இளம்பெண்களுக்கு இதயம் தொடர்பான பிரச்சினைகளா? என்று நீங்கள் நினைப்பது தவறு! பெண்கள் உயிரை பலி வாங்குவதில் இதய நோய்கள் முதலிடத்தில் உள்ளது என்று மிரட்டுகிறது ஒரு சர்வே. பெண்களுக்கு இதய நோயின் கூறுபாடுகள் இருபது வயதிலேயே தோன்றத் தொடங்கி விடுகிறது என்றும் கூறுகிறது அந்த ஆய்வு. அதற்கான காரணிகளைம் கூறுகிறது. இறப்பில் முடிகின்ற இதய நோயாளிகளில் பாதி பேர் பெண்கள்! இதயத் தாக்குதல் ஏற்பட்டதும் இறந்து போகக் கூடிய சாத்தியக்கூறு ஆண்களை விட, பெண்களுக்கு இரு மடங்கு அதிக மாக உள்ளது. பத்தில் ஒரு பெண்ணுக்குத் தான் மார்பக புற்று ஏற்பட வாயப்பிருக்கிறது. ஆனால் முன்றில் ஒரு பெண்ணுக்கு அவளது வாழ்நாளில் இதய நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எல்லா வகையான புற்று நோய்களிலும் இறக்கும் பெண்களை போல் இரு மடங்கு பெண்கள் இதயத் தாக்குத லினால் இறக்கின்றனர்.

ஏற்கனவே ஏ.எச்.ஏ எனபடும் அமெரிக்கன் இதய சங்கம் (அமெரிக்கன் ஹார்ட் அசோசி யேஷன்) இது குறித்து எச்சரித்துள்ளது. அத்துடன் இதற்காகவே மகளிர் இதய நோய் செயற்குழு ஒன்றினையும் அமைத் துள்ளது.

நடைமுறையில் இதய நோய்கள் பற்றிய ஆராய்ச்சி முழுவதும் ஆண்களையே சுற்றிச் சுழல்கிறது. இதன் விளைவாக இதய நோயினால் பெண்களுக்கு நேருகின்ற இன்னல்கள் இருட்டடிப்பு செய்யபட்டு விட்டன. பெண்களுக்கு ஏற்படுகின்ற இதயக் கோளாறுகளில் அக்கறை காட்டபடாதது எதனால் என்ற கேள்வியும் எழுகிறது.

இதயத் தமனிக் கோளாறுகள் ஆண்களை விட வயது முதிர்ந்த நிலையிலேயே பெண்களுக்கு ஏற்படுவது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார், அமெரிக்க குடும்ப மருத்துவர்கள் அகாடமியைச் சேர்ந்த டாக்டர் டொனால்டு கீத்.

பெண்களின் உடலில் சுரக்கின்ற எஸ்ட்ரோஜன் ஹார்மோன், நல்ல கொலஸ்ட்ராலுடன் உற்பத்தியை உயர்த்தி உடலுக்கு பாதுகாப்பளிக்கிறது. மாதவிடாய் நிற்கும் வேளையில் எஸ்ட்ரோஜன் சுரபில் ஏற்படுகின்ற வீழ்ச்சி அவர்களை இதய நோய்களுக்கு இலக்காக்கி விடுகிறது என்றும் இவர் கூறுகிறார். அறுபத்தைந்து வயதாகின்றபோது இதயத் தாக்கு ஏற்படும் வாய்ப்பு ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே அளவில்தான் இருக்கிறது.

அறுபத்தைந்து வயது தானே ஆகிறது? அதற்குள் என்ன? என்று கவனமின்மையாக இருக்கக் கூடாது.

இப்போதிலிருந்தே சில வாழ்க்கை முறை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால் இதயம் தொடர்புடைய இன்னல்கள் பலவற்றைக் குறைத்து விடலாம்.

கொழுபையும், கொலஸ்ட்ராலைம் முடிந்த அளவுக்கு உணவிலிருந்து நீக்கி விடுவது நல்லது. ஆறுமாதங்களுக்கு ஒரு முறை ரத்த அழுத்தத்தைம், கொலஸ்ட்ரால் அளவையும் சோதித்துக் கொள்ளுங்கள்.

வீட்டிலும், அலுவலகம் மற்றும் வேலை பார்க்கும் இடங்களில் மன இறுக்கமும், பதட்டமும் இன்றி இயல்பாக வேலை பார்பது முக்கியம். எளிமையான உடற்பயிற்சிகள், நடை பயிற்சிகள் செய்து வாருங்கள். உடற்பயிற்சி செய்து உடலை நல்ல செயல்பாடுகளோடு வைத்திருபவர்கள் இளமைடன் மற்றவர்களை விட அதிக நாட்கள் வாழ்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

எவராலும் எபோதும் இளமையாக இருக்க முடியாது. ஆயினும் தேவையற்ற மெனக் கெடல்களை செய்யாமல் தவிர்த்துவிடுவது நல்லது.

பெண்களுக்கு ஏற்படும் இதயக் கோளாறுகளில் முன்றில் ஒரு பங்கு அதிக எடை கொண்ட பெண்களுக்கே ஏற்படுகிறது. ஐந்தாறு கிலோ எடை கூடுதலாக இருந்தாலும் அதற்கான தொல்லையை அது உண்டாக்கி விடுகிறது. பாஸ்டனிலுள்ள பெண்கள் மருத் துவமனைம், மெட்ரோபாலிடன் இன்ஷுரன்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய ஆய்வில், சராசரி எடையை விட அதிகமான எடை கொடிருந்த பெண்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்புகள் மற்றவர்களைவிட 80 சதவீதம் அதிகமாக இருந்தது அறியபட்டது.

சி.டி.சி. எனபடும் நோய் தடுப்பு மையம் இளம்பெண்களுக்கான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஆண்களும், பெண்களும் தங்களது 25 வயது தொடங்கி 35 வயது வரையிலான கால இடைவெளியில்தான் அதிக அளவில் சதை போடுகிறார்கள். அதிலும் குறிபாக, பெண்களின் எடை அதிகரிப்பதற்கான வாயப்பு, ஆண்களை விட இருமடங்கு அதிகமாக உள்ளது என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சீனாவில் ஆபாச இணையதளம் மூடல்

சீனாவில் செயல்படும் இணையத்தில், ஆபாச தளங்களை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 44,000 ஆபாச தளங்களுக்கு தடைவிதித்து அந்நாட்டு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், இதுதொடர்பாக கடந்த ஆண்டில் 1,911 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், 868 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டில் நடந்த தேசிய தொலை உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆபாச இணையதளங்களை தடை செய்யும் பணி தொடரும் என அந்நாட்டின் மக்கள் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது ஆபாச இணையங்களை முடக்கும் பணியில் சீன அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

நெருப்பு நரி மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் தடயங்களை அழிக்கலாம்

இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்து பல விஷயங்களைப் பெறுகிறோம். வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் தங்கள் வர்த்தக வளர்ச்சிக்காக, பன்னாட்டளவில் தகவல்களைத் தேடுவார்கள். வேலை தேடுபவர்கள், போட்டித் தேர்வு எழுதுபவர்கள், தங்கள் முன்னேற்றத்திற்கென இணையத்தில் தங்கள் தேடலை மேற்கொள்வார்கள். போட்டிகள் நிறைந்த இந்த உலகில் இத்தகைய தேடல்கள் எல்லாம் மற்றவர்களுக்குத் தெரியக்கூடாதே. ஆனால் உங்கள் இன்டர்நெட் பிரவுசிங் செயல்பாடுகள் அனைத்தும் உங்கள் கம்ப்யூட்டரில் இன்டர்நெட் ஹிஸ்டரியாகப் பதியப்படுகிறதே. இதனைப் பயன்படுத்தி யார் வேண்டுமானாலும், நீங்கள் என்ன என்ன தளங்களைப் பார்த்தீர்கள் என்று அறிந்து, அவர்களும் அந்த தளங்களில் இருந்து தகவல்களைப் பெற்று உங்களுக்குப் போட்டியாக செயல்படலாமே. ஆம், இதற்கு என்ன வழி?

இத்தகைய நிலை சில மாதங்களுக்கு முன் இருந்தது. ஆனால் இப்போது வரும் பிரவுசர் பதிப்புகள், உங்களின் இன்டர்நெட் உலா, அடுத்தவர் பார்த்து அறியாத வகையில் இருக்க செட்டிங்ஸ் ஏற்படுத்தும் வசதிகளை அளிக்கின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம். பிரவுசர்களில் உள்ள இந்த வசதிகளுடன் சில தேர்ட் பார்ட்டி புரோகிராம் எனப்படும் சில புரோகிராம்களும் இந்த வசதியை அளிக்கின்றன. இங்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 மற்றும் பயர்பாக்ஸ் பதிப்பு 3.5 ஆகியவை சார்ந்த பாதுகாப்பு வழிகளைப் பார்க்கலாம்.

1. முதலில் இன்டர்நெட் எக்ஸ்புளோரரைப் பார்ப்போம். டூல்ஸ் மெனு கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், மேலாக உள்ள டெலீட் பிரவுசிங் ஹிஸ்டரி என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் டயலாக் பாக்ஸில் ஐந்து ஆப்ஷன்கள் தரப்படும். இந்த ஆப்ஷன்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், நீங்கள் பார்த்த தளங்களின் பட்டியலை அழிக்கலாம்; குக்கி பைல்களை நீக்கலாம்; இப்படி உங்கள் பிரவுசிங் சம்பந்தமான அனைத்து தடயங்களையும் நீக்கலாம்.

lankasri.com


எவற்றை நீக்க வேண்டும் என முடிவு செய்து, அவற்றைத் தேர்ந்தெடுத்து நீக்கவும். ஆனால் எதனையும் நீக்கும் முன், ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செயல்படவும். ஏனென்றால் பாஸ்வேர்ட்களை நினைவில் வைத்துப் பயன்படுத்தும் வகையில் நீங்கள் அமைத்திருக்கலாம். அவற்றை நீக்கும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுப்பதில் யோசித்து முடிவெடுக்கவும். அதே போல Form Data, Cookies ஆகியவற்றை நீக்கினால், உங்கள் இன்டர்நெட் பயன்பாடு சற்று தாமதமடையலாம்; அல்லது முழுவதுமாக மாறலாம். எனவே தேவையான ஆப்ஷன்ஸ் தேர்ந்தெடுத்துப் பின் கிளிக் செய்து வெளியேறவும்.

2. இன்னொரு வழியைப் பார்ப்போம். இப்போதும் டூல்ஸ் மெனு கிளிக் செய்து, Internet Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் பல டேப்கள் அடங்கிய விண்டோவில், Privacy டேப் என்பதில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் பெறும் ஆப்ஷன்கள் மூலமாக, உங்களுடைய கம்ப்யூட்டரில் பதியப்படும் குக்கிகள் எப்படி உங்கள் இன்டர்நெட் பிரவுசிங் செயல்பாட்டில் உதவலாம் என்பதனை நீங்கள் முடிவு செய்திடலாம்.


lankasri.com


பொதுவாக குக்கு பைல்கள் தீங்கு விளைவிக்கும் தன்மை உடையவை என்று நாம் எண்ணி வந்தாலும், பல குக்கிகள் அவை சார்ந்த தளங்களை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைத் தளத்திற்கு உணர்த்தி, அந்த தளத்துடனான நம் அனுபவத்தினைச் சீராக்குகின்றன. எனவே இங்கு தரப்படும் செட்டிங்ஸ் ஸ்கேலில், Medium என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.

3. இன்டர்நெட் வெப்சைட்களுக்கு நாம் செல்கையில், அந்த தளங்களில் இருக்கும் இமேஜஸ் மற்றும் பிற தகவல்களை நாம் வைத்திருக்கும் பிரவுசர்கள் காப்பி செய்து வைத்துக் கொள்கின்றன என்று பலருக்குத் தெரியாது. இந்த பைல்களை இன்டர்நெட் ஆப்ஷன்ஸ் விண்டோவில் உள்ள General என்ற டேப்பினைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பார்க்கலாம். இதன் மூலம் நாம் திரும்ப திரும்ப குறிப்பிட்ட தளங்களுக்குச் செல்கையில், அந்த தளங்கள் விரைவில் நமக்குக் கிடைக்க இந்த பைல்கள் உதவுகின்றன. Browsing History பிரிவில் Settings என்பதில் கிளிக் செய்து பின் View Files என்பதைத் தட்டினால், இந்த பைல்களைக் காணலாம்.

lankasri.com


இவ்வாறு பைல்கள் குவிவதனை நீங்கள் விரும்பவில்லை என்றால், உங்கள் பிரவுசிங் முடிந்து, பிரவுசரை மூடும்போது, அவை அனைத்தையும் போல்டரிலிருந்து நீக்கும் படி நீங்கள் செட் செய்திட முடியும்.

Internet Options விண்டோவில், Advanced என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் நிறைய ஆப்ஷன்ஸ் தரப்பட்டிருக்கும். எனவே கவனமாக இதில் ஸ்குரோல் செய்திட வேண்டும். தவறுதலாக எதனையேனும், நம்மையும் அறியாமல் தேர்ந்தெடுத்து விட்டால், பின் பிரவுசிங் செய்திடுகையில் பிரச்சினை ஏற்படும். ஏற்கனவே பிரவுசர் இன்ஸ்டால் செய்யப்படுகையில் சில ஆப்ஷன்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இருக்கும். இவற்றை நீக்கிவிடாமல் வரிசையாகச் செல்ல வேண்டும். அப்படி எதனையேனும் நீக்கியதாக உணர்ந்தால், உடனே Cancel பட்டன் கிளிக் செய்து மீண்டும் இந்த விண்டோவினைத் திறந்து செலக்ட் செய்திடலாம். இனி இந்த லிஸ்ட்டில் ஸ்குரோல் செய்து அதில் ‘Empty Temporary Internet Files Folder when browser is closed’ என்ற ஆப்ஷன் உள்ள வரியினைத் தேடிக் கண்டுபிடிக்கவும். இதில் ஒரு சிறிய டிக் அடையாளம் ஏற்படுத்தி பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

பயர்பாக்ஸ் 3.5 தொகுப்பு மேலே தரப்பட்டுள்ள பல வசதிகளை மிக எளிமையாக அமைத்துக் கொள்ள வழிகளைத் தருகிறது.Tools மெனுவில் Clear Private Data என்பதைத் தேர்ந்தெடுங்கள். இதில் நீங்கள் எவற்றை எல்லாம் நீக்க வேண்டும் என விரும்புகிறீர்களோ அவற்றை எல்லாம் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். இதில் டெம்பரரி இன்டர்நெட் பைல்களைக் காலி செய்திட Cache என்பதில் கிளிக் செய்திட வேண்டும்.

இங்கும் பிரவுசர் மூடப்படுகையில் பெர்சனல் தகவல்கள் அனைத்தையும் நீக்குமாறு செட் செய்திடலாம். Tools மெனுவிலிருந்து Options செலக்ட் செய்திடவும். இங்கு Privacy என்ற டேப் அழுத்தினால் கிடைக்கும் பாக்ஸில் Settings அழுத்தவும். பின் Settings for deleting history என்ற விண்டோ கிடைக்கும். இதில் எந்த வகை டேட்டா இருக்கக் கூடாது என்று எண்ணுகிறீர்களோ அவற்றைத் தேர்ந்தெடுத்து, பின் ஓகே கொடுத்து மூடலாம்.

மூளையை சுறுசுறுப்பாக்கும் வாழைப்பழம்

வாழைப்பழம் – எல்லாத் தரப்பு மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் சத்துகள் பல நிரம்பிய பழம். வாழைப்பழத்திற்கு இன்னொரு விசேஷமும் இருக்கிறது என்பதை கண்டுபிடித்து இருக்கிறார்கள் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள்.

அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் படிக்கும் 200 மாணவர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் காலை, மதியம், இரவில் சாப்பிட்டு முடித்ததும் அவர்களுக்கு உட்கொள்ள வாழைப்பழம் கொடுக்கப்பட்டது. சில வாரங்களுக்கு பிறகு அவர்களிடம் எந்த திறன் மேம்பட்டு இருக்கிறது என்று ஆராய்ந்தார்கள்.

அந்த ஆய்வில், உணவுக்கு பிறகு வாழைப்பழம் சாப்பிட்ட அனைத்து மாணவர்களது மூளையின் செயல்பாட்டுத் திறனும் அதிகரித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை, அப்போது நடந்த அந்த மாணவர்களது தேர்வு முடிவும் உறுதி செய்தது.

அதாவது, அந்த தேர்வில் மேற்படி மாணவர்கள் அனைவரும் வழக்கமாக பெறும் மதிப்பெண்களைக் காட்டிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.

மூளையை சுறுசுறுப்பாக்குவதுடன் பல்வேறு நன்மைகளையும் தருகிறது என்பதால், நீங்களும் குறைந்த விலையில் எளிதாக எங்கும் கிடைக்கும் வாழைப்பழத்தை தினமும் வாங்கி சாப்பிடலாமே…

சந்திரனில் மர்ம துவாரம்

சந்திரனின் மேற்பரப்பில் 200 அடி விட்டமும் 300 அடி ஆழமும் உடைய மர்மமான துவாரமொன்று இருக்கும் இரகசியத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பான செய்தி சனிக்கிழமை "த சன்' ஊடகத்தில் வெளியிடப்பட்டது.

இந்த துவாரமானது 1,200 அடி அகலமான நிலக்கீழ் எரிமலை கால்வாயுடன் இணைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.பிரித்தானிய சந்திர உபகோள் நிபுணர் எமிலி போல்ட்வின் தலைமையிலான குழுவினரே இந்த அரிய துவாரத்தைக் கண்டு பிடித்துள்ளனர்.

ஜப்பானின் "ககுயா' விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தால் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆய்வுக்குட்படுத்தியே விஞ்ஞானிகள் சந்திரனிலான இந்த மர்மத் துவாரத்தை இனங்கண்டறிந்துள்ளனர்.

பல பில்லியன் வருடங்களுக்கு முன் மேற்படி பிராந்தியத்தில் ஏற்பட்ட எரிமலை சீற்றமே இத்துவாரத்திற்கு காரணமென கருதப்படுகிறது.

ஆப்பிள் மீது நோக்கியா வழக்கு

ஆப்பிள் நிறுவனத்தின் பிரபலமான ஐ-போனில் மென்பொருள் காப்புரிமை மீறல் இருப்பதாக கூறி உலகின் ஆகப் பெரிய கைத்தொலைபேசி நிறுவனமான நோகியா வழக்கு தொடந்துள்ளது.

வில்மிங்டன் மாவட்ட நீதிமண்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ள நோகியா, ஐபோனில் வரும் தொலைபேசி அழைப்புகளின் மென்பொருள் மற்றும் கைத்தொலைப்பேசிகளின் இனைப்பு இல்லாத இனைய வசதி போன்றவைகளில் காப்புரிமை மீறல் இருப்பதாக கூறியுள்ளது. இதனை உறுதி செய்த ஆப்பிள் நிறுவனம், வழக்கு குறித்து ஆராய்ந்து வருவதாகவும், உரிய நேரத்தில் இது குறித்து அறிக்கை வெளியிடப்படும் என கூறியுள்ளது.

உலகின் மிகப்பெரிய கைத்தொலைபேசி நிறுவனமான நோகியா, தனது முதல் நஷ்டக் கணக்கை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது

அமர்ந்தபடியே வேலை செய்வதால்.

பெரும்பாலும், கடின உழைப்பில் ஈடுபடுபவர்களை விட, அமர்ந்தபடியே வேலை செய்பவர்களுக்குத்தான் அதிகமான பிரச்சினைகள் வருகின்றன.

முதலில் கணினி முன் அமர்ந்து பணியாற்றுபவர்களைப் பார்க்கலாம்.

நமது முதுகெலும்பானது கேள்விக்குறியைப் போன்ற அமைப்பில் இருக்க வேண்டும். ஆனால், கூன் போட்டு அமர்ந்தபடியே வேலை செய்வதால் நமது முதுகெலும்பு ஆங்கில எழுத்தான சி- யைப் போன்று ஆகிவிடுகிறது.

முதுகெலும்பில் இப்படி ஒரு மாற்றம் ஏற்படுவதால், முதுகெலும்பின் ஒரு சில தட்டுகளில் இருக்கும் திரவம் அழுத்தத்தின் காரணமாக வெளியேறுகிறது. இதனால் முதுகுவலி ஏற்படுகிறது.

மேலும், கால்களை ஒரே மாதிரியான நிலையில் வைத்து பணியாற்றுவதும் தவறு. அவ்வப்போது கால்களின் நிலையை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். கால்கள் ஒரே அழுத்தமான நிலையில் இருப்பதால், உடலில் வாயுவின் இயக்கம் ஓரிடத்தில் தடைபட்டு அங்கு வலி ஏற்படுகிறது. எனவே உடலை அவ்வப்போது தளர்வாக வைத்துக் கொள்வதும், கை, கால்களின் நிலையை மாற்றிக் கொண்டிருப்பதும் அவசியமாகிறது.

எந்த ஒரு செயலுக்கும் எதிர்மறையான ஒரு செயலை நாம் செய்தால் அது நல்ல பலனை அளிக்கும். அதாவது கூன் போட்டு அமர்ந்தபடியே இருக்கும் நாம், அவ்வப்போது, பேக் ஸ்ட்ரிச் எனப்படும் பின்பக்கமாக வளைவதை செய்யலாம்.

அதுபோலவே குவிந்தபடி நம் கைகளை வைத்திருப்பதை மாற்றி, விரல்களை பின்பக்கமாக வளைக்கும் எளிய பயிற்சிகளை செய்யலாம்.

அவ்வப்போது எழுந்து நடந்து சென்றுவிட்டு வரலாம். தண்ணீர் குடிக்கவோ, மற்றவர்களிடம் அலுவலக சந்தேகம் கேட்கவோ 1 மணி நேரத்திற்கு ஒரு முறையாவது நடந்து செல்வது நல்லது.

மேலும், கணினியை நாம் குனிந்தபடி பார்க்கும் வகையில் வைத்துக் கொள்ள வேண்டும். சிறிது கூட நமது தலை நிமிர்ந்தபடி இருக்கக் கூடாது. அப்படி இருந்தால், எளிதில் நமது கழுத்தின் நரம்புகளில் வலி ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

ஒரே இடத்தில் நிற்கும்போது இரண்டு கால்களையும் ஊனி நிற்கக் கூடாது. ஒரு காலில் ஊனி மற்றொரு காலை தளர்வாக விட்டு நின்றால், உடலில் இருக்கும் வாயுவானது சரியான இயக்கத்தில் இருக்கும். எனவே இடுப்புப் பகுதியில் வாயுப் பிடிப்பு என்பது ஏற்படாது.

வந்துள்ள, வரவிருக்கும் அனைத்து வியாதிகளுக்கும் யோகத்தில் பயிற்சி உள்ளது. சரியான முறையில் பின்பற்றினால் நல்ல பலன் கிட்டும்.

பீட்ரூட் சாறு குடித்தால் ரத்த அழுத்தம் குறையும்

தினமும் ஒரு குவளை பீட்ரூட் சாறு குடித்தால் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம் என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். லண்டன் மருத்துவக் கல்லூரியில் ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.

பீட்ரூட்டில் நைட்ரேட் சத்து உள்ளது.நாம் அடிக்கடி சாப்பிடும் கீரையிலும் நைட்ரேட் சத்து உள்ளது. பீட்ரூட் சாற்றை தினமும் குடித்தாலோ அல்லது, நைட்ரேட் சத்து நிறைந்த காய்கறிகளை நிறைய சாப்பிட்டாலோ, உயர் ரத்த அழுத்தம் பெருமளவு குறைவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.அந்த ஆய்வுக் குழுவின் தலைவர் பேராசிரியர் அம்ரிதா அலுவாலியா இத்தகவலைத் தெரிவித்ததாக டெய்லி டெலிகிராப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

3வது காதாக மொபைல் உள்ளதா? இதைப் படிங்க


எ‌ந்த நோயு‌ம் வ‌ந்த ‌பிறகு ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ள்வதை ‌விட, வரு‌ம் மு‌ன் கா‌ப்பதே ‌சிற‌ந்தது எ‌ன்று கூறு‌கிறா‌ர் மூளை அறுவை ‌சி‌கி‌ச்சை ‌நிபுண‌ர் சா‌‌ர்‌லி டியோ.

ம‌‌‌னித‌ர்க‌ள் த‌ங்களது செ‌ல்போனை ல‌வ்டு‌ஸ்‌பீ‌க்க‌ரி‌ல் வை‌த்து‌ப் பேசுவது‌ம், மை‌க்ரோவேவ‌னி‌ல் வேலை முடி‌ந்தத‌ற்காக ‌பீ‌ப் ஒ‌லி எழு‌ம்‌பிய ‌பிறகு ‌சி‌றிது நேர‌ம் க‌ழி‌த்து ‌திற‌ப்பது‌ம் ந‌ல்லது எ‌ன்று‌ம் நம‌க்கு அ‌றிவுறு‌த்து‌கிறா‌ர் இ‌ந்த புக‌ழ்பெ‌ற்ற மரு‌த்துவ ‌நிபுண‌ர்.

மூளை அறுவை ‌சி‌கி‌ச்சை‌யி‌ல் கைரா‌சியான, ‌சி‌ட்‌னியை‌ச் சே‌ர்‌ந்த இ‌ந்த ‌நிபுண‌ர், ‌மி‌ன்சாதன‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து வரு‌ம் க‌தி‌ர்‌வீ‌ச்‌சி‌ல் இரு‌ந்து ந‌ம்மை‌‌க் கா‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம் எ‌ன்று‌ம், அதுபோ‌ன்ற பொரு‌ட்களை ந‌ம்முடனேயே வை‌த்து‌க் கொ‌ண்டு வா‌ழ்‌க்கை‌யி‌ல் இதுபோ‌ன்ற சவாலை யாரு‌ம் ச‌ந்‌தி‌க்க வே‌ண்டா‌ம் எ‌ன்று‌ம் கூறு‌கிறா‌ர்.

‌உ‌ங்க‌ள் படு‌க்கை அறை‌யி‌ல் உ‌ள்ள ‌மி‌ன்சாதன‌ங்கள‌் எ‌ல்லா‌ம் தலை‌க்கு அருகே இ‌ல்லாம‌ல், கா‌ல் ப‌க்கமாக இரு‌க்கு‌ம் வகை‌யி‌ல் பார‌்‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள் எ‌ன்று கூறு‌கிறா‌ர்.

அதாவது படு‌க்கை அறை‌யி‌ல் இரு‌க்கு‌ம் ‌மி‌ன்சார அலரா‌ம் பொரு‌த்‌த‌ப்ப‌ட்ட கடிகார‌ம், ரேடியோ, நை‌ட் லே‌ம்‌ப், ஏ‌சி போ‌ன்றவை.


அ‌வ்வாறு இ‌ல்லையெ‌னி‌ல், ‌இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் ‌மி‌ன்சாதன‌ங்க‌ளி‌ன் இணை‌ப்‌பை‌த் து‌ண்டி‌த்துவ‌ி‌ட்டு படு‌க்கை‌க்கு‌ச் செ‌ல்லு‌ங்க‌ள். அதுபோல மை‌க்ரோவே‌வி‌ல் சமைய‌ல் முடி‌ந்தது‌ம் 5 ‌பீ‌ப் ஒ‌லிக‌ள் வ‌ந்தது‌ம் உ‌ங்க‌ள் கைகளை உ‌ள்ளே‌ ‌‌வி‌‌ட்டு உணவு‌ப் பொரு‌ட்களை எடு‌க்கவு‌ம் எ‌ன்‌‌கிறா‌ர் அவ‌ர்.


மேலு‌ம், செ‌ல்பே‌சிக‌ளி‌ல் ஒரு நபரை அழை‌க்கு‌ம் போது அவ‌ர் இணை‌ப்‌பி‌ற்கு வரு‌ம் வரை செ‌ல்பே‌சியை உ‌ங்க‌ள் காத‌‌ல் இரு‌ந்து ‌சி‌றிது தூர‌ம் நக‌ர்‌த்‌தி வை‌ப்பது‌ம், பொதுவாக ல‌வ்டு ‌ஸ்‌பீ‌க்க‌‌ரி‌ல் பேசுவது‌ம் உ‌ங்க‌ள் மூளையை‌க் கா‌ப்பா‌ற்‌றி‌க் கொ‌ள்ள உதவு‌ம் எ‌ன்‌கிறா‌ர் சா‌ர்‌லி டியோ.

மூளை‌யி‌ல் உ‌ண்டாகு‌ம் க‌ட்டிகளை அ‌க‌ற்று‌ம் அறுவை ‌சி‌கி‌ச்சைகளை வெ‌ற்‌றிகரமாக செ‌ய்து வரு‌ம் டியோ, தலை‌ முடிக்கு‌ப் ப‌ய‌ன்படு‌த்து‌ம் ‌சில ‌நிறமூ‌ட்டிகளு‌ம் (டை), கு‌றி‌ப்பாக ‌சிவ‌ப்பு ‌நிற மூ‌ட்டிக‌ள், மூளை‌ப் பு‌ற்றுநோ‌ய் ஏ‌ற்பட வா‌ய்‌ப்ப‌ளி‌க்‌கிறது எ‌ன்‌கிறா‌ர்.

முடி‌க்கு ‌நிறமூ‌ட்டுபவைக‌ள், செ‌ல்பே‌சிக‌ள் போ‌ன்றவை நேரடியாக மூளையை‌த் தா‌க்‌கி பா‌தி‌ப்பை ஏ‌ற்படு‌த்துவ‌தி‌ல் முத‌ன்மையாக செய‌ல்படு‌கி‌ன்றன எ‌ன்‌கிறா‌ர் இவ‌ர்.


ம‌ற்ற பு‌ற்றுநோ‌ய் செ‌ல்களை ‌விட, மூளை பு‌ற்றுநோ‌ய் செ‌ல்க‌ள் வேகமாக வள‌ர்‌‌கி‌ன்றன. அதாவது, மா‌ர்பக பு‌ற்றுநோ‌ய் செ‌ல்க‌ள் த‌ங்களது எ‌ண்‌ணி‌க்கையை ஒரு வார‌த்‌தி‌ல் அ‌ல்ல‌து ஒரு மாத‌த்‌தி‌ல் அ‌ப்படியே இர‌ட்டி‌ப்பா‌க்கு‌கி‌ன்றன. ஆனா‌ல் மூளை பு‌ற்றுநோ‌ய் செ‌ல்க‌ள் இதனை வெறு‌ம் 16 ம‌ணி நேர‌த்‌தில‌் நட‌த்‌தி‌விடு‌கி‌ன்றன. மேலு‌ம், மூளை‌யி‌ல் க‌ட்டி வளர எ‌ந்த வயது வர‌ம்பு‌ம், வயது‌த் தடையு‌ம் இ‌ல்லை.

முத‌லி‌ல் செ‌ல்பே‌சிக‌ளி‌ல் அலார‌ம் வை‌த்து‌வி‌ட்டு, அதனை தலையணை‌க்கு அடி‌யி‌ல் வை‌த்‌திரு‌க்கு‌ம் பழ‌க்க‌த்தை கை‌விடு‌ங்க‌ள் எ‌ன்‌கிறா‌ர் இவ‌ர்.

எவ‌ர் ஒருவ‌ர் 10 ஆ‌ண்டுகளு‌க்கு‌ம் மேலாக செ‌ல்பே‌சியை‌ப் பய‌ன்படு‌த்து‌கிறாரோ அவ‌ர்களு‌க்கு மூளை‌யி‌ல் ‌சில பா‌தி‌ப்புக‌ள் ஏ‌ற்படு‌கிறது எ‌ன்று‌ம், செ‌ல்பே‌சிகளை ஆ‌ண்க‌ள் த‌ங்களது பெ‌ல்‌ட் அதாவது இடு‌ப்பு‌ப் பகு‌தி‌யி‌ல் வை‌த்‌தி‌ரு‌ப்பதா‌ல் எலு‌ம்பு தொட‌ர்பான ‌பிர‌ச்‌சினைக‌ள் ஏ‌ற்படுவதை ஒரு ஆ‌ய்வு க‌ண்டு‌பிடி‌த்து‌ள்ளதையு‌ம் அவ‌ர் மே‌ற்கோ‌ள் கா‌ட்டினா‌ர்.


த‌ற்போது மூளை‌க் க‌ட்டிகளை அக‌ற்ற ப‌ல்வேறு ‌சி‌கி‌ச்சை முறைக‌ள் வ‌ந்து‌வி‌ட்டன. அதாது, மை‌க்ரோவே‌வ் ‌சி‌கி‌ச்சை போ‌ன்றவை நேரடியாக க‌ட்டிக‌‌ள் ‌மீது செலு‌த்த‌ப்ப‌ட்டு அவ‌ற்றை அ‌ழி‌க்கு‌ம் வகை‌யி‌ல் உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. எதுவாக இரு‌ந்தாலு‌ம் ந‌ல்ல உணவு ம‌ற்று‌ம் பழ‌க்க வழ‌க்க‌ங்களா‌ல் உடலை ஆரோ‌க்‌கியமாக வை‌த்‌திரு‌ப்பதே ‌சிற‌ந்தது. வரு‌ம் மு‌ன் கா‌ப்பதே நல‌ம் எ‌ன்று ‌மீ‌ண்டு‌ம் ‌மீ‌ண்டு‌ம் எடு‌த்து‌க் கூ‌று‌கிறா‌ர் சா‌ர்‌லி டியோ.

மென்மையான சருமம் வேணுமா?


நம்மில் பெரும்பாலானோர், தங்கள் சருமம் எந்த வகையை சேர்ந்தது என்பது பற்றி தெரியாமலே உள்ளனர்.

வறண்ட சருமம், எண்ணெய் பசை சருமம் மற்றும் மிக மென்மையான சருமம் என, சருமம் மூன்று வகைப்படும். இதில், மிக மென்மையான சரும வகையை சேர்ந்தவர்கள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் சருமத்திற்கான பிற பொருட்களை பயன்படுத்தும் போது மிக கவனமாக இருக்க வேண்டும்.

மென்மையான சருமத்தை கண்டறிவது:

* சருமம் எளிதில் சிகப்பாக மாறுதல். * மாய்ச்சரைசர்கள் உட்பட அனைத்து பொருட்களுக்கும் சருமத்தில் எதிர் விளைவுகள் உண்டாதல். * சூரிய வெப்பத்தால், எளிதில் பாதிப்பிற்கு ஆளாதல். * வெப்பம் மற்றும் குளிர் ஆகிய இரண்டினாலும் விரைவாக பாதிக்கப்படுதல்.

மேற்கூறிய இந்த அறிகுறிகள் தென்பட்டால், அவை மிக மென்மையான சருமத்தினரை குறிக்கிறது.

மென்மையான சருமத்திற்கான பிரத்யேக கவனிப்புகள்:

மிக மென்மையான சருமத்தினர் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதை முடிந்த வரை குறைக்க வேண்டும். வாசனையற்ற, கிளென்சிங் மூலம் சருமத்தை சுத்தப்படுத்திய பின், மாய்ச்சரைசர் மற்றும் சன்ஸ்கிரீன் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

முகத்திற்கு செய்யப்படும் ஆவி பிடித்தல், கரும்புள்ளிகளை நீக்குதல் போன்றவை மென்மையான சருமத்திற்கு எரிச்சல் ஊட்டுபவை. எனவே, இவ்வாறான அழகு சிகிச்சைகள் செய்யப்படுவதற்கு முன், சரும நிபுணரை கலந்தாலோசிப்பது நல்லது. பதப்படுத்தப்பட்ட சர்க்கரை நிறைந்த உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின் ஆகியவை மென்மையான சருமத்தினருக்கு சிறந்தது.
உகந்த அழகு சாதனப் பொருட்கள்:

* எப்போதும் பவுடர் மேக்-அப் பயன்படுத்துவதே நல்லது. திரவ பவுண்டேஷன் பயன்படுத்தினால், சிலிக்கானை அடிப்படையாக கொண்ட பவுண்டேஷனை பயன்படுத்தலாம். அவை சருமத்திற்கு நல்லது. * பழைய அழகு சாதனப் பொருட்கள் குறிப்பாக, கண்களுக்கான அழகு பொருட்களில், வாங்கி சிறிது நாட்கள் ஆனதை பயன்படுத்தக் கூடாது. பவுண்டேஷன் மற்றும் லிப்ஸ்டிக் ஆகியவற்றை ஒரு ஆண்டு வரை பயன்படுத்தலாம். மஸ்காரா மூன்று முதல் நான்கு மாதங்கள் வரையே பயன்படுத்த வேண்டும். பவுடர்கள் இரண்டு ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். மேலும், மேக்-அப் பிரஷ் மற்றும் ஸ்பான்ஜ்களை அடிக்கடி முறையாக சுத்தம் செய்ய வேண்டும். * கறுப்பு ஐ லைனர் மற்றும் மஸ்காராவை பயன்படுத்தவது நல்லது. ஏனென்றால் அவை அதிகளவில் அலர்ஜியை தோற்றுவிக்காது. * பென்சில் ஐ லைனர் மெழுகை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படுவதோடு, அவற்றில் பதப்படுத்தும் பொருள் குறைவாகவே சேர்க்கப் படுகிறது. இதனால், பென்சில் ஐ லைனர் பயன் படுத்துவது நல்லது. திரவ ஐ லைனரில், சேர்க்கப் படும் லேட்டக்ஸ் மென்மையான சருமத்தினர் சிலருக்கு ஒவ்வாமையை தோற்றுவிக்கலாம். * அதிகபட்சமாக, 10 பொருட்கள் மட்டுமே சேர்த்து தயாரிக்கப்பட்ட அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதே நல்லது. *எந்த ஒரு புதிய அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதற்கு முன்னும், சோதனை செய்து கொள்ள வேண்டும். * மென்மையான சருமத்தினர் ஒரு நாளைக்கு மூன்று முறைக்கு மேல் அடிக்கடி முகம் கழுவுவதை தவிர்க்க வேண்டும். அடிக்கடி முகம் கழுவினால், தோலில் இயற்கையாக காணப்படும் எண்ணெய் தன்மை போய்விடும்.

கம்ப்யூட்டரில் வேலையா கவனம் தேவை




இன்றைய அன்றாட வாழ்க்கையில் கம்ப்யூட்டர்கள் நம் பணியினைப் பங்கு கொண்டு, நம் நடவடிக்கைகளை எளிதாக்கி வருகின்றன. இதனால் அவற்றுடனே நம் முழுப்பொழுதும் செலவழிகிறது. அலுவலகம் ஒன்றின் சொகுசுப் பொருளாகக் கம்ப்யூட்டர் கருதப்பட்ட எண்ணம் மறைந்து, அடிப்படைச் சாதனமாக இது மாறிவிட்டது. எப்படி திருமணமான ஒருவர் தன் மனைவி அல்லது கணவனுடன் பல வழிகளில் அட்ஜஸ்ட் செய்து வாழப் பழகிக் கொள்கிறாரோ, அதே போல கம்ப்யூட்டர்கள், அவை அமைக்கப்பட்டுள்ள சூழ்நிலை ஆகியவற்றுடனும் நாம் அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டியதிருக்கிறது. இல்லை என்றால் வாழ்க்கையில் பிரச்சினைகள் வருவது போல, நம் அன்றாட அலுவல் வாழ்க்கை மட்டுமின்றி, சொந்த நலனிலும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவற்றை எப்படி தவிர்க்கலாம் என்பது குறித்து இங்கு காணலாம்.

ஒரு நாளில் பெரும்பாலான நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து பணியாற்றுகிறோம். பணி முடிந்து வீட்டுக்குத் திரும்புகையில், சற்று சோர்வுடனே இருக்கிறோம். "உங்களுக்கென்ன ஏ.சி. அறையில் தானே வேலை பார்க்கிறீர்கள்' என்று மற்றவர்கள் சொன்னாலும், நம் உடம்பில் ஏற்படும் சோர்வும் வலியும் அதனால் தான் என்று என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா! உங்கள் மணிக்கட்டு வலியும், கண்களில் எரிச்சலும், முதுகில் எங்கோ சிறிய வலியும், இடுப்பிற்குக் கீழாக, உட்காரும்போதும் எழும்போதும் ஏற்பட்டு மறையும் தீவிரமான வலியும், கம்ப்யூட்டர் பயன்படுத்துவதால்தான் என்று உங்களுக்குத் தெரியுமா!
நாம் அமைத்துக் கொள்ளும் கம்ப்யூட்டர் அலுவலகச் சூழ்நிலைகளே இதற்குக் காரணங்கள். இவற்றைக் கொஞ்சம் இங்கு கவனிக்கலாம்.

முதலில் நாம் பார்க்க வேண்டியது, எப்போதும் நாம் உற்றுப் பார்த்துப் பணி புரியும் கம்ப்யூட்டர் மானிட்டர் தான். அது அமைக்கப்படும் விதம் தான். ஒரு மானிட்டர், அது சி.ஆர்.டியாக இருந்தாலும், எல்சிடி ஆக இருந்தாலும், உங்கள் முகத்திற்கு இணையாக அல்லது சற்றே தாழ்வாக இருக்க வேண்டும். மானிட்டரை பார்ப்பதற்காக உங்கள் தலையை சிறிது தூக்க வேண்டியதிருக்கையில் கழுத்தில் டென்ஷன் ஏற்படும்; உங்கள் முதுகுப் பகுதியின் மேல் புறத்தில் வலி உண்டாகும். இந்நிலை தொடரும் பட்சத்தில் நிச்சயமாய் இந்த வலிகள் நிலையாக இருக்கத் தொடங்கும். எனவே இதனை தவிர்ப்பதுடன் கீழ்க்காணும் நிலைகளையும் உருவாக்குங்கள். உங்கள் கண்களுக்கும் திரைக்கும் இடையேயான தூரம் 18 அங்குலமாக இருக்கட்டும். இது உங்கள் மானிட்டர் திரையின் அகலத்தைப் பொறுத்து சற்று ஏறத்தாழ இருக்கலாம்.

ஸ்கிரீனை சற்று சாய்த்துவைப்பதாக இருந்தால் அது உங்கள் கண்களின் பார்வைக் கோட்டில் இருக்க வேண்டும். திரையின் ரெசல்யூசன் உங்கள் பார்வைக்கு உகந்ததாக இருக்க வேண்டும். எனவே அதனை அவ்வப்போது மாற்றி எது கண்களுக்கு உகந்தது என்று தீர்மானித்து அதனையே வைத்துக் கொள்ளவும். மேலும் மானிட்டர் திரையில் எதற்காக அத்தனை ஐகான்கள். சற்று குறைக்கலாமே. அவ்வப்போது தேவைப்படாததை, பயன்படுத்தாததை நீக்கலாம்; அல்லது ஒரு போல்டரில் போட்டு வைக்கலாம். ஸ்கிரீன் மீது வைத்துப் பயன்படுத்தப்படும் ஸ்கிரீன் பில்டர் உங்கள் கண்களில் எரிச்சல் உண்டாக்குவதைத் தடுக்கும். உங்கள் சிஸ்டத்தில் நீங்கள் பயன்படுத்தும் கலர் ஸ்கீம் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. பலவகையான வண்ணக் கலவைகளை அமைத்துப் பார்த்து எது உகந்ததாக உள்ளதோ அதனை அமைக்கவும். வண்ணம் மட்டுமின்றி எழுத்துவகையினையும் உறுத்தாதவகையில் அமைக்கவும்.

மானிட்டரைப் பார்த்துவிட்டோம். இனி உங்கள் கைகளுக்குள் கம்ப்யூட்டருக்கான மந்திரக் கோலாகத் தவழும் மவுஸைப் பார்க்கலாம். எளிதில் அதனை அடைந்து கைகளுக்கு வலி எடுக்காவண்ணம் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். உடம்பைச் சாய்க்காமல் அதனை சுழற்றிப் பயன்படுத்தும் வகையில் அருகே அதிக இடத்துடன் இருக்க வேண்டும். கீ போர்டு வைக்கப்பட்டிருக்கும் சிறிய இழுவை டிராவில் வைப்பதனை அறவே தவிர்க்கவும்.
மவுஸ் கையாளும் அதே அளவில், அல்லது அதற்கும் மேலாக நாம் கீ போர்டினைப் பயன்படுத்துகிறோம். உங்கள் கீ போர்டினைச் சரியாக அமைப்பது உங்கள் மணிக்கட்டு மற்றும் முழங்கை வலியை வரவிடாமல் தடுக்கும். கீ போர்டில் டைப் செய்கையில் உங்களுடைய மணிக்கட்டு நேராக இருக்க வேண்டும். முழங்கைகள் 90 டிகிரி கோணத்தில் வளைந்திருக்க வேண்டும். இது உங்கள் நாற்காலியின் நிலையைச் சார்ந்து அமைக்கப்பட வேண்டும்.

இவை எல்லாம் கம்ப்யூட்டருடன் இணைந்தவை. இவற்றை நீங்கள் எங்கிருந்து இயக்குகிறீர்கள். நிச்சயமாய் உங்கள் நாற்காலிகள் தான். பல ஆயிரம் அல்லது லட்சம் செலவழித்து கம்ப்யூட்டர்களை வாங்கி, அவற்றை ஏசி அறையில் வைத்திடும் அலுவலகங்கள், அதனை இயக்குபவர்கள் பழைய வகை நாற்காலியிலேயே அமரட்டும் என விட்டுவிடுவார்கள். அங்குதான் பிரச்சினையே தொடங்குகிறது. நீங்கள் அமரும் நாற்காலி எப்படி இருக்க வேண்டும்? உங்களுடைய பாதம் தரையில் நன்கு பதிந்திருக்கும் வகையில் நாற்காலி அமைக்கப்பட வேண்டும். இதனால் உங்கள் தொடைகளின் பின்புறத்தில் வலி ஏற்படாமல் இருக்கும். நாற்காலியின் குஷன் மிருதுவாக மட்டுமின்றி உறுதியாகவும் இருக்க வேண்டும். அமரும் சீட் தரைக்கு இணையாக இருக்க வேண்டும். சரியாக அமருவதற்காக முன்பக்கம் அல்லது பின்பக்கம் சாயக்கூடாது. நாற்காலி நன்றாக தரையில் அமர்ந்திட நான்கு அல்லது ஐந்து கால்களில் இருக்க வேண்டும்.

அடுத்ததாகச் சுற்றுப்புறச் சூழ்நிலை. ஒரேயடியாக வெளிச்சம் அல்லது குறைவான வெளிச்சம் என இருவகைகளில் ஒளியூட்டப்பட்ட கம்ப்யூட்டர் அறைகளே இப்போது உள்ளன. எங்கு பாய்ண்ட் இருக்கிறதோ அங்கு மின்விளக்குகளை அமைத்துவிடுகின்றனர். இது தவறு. இருக்கின்ற விளக்கு ஒளி போதும் என்ற எண்ணம் எப்போதும் ஏற்படக்கூடாது. முடிந்தால் குழல் விளக்கு ஒளி இருக்க வேண்டும். விளக்கொளி உங்கள் தோள் மற்றும் தலைக்கு மேலாக இருக்க வேண்டும்; ஆனால் சரியாக உங்கள் பின்னாலிருந்து ஒளி வரக்கூடாது. உங்கள் மானிட்டர் திரைக்குப் பின்னாலிருந்து ஒளி வரும் வகையில் அமைக்கக்கூடாது. பொதுவாக நிலையாக அமைக்கப்பட்டிருக்கும் விளக்குகளை மாற்றுவது கடினம். எனவே மானிட்டரின் நிலையை மாற்றலாம். மானிட்டரை சிறிது இறக்கி ஏற்றலாம். அல்லது விளக்கு ஒளியை வடி கட்டி கிடைக்குமாறு ஷேட்களை அமைக்கலாம். ஒளியைப் படிப்படியாகக் குறைக்கும் டிம்மர் ஸ்விட்ச் கொண்டு ஒளியைத் தேவைப்படும் அளவிற்குக் குறைத்து அமைக்கலாம். நேரடியாக ஒளி கிடைக்காமல் மறைமுகமாகக் கிடைப்பது இன்னும் நன்றாக இருக்கும்.

பொதுவாக நம்மைப் பார்க்க வருபவர்கள் இல்லாமல், பக்கத்து சீட் நண்பர்களிடம் பேசாமல் பணியாற்ற கம்ப்யூட்டர் உதவுகிறது. இருப்பினும் பல கம்ப்யூட்டர் அறைகளில் தேவையற்ற சத்தம் இருந்து கொண்டே இருக்கிறது. கம்ப்யூட்டருடன், அதன் புரோகிராமுடன் நாம் ஒரு சவாலுடன்தான் பணியாற்று வோம். அந்நிலையில் கூடுதலாகச் சத்தம் இருந்தால் நம் பணி ஒழுங்கு முறை கெட்டுவிடும். சரியான ஒலி நமக்கு பணியில் உற்சாகத்தைக் கொடுக்கும். சிறிய அளவில், மனதிற்கு அமைதி அளிக்கும் இசையை, அறையில் கசிய விடலாம். அல்லது அவை எதுவும் இல்லாமல், அமைதியைப் பேணலாம். இது அங்கு பணியாற்றுபவர்களின் விருப்பத்தைப் பொருத்து அமைக்கப்பட வேண்டிய விஷயமாகும்.

செலவு மிச்சம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல அலுவலகங்களில் ஏர் கண்டிஷனிங் இல்லாமல் மின்விசிறி மட்டும் கொண்டு சில கம்ப்யூட்டர் அலுவலகங்கள் இயங்குகின்றன. இந்தியாவின் நம்பர் ஒன் என்று பெயரெடுத்த சாப்ட்வேர் நிறுவனத்தில், செலவைக் குறைப்பதற்காக இன்றும் இரவில் ஏர் கண்டிஷனர் இயங்குவதை நிறுத்திவிடுவதாக என் நண்பர் ஒருவர் கூறினார். இது மோசமான ஒரு நிலையை அங்கு பணியாற்றுபவர்களுக்கு மட்டுமின்றி, மேற் கொள்ளப்படும் வேலைக்கும், அங்கு பயன் படுத்தப்படும் கம்ப்யூட்டர்களுக்கும், அதில் கையாளப்படும் டேட்டாவிற்கும் உருவாக்கும். எனவே வெப்பம் மிகுதியான நம் ஊரில் கூடுமானவரை கம்ப்யூட்டர்கள் பயன்படும் இடத்தில் குறைந்த வெப்பம், அல்லது சற்று மிதமான குளிர் சீதோஷ்ண நிலை இருப்பது உகந்தது.

அதே நேரத்தில், அறைக்குள் வெளியிடப்படும் குளிர் காற்று நேரடியாகக் கம்ப்யூட்டர்கள் மீதோ, அல்லது அவற்றை இயக்குபவர் மீதோ படுவதனையும் தவிர்க்க வேண்டும். இறுதியாகவும் மிகவும் முக்கியமானதாகவும் நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், நீங்கள்தான். நேராக நிமிர்ந்து உட்காருங்கள். முதுகை வளைத்து மானிட்டரை உற்று நோக்கி உட்காராதீர்கள். சரியாக அமர்வது பின் முதுகு வலியைத் தவிர்ப்பது மட்டுமின்றி உங்கள் மூளைக்கு ஆக்ஸிஜனைச் சீராக அனுப்பும். வசதியான ஆடைகளை அணியுங்கள். உடம்பைப் பிடிக்கும் ஆடைகள் உங்கள் வேலைப் பண்பினை மாற்றி தொய்வை ஏற்படுத்தும். அதே போல உங்கள் செருப்பு மற்றும் ஷூக்கள் கால்களைக் கடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

இறுதியாக நீங்கள் வேலை வேலை என்று அலைந்து கம்ப்யூட்டரே கதி என்று கிடப்பவரா? அப்படியானால் சற்று சோம்பேறியாக இருப்பதில் தவறில்லை. இடை இடையே நாற்காலியிலிருந்து எழுந்து வெளியே வந்து சற்று உடம்பை வளைத்து நிமிர்த்தி அதனை உற்சாகப்படுத்துங்கள். இதனால் உங்கள் மூளைச் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். உணர்ச்சிப் பாதிப்பு ஏற்படாது.

மாறிவரும் வாழ்க்கைச் சூழ்நிலைகளில் சிலவற்றை நம்மால் மாற்ற முடியாது. மின்சார ட்ரெயினில் கூட்டத்தில் பயணிப்பதைத் தவிர்க்க முடியாது. சிறிது நேரமாவது பஸ் நிறுத்தத்தில் நிற்பதை மாற்ற முடியாது. பயணம் செய்கையில் அடுத்தவர் மூச்சு நம் தோள்களிலும் கழுத்திலும் படுவதை விரட்ட முடியாது. கண் தெரியாத பிச்சைக்காரர் டப்பா மைக் வைத்துக் கொண்டு கர்ண கடூரமாக பாடுவதைத் தடுக்க முடியாது. இரு சக்கர வாகனத்தில் செல்கையில் முன் செல்லும் வாகனப் புகையை சுவாசிப்பதைத் தடுக்க முடியாது. சுட்டெரிக்கும் வெயிலில் பச்சை விளக்குக்காய் சிக்னலில் காத்திருக்கும் சிக்கலை தவிர்த்திடவே முடியாது. ஆனால் கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில் மேலே சொன்ன அனைத்து வழிகளையும் கடைப் பிடித்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள முடியும். செய்வோமா!

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review