May 02, 2010

இந்திய மாணவர்கள் தயாரித்த செயற்கை கோள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான `இஸ்ரோ’ தனது விண் வெளி ஆய்வுப் பணிகளில் கல்லூரி மாணவர்களையும் இணைத்துள்ளது. இதன்படி பெங்களூர் மற்றம் ஐதராபாத் ஆகிய நகரங்களைச் சேர்ந்த 7 பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்ந்து `ஸ்டுட் சாட்’ என்ற பெயரில் ஒரு சிறிய செயற்கைகோளை உருவாக்கி உள்ளனர்.

`ஸ்டுடன்ட் சாட்டிலைட்’ என்பதன் சுருக்கமே `ஸ்டுட் சாட்’ என்பதாகும். (Student Satel lite&STUD SAT) 
சுமார் 55 லட்சம் ருபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த செயற்கைகோள் 10x10x13.5 சென்டி மீட்டர் அளவு கொண்டது. இதன் எடை சுமார் 850 கிராம். இந்த செயற்கைகோளில் தகவல் தொடர்பு கருவி, பேட்டரி, கண்ட்ரோல் கருவிகள் மற்றும் சக்திவாய்ந்த கேமிரா ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. 

விரைவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து மற்ற செயற்கை கோள்களுடன் மாணவர்கள் செயற்கைக் கோளும் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதில் மாணவர்கள் செயற்கை கோள் பூமியில் இருந்து சுமார் 680 கிலோ மீட்டர் உயரத்தில் விண்ணில் நிலைநிறுத்தப்படும். அங்கு சுற்றி வந்தபடியே இந்த செயற்கை கோள் பூமியை படம் பிடித்து தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும். இந்தபடங்களை மாணவர்கள் தங்களது கல்வி மற்றும் ஆராய்ச்சிப்பணிகளுக்கு பயன்படுத்துவார்கள். 

செயற்கை கோளை தயாரித்த மாணவர்கள் குழு இதை சிலவாரங்களுக்கு முன்பு இஸ்ரோ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அதை ராக்கெட்டில் பொருத்தும் பணியை செய்து வருகிறார்கள்.

எல்.ஜி.யின் புதிய சாக்லேட்எல்.ஜி.நிறுவனம்

2006 ஆம் ஆண்டில் தன் சாக்லேட் சிரீஸ் மொபைல் போன்களை அறிமுகப்படுத்தியது. இப்போது மேலும் இரண்டு சாக்லேட் போன்களைக் கொண்டு வந்துள்ளது. அவற்றில் அண்மைக் காலத்தில் வந்தது எல்.ஜி. சாக்லேட் பி 20.

சாக்லேட் சிரீஸ் போன்கள் அனைத்துமே ஸ்டைலான வடிவமைப்பு கொண்டவை. கண்ணாடி பளபளப்பு, பியானோ கருப்பு மற்றும் ஸ்லிம்மான வடிவம் என இந்த போனும் அசத்துகிறது. போனின் முன்புறத்தில் இரண்டாவது கேமரா உள்ளது. மற்ற இடம் எல்லாம் சரியான கருப்பில் முதல் பார்வையில் தெரிவதில்லை. 

போன் செயல்படத் தொடங்குகையில் தான் ஸ்கிரீன் வெளிச்சத்தில் கீழே உள்ள பட்டன்கள் தெரிகின்றன. இடது பக்கத்தில் கம்ப்யூட்டருடன் இணைக்க, சார்ஜ் செய்திட மற்றும் ஹெட்செட் இணைக்க ஒரே ஒரு போர்ட் தரப்பட்டுள்ளது. பின்புறம் கேமரா, எல்.இ.டி. பிளாஷ் தரப்பட்டிருப்பதும் உற்று நோக்கினால் மட்டுமே தெரிகிறது. 

இந்த பகுதி முழுவதும் வழுக்கிச் சென்று, பேட்டரி மற்றும் சிம் இடத்தைக் காட்டுகின்றன. மெமரி கார்ட் இடமும் இங்குதான் உள்ளது. போன் ஸ்லைட் ஆகி, கீ பேட் தட்டையாக குரோமியப் பூச்சு வரிகளுக்கிடையே காட்டப்படுகிறது. 

எண்களுக்கு மேலாக அழைப்பு ஏற்க, முடிக்க மற்றும் கிளியர் செய்திட கீகள் தரப்பட்டுள்ளன. கருப்பு வண்ண பின்னணியில் சிகப்பு வண்ணக் கலவையுடன், குரோமிய வரிகள் மிகவும் அழகான, ஸ்டைலான தோற்றத்தினைத் தருகின்றன. 

போனின் மெமரி 60 எம்பி. போனுடன் 2 ஜிபி மெமரி கார்ட் தரப்படுகிறது. அனைத்து கண்ட்ரோல் பட்டன்களையும் மிக எளிதாக இயக்கலாம். இந்த போனின் ஒரு சிறப்பம்சம், பல செயல்பாடுகளை(Multitasking) ஒரே நேரத்தில் மேற்கொள்வதுடன் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு மாறிக் கொள்வதற்கான வசதியுடன் இருப்பதுதான். 

ஆனால் அப்ளிகேஷன்களை அதிகப்படுத்துகையில், போனின் செயல்பாட்டின் வேகம் சற்று குறைகிறது. கடிகாரம், அலாரம், காலண்டர், ரிமைண்டர், நோட்ஸ்,குயிக் காண்டாக்ட்ஸ், சீதோஷ்ண நிலை அறிவித்தல் ஆகியவற்றிற்கான விட்ஜெட்டுகள் தரப்பட்டுள்ளன. எம்பி3 பிளேயர் மற்றும் எப்.எம். ரேடியோ உள்ளன. 

GPRS & EDGE ஆகிய தொழில் நுட்பம் மூலம் நெட்வொர்க் இணைப்பு அருமையாகக் கிடைக்கிறது. 900ட்அட பேட்டரி தரப்பட்டு 5 மணி நேரம் டாக் டைம் கிடைக்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் இரண்டு நாட்கள் பவர் தாக்குப் பிடிக்கிறது. 

இரண்டு மணி நேரம் பாடல்களைக் கேட்க முடிகிறது. ஜி.பி.ஆர்.எஸ். பயன்பாடு 20 முதல் 30 நிமிடங்கள் வரை கிடைக்கிறது. ஒரு ஸ்டைலான போன் வாங்க வேண்டும் என விரும்புபவர்களுக்கு இது ஒரு சரியான போன். விலை ரூ.10,000 எனக் குறிக்கப்பட்டுள்ளது

24 விண் கற்களில் தண்ணீர் : நாசா கண்டுபிடிப்பு

நிலவில் தண்ணீர் இருப்பதை இந்தியாவின் சந்திராயன் ஓடம் கண்டுபிடித்தது. இதே போல சூரியனை சுற்றி வரும் பல்வேறு கோள்களிலும் தண்ணீர் இருக்கிறதா? என்று ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. 

சூரியனை சுற்றி வரும் கோள்களை தவிர ஏராளமான விண்கற்களும் விண்ணில் சுற்றி வருகின்றன. இவற்றில் பல கற்கள் ராட்சத அளவில் இருக்கின்றன. அதாவது 200 கிலோ மீட்டருக்கு மேல் அகலமாக இருக்கின்றன.
அந்த கற்களை அமெரிக்காவில் நாசா விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஹவாய் தீவில் ராட்சத டெலஸ்கோப்பை அமைத்து உள்ளனர். அதன் மூலம் இந்த கற்களை ஆய்வு செய்தனர். 

அதில் தண்ணீர் இருப்பது தெரிய வந்தது. உறைந்த நிலையில் மேல் பகுதிகளில் தண்ணீர் இருந்தன. தண்ணீர் இருப்பதால் அவற்றில் உயிரினங்கள் வாழவும் வாய்ப்பு இருக்கலாம் என கருதப்படுகிறது.
அதுபற்றியும் ஆய்வு நடந்து வருகிறது.

MICROSOFT நிறுவனத்தின் WINDOWS 8

MICROSOFT நிறுவனத்தின் அடுத்த இயங்குத்தளம் WINDOWS 8 ஜூலை 2012 ல் வருகிறது.  இது WINDOWS 7 னை விட வேகமாகவும், பயனாளர்க்கு உதவியாகவும் என்று அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.

விண்டோஸ் பயனாளர்க்கு புதிய வசதிகளை அறிமுகம் ஆகிறது.
விண்டோஸ் 8 128 BIT என்று எதிர்பார்க்கபடுகிறது . 

INTEL நிறுவனத்தின் உதவியுடன் USB 3.0 இதில் அறிமுகம் செய்யப்படுகிறது.
USB 2.0 வில் அதிக பச்சமாக 480 MBits/s. USB 3.0 வில் அதிக பச்சமாக 5 Gbits/S .
விண்டோஸ் 7 உள்ள குறைகளை கண்டறிந்து விண்டோஸ் 8 உருவாக்கப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Bluehost Review